Contact us at: sooddram@gmail.com

 

வரலாறு கூறும் அனுபவம்!

(எஸ். கண்ணன்)

வயிற்றின் அடிப்பகுதியிலும், இதயத் திற்கும் கீழுமாக மூன்று தோட்டக்கள் துளைத்ததால், காந்தி சரிந்து மடிந்த நாள் ஜனவரி 30. இன்றும் அவர் முன்வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு, இந்துத்வா சக்திகளை வன்மம் கொள்ளச் செய்து வருகிறது. தேசப்பிதா என்று காந்தியை அழைக்காதீர்கள்என்று அலறினார் அத்வானி. இன்றளவும், இந்துத்துவா சக் திகள் இந்தியாவில் வெற்றி பெறாமைக் குக் காரணம் இடதுசாரிகளும், காந்தியும் வலியுறுத்திய மதச்சார்பின்மையே ஆகும். அடிப்படையில், இந்துமத வழி பாட்டை மேற்கொள்பவர், சதா ராம நாமத்தை உச்சரிப்பவர் என்ற அடையா ளங்களைக் கொண்ட காந்தி எப்படி, மதச் சார்பின்மையின் பிரதிநிதியாக இருக்க முடியும்? என்ற கேள்வி இன்றும் பலரைத் துளைத்து வருகிறது. மதம் ஒரு சொந்த பிரச்சனை, அதற்கு அரசியலில் இடம் இல்லைஎன்று அன்றைக்கு அழுத்த மாக குறிப்பிட்டார் காந்தி.

பாகிஸ்தான் பிரிவினை முழக்கம் வலுத்த நிலையில் காந்தியைச் சந்தித்த குழுவிடம், “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதமும், அரசியலும் தனித் தனியாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாகக் கூறுகிறேன். மதம் எனது சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தவொரு வேலையும் இல்லைஎன் றார்.ஹிந்த் ஸ்வராஜ்ஏட்டில், “உலகில் எந்தப் பகுதியிலும் தேசிய இனமும் மத மும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை”, இந்தியாவிலும் அப்படி ஒரு போதும் இருந்ததில்லை, அதை வலி யுறுத்துவதே மதச்சார்பற்ற நம் போன் றோரின் கடமைஎன்றார். பல்வேறு சந் தர்ப்பங்களில் இது போன்ற கருத்துக் களை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்றுள்ளார்.

காந்தி வலியுறுத்திய மேற்கண்ட கருத் துக்கள், இந்து மதம் என்ற பெயரிலும், முஸ்லிம் மதம் என்ற பெயரிலும் அரசியல் செய்தவர்களுக்கு வெறுப்பைத் தந்தது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. கோல்வாக்கர், “கோவிலில் நீ வழிபடுவதும், உன் தெய்வங்களைத் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதும், முஸ்லிம்களை எரிச்சலூட்டு மானால், அதை நிறுத்திவிடு, உங்கள் மனைவி, மகள் தூக்கிச் செல்லப்படும் போது தடுக்காதே, தடுத்தால் வன்முறை என்கிறார்கள்”, என்று காந்தியின் வாச கங்களைக் குத்திக் காட்டினார். வி.டி. சாவர்க்கார், “இந்தியாவிற்குள் பத்தானி யர்கள் ஊடுருவவும், அமீர் முடிசூடவும் காந்தி அனுமதிப்பார்,” என்றார். மறுபக்கம் முஸ்லிம் லீக் மாநாட்டிலும் அலிகார் மாணவர்களிடையேயும் பேசிய ஜின்னா, “இந்து மதத்தைப் புனரமைத்து இந்த நாட்டில் இந்து ஆட்சியை ஏற்படுத்துவது தான் அவரது நோக்கம். ஒரு இந்து ஆட் சியின் கீழ் முஸ்லிம்களை அடக்க வேண் டும்; ஒடுக்க வேண்டும், என்பதே திரு வாளர் காந்தியின் எதிர்பார்ப்புஎன்று குறிப்பிட்டார்.

இந்துஸ்தானை முன் நிறுத்தியவர் களும், பாகிஸ்தானை முன் நிறுத்தியவர் களும், ஒருசேர காந்திக்கு எதிராக களத் தில் நின்றனர். இதன்மூலம், காந்தியின் மக்கள் ஒற்றுமை கருத்துக்கள், இந்துத் துவா மற்றும் முஸ்லிம் லீக்கின் பிரச் சாரங்களைக் கடந்து, மக்களிடம் வர வேற்பைப் பெற்றிருந்தது என்பதையும் அறிய முடியும். எனவே தான் இருதரப்பும் ஒருசேர எதிர்த்து நின்றார்கள். காந்தி வலி யுறுத்திய கோட்பாடுகள், பலநாட்டின் கருத்துக்களைப் போலவே நான்கு அடிப்படைஅம்சங்களைக்கொண்டிருந்தது.

1. மதம் அரசியலில் ஊடுருவக் கூடாது. அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூக வாழ்வின் விரிவான பகுதிகள், பண்பாடு ஆகியவற்றில் இருந்து மதம் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இந்திய மதச்சார்பின்மை என்ற பெயரில் இதை மறுப்பதானது, மதச்சார்பின் மையையே மறுப்பதாகும். மதச்சார் பற்ற அரசு என்றால் மதத்தை ஊக்கு விப்பதல்ல.

2. பல மதங்கள் இருக்கும் ஒரு சமூகத் தில் மதச்சார்பின்மை என்பது அனைத்து நம்பிக்கைகள் தொடர்பாக வும் அரசு நடுநிலையைக் கடைப் பிடிக்கும். நாத்திகவாதத்திற்கும் அரசு சமமதிப்பு அளிக்கும் என்பதாகும்.

3. மதச்சார்பின்மை என்பது அரசு அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்த வேண்டும். மதத்தின் அடிப் படையில் ஆதரவாகவோ, எதிர்ப்பா கவோ பாரபட்சம் காட்டக் கூடாது என்று பொருள் கொள்ள வேண்டும்.

4. இந்தியாவில் காலனியாதிக்கத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துகிற ஒரு கோட்பாடாகவும், தேசத்தை உரு வாக்குகிற நடைமுறையின் ஒரு பகுதி யாகவும், மதச்சார்பின்மை என்ற கருத்து உருவானது. அதேநேரத்தில் மக்களை சமூக மற்றும் அரசியல் ரீதி யில் பிளவுபடுத்தும் சக்தியாக மத வெறி வாதம் வளர்ந்தது. எனவே மத வெறிவாதத்திற்கு எதிர்ப்பு வாதமாக, மதச்சார்பின்மை வாதம் முன் நிறுத்தப் பட்டது. இந்தக் கோட்பாடுகளில் எந்த இடத்திலும் மதச்சார்பின்மைக்கான செயல்பாட்டாளர்கள் காந்தியுடன் மாறுபடும் வாய்ப்பு இல்லை.

இந்தக் கருத்துக்களின் விளைவு தான் இன்றளவும், மதச்சார்பின்மை என்ற வார்த்தை எட்டிக்காயாக மதவெறிச் சக்தி களால் கருதப்படுவதற்குக் காரணம் ஆகும். காந்தி கல்வி நிறுவனங்களில் மதக் கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப் படுவதை எதிர்த்தார். 1947- ல் கல்வி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப் பட்ட டாக்டர் ஜாகிர் உசைன், காந்தியை சந் தித்த போது, “அரசு மதக் கல்வி வழங்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள் ளவில்லை”. மதத்தையும் நெறி முறை களையும் கலக்காதீர்கள்என்றார். இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் சாகடிக்கப்பட்ட நிலையில், குழந் தைகளும், முதியவர்களும் ஆதரவற்றவர் களாக, மிகக் கொடிய வறுமைக்கு ஆட் பட்டவர்களாக ஒரே இரவில் மாற்றப்பட்ட நிலையில், மத அடையாளம் கொண்ட பெண்கள் குழந்தையாக இருந்தாலும் முதியவராக இருந்தாலும் மதவெறியில் பலாத்காரத்திற்கு ஆளான நிலை என்று, மதவாத வெறி உச்சத்தில் இருந்த 1947 ஆகஸ்ட் மாதத்தில் இந்த கருத்துக்களை முன்வைத்த காரணத்திற்காகவே காந் தியின் கருத்துக்களைப் பாராட்ட வேண்டும்.

இன்றைய ஆட்சியாளர்களைப் போலவே நேருவின் ஆட்சியாளர்களும், நடவ டிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்ததை, காந்தியின் கொலையில் இருந்து அறிய லாம். காந்தியை பலமுறை கொல்ல முயற் சித்து இருக்கிறார்கள். குறிப்பாக 1948 ஜன வரி 20 அன்று மாலை பிரார்த்தனைக்குச் செல்லும் போது, மதன்லால் பாவா என் பவரால் குண்டு எறிந்து கொல்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு பல்வேறு விசாரணைகள் மூலம் கோட்சே சகோதரர்கள் உள்ளிட்டு அனைவரும் அடையாளம் காணப்பட்ட பின்னரும் கைது செய்யப்படவில்லை. பிரதமர் பொறுப்பில் இருந்த நேரு, அன் றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலுக்கு, கடிதம் எழுதி விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில் நடவ டிக்கையை வலியுறுத்தி உள்ளார். விடு தலைப் போரில் முன் நிறுத்தப்பட்ட மனி தன், அதிகாரத்தில் இல்லாத காரணத் தால் மலிவாகி விட்டாரா? பட்டேலின் மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது.

குறிப்பாக இந்தியப் பிரிவினையின் போது, சகலமும் பாகப்பிரிவினைக்கு உள் ளானது. ரொக்க இருப்பு 400 கோடியில் 75 கோடி தர வேண்டும் என்ற உடன்பாடு ஏற் பட்டது. அதில் 20 கோடி உடனே தரப் பட்டது. காஷ்மீர் பிரச்சனைத் தீராததால் மீதம் இருந்த 55 கோடி காலதாமதம் செய் யப்பட்டது. அதை கொடுத்து கணக்குத் தீர்க்க காந்தி வலியுறுத்தினார். நாட்டில் நடந்த மதக்கலவரங்களை நிறுத்தவும், 55 கோடியைக் கொடுத்திடவும் கோரிக் கைகள் வைத்து தனது ஆயுதமான உண் ணாவிரதத்தைத் துவக்கினார். இது நாது ராம் கோட்சேவை மட்டுமல்ல, ஆட்சி யாளர்களையும் வெறுப்பேற்றியிருக்க வேண்டும். (பாகிஸ்தானுக்கு 55 கோடி தர மறுத்தவர்கள், இன்று லட்சக்கணக் கிலான கோடிகளை பன்னாட்டு முதலா ளிகளுக்கு வாரியிறைப்பது தனிக்கதை)

மதச்சார்பின்மையில் உறுதியாக இருந்த காந்தி, அப்போது நடந்த கலவரங் களை கட்டுப்படுத்த முடியாததை உணர்ந்தார். தன்னிடம் பிரத்யேக ஆயுதம் இல்லாததை தெரிந்து கொண்டார். கார ணம் அவரின் அரசியல், தத்துவமற்ற கோட்பாடாக இருந்தது. மதவெறிக்கு எதி ரான கோட்பாடுகள் ஒரு தத்துவப் பிடிப்பு கொண்ட மக்கள் பிரிவினரால் வலி யுறுத்தப்பட வேண்டும் என்பது அவரால் முன்னிறுத்தப்படவில்லை. இதன் விளைவு தான், காந்தி பிறந்த குஜராத்தில் மதவெறி சக்திகள் மீண்டும் வெற்றி பெற்றிருக்கும் சூழலிலும், இந்து தீவிரவாதி கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்திய உள்துறை அமைச்சரை நீக்க வேண்டும் என இந் துத்துவா அமைப்புகள் கூச்ச லிடும் நிலையிலும் காந்தியை நினைவு கூர் வோம்; அவரின் மதச்சார்பின்மை யைப் பாராட்டுவோம். ஆனால்
அது அதி காரப்பசிக்கு முன் தோற்றுப்போனதன் அனுபவத்தில் இருந்து தத்துவத்தின் அடிப்படையில், தொழிலாளி வர்க்க அரசியலுடன் முன்னிறுத்துவோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com