Contact us at: sooddram@gmail.com

 

கோணங்கியின் பேச்சும் என் கோணல் புத்தியும்

ஜனவரி 25 அன்று சென்னையில் பல முக்கிய நிகழ்வுகள். இந்தியாவின் தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக அறிவிக்கக் கோரி கடற்கரையில் ஒரு பேரணி - தமிழகத்தின் மொழிப்போர் தியாகிகளுக்கு சரியானததொரு நினைவேந்தலாக நடைபெற்றது. நாடு தழுவிய அளவிலும் தமிழகத்திலும் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் சாதிய-மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே எப்படிக் கொண்டுசெல்வது என்பது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் எழும்பூரில் உள்ள ஜீவனஜோதி அரங்கில் நடைபெற்றது. இதே போன்ற மற்றொரு நிகழ்வு, அசோக் நகரில் உள்ள தமிழர் திடலில் நடைபெற்ற பெருமாள் முருகன், துரை கண்ணா, கண்ணன் ஆகியோருக்கு ஆதரவாகவும், கருத்து வெளிப்பாட்டு ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் நடைபெற்ற கண்டனக் கூட்டம். ‘தமிழில் சிற்றிதழ்கள் இயக்கம்’ அந்த கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழகம் முழுவதுமிருந்து தங்கள் சொந்த ஆர்வத்திலும் செலவிலும் வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிதழாளர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் அதில் கலந்துகொண்டதையும், அத்தனை பேரும் தங்கள் குரலை ஒலிக்க வாய்ப்பளிக்கப்பட்டதையும் பார்த்தபோது ஒரு நம்பிக்கையும், இத்தகைய முயற்சிகள் சமுதாயத்தில் வேர்பிடித்து ஓங்கி வளரவேண்டும் என்ற விருப்பமும் மனதில் ஊறியதை உணர்ந்தேன். அதற்கு முன்முயற்சி மேற்கொண்ட எழுத்தாளர் கோணங்கி, ஓவியர் சந்துரு உள்ளிட்டோர், கூட்டம் நடத்திட இட உதவியளித்து வந்தவர்களுக்கு உணவும் வழங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அக்கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான எழுத்தாளர் கௌதம் சன்னா ஆகியோரை எவ்வளவு கைகுலுக்கிப் பாராட்டினாலும் தகும்.

எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பல்வேறு கோணங்களில் கருத்துரிமை ஒடுக்குமுறை பற்றிய தங்களது கவலைகளையும், மக்கள் அந்த ஒடுககுமுறை சக்திகளை ஒதுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வெளிப்படுத்தினார்கள். சந்துரு இப்படிப்பட்ட பிரச்சனைகளையும் கலையாக வெளிப்படுத்துவதான தனது ஓவிய மனசை வெளிப்படுத்தினார்.
நிறைவாகப் பேசிய கோணங்கி, பெருமாள் முருகனின் நாவலாக்கத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று தொடங்கினார். வரலாற்றுத் தகவல்களையும் சமூக நிலைமைகளையும் கதை நிகழ்வுகளையும் கொண்டு அற்புதமான, அழகியல் நேர்த்தி மிக்க படைப்பாகச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கத் தவறிவிட்டார் பெருமாள் முருகன் என்றார். அது ஒரு இலக்கிய விவாதக் கூட்டம் அல்ல என்ற போதிலும், தன்னை எப்போதும் ஒரு விடுதலைப் பறவையாக வைத்துக்கொண்டிருக்கும் கோணங்கி கூட்ட நடைமுறைகளைத் தாண்டி இந்த விமரிசனத்தை வைத்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. நேரடி யதார்த்த வடிவில் எழுதியதுதான் நாவலின் தோல்விக்குக் காரணம் என்று அவர் சொன்னபோது, அப்படிச் சொல்வதற்கான கண்ணோட்ட உரிமையை ஏற்க முடிந்தது.

ஆனால், கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டதோ, அந்த நோக்கத்திற்குள் அவர் ஆழமாகச் செல்லவில்லை. போகிற போக்கில், “அதற்காக இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று தடுப்பதை ஏற்க முடியாது,” என்பதாக ஒரு வரி சொல்விட்டு மறுபடியும் தனது சொந்த ரசனைகளை, அது சார்ந்த ஆதங்கங்களை, தனக்கே உரிய இயல்புணர்ச்சியோடும், நையாண்டியோடும் பகிர்ந்துகொண்டார். கூட்டத்தின் பொது உணர்விலிருந்தும், ஒடுக்குமுறைக்கு எதிரான நியாய ஆவேசத்திலிருந்தும் வெகுதொலைவு விலகியிருந்த அந்தப் பேச்சின் சில தெறிப்புகள் ஒரு பகுதியினரின் கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டிருந்தன. இப்படி விலகி நின்று படைத்தால், பகிர்ந்தால் மதம் - சாதி - அதிகாரம் சார்ந்த ஒடுக்குமுறை சக்திகள் ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டார்கள், கோபப்பட மாட்டார்கள்தான்.

தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை உலக அளவில் கொண்டுபோக முயல வேண்டும் என்ற ஒரு நியாயமான அறிவுரையை முன்வைத்தார். நல்லமுறையில் மொழிபெயர்ப்புச் செய்து அணுகினால் பெங்குயின் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், அதை நம் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இதுவும் நல்ல ஆலோசனைதான். ஆனால், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரின் எழுத்தாக்கங்களைக் கூட வாங்கிவைத்துக்கொண்டு, ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்துவிட்டு, பின்னர் “இப்போது எங்களிடம் தென்மொழிகள் சார்ந்த புத்தகங்கள் எதுவும் வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை” என்று அந்த நிறுவனம் மறுத்துவிடுவது பற்றி கோணங்கி அறிவாரா?

இந்து சமயத்தில் பெண்களின் நிலை குறித்து ஆங்கிலத்தில் வெண்டி டோனிகர் எழுதிய புத்தகத்தை ஒரு மதவாத அமைப்பு எதிர்த்ததைத் தொடர்ந்து, அந்தப் புத்தகத்தையே அந்த உலகளாவிய நிறுவனம் விலக்கிக்கொண்டு, அரைத்துக் கூழாக்கியதை நிச்சயம் கோணங்கி அறியாமல் இருக்க மாட்டார்.

ஒருவேளை பெருமாள் முருகன்களும் வெண்டி டோனிகர்களும் போல அல்லாமல், வாழ்க்கை நிலைமைகள் பற்றிய கோபங்களையோ, சமுதாய அக்கறைகளையோ, மாற்றத்திற்கான விழைவுகளையோ வெளிப்படுத்தாத வெறும் ரசனைக்கான ஆக்கங்களை வெளியிட பெங்குயின்கள் தயாராக இருக்குமோ என்னவோ. சொல்லப்போனால் அத்தகைய ரசனைகள் மட்டுமே நிறைந்ததாகத்தான் மானுடம் மாற வேண்டும் என்பதே எனது விருப்பம். பல படைப்பாளிகளின் ஏக்கம். ஆனால் அப்படி வரப்புகள் மீறிய ரசனை மலர்ந்துவிடாமல் திரும்பத் திரும்ப அமிலம் ஊற்றப்படுகிறதே, அதை முழுமையாக எதிர்த்துப் போராடாமல் எப்படி மாற்ற முடியும்?

(Comrade Kumaresan)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com