Contact us at: sooddram@gmail.com

 

தன்னை உணர்ந்தவனை மரணபயம் பாதிக்காது

புகழில் இருப்பவர்கள், பணம் படைத்தவர்கள் மரணத்தைப் பற்றி அதிகம் பயப்படும் அதே நேரத்தில், ‘வந்தா வந்திட்டுப் போகட்டும் இங்கே நிலையாக இருந்து என்னத்தைதான் செய்யப்போறோம்என்று பதிலளிக்கிறார்கள் நடைபாதைவாசிகள்!

1969ல் அப்பலோ விண்கலம் நிலவில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ரோங் அங்கே முதல் அடி எடுத்துவைத்தார். அவரது குழுவினர் பின்தொடர்ந்தனர். ஆஹா... ஓஹோஎன்று உலகமே அவர்களை பாராட்டியது. அப்படியே இறங்கி பூமிக்கு வந்தார்கள். உலகப் புகழை எல்லாம் ஒட்டுமொத்தமாக வாங்கி மகிழ்ந்தார்கள். பின்பு அவர்களால் சாதாரண மனிதர்களோடு இணைந்து இயல்பாகச் செயற்பட முடியவில்லை. நிலவிலேயே போய் கால் வைச்சிட்டோம். அதற்கு மேல் என்ன செய்ய...? பூமியில் என்ன செய்தாலும் நிலவில் கால் வைத்ததை விட அதிகமான அளவு புகழ் பெற முடியாதேஎன்று சிந்தித்து... சிந்தித்து மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள்.

அதுமட்டுமின்றி, ‘இவ்வளவு பெரிய சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய நம்மை உலகமே தூக்கி வைத்து புகழ்ந்து கொண்டிருக்கிறது. நம் வயதை ஒத்த பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். நாமும் திடீரென்று இறந்து போனால்?!’ என்று மரணபயமும் கொண்டார்கள்

புகழ்ச்சி குறைந்துகொண்டே இருக்க, மரண பயம் நெருங்கிக்கொண்டே இருக்க அவர்களை மனச்சிதைவு நோய் ஆட்கொண்டு அப்படியே முடக்கிப் போட்டுவிட்டது. அதனால் மனநல கவுன்சிலிங்குக்கு உட்படுத்தி அவர்களை தேற்ற வேண்டியதாகிவிட்டது.

எப்படி அந்த அணுகுமுறை இருந்தது தெரியுமா?

நீங்க ஒன்றும் நிரந்தரப் புகழ் பெற்ற ஆட்கள் இல்லை. அந்த சாதனைக்கு நீங்கள் மட்டுமே காரணமும் இல்லை. எத்தனையோ நாட்கள் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் திட்டமிட்டு அந்த விண்கலத்தை உருவாக்கினார்கள். உள்ளே உங்களை தூக்கிவிட்டார்கள். அது உங்களை தூக்கிக் கொண்டு போய் நிலவில் விட்டதும், நீங்கள் இறங்கிக் காலை வைத்தீர்கள், அவ்வளவுதான். உங்களுக்குப் பதிலாக நாங்கள் அந்த விண்கலத்தில் போயிருந்தாலும் நிலவில் காலை தூக்கி வைச்சிருப்போம்! இது ஒன்றும் பெரிய சாதனை இல்லை.

இன்னும் எவ்வளவோ சாதனைகள் இருக்கின்றன. உங்களுக்கு முன்பே உலகத்தில் ஓராயிரம் சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன! என்று அவர்களிடம் பலவாறு பேசி மனநிலையைச் சமன்செய்து பக்குவப்படுத்தினார்கள். எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறோம்.

பயந்தால் சாவு தள்ளிப்போகாது, மரணம் மகிழ்ச்சியான விஷயம் தெரியுமா உங்களுக்கு?’ என்று கூறிப் பயத்தை போக்கினார்கள்.

இப்படிச் சாதனையாளர்களுக்கு நிறைய மனச் சோதனைகள் வந்திருக்கின்றன. பிரபலங்களும், தலைவர்களும் தான் அதிக மன அமைதி இன்றி தவிப்பார்கள். நாளை என்ன நடக்குமோ? என்ற பயம் நாள்தோறும் அவர்களை வாட்டும்.

உலகத்திலே அறிவில் சிறந்தவர் என்று வர்ணிக்கப்பட்ட அணுவிஞ்ஞானி ஐன்ஸ்டீன் மரணம் அடையும் வரை புகழின் உச்சியில் இருந்தார். மரணத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்து கொண்டிருந்த அவரிடம் சென்ற ஒருவர், ‘உலகப்புகழ்பெற்ற அறிவின் சின்னமே... நீங்கள் மீண்டும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அணுவிஞ்ஞானியாகப் பிறந்து புகழ்பெறத்தானே விரும்புவீர்கள்? என்றார். அவரோ மிக அமைதியாக, கேள்வி கேட்டவரை மேலும் கீழுமாக பார்த்துவிட்டுஅப்படி இன்னொரு பிறப்பு கிடைத்தால் நான் தச்சு வேலைக்காரராக பிறக்கவே ஆசைப்படுகிறேன்என்றார்.

ஏன்?

தன் வாழ்க்கையைத் தனிப்பட்ட முறையில் ஆத்மபரிசோதனை செய்து பார்த்த அவர், தன் புகழ் தன் வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை என்று உணர்ந்திருக்கிறார்.

இப்படித்தான் ஒவ்வொரு புகழ் பெற்ற மனிதனையும் சமூகம் ஒரு கோணத்தில் பார்க்கிறது. அவர்கள் இன்னொரு கோணத்தில் தங்களை ஆத்ம சோதனை செய்து அறிந்து வைத்திருக்கிறார்கள். இரண்டு கோணங்களிலும் இருக்கும் முரண்பாடுகள் ஆழமாக யோசித்து பார்த்தால் மட்டுமே புரிகிறது.

புகழில் உச்சியில் இருக்கும்போது பலரும் தங்களை ஆத்ம பரிசோதனை செய்துகொள்வதில்லை. மரணம் நெருங்கும்போதுதான் அவர்களுக்கு அந்த ஞானம் வருகிறது. உண்மையிலே நாம் இந்த சமூகத்திற்கு நல்லது செய்தோமா, கெட்டது செய்தோமா? இந்தச் சமூகத்திற்காகவும் ஆன்மா விற்காகவும் நாம் மனசாட்சிப்படி நடந்திருக்கிறோமா?’ என்றெல்லாம் யோசிக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ்ந்து முடிக்க நான்கு படிகளை கடக்க வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு படிகள், தாயையே மதிக்காதவன் முதற்படியே ஏறுவதில்லை. கீழ் நிலையிலே இருப்பான். அவன் எத்தனை வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றாலும் நான்காவது படியை அவனால் தொடக்கூட முடியாது.

அந்த அம்மா அடிக்கடி சொல்வார், தன் ஒரே மகனைப் பார்த்து... ‘கோவில் திருவிழாவில் நீ ஒருமுறை தொலைந்து போனாய், அந்த கடவுளே சில நாட்கள் கழித்து உன்னை கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வந்து சேர்த்தார்.’ என்று! மகன் படித்தான். நல்ல வேலையில் சேர்ந்தான். திருமணமானது. அம்மாவுக்கு 80 வயது, மாமியாருக்கும், மருமகளுக்கும் பிரச்சினை.

அப்போது அவனுக்கு, அம்மா சொன்ன கோவில் திருவிழா நினைவிற்கு வந்தது. அம்மாவை வெகு தூரத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு அழைத்தான். பல வருடங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த அம்மா, ஆசையோடு புறப்பட்டாள். அவளுக்கு காது கேட்காது. கண்பார்வையும் கிட்டத்தட்ட போய்விட்டது.

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடியிருந்த அந்த திருவிழா கூட்டத்திற்குள் அம்மாவை அழைத்துச் சென்று, ஒரு இடத்தில் உட்கார வைத்துஅம்மா நீ இங்கேயே இரு. நான் இதோ வருகிறேன்என்று சொல்லிவிட்டு போனான். வேண்டும் என்றே அம்மாவை திருவிழா கூட்டத்தில் தொலைத்துவிட்டான். மனைவியின் விருப்பப்படி தான் மட்டும் தனியாக வீட்டிற்கு திரும்பிப்போய்விட்டான். சிறுவயதில் தன்னை கண்டுபிடித்துத்தந்த கடவுள், இப்போது தாயை கண்டுபிடித்து தரமாட்டார் என அவன் நம்பினான்.

ஏனென்றால், ‘மகனை கண்டுபிடித்து தா கடவுளே...’ என்று அந்த தாய் மன்றாடினாள். இன்று இந்தத் தாய்க்காக யார் மன்றாடுவது?

இப்படி மாதாவுக்கு மட்டுமல்ல, பிதாவுக்கும் நேர்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கும் சேர்ந்தால்தான் வாழ்க்கை முழுமையடையும் என்பதை இவர்களிடம் யார் போய் சொல்வது?

இப்படிப்பட்ட கொடூரர்களை திருத்த வேண்டும் என்ற எண்ணம் சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் சிலருக்கு இருந்தது. அவர்கள்யாருக்கும் துரோகம் செய்யாதே! துரோகம் செய்தால், இறந்ததும் மேல் உலகத்திற்கு சென்று பெரும் துன்பங்களை அடைவாய். எண்ணைச் சட்டியில் வறுக்கப்படுவாய்... எருமை மாடுகளால் மிதிக்கப்படுவாய்...’ என்றெல்லாம் கடவுளை மேற்கோள்காட்டிச் சொன்னார்கள். தவறுகளில் மனிதன் ஈடுபடுவதை கடவுள் பெயரால் தடுக்கவேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.

ஆனால், மனிதர்களோ வேறுமாதிரி நினைத்து விடுகிறார்கள். நாம் குற்றம் செய்கிறோம், அதனால் இறந்ததும் நிச்சயம் தண்டனை உண்டு. ஆகவே சாகாமலே இருக்க என்ன வழி இருக்கிறதென்று தேடுவோம்என்று மரணபயத்தோடு அலைகிறார்கள். மரணத்தை தள்ளி வைக்க மருத்துவமனைகளுக்கு எத்தனை லட்சமும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள். வழிபாட்டு தலங்களுக்கும் அள்ளிக் கொடுத்து மனதை திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.

கடவுளுக்கு இப்போதெல்லாம் மத்தளம்போல இரு பக்க இடிதான். பாவம் செய்தவன் அவரிடம் காப்பாற்றும்படி வேண்டுகிறான். பாதிக்கப்பட்டவர்கள் அவனை தண்டிக்கும்படி வேண்டுகிறார்கள்.

ஆனால், ஒரு விசயம், எந்த மத கடவுளாக இருந்தாலும் அவர் அன்பு வடிவானவர். கருணை நிறைந்தவர். அவர் பாவம் செய்தவர்களை தண்டிக்க எண்ணை, எண்ணைச் சட்டி, அடுப்போடு வறுக்க காத்திருக்கிறார் என்பதெல்லாம் சும்மா வன்முறை கலந்த கற்பனை, ஆனால் ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் துரோகங்களுக்குரிய தண்டனையை எப்படியாவது அனுபவித்து விடுகிறான்.

இந்தக் காலம் வாழ்வியல் சிக்கல்கள் நிறைந்த காலம். எங்கேயாவது எப்படியாவது மனிதன் இயல்பாகவே ஏதாவது ஒரு நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறான். சிக்கலை தீர்க்கவும், சிக்கலின்றி வாழவும் அவன் ஆன்மிகத்தை நம்புகின்றான்.

ஒருவர் பிரபலமான எழுத்தாளராக, நாடக ஆசிரியராக இருக்கலாம். அவர் எத்தனையோ கதைகளில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி, ரசிகர்களை திருப்பங்கள் நிறைந்த திகிலுக்குள் ஆழ்த்தியிருக்கலாம். ஆனால் அவருடைய வாழ்க்கை என்னும் தொடர்கதையில் அவரால் எந்த திருப்பத்தையும் ஏற்படுத்த முடிவதில்லை. ஏன் என்றால் அவருடைய வாழ்க்கை (கதை) எந்த கோணத்தில் போகவேண்டும் என்பதை இன்னொரு சக்திதான் தீர்மானிக்கிறது.

ஒருவரது வாழ்க்கையில் எப்போது என்ன திருப்பம் வரும் என்பதை அவரது மூளைத்திறனால் பல நேரங்களிலும் ஊகிக்கவே முடிவதில்லையென்பதே உண்மையாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com