Contact us at: sooddram@gmail.com

 

அழகிரி வீழ்ச்சி ஏன்?

ஞ்சாநெஞ்சன் அழகிரி இனியாவது செயல்பட வேண்டும். அவருக்குத் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. அவர் செயல்பட்ட விதத்தைப் பார்த்து, தென் மாவட்டத் தில் அவருக்கு ஆதரவாக இருந்த சில மாவட்டச் செயலாளர்கள்கூட ஸ்டாலின் அணிக்கு மாறினார்கள். திடீரென்று ஒரு நாள் போர்டு மீட்டிங் கூட்டியதோடு சரி. அதன் பிறகு அது கூடவும் இல்லை. செயல்படவும் இல்லை. தென் மண்டல அமைப்புச் செயலாளரை தென் மண்டல எல்லைக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்களில் மதுரை புறநகர் மூர்த்தியும் தேனி மூக்கையாவும் தவிர மற்றவர் யாரும் மறந்தும் சந்திப்பது இல்லை. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடக்கும் முப்பெரும் விழா கடந்த ஆண்டில் நாகர்கோவிலில் நடந்தது. அதற்கும் அழகிரிக்கு அழைப்பு இல்லை. அண்ணா அறி வாலயத்தில் தனக்கென பிரத்யேக அறை ஒன்றை ஒதுக்கீடு செய்யக் கேட்டார் அழகிரி. அதுவும் ஒதுக்கித் தரப்படவில்லை. பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் மேடைத் தலைவர்களாக உட்கார ஒரு நாற்காலி கேட்டார். அதுவும் போடப்படவில்லை. இவை அனைத்துக்கும் சாதாரணமாக ஸ்டாலின் ஆட்கள் ஒரு காரணத்தைச் சொன்னார்கள்... 'செயல்படாதவருக்கு எதற்கு சேர்?’

கட்சியும், இளைஞர் அணியும், தலைமைக் கழகமும், முரசொலியும், கலைஞர் டி.வி-யும் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அழகிரியால் செயல்பட முடியவில்லை. இந்தத் தொந்தரவு இல்லாத மத்திய உரத் துறையிலும் அவரால் ஏன் செயல்பட முடியவில்லை? எப்போதாவது டெல்லி செல்வது, போனாலும் துறை அலுவலகத்துக்குச் செல்வது இல்லை, மத்திய கேபினெட் கூட்டத்துக்குப் போவதே இல்லை, நாடாளுமன்றத்தில் பேசுவதே இல்லை.... என்று துறையிலும்  ெயல்படவில்லை. விலைவாசியுடன் சேர்த்து இந்தியாவில் உரங்களின் விலையும் எகிறியது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடித்த விஷயம் அது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அது. வேறு ஒருவர் மந்திரியாக இருந்தால் கருணாநிதி எந்த அளவுக்கு எகிறி அடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அழகிரி என்பதால், அடக்கமாகிவிட்டார் கருணாநிதி. இப்படித் துறை ரீதியான செயல்பாடுகளும் பூஜ்யம்.

அழகிரியின் இப்போதைய பின்னடைவுக்கு இவை இரண்டும்தான் காரணம். ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரியும் கட்சிப் பணியாற்றி, துறை ரீதியாகவும் அகில இந்தியப் புகழை அடைந்த மத்திய அமைச்சராகவும் அவர் மாறியிருந்தால், 'எனக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைவர்என்று கருணாநிதியால் அறிவித்திருக்க முடியாது. இன்னமும் கோபாலபுரம் வீட்டுக்குள் தயங்கித் தயங்கியே பதுங்கி இருப்பார்.

அழகிரி செயல்படவில்லை என்பதைவிட, அவரால் செயல்பட முடியவில்லை அல்லது செயல்பட விரும்பவில்லை என்பதே உண்மையானது. அரசியலில் சிலர் மட்டும்தான் முருகனைப் போல ஊரைச் சுற்றி வந்து மாம்பழம் பெற நினைப்பவர்கள். பலர், இருந்த இடத்தைச் சுற்றி ஷோ காட்டியே பதவிகளை அடைந்தவர்கள்தான். இதுவரை அடைந்த பதவிகள் அப்படி வந்ததால், இனியும் அப்படியே தொடரும் என்று அழகிரி நினைத்திருக்கிறார். ஆனால் யதார்த்தத்தை மற்றவர்கள் கற்றுத்தருவதற்கு முன்னால் தகப்பனாரே சொல்லிக்கொடுத்ததுதான் சரி!

''ஸ்டாலின் நான் இளமைக் காலத்துல அலைந்தது மாதிரி அலைகிறான். அதுமாதிரி அழகிரியால செயல்பட முடியல.... அந்தப் பொறாமை மட்டும்தான் இருக்கு'' என்று கருணாநிதியே கமென்ட் அடித்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்குத்தானே இருவரில் யார் சரியானவர் என்று எல்லாரையும்விட நல்லாத் தெரியும்!

(முகுந்த்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com