Contact us at: sooddram@gmail.com

 

நேபாளத்தின் அடுத்த பிரதமர் யார ?

(அர்ச்சனா)

அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் விடயத்தில் நேபாள அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை. அடுத்த பிரதமராக யாரை நியமிக்கலாம் என்பதில் நேபாளத்தின் மூன்று பிரதான கட்சிகளிடையேயும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. மாதவ்குமார் நேபாள் கடந்த 13 மாதங்களாக நேபாளத்தின் பிரதமராக இருந்தவர். நேபாளத்தின் பாராளுமன்றத்தில் மாவோயிஸ்டுகளே அதிக எண்ணிக்கையான ஆசனங்களைக் கொண்டிருந்தனர். எனவே, தங்களது தலைமையிலான அனைத்துக் கட்சிகளையும் கொண்ட தேசிய அரசொன்றை அமைப்பதற்காக, மாதவ்குமார் பதவி விலக வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் வற்புறுத்தி வந்தனர்.

மாதவ்குமார் நேபாளின் தலைமையிலான ஆட்சிக்கு 22 கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தன. ஆனால் அவர் ஆட்சிபீடமேறிய நாள் முதல் மாவோஸிஸ்ட்டுகள் ஒத்துழையாமை இயக்கத்தை நடாத்தி வந்தனர். இதனால் நேபாளத்தில் கடந்த நான்காண்டுக்கும் மேலாக அரசியலில் தேக்க நிலை நிலவியது. மாதங் குமாரின் அரசு நாளை வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவிருந்தது. ஆனால் வரவு - செலவுத் திட்டக் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதுடன், அதனை நிறைவேற்ற விடாமல் தடுக்கப் போவதாக மாவோஸிஸ்டுகள் சூளுரைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக மாதவ்குமார் தொலைக்காட்சியினூடாக அறிவிப்பு விடுத்தார். பிரதமராகப் பதவிக்கு வந்த சில காலங்களிலேயே தனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்று மாதவ்குமார் அறிந்திருந்தார். எனினும், மாவோஸ்டுகளின் அழுத்தத்தால் தான் பதவி விலகுவதாக மக்கள் நம்பக் கூடாதென்பதில் அவர் கூடுதல் கவனம் செலுத்தினார். முன்னதாக, மாதவ்குமார் நேபாள், மே மாதம் 28 ஆம் திகதியன்று பதவி விலகுவாரென நேபாளத்தின் மூன்று முக்கிய கட்சிகளிடையே இணக்கப்பாடு காணப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட திகதியில் மாதங்குமார் பதவி விலகாதது, அவரது கட்சிக்குள்ளேயே அவர் மீதான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

பிரதமர் மாதங்குமார் பதவி விலகியதையடுத்து செய்தி வெளியிட்டிருந்த மாவோயிஸ்டுகளின் நாளேடான ஜனடிஷாஇந்தியாவின் கைப்பொம்மைஆட்சிக்கு இனி நேபாளத்தில் இடமில்லை என வர்ணித்திருந்தது.

நேபாளத்தில் இருந்து வெளிவரும், நடுநிலையான ஊடகங்கள் மாற்றுக் கருத்துக்களையும் வெளியிட்டிருந்தன. விமர்சனங்களுக்கு அப்பால், நேபாளத்தில் கடந்த ஒரு வருட காலமாக நிலவிய அரசியல் தேக்கநிலையை, பிரதமர் மாதவ்குமார் நேபாளின் இராஜினாமா முடிவுக்குக் கொண்டுவரும் என்பதே பெரும்பாலானோரின் அபிரப்பிராயமாக இருந்தது.

பிரதமர் மாதங்குமாரின் இராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம் பரன் யாதவ், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை மாதவ்குமாரை பிரதமர் பதவி வகிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதற்கமைவாக, இம்மாதம் 7ம் திகதி வரை ஜனாதிபதி அரசியல் கட்சிகளுக்குக் காலக்கெடு விதித்திருக்கின்றார். இம்மாதம் 7 ஆம் திகதிக்கு முன்பாக நேபாளத்தின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த உடன்பாட்டுக்கு கட்சிகள் வரவேண்டும் என்று அவர் அறிவித்திருக்கின்றார்.

நேபாளத்தின் சமாதான முன்னெடுப்புகள் குறித்து சர்வதேச சமூகத்தினர் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், நேபாளத்தின் அடுத்த பிரதமரைத் தீர்மானிப்பதில் பாரிய முரண்பாடுகள் நிலவுகின்றன.

நேபாளத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுகள், அரசியல் நீரோட்டத்தில் கலந்து, 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தல்களில் அமோக வெற்றியீட்டினர்.

பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்கள் தம் வசமிருப்பதால் அதிகாரப் பகிர்வு அரசுக்குத் தாமே தலைமைதாங்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தேசிய அரசொன்றை அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைய சில நாட்களே இருக்கின்ற நிலையில், மாவோயிஸ்ட்டுகளின் தலைமையிலான அரசில் இணைய முடியாதென, முக்கிய கட்சிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளன.

இதற்கிடையில், தேசிய அரசொன்றை அமைக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். தேசிய அரசொன்றை அமைப்பதன் மூலம், 2006 ஆம் ஆண்டின் சமாதான உடன்படிக்கையில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை துரிதமாக அமுல்படுத்துமாறும் அவர் கூறியிருக்கின்றார்.

நேபாளத்தில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் சமாதான உடன்படிக்கையின் பல ஷரத்துக்கள் இன்னமும் அமுல் செய்யப்படவில்லை. குறிப்பாக, நேபாளத்தில் போரிட்ட ஆயிரக்கணக்கான மாவோயிஸ்டுகள் இன்னமும் இராணுவத்தில் உள்வாங்கப்படவில்லை.

சமாதான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை வலியுறுத்தியுள்ள ஐ.நா. சபை, பிரதமர் மாதவ்குமாரின் இராஜினாமாவை சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் கொள்ளும்படி கூறியிருக்கிறார்.

நோபாளத்தின் புதிய பிரதமராகப் பதவிவகிக்பவர், சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமானது. நோபாளத்தில் 2008 ஆம் ஆண்டில் முடியாட்சி முறை ஒதுக்கப்பட்டது. நேபாளம் குடியரசு நாடாகியது. இதற்கு அரசியலமைப்பின் மூலம் அங்கீகாரம் வழங்கும் வகையிலான புதிய அரசியல் யாப்பு அடுத்த வருடம் மே மாதத்துக்குடையில் உருவாக்கப்படு வதை உறுதி செய்வதும் அவரது பொறுப்பாகின்றது.

மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டாவே நேபாளத்தின் அடுத்த பிரதமராகத் தெரிவாவார் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்ட போதும், தான் விதித்த காலக்கெடுவுக்குள் பிரதமர் ஒருவரை நேபாளத்தின் 25 அரசியல் கட்சிகளும் தீர்மானிக்த் தவறினால் அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமுள்ள கட்சியின் பிரதிநிதியை பிரதமராக நியமிக்க போவதாகவும் ஜனாதிபதி ராம் பரன்யாதவ் எச்சரித்திருக்கின்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com