Contact us at: sooddram@gmail.com

 

வருகையும் வரவேற்பும் எதற்கான குறியீடு?

உலக நாடுகளிடையே நல்லுறவு வளர வேண்டும், எல்லைகள் தாண்டி மக்களிடையே நட்புறவு மேலோங்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் விருப்பம். பிறகு ஏன் அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்தார்கள், ஒபாமாவே திரும்பிப் போ என்றார்கள் என்று சிலர் கேட்கிறார்கள. பயணம் முடிந்ததும் ஒபாமா தமது நாட்டிற்குத் திரும்பத்தானே போகிறார் என்று சிலர் நகைச்சுவையாகக் கேட்டுவிட்டு அவர்களாகவே சிரிக்கிறார்கள். ஒபாமா வருகையிலும் அவருக்கு இங்கே தரப்பட்ட மிகப்பெரிய வரவேற்பிலும் உள்ள குறியீடு என்ன என்பதை மக்களுக்குச் சொல்வதற்காகவே அந்தப் போராட்டங்கள்.

அவர் இங்கே வந்ததற்கும், அதற்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அங்கே வரவேற்றதற்கும் பின்னணியில் இந்தியாவின் சுயமரியாதையும் மக்களின் பொருளாதார நலன்களும், ஏன் உயிர்ப்பாதுகாப்பு நலன்களும் கூட விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இருவரும் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேலும் பத்தாண்டுகள் நீட்டிப்பதற்கு மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

உலகில் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும், அப்போது இந்தியாவும் தனது ராணுவத்தை அமெரிக்காவுக்கு உதவியாக அனுப்ப வேண்டும், அப்படி அனுப்ப முடியாவிட்டால் அதைக் கண்டிக்காமல் வாயைப் பொத்திக்கொண்டாவது இருக்க வேண்டும் என்பதுதான் அந்த பாதுகாப்பு உடன்பாடு! அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த இந்தியா, இத்தகைய அநீதிகளைக் கம்பீரமாகக் கண்டித்துக் குரல் எழுப்பிய இந்தியா இனி அதற்கெல்லாம் துணை போக வேண்டும், இல்லாவிட்டால் வாய்மூடியிருக்க வேண்டும்.

இது நாட்டின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கிற வேலை இல்லையா?அந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால்தான் அணுமின்சாரத்திற்கான பொருள்களை வழங்கும் உடன்பாட்டைச் செய்துகொள்ள அன்று அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது. ஒருவேளை அமெரிக்க அணு உலைகளால் ஒரு விபத்து ஏற்படுமானால், அதனால் உண்டாகும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஒபாமா கொடுத்த நிர்ப்பந்தம். இப்போது அந்தச் சிக்கலுக்கு ஒபாமா-மோடி பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு காணப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அது என்ன தீர்வு என்பதை வெளியே அறிவிக்காமல் வைத்திருக்கக் காரணம் என்ன? அந்தச் சட்டத்தில் “திருத்தம்” செய்யவும், விபத்து இழப்பீட்டுப் பொறுப்பை இந்தியாவே ஏற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தானே அர்த்தம்?

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிப்பதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்காக நிலங்களைக் கைப்பற்றிக்கொடுப்பதற்கான அவசரச்சட்டம் அறிவிக்கப்பட்டது. ஒபாமா வருகைக்கு முன் அவசர அவசரமாக இத்தகைய அவசரச் சட்டங்களை நாடாளுமன்றத்தை மீறிக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? அந்த நிர்ப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாலும்தான் ஒபாமா வந்தார்.

தற்போது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 63 சதவீத மக்களுக்கு பொது விநியோக முறையில் அரிசியும் கோதுமையும் கிடைக்கின்றன. அதை 40 சதவீதமாகக் குறைப்பதற்கு, பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பில் அமைக்கப்பட்ட சாந்த குமார் குழு பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியானால், பொதுவிநியோகக் கேடயத்தின் பாதுகாப்பிலிருந்து 60 சதவீத மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அர்த்தம். அவர்கள் வெளிச்சந்தையில்தான் அரிசியும் கோதுமையும் வாங்க வேண்டும் என்று அர்த்தம்.

இந்தப் பரிந்துரையை அரசு ஏற்குமானால், தனியார் தானிய நிறுவனங்களுக்குத் திடீரென 60 சதவீத சந்தை திறந்துவிடப்படும். அது எவ்வளவு பெரிய சந்தை! எப்போது இது வருகிறது? அமெரிக்காவின் வால்மார்ட்டுகளும் இதர பல வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் தானிய வணிகத்தில் இறங்குகிறபோது வருகிறது! வேட்டியை மடித்துக்கட்டிய உள்ளூர் தரகர்களுக்கு பதிலாக, கோட் சூட் போட்ட வெளிநாட்டு புரோக்கர்கள் வருகிறபோது இந்தப் பரிந்துரை!

அடுத்து, பொதுவிநியோக முறைக்காக அரிசியும் கோதுமையும் கொள்முதல் செய்கிற இந்திய உணவுக் கழகத்தை (எப்சிஐ) ஒழித்துக்கட்டவும் சாந்த குமார் குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதையும் அரசு ஏற்குமானால், இதுவரையில் விவசாயிகளின் உற்பத்திகளை எப்சிஐ கொள்முதல் செய்துவருவது நின்றுவிடும். அவர்களும் வெளிச்சந்தையில் வால்மார்ட்டுகளிடமும் ரிலையன்ஸ்சுகளிடமும்தான் தங்களது விளைச்சல்களை விற்க வேண்டியிருக்கும். அந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கிற விலைக்குத்தான் விற்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, விவசாயிகள் எப்போது எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதையும் அந்த நிறுவனங்கள்தான் கட்டளையிடும். ஏற்கெனவே, மரபணு நீக்கப்பட்ட விதைகளை இந்திய வயல்களில் தூவுவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் துடிக்கின்றன, அதற்கான சோதனைகளை முந்தைய அரசும் அனுமதித்தது, இன்றைய அரசும் அனுமதிக்கிறது என்பதோடு இதை இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஆக, நுகர்வோர் உற்பத்தியாளர் இரு சாராரையும் கார்ப்பரேட்டுகளின் பிடியில் ஒப்படைக்கிற இந்த ஏற்பாடுகளுக்கு ஒப்புக்கொள்கிற பின்னணியோடுதான் ஒபாமாவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களில் “சீர்திருத்தம்” செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட பிறகுதான் ஒபாமா வருகிறார் என்பதையும் காணத்தவறக் கூடாது. சீர்குலைவு வேலைகளுக்கெல்லாம் சீர்திருத்தம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்! “மேக் இன் இந்தியா” என்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த மோடி, இங்கே அவர்களுக்கு இடைஞ்சலாகவும் நம் நாட்டுத் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்காவது பாதுகாப்பாகவும் இருக்கிற சட்டத்தைக் கைவிடத் தயாராக இருப்பது யாருடைய வளர்ச்சிக்காக?

மருந்துகளுக்கான காப்புரிமை சட்டத்தைத் தளர்த்தவும் அமெரிக்க அரசு கட்டாயப்படுத்துகிறது. உயிர்காக்கும் மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவோ குறைந்த விலையில் விநியோகிக்கவோ முடியாமல் போகும் என்பதுதான் இந்தக் கெடுபிடியின் விளைவு. நோவார்ட்டிஸ் என்ற நிறுவனம் புற்று நோய் மருந்தை 2 லட்சம் ரூபாய் விலையில் விற்றுவந்தது. இந்திய நிறுவனம் அதே மருந்தை 6,000 ரூபாய்க்கு விற்க முடியும் என்று காட்டியது. அதை எதிர்த்து நோவார்ட்டிஸ் போட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியாவின் காப்புரிமை சட்டத்தைப் பயன்படுத்திதான் உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை அளிக்க முடிந்தது.

இப்போது ஒபாமா நிர்ப்பந்தத்தால் இந்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்யப்படுமானால் என்ன ஆகும்? பல உயிர்காக்கும் மருந்துகளை அமெரிக்க நிறுவனங்கள் அநியாய விலைக்கு விற்கிறபோது அதை வாங்க முடியாத ஏழைகளும் நடுத்தர மக்களும் என்ன ஆவார்கள்?

அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்கில் முதலீடு வருகிறது என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளின் பின்புலத்தில் இப்படிப்பட்ட சமரசங்களும் துரோகங்களும் இருக்கின்றன. அதன் குறியீடுதான் ஒபாமா வருகையும், அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பும்.

-‘தீக்கதிர்’ ஜனவரி 28 இதழின் ‘தெருவிளக்கு’ பகுதியில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.

- Kumaresan Asak
 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com