Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டை இந்தியா புறந்தள்ளி விட முடியாது

தமிழக மீனவர்கள் இரட் டைமடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளையும் இழுவைப் படகுகள், டைனமைட் ஆகியவ ற்றையும் பயன்படுத்துவதால் மீன்வளமும், மீன் குஞ்சுகள் வளர்வதற்கான இயற்கை வளமும் அழிந்து வருவதாக இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டை இந்தியா புறந்தள்ளிவிட முடியாதென இந்தியாவின் முன்னணி தமிழ் நாளேடானதினமணிதெரிவி த்துள்ளது. இது தொடர்பாகவேண்டாமே விரோதம்எனும் தலைப்பில்தினமணிபத்திரிகை நேற்று ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. தமிழக மீனவர்கள் தடையை மீறி செயற்படுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான் என தெரிவித்துள்ள தினமணி ஆசிரியர், தெளிவான புரிந்துணர்வுக்கு இருநாட்டு அரசுகளும் வழிகோல வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் மிகவும் சிக்கலானதாக உருவெடுத்துள்ள மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு மீன் வளத்துறை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கான முன்முயற்சியை மத்திய அரசு எடுத்தது. டில்லியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியத் தரப்பில் மத்திய வேளாண், மீன் வளத்துறை அமைச்சர் சரத் பவாரும், இலங்கை தரப்பில் மீன் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளிலும் சிறையில் அடைக் கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் படிப்படியாக விடுவிப்பது என அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதன்படி முதல் கட்டமாக இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 51 தமிழக மீனவர்களும், தமிழகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 52 இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட்டு அவரவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதனிடையில், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நாகை, மண்டபம், பகுதிகளைச் சேர்ந்த 121 மீனவர்களையும் நீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதே நேரத்தில், தமிழக சிறைகளில் உள்ள 61 இலங்கை மீனவர்களும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 27ஆம்திகதி இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகள் இடையே சென்னையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்படுவதற்கு நல்லதொரு தொடக்கமாக மீனவர்களின் விடுதலை அமைந்துள்ளது.

கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது பிரச்சினையல்ல அவர்கள் அதையும் தாண்டி இலங்கையின் கடல் பரப்பில் மீன் பிடிப்பதுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது என அந்த நாட்டு மீனவர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சண்டை முடிவுக்கு வந்த பிறகு தற்போதுதான் தாங்கள் மீண்டும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் தமிழக மீனவர்களின் செயல்பாடுகள் உள்ளதாகவும் இலங்கை மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழக மீனவர்கள் இரட்டை மடி சுருக்கு மடி உள்ளிட்ட வலைகளையும், இழுவைப் படகுகள் டைனமைட் ஆகியவற்றையும் பயன்படுத்துவதால் மீன் வளமும் மீன் குஞ்சுகள் வளர்வதற்கான இயற்கை வளமும் அழிந்து வருவதாகவும் இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடிபாடு குறைந்ததால், தமிழக மீனவர்கள் தற்போது தங்களது எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடிப்பதால் பிரச்சினை ஏற்படுவதாகவும் இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை மீனவப் பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீனவர்களின் இந்தக் கருத்துக்களை நாம் ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில் தமிழக மீனவர்கள் தடையை மீறி இரட்டை மடி, சுருக்கு மடி வலைகள் பயன்படுத்துவதை நமது மீன் வளத் துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான். அதே நேரத்தில் தமிழக மீனவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சுமுகமான தீர்வை எட்ட முழு மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்தியா, இலங்கை கடல் பரப்பில் அமைந்துள்ள பாக்கு நீரிணைப் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் இணைந்து மீன் பிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். அல்லது மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு தமிழக மீனவர்களும் வேறு சில நாட்களுக்கு இலங்கை மீனவர்களும் மீன்பிடித்துக் கொள்ளும் வகையில் ஒரு தெளிவான அட்டவணையை தயாரித்து அதை நடைமுறைப்படுத்தலாம்.

மீன் வளத்தைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு மீன்பிடி சாதனத்தையும் பயன்படுத்துவதில்லை என இரு நாட்டு மீனவர்களும் முடிவு எடுக்க வேண்டும்.

மீன்வளம் என்பது இயற்கை அளித்த கொடை. கடல் என்பது மனித இனத்துக்குப் பொதுவான சொத்து இதைப் பயன்படுத்துவதில் சண்டை சச்சரவுக்கு இடமிருத்தல் கூடாது. தெளிவான புரிந்துணர்வுக்கு இரு நாட்டு அரசுகளும் வழி கோல வேண்டும்.

(நன்றி: தினமணி) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com