Contact us at: sooddram@gmail.com

 

முகமாற்ற ஆட்சியும் - இடதுசாரி அரசியலும்

முகமாற்றம் நடந்து முடிந்திருக்கின்றது. முகப் பூச்சுகள் நடந்து வருகின்றது. இந்த பின்னணியில் மாற்றங்களுக்கு ஏற்ற எதிர்பார்ப்புகளுடன் கூடிய பொது அரசியல் மேலெழுந்து காணப்படுகின்றது. இதற்கு பின்னால் இடதுசாரிய அரசியல் முடங்கிவிட முடியுமா? அதாவது முகமாற்றமும், முகத்துக்கு மேல் அடிக்கும் வெளிப்பூச்சுகளும் தானாக அம்பலமாகும் வரை காத்திருப்பதல்ல இடதுசாரியம். இது இடதுசாரிய சிந்தனையாகவோ, நடைமுறையாகவோ இருக்க முடியாது. மாறாக இவை சூழலுக்கு பின்னால் வால்பிடிப்பதாகும். தேர்தல் முன்பாகவே, முகமாற்றத்தை உண்மையான மாற்றமாக கருதுகின்ற அரசியல் போக்கு இருந்தது. இதை அரசியல்ரீதியாக எதிர் கொள்ளவும், இடதுசாரிய அரசியல் மூலம் கற்றுக் கொடுக்கவுமே, நாம் இடதுசாரி முன்னணி வேட்பாளரை நிறுத்தினோம். இந்த அரசியல் போராட்டம், தேர்தல் முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. அதேநேரம் அது தானாக அம்பலமாகும் வரை, காத்து இருப்பதில்லை.

முகமாற்றத்தை மக்கள் ஏன் தெரிவு செய்தனர் என்பதைப் புரிந்துகொள்வதில் இருந்து நாம் தொடங்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை முகமாற்றம் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கைக்கு பின்னால், மக்கள் வாக்களித்தனர். முகமாற்றம் ஜனநாயகத்தை முன்வைத்ததையும், அதற்கு மக்கள் வக்களித்ததையும் காணமுடியும். ஆனால் முகமாற்றம் ஒரு வர்க்கத்தின் ஆட்சி என்பதால், அது தனக்கு தானே இரு முகங்களைக்; கொண்டது. ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் இருப்பது போல், ஜனநாயகம் - சர்வாதிகாரம் இரண்டையும் ஒன்றாகக் கொண்டதே முகமாற்றம். இதனால் இரண்டு அரசியல் போராட்டங்களை கொண்டதாக இருக்கின்றது. இந்த வகையில்

1.முகமாற்றம் முன்வைத்த ஜனநாயக அடிப்படைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரியும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், முரணற்ற ஜனநாயகத்தை கோரியும் போராட வேண்டும்.

2.வர்க்க ஆட்சி என்ற வகையில் ஜனநாயகத்தை மறுத்து அதன் வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுதல் வேண்டும்.

இந்தவகையில் இந்த வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராக முரணற்ற ஜனநாயகத்தை ஆணையில் வைத்தல் வேண்டும். முகமாற்றம் வைத்த, ஜனநாயகத்தைக் கோரி போராட வேண்டும். அதாவது முகமாற்றத்திடம் ஜனநாயகத்தைக் கோரி போராடுவதானது, அது தனக்குள் கொண்டுள்ள வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதாகும். இதற்கு மாறாக ஜனநாயக வேஷம் அம்பலமாகி வர்க்க சர்வாதிகாரம் தானாக மேலெழும் வரை காத்திருப்பதில்லை.

முகமாற்ற ஆட்சி என்பது ஒரு வர்க்கத்தின் ஆட்சியாக இருப்பதால், ஜனநாயகம் அதற்கு முரணானது. சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சி, சுரண்டப்படும் மற்றைய வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கும் சர்வாதிகாரத்தையே சாரமாகக் கொண்டது. இடதுசாரிகள் ஜனநாயகத்தை அரசியல் ஆணையாக முன் வைத்து, அதை கையில் எடுக்க மறந்துவிடக் கூடாது.

இந்த வகையில் முகமாற்ற ஆட்சி முன்வைத்த 100 நாள் வாக்குறுதிகளை அமுல்படுத்தக் கோரி போராடுவதன் மூலம், மக்களின் உண்மையான கோரிக்கைளுடன் இடதுசாரிகள் இணைந்து கொள்ளவேண்டும்;. 100 நாள் ஜனநாயகத் திட்டத்தை முன்வைத்தே, முகமாற்றம் நடந்துள்ளது. இதன் பின் பல்வேறு சக்திகள் தங்கள் கோரிக்கைகளுடன் அணிதிரண்டு, வாக்களித்து இருந்தனர். இந்த வகையில 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்கள் சார்ந்த ஜனநாயக கோரிக்கைகளை அமுல்படுத்தக் கோரியும், மக்கள் சார்ந்த பிற ஜனநாயகக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் போராடுவதே இடதுசாரிகளின் உடனடி அரசியல் வேலைத்திட்டமாகும்.

முகமாற்றத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும், அதற்காக அது கொடுத்த காலக்கெடுவுக்குள் அதை அமுல் செய்யக் கோரி போராடுவதன் மூலம், ஜனநாயகத்தை கோருவதற்கான செயல்தந்திரங்களில் நாம் இறங்கி இருக்கின்றோம்.

மைத்திரிக்கு வாக்களித்த பலவேறு தரப்புகள் தங்கள் கோரிக்கைகளுடன் மைத்திரியை ஆதரித்ததும், அவை தொடர்பான அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று கானல் நீராகி வருவதால், பொது அதிருப்தி தோன்றி வருகின்றது. இதை தன்னியல்பான ஒன்றாக வடியவிடுதற்கு பதில், இடதுசாரிகள் அதை முன்னோக்காகக் கொண்டு போராடுவது அவசியம்.

இந்த வகையில் 100 நாள் முகமாற்றம்

1.முன்வைத்த ஜனநாயகக் கோரிக்கையிலான முன்னெடுப்புகளை முரணற்ற ஜனநாயக வடிவில் அமுல்படுத்தும் வண்ணம், அதை முன்னோக்கக் கொண்டு இடதுசாரிகள் போராடுவது

2.தங்கள் முக மாற்றங்களுக்காக முன்வைத்து அமுல்படுத்த மறுக்கின்ற கோரிக்கைகளை, அமுல்படுத்தக் கோரி போராடுவதன் மூலம், இடதுசாரிகள் உண்மையான எதிர்க்கட்சியாக மாற்றிக் கொள்வது

3.முகமாற்றம் முன்வைக்க மறுக்கும் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து மக்களை அணிதிரட்டுவது.

தேர்தலின் போது இடதுசாரிய போராட்டம் தங்கள் வர்க்க அணிகளை அணிதிரட்டுவது மட்டுமல்ல, மாறாக தேர்தலில் வென்றவர்கள் முன்வைத்த ஜனநாயகக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கோருவதன் மூலம், மக்களின் ஜனநாயக உணர்வுடன் ஒன்று இணைந்து அதன் நடைமுறைக்காக உண்மையாக போராடுவதாகும்.

முகமாற்றம் ஒரு வர்க்கத்தின் ஜனநாயகம் என்பதால் ஜனநாயகத்துக்கே அது முரணானது. இந்த ஜனநாயகத்தின் மறுபக்கம் வர்க்கத்தின் சர்வாதிகாரமே. இந்த வகையில் இது தான் இடதுசாரிய செயல்தந்திரத்தின் மையமான அரசியல் சாரமாகும்.

(இரயாகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com