Contact us at: sooddram@gmail.com

 

“தலைவர் நம்மாழ்வார்!” - வரலாறு

'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்’ என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி பேசுகிறார்கள்.

'சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள்

யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...’ என்று முண்டாசு கவிஞன் பாடி வைத்தபடி, எட்டுத் திக்கும் பயணம் செய்து, தமிழ்நாட்டு உழவர்களின் பெருமைகளையும், இயற்கை விவசாயத்தின் அருமைகளையும் ஓயாமல் பேசினார் நம்மாழ்வார். அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அவரின் காலடித்தடங்கள், இன்று பலருக்கும் வழிகாட்டியாக உள்ளன.

இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில், டி.டி.எஸ் (Deccan Development Society) எனும் தொண்டு நிறுவனம் உள்ளது. இந்த அமைப்பின் உதவியோடு சுற்றுவட்டார கிராமங்களில் கம்பு, கேழ்வரகு என சிறுதானியங்களை விளைவித்து, இந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ஐ.நா சபை வரை சென்று சுந்தர தெலுங்கில் சிறுதானியங்களின் பெருமைகளை, இந்த பெண் விவசாயிகள் சொல்லி வருகிறார்கள். இவர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கிறார் நம்மாழ்வார் என்பதுதான் சிறப்பு.

தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பி.வி. சதீஷ், கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர். பத்திரிகையாளராக இருந்தவர், ஒருகட்டத்தில் அதை உதறிவிட்டு, விவசாயிகளுக்காக வாழ்ந்து வருகிறார். நம்மாழ்வார் பற்றி சதீஷ் சொல்வதைக் கேட்போம்.

''ஆங்கிலத்தில் 'லீடர்’ என்ற சொல்லுக்கு தமிழில் 'தலைவர்’ என்று பொருள் என்பீர்கள். ஆனால், லீடருக்கும் தலைவருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதுதான் திராவிட மொழியான தமிழ் மொழியின் சிறப்பு. தலைவர் என்ற சொல்லுக்கு தலைமை தாங்குவது மட்டுமல்ல, நல்ல தொண்டனாகவும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். நம் காலத்தில் நல்ல தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை செயல் மூலம் காட்டிச் சென்று விட்டார் தலைவர் நம்மாழ்வார். எங்கள் நட்பு இருபது ஆண்டுகளுக்கும் மேலானது. இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு விவசாயி பற்றியும், தலைவருக்குத் தெரியும். நாங்கள் நடத்தும் பயிற்சி, கருத்தரங்கு என்று எதுவாக இருந்தாலும் தலைவர் கட்டாயம் பேசுவார். எங்கு சந்தித்தாலும், டி.டி.எஸ் வளர்ச்சி பற்றி அக்கறையாக விசாரிப்பார். நாங்கள் செய்துவரும் சிறுதானிய பரவல் வேலைகளைப் பற்றி, டி.டி.எஸ் பற்றி யெல்லாம் தெலுங்கானாவுக்கு வெளியில், ஓங்கி ஒலித்த குரல் தலைவருடையது.

பல ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் இது. டெல்லியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத் தில் நடைபெற்ற உயிர்ச்சூழல் குறித்த கருத்தரங்குக்கு தலைவரும் வந்திருந்தார். அப்போது, 'சதீஷ், கிராமத்தில் இருந்து மக்கள் நகரத்தை நோக்கி செல்வது அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கும் சக்தி, சிறுதானியங்களுக்கு மட்டுமே உள்ளது. வறட்சியிலும், விளைச்சல் கொடுக்கும் சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயி நஷ்டப்படமாட்டான். எனவே, இதற்காக ஏதாவது செய்ய வேண்டுமே’ என்று சொன்னார். ஊர் வந்து சேர்ந்த பிறகு, தலைவர் சொன்ன விஷயங்களை செயல்படுத்தத் தொடங்கினோம். நாடு தழுவிய அளவில் சிறுதானிய வளர்ச்சிக்காக 'மில்லட் நெட் ஒர்க் ஆஃப் இந்தியா’ (Millet Network of India-MINI) அமைப்பைத் தொடங்கினோம். இதைத் தொடங்குவதற்கான விதையை தலைவர்தான் என்னுள் விதைத்தார். அவர், தலைமையில்தான் 2008-ம் ஆண்டு ஐதராபாத்தில் இந்த அமைப்பு தொடங்கப் பட்டது. நிறைய பேருக்குத் தெரியாத விஷயம், இந்த அமைப்பின் இணை நிறுவனர் தலைவர்தான். இதை எந்த இடத்திலும், தலைவர் சொல்லிக் கொண்டதில்லை. இதுதான், நம் தலைவரின் தனிக் குணம்.

மத்திய அரசு பொதுவிநியோகத் திட்டத்தில், சிறுதானியங்களைச் சேர்த்ததும், நாடு முழுக்க சிறுதானிய உணவுகள் மீண்டும் புத்துயிர் பெற வைத்ததும் இந்த அமைப்பின் அரும்பணி. இந்த அமைப்பில் தமிழ்நாடு உட்பட நாடு முழுக்க எங்களுடன் பல மாநில விவசாயிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆப்பிரிக்கா கண்டத்திலும்கூட இந்த அமைப் பின் மூலம் சிறுதானியங்கள் சிலிர்த்தெழுந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம், சிறுதானியங்கள் போன்றவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில், தலைவருடன் 'பசுமை விகடன்’ இதழும் கைகோத்திருந்தை நான் அறிவேன். 'வானம் பார்த்த பூமி, வாழ வைத்த சாமி’ என்ற தலைப்பில் எங்களின் சிறுதானியப் பணிகளை பசுமை விகடன் தொடராக வெளியிட்டு, புத்தகமாகவும் கொண்டு வந்துள்ளது. அந்தப் புத்தகத்தில், 'உணவு உத்தரவாதத்துக்கு இந்தியா வில் தெரியும் ஒரே உதாரணம், இந்த சிறுதானிய கிராமங்கள்தான்’ என்று எங்கள் பணிக்கு தலைவர் பாராட்டு மடல் எழுதியுள்ளதை அறிந்தபோது, நெகிழ்ந்துப் போனேன்.

தலைவர் நம்முடன் இல்லை என்பதை மனது ஏற்க மறுக்கிறது. ஆம், மண்ணில் விதைக் கப்பட்ட அவர், இயற்கையாகவே மாறிவிட்டார். 'அடிக்காட்டிலே, நடு மாட்டிலே, நுனி வீட்டிலே’ என்ற தலைவரின் தாரக மந்திரச் சொல்லை, நான் திக்கி, திக்கி தமிழ் மொழியில் சொல்வதைக் கேட்டு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்.'

'இயற்கையின் தோழன்’

கேரள மாநிலத்தில் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல்... பணிகளைச் செய்து வரும் தணல் அமைப்பைச் சேர்ந்த, உஷா நம்மாழ்வார் பற்றி அனுபவங்களை விவரிக்கிறார்...

''அய்யா, இப்படித்தான் அவரை அழைப்போம். முதல் முறையாக 2004ம் ஆண்டு, பனி கொட்டும் டிசம்பர் மாதத்தில் அய்யாவைச் சந்தித்தேன். எங்கள் அமைப்பு பாரம்பரிய நெல்லைப் பாதுகாக்க, ஏற்பாடு செய்திருந்த முதல் கருத்தரங்கில் பங்கேற்கத்தான் அய்யா வந்திருந்தார். இந்தியா முழுவதும், பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து நெல் விவசாயிகள் வந்திருந்தனர். பாரம்பரிய நெல்களின் பெருமைகளை அய்யா... அடுக்கிச் சொல்லும்போது, அதற்காக இன்னும் வேகமாக வேலை செய்ய வேண்டும் என்ற வேகம் எல்லோருக்கும் ஏற்பட்டது.

கேரளாவில் நாங்கள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சிகளில் அய்யாவின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். தமிழ் மொழியில் மட்டுமல்ல... எளிமையான ஆங்கிலத்திலும் அய்யா, அருமையாகப் பேசுவார். தமிழ்நாட்டில் மறைந்து போன நிலையில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தத்தில் அய்யாவுக்கு தனியிடம் உண்டு. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடைபெறும் நெல் திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்துவதற்கான விதையும், அய்யாவால்தான் விதைக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் விவசாயிகள் மட்டுமல்ல... மாநிலத்தின் முன்னாள் வேளாண் துறை அமைச்சரும் அய்யாவிடம் இயற்கை விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொண்டுள்ளார். இனம், மொழி, தேசம் கடந்து இயங்கியவர் அய்யா. 'உலகில் எங்கேனும் நடக்கும் அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே!’ என்று சே குவேரா சொல்லியிருக்கிறார். அந்த வகையில், 'உலகில் எங்கேனும் இயற்கைக்கு ஆதரவாக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே!’ என்ற கொள்கையில் வாழ்ந்துச் சென்றுள்ளார் நமது அய்யா.'

(பசுமை விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com