Contact us at: sooddram@gmail.com

 

பொதுவாழ்க்கை பிரகடனம்

(தமிழருவி மணியன்)

உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் டாக உலகில் வலம் வருவது ஓர் அரிய தவத்துக்கு ஒப்பானது. அடையாள அட் டைகள் வைத்திருப்பவர் எல்லாம் கம்யூ னிஸ்ட் ஆகிவிடுவது இல்லை. மக்கள் நலனுக்காக வாழ்வை முற்றாக அர்ப் பணித்து, எள் மூக்கின்முனை அளவும் சுயநலமின்றி, தனிச் சொத்துடைமை துறந்து, எளிமை சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டு, வர்க்க பேதமற்ற சுரண் டலற்ற சமுதாயத்தைச் சமைப்பதற்குப் போர்க் குணத்துடன் புரட்சிக்கான களம் அமைப்பவரே ஓர் உண்மையான கம் யூனிஸ்ட்டாக உருப்பெற முடியும். இன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே கலப்படம் நிகழ்ந்துவிட்டது. நல்லகண்ணு, சங் கரய்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே தமி ழகத்தில் மார்க்சியத்தின் எச்சமாக நம் முன் நடமாடுகின்றனர். இத்தகைய சூழ லில்தான்நானும் ஒரு கம்யூனிஸ்ட்என் கிறார் கலைஞர் கருணாநிதி.

ஐந்து தலைமுறை முதலமைச்சராக இருந்த எனக்கு ஒரேயொருதெரு வீடுதவிர வேறெந்த வீடும் இல்லை. அதையும் மக்களுக்குத் தானமாக எழுதிவைத்து விட்டேன்என்று கலைஞர் வழங்கியிருக் கும் வாக்குமூலத்தில் உண்மை சிலு வையில் அறையப்பட்டுவிட்டதை அறி யாத தமிழர் யாராவது உண்டா? ஆல மரத்தின் விழுதுகள் போன்று பரவிப் படர்ந்திருக்கும் கலைஞரின் குடும்ப உற வுகளின் சொத்துப் பட்டியலை விரிவாக எழுத முயன்றால், விரல்கள் வலிக்குமே. அவ்வளவு சொத்தும் அறம் சார்ந்த வழி களிலா வந்து சேர்ந்தது? கலைஞரைப் போல 90 வயதைத் தொட்டவர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்வை வேள்வியாக நடத்தியவர்கள், ஆயிரம் இன்னல்களைத் தலைமறைவு வாழ்க் கையில் சந்தித்தவர்கள், மாநில முதல்வ ராக இருந்தவர்கள். செப்புக் காசும் தமக் கென்று சேர்க்காமல் இறுதிவரை வாழ்ந்து செத்தவர்கள், ‘தெரு வீடுகூட இல்லாத வர்கள் இருவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை அறிவதன் +மூலம்கலைஞர் ஒரு கம்யூனிஸ்ட்டா?” என்ற கேள்விக்கு எளிதில் விடை காணக் கூடும்.

மகாத்மா காந்தி காண விரும்பிய பொது வாழ்க்கைப் பேரேட்டில் பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண் டிய புனிதப் பெயர்கள் இரண்டு. 1.நிருபன் சக்ரபர்த்தி, 2. ஈ.எம்.எஸ். நம்பூதிபாட். இருவருமே காந்தியால் கவரப்பட்டு,தேச விடுதலைப் போரில் தியாகம் புரிந்து, மார்க்ஸியப் பொருளாதாரத்தில் மனம் ஒன்றிக் கலந்து கம்யூனிஸ்ட்டுகளாக மாறியவர்கள்; தாங்கள் பிறந்த மண்ணில் தவ வாழ்க்கை நடத்தி, மார்க்ஸியத்திடம் மக்களைத் திருப்பி, கம்யூனிஸ ஆட்சியை அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர்கள்; அகத்திலும் புறத்திலும் பொய்யின் நிழல் படாமலும், ஊழலின் மாசு படியாமலும் நம்மால் நம்ப முடியாதபடி வாழ்ந்து மறைந் தவர்கள்.

நிருபன் சக்ரபர்த்தி, தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர், கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தபோதும், ஏழைகளின் தோழனாய் தன்னைச் செதுக்கிக் கொண்டவர்; சணல் ஆலைத் தொழிலாளியாய், கூலியாளாய், ரிக்ஷா இழுப்பவராய், மலைவாழ் மக்களின் ஆசிரியராய், கல்கத்தாவின் புகழ்பூத்த இதழானஅமிர்தபஜார்பத்திரிகையாள ராய் பல்துறை அனுபவங்களை அடைந் தவர். 1978 முதல் 1988 வரை கம்யூனிஸ்ட் முதல்வராக 10 ஆண்டுகள் திரிபுரா மாநி லத்தில் பணியாற்றிய நிருபன் ஓர் அதிசய மனிதர். முதல்வராகப் பொறுப்பேற்றதும் ஒரு தகரப் பெட்டியுடன் அரசு வீட்டில் அடி யெடுத்து வைத்தவர், 10 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி நடத்தி முடித்தபிறகு, அதே தகரப் பெட்டியுடன் ஒரு ரிக்ஷாவில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் விடு திக்கு வந்து சேர்ந்தார் நிருபன். அவ ருடைய தகரப் பெட்டியில் சில ஆடை களும் சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத் தகங்களும் மட்டும் தான் இருந்தன. தெரு வீடுகூட இல்லாத துறவி நிருபன் ஏழ் மையும் எளிமையும் அழகு தரும் அணி கலன்களாய்ப் பூண்டு ஓர் உன்னதமான மார்க்ஸியராய் வாழ்ந்தார்.

இரண்டாவது முறை தொடர்ந்து நிருபன் திரிபுரா முதல்வராகத் தேர்ந் தெடுக்கப்பட்டபோது வாழ்த்த வந்த வர்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். இன்னமும் 60 சதவிகித மக் களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்க வில்லை. நூற்றுக்கணக்கான கிராமங் களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்று வரை ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக் கவில்லை. இவற்றுக்காக என் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டியவன். எனக்கு வாழ்த்தும் பாராட்டும் பெறும் தகுதி இல்லைஎன்றவர் நிருபன். ஆனால், நம் கலைஞர் புகழுரைக்கும் விளம்பரத்துக்கும் வரவேற்பு வாழ்த் தொலிக்கும் ஏங்கி நிற்கும்இயல்பு கொண் டவர். என்னிடம் பற்றும் அன்பும் கொண்ட தோழர்கள் எனக்கு விழா எடுக்கிறார்கள். அதுகண்டு வக்கற்றோர் வயிற்றெரிச்சல் படுவதா?’ என்று பொங்கும் கலைஞர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக முடியும்?

எங்களில் எவரும் வெகுஜனப் புக ழைத் தூசியளவுகூட மதித்ததில்லை. பல நாடுகளில் இருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு. நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத் தால், அந்தப் பாராட்டுகளில் ஒன்றைக் கூட விளம்பரமாகப் பயன்படுத்துவதற்கு நான் அனுமதித்தது இல்லைஎன்று, மார்க்ஸ் தனது எழுத்தில் பதிவு செய் திருப்பதை நிருபன் அறிந்து வைத்திருந் தார். ஆனால், கலைஞர் அதை அறிந் திருக்க நியாயமில்லை. காரணம், அவர் எந்த வகையிலும் கம்யூனிஸ்ட் இல்லை.

இந்தியாவில் முதல் காங்கிரஸ் அல் லாத அரசை அமைத்த, ஜனநாயக முறை யில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூ னிஸ்ட் ஆட்சியை நிர்வகித்த அரிய வர லாற்று மனிதர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட். தன்னுடைய சிந்தனையாலும் செயல் திறனாலும் கேரள மக்களின் சமூக வாழ் வியலை மடைமாற்றம் செய்த மகாபுருஷர். இளமையில் காந்தியோடு இணைந்து, காங்கிரஸில் கலந்து, சோஷலிஸ்ட்டாக மலர்ந்து, இறுதிநாள் வரை மார்க்ஸியராக மணம் பரப்பியவர் ஈ.எம்.எஸ். ஒரு கம்யூ னிஸ்ட்டாக நீண்ட நாள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி 1947ல் வெளிப்பட்ட நம்பூதிரிபாட் தன் குடும்பத்தின் திரண்ட சொத்துக்களை விற்று அதைக் கம்யூ னிஸ்ட் இயக்கத்துக்குக் காணிக்கையாக் கினார். பிரிட்டிஷ் அரசால் தடை செய் யப்பட்டதேசாபிமானிவார இதழ், அந்தப் பணத்தில் தான் நாளிதழ் ஆனது. அந்த இதழின் ஆசிரியராகப் பொறுப் பேற்ற நம்பூதிரிபாட் தன்னுடைய 89 வது வயதில் மரணத்தைத் தழுவிய நாளில் கூட மதச்சார்பின்மையின் அவசியம் குறித்து அந்த இதழுக்காக உதவியாளர் துணையுடன் கட்டுரை வடித்தார். ஏராள மாக எழுதிக் குவித்த அவர் தன் எழுத் தின் மூலம் கிடைத்த பணத்தையும் இயக் கத்துக்கே அர்ப்பணித்தார். தான் பிறந்த மண்ணை 26 ஆண்டுகள் திரும்பிப் பார்க்க நேரமின்றி ஏழைக்கும் பாழைக்கும் ஓயாமல் உழைத்த அந்த மனிதர், தள்ளாத வயதிலும் தன் ஆடையைத் தன் கையால் துவைத்துஅணிந்தவர். தோழர் நல்ல கண்ணு இன்றும் தன் துணியைத் தானே துவைப்பவர். அவர்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள். நம் கலைஞரோ கழகத் தளபதிகளின் கறைபடிந்த அர சியல் பயணத்தில் தலைமை ஏற்று வழி நடத்துபவர். மாணிக்கங்களையும் கூழாங் கற்களையும் ஒரே கூடையில் அடுக்கு வது அழகாகுமா?

சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத்தைக் குடும்பச் சொத்தாகக் கூறு போட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அரவணைத்து அவர் களுக்கு விமான நிலையத்தில் வீர வர வேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங் களை ஆக்கிரமித்தவர்களைத் தானே தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத் தமிழர் அழிந்தபோதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப்பவர், சில்லரை வணிகத் தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர் கோவில் நாடாளுமன்ற இடைத்தேர் தலில் ஆதரித்துக் கடுமையாகக் களப் பணி ஆற்றியவர், ‘நானும் ஒரு கம்யூ னிஸ்ட்என்கிறார். கேழ்வரகில் நெய் என் றால் கேட்பவர்க்கா புத்தியில்லை?

நம்பூதிரிபாட் ஒருமுறைசொன்னார்: ‘நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு தனி மனிதன் தன்னை முழுவதுமாக அர்ப் பணித்துக் கொள்ளும் தருணத்தில் தலை வனாக உயர்ந்து விடுகிறான். தன் சுகங் களுக்காகவும் தேவைகளுக்காகவும், கொள்கையில், லட்சியத்தில் சமரசம் கொள்ளும் தருணத்தில் தலைவன் என்ற தகுதியை இழந்துவிடுகிறான்.

ஓ... அதுதான் எவ்வளவு ஆழ்ந்த அர்த் தமுள்ள பொது வாழ்க்கைப் பிரகடனம்!

நன்றி: ஜூனியர் விகடன் (23.1.13) ஏட்டில் வெளியான கட்டுரையின்
பகுதிகள்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com