Contact us at: sooddram@gmail.com

 

தடம் மாறிப் பயணிக்கும் தமிழ் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்பாக அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தமிழ் மக்களிடையே பலத்த சந்தேகங்களையும், கேள்விக்குறிகளையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் மக்களைத் தமது பொய்யான உறுதி மொழிகளால் ஏமாற்றி வாக்குகளை அபகரித்து தாமே அம்மக்களின் பிரதிநிதிகள் என மார்தட்டிவரும் தமிழ் கூட்டமைப்பு இன்று அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தரக்குறைவான செயற்பாடுகளினால் அதே மக்களின் முன்பாக வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமக்குச் சார்பான ஊடகங்கள் சிலவற்றில் அறிக்கைப் பிரசாரங்களை மட்டுமே செய்துவரும் கூட்டமைப்பின் தலைவர்கள் பலர் திரைமறைவில் தமது தனிமனித வளர்ச்சிக்காக மேற்கொண்டுவரும் திருகுதாளங்கள் பல இப்போது அம்பலமாகி வருவதால் மக்கள் மத்தியில் நடமாட முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். தமக்கு வாக்களித்த தமிழ் மக்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இவர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடனேயே தமது தொகுதிகளுக்குச் சென்றுவரும் நிலை இன்று காணப்படுகிறது.

கடந்த வாரம் கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள், அரசாங்கத்திற்கு எதிரான துண்டுப் பிரசுர காகிதாதிகள் என்பனவற்றுடன் ஆபாச சீடிக்கள், ஆணுறைக் கவசங்கள் எனப் பல கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவரது செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஓர் அரசியல்வாதியின் அலுவலகத்தில் இருக்கக் கூடாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே இப்பாராளுமன்ற உறுப்பினர் மீது சிறுமி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டும் சந்தேகத்தில் உள்ளது. இந்நி¨லையில் தற்போது இவரது அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெளியே சொல்ல வாய் கூசும் சமாச்சாரங்கள் அக்குற்றச்சாட்டை நிரூபிப்பதாகவே உள்ளது. ஆனால் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரோ தனக்கு இதில் சம்பந்தம் எதுவுமே இல்லாதது போன்று தனது செயலாளரைச் சம்பந்தப்படுத்தியுள்ளார். அது போதாதென்று அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி என்றும் அறிக்கை விட்டுள்ளார். நடந்த சம்பவத்தையே பிரசுரிக்க மறுத்த கூட்டமைப்பின் சார்பு ஊடகங்கள் அவரது அறிக்கையை மட்டும் வழமைபோன்று விபரமாகப் பிரசுரித்துள்ளன. உண்மையிலேயே அவரது செயலாளர்தான் இக்குற்றத்தைப் புரிந்திருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினரும் இதற்குப் பதில் கூறியே ஆக வேண்டும்.

இறுதி யுத்தத்தின்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பட்ட துன்பங்களை எவருமே அனுபவித்திருக்க மாட்டார்கள். அவ்வாறு யுத்தக் கெடுபிடிக்குள் சிக்குண்டு மறுவாழ்வு பெற்றிருக்கும் அம்மக்கள் தாம் நம்பியிருந்த புலிகளே தம்மை நட்டாற்றில் விட்டுவிட்டுச் செல்ல அவர்களது வால்களைப் பிடித்துக்கொண்டிருந்த உங்களை நம்பிக் கொண்டிருக்கையில் நீங்கள் ஆபாச வீடியோக்களில் மோகங்கொண்டு அலுவலகத்தில் அராஜகம் புரிகிaர்கள். உதவிகேட்டு வரும் மக்களை உதாசீனம் செய்வது மட்டுமல்லாது பெண்கள் குலத்தின் பாவத்திற்கும் ஆளாகுகிaர்கள். புலம்பெயர் நாடுகளிலிருந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் பெருந் தொகைப் பணத்தின் பெரும் பகுதியைச் சூறையாடி வருவதுடன் அரசாங்கம் இம்மக்களுக்காகச் செய்துவரும் உதவிகளையும் உதறித் தள்ள முற்படுகிaர்கள். சில தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் தமது பிள்ளைகளின் உயர் கல்விக்காகவும் அவர்களது வெளிநாட்டுப் புலமைப் பரிசிலுக்காகவும் மட்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இன்னும் சிலரோ வெளிநாட்டிலிருக்கும் தமது உறவினர்களுக்கு இரட்டைப் பிராஜாவுரிமை பெறுவதற்காக அரசுடன் இரகசியக் கூட்டு வைத்துச் செயற்படுகின்றனர். இன்னும் சிலர் விஸா வியாபாரம் செய்கின்றனர். இதனையே ஏனைய தமிழ் தலைவர்கள் செய்தால் துரோகிகள் என்கின்றனர். ஆனால் இந்தத் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு வாக்களித்த அப்பாவித் தமிழ் மக்களோ இத்தலைவர்கள் தமக்கு நிரந்தரத் தீர்வொன்றினைப் பெற்றுத் தருவார்கள் என நம்பியவர்களாக இன்றும் காணப்படுகின்றனர். மக்களில் பலருக்கு இத்தலைவர்கள் முன்னர் போன்றல்லாது தற்போது சுயநலமாகச் செயற்பட்டுத் தம்மை ஏமாற்றுகிறார்கள் எனும் உண்மை நிலை நன்கு புரிந்திருந்தாலும் தமது ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடக் கூடாது எனும் ஒரே காரணத்திற்காக பொறுமை காத்து வருகிறார்கள் என்பதே உண்மையாகும்.

அண்மைக் காலமாக தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்பாக வெளியாகும் செய்திகள் மக்கள் மனங்களில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வேலியே பயிரை மேய்வது போல தமக்குப் பாதுகாப்பாக இருந்து குரல் கொடுக்க வேண்டிய தலைவர்களே இன்று தமக்குத் துரோகம் செய்பவர்களாக மாறியுள்ளதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். அரசியல் சொகுசு வாழ்வு, அதிகாரம், சுய தேவைகளுக்காக தம்முடன் கூடவே திரியும் உதவி அடியாட்கள் இந்த தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் நிலையை மாற்றியமைத்துவிட்டதை மக்கள் உணர்ந்துவிட்டனர்.

தாம் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தவர்கள் இன்று தமக்கு ஊடகங்களில் அதுவும் ஒரு சில தமிழ் ஊடகங்களில் மட்டுமே தாம் விடும் அறிக்கைகள் மூலமாகத் தீர்வினைப் பெற்றுத் தரப் பாடுபட்டுவருவது போலப் பாசாங்கு செய்வது அந்த வாக்களித்த மக்களுக்கு புரிந்து விட்டது. உண்மையில் காத்திரமான அறிக்கை மூலமாகவும் வடக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்காக உண்மையாகக் குரல் கொடுத்துவரும் மனோ கணேசனின் அரசியல் செயற்பாட்டை வடக்கு கிழக்கு மக்கள் வரவேற்கிறார்கள். அவர் மக்களை ஏமாற்றவில்லை. மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்க்கிறார். இவர் போன்ற ஒருவர் அரசாங்கத்திலிருந்து தமக்குச் சேவையாற்ற வேண்டுமென அந்த மக்கள் விரும்புகிறார்கள். அவரும் அந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் யுத்தம் முடிவடைந்து பேச்சுவார்த்தை, சர்வதேச சமூகம், புலம்பெயர் சமூகம் என்று கடந்த நான்கு வருடங்களாக தமிழ்த் தேசியத்திற்காகப் பாடுபட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புன் தமிழ்த் தேசியத் தலைமைகள் தடம்மாறி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். பெருந்தலைவரால் அதன் சிறு தலைவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதுள்ளதால் இன்று பலரும் குறுந் தலைவர்களாகச் செயற்படும் நிலை தோன்றியுள்ளது.

இதன் காரணமாக இவர்கள் தமது மக்கள் சேவையை மறந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாம் மக்களால் வாக்களித்து வந்தவர்கள் என்பதை மறந்து குறுநில மன்னர்களாக தம்மை எண்ணி வாக்களித்த மக்களையே வாயடக்கி ஆள முனைந்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல. வாக்களித்த மக்கள் கிளர்ந்தெழ ஆரம்பித்தால் அரசியல் அலுவலகங்களை மூடிவிட்டு முன்னர்போன்று கொழும்பில்தான் தஞ்சமடையயும் சூழல் ஏற்படும்.

எனவே உங்களை நம்பி உங்களது புளித்துப் போன தமிழ் தேசியக் கதைகளை நம்பி வாக்களித்த மக்களை புலிகளைப் போன்று நடுத்தெருவில் விட்டுவிட வேண்டாம், உங்களால் முடியாவிட்டால் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற மக்கள் தயாராகவே உள்ளனர். ஏற்கனவே பெருமளவிலான மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும் தமிழ்த் தலைவர்களின் பின்னால் அணி திரள ஆரம்பித்துவிட்டனர். ஒன்று மக்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யுங்கள் அல்லது செய்து கொண்டிருக்கும் அரசாங்கத்தைச் செய்யவிடுங்கள் என்பதே எமது வேண்டுகோளாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com