Contact us at: sooddram@gmail.com

 

மலையகப் பிரதிநிதிகளுக்கு மனிதாபிமான வேண்டுகோள்!

மலையகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் கொழும்பில் அநி யாயமாக உயிரிழந்துள்ளார். தோட்டப் பிரதேசங்களிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்குச் செல்கின்ற பெண்கள் மர்மமான முறை யில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இப்பரிதாபத்தின் தொடர்ச்சியானதொரு சம்பவமாகவே கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ள மர்ம மரணமும் அமைந்துள்ளது.  கொட்டாஞ்சேனை, புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள தொடர் மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இம்மரணத்துக்கான காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இன்னுமே உறுதி செய்யப் படவில்லை. இப்பெண்ணின் மரணம் மர்மமாகவே உள்ளது. இப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் பரவ லாக நிலவுகிறது.

இம்மரணம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் வீட்டு எஜமானியும் அவரது தாயாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னரே இப்பெண்ணின் மரணத்துக்கான காரணத்தை சரிவரக் கூற முடியுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செல்வந்த வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்ற மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் இன்று நேற்று உருவானதல்ல.... இப்பரிதாபமானது அக்காலம் தொட்டு நிலவி வருகிறது. பெரும் பாலும் சிறுவயது யுவதிகளே இத்தகைய அவலத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.

கொழும்பு நகரத்தை எடுத்துக்கொண்டால் இங்கு செல்வந்த வீடுகள் பெரும்பாலானவற்றில் மலையகத்தைச் சேர்ந்த சிறு பெண்கள் தொழில் புரிகின்றனர். இவர்களில் சிலருக்கு மாத்திரமே மனிதாபி மானமுள்ள எஜமானர்கள் கிடைக்கின்றனர்.

ஏனையோர் மிகவும் துன்பப்படுகின்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக வேலை வாங்கப்படும் அவலத்தை பலர் எதிர் கொள்கின்றனர். விடுமுறையென்பது இவர்களுக்குக் கிடையாது. போதிய வேதனம் பலருக்கு இல்லை. இடையிடையே வீட்டுக்குச் சென்று வர விடுமுறை வழங்கப்படுவதில்லை. ஒரு வீட்டின் அத்தனை வேலைகளையும் தனியொருத்தியாக நின்று செய்ய வேண்டிய கொடுமைக்கு சின்னஞ்சிறு பெண்கள் உள்ளாகின்றனர்.

இந்த அநீதிகளுக்கு அப்பால் ஒரு சில பெண்களுக்கு மற்றொரு கொடுமையும் இழைக்கப்படுவதாக அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளைப் பார்க்கிறோம். பணிப்பெண்களாக வேலை செய்யும் சிறுமியர் மற்றும் யுவதிகளுக்கு உடல் ரீதியான இம்சைகள் அளிக்கப்படும் சம்பவங்கள் சில வீடுகளில் இடம்பெறுகின்றன.

கடுமையான முறையில் அடித்துத் துன்புறுத்துதல், பாலியல் ரீதியில் பலவந்தப்படுத்துதல் போன்ற கொடுமைகளை சில பெண்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இவற்றுக்கும் அப்பால் ஒருசில யுவதிகள் கொல்லப்பட்ட பரிதாப சம்பவங்களையும் நாம் அறிந்துள்ளோம். இது போன்ற மனதை உருக்கும் பரிதாபங்களுக்கு மலை யக யுவதிகள் உள்ளாவது உண்மையிலேயே வேதனை தருகிறது.

இந்தச் சமூக அநீதிக்கு அடிப்படைக் காரணம் வறுமை ஆகும். குடும்ப வறுமையின் நிமித்தம் சிறு வருமானம் ஈட்டிக் கொள்வதற்காக செல்வந்த வீடுகளுக்கு வேலைக்கு வருகின்ற அப்பாவிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியை இனிமேலும் அனுமதித்துக் கொண்டிருக்கலாகாது. வறுமையைக் காரணம் காட்டி எத்தனை காலத்துக்குத்தான் இக்கொடுமையைப் பொறுத்துக் கொண்டிருப்பது!

உண்மையில் கூறப் போனால் இந்தப் பரிதாபத்துக்கான அடிப்படைச் சூத்திரதாரிகளென குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் பெற்றோர் தான். அவர்கள்தான் தங்களது பிள்ளைகளை செல்வந்த வீடுகளில் வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் வறுமை!

பணம் ஈட்ட வேண்டுமென்பதற்காக தங்களது சின்னஞ்சிறு பிள்ளை களை வீட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதை ஈவிரக்கமற்ற செயலென பெற்றோர் நினைத்துப் பார்ப்பதில்லை. கல்நெஞ்சம் படைத் தோரால் மட்டுமே இது முடியும்.

குழந்தையொன்று பிறந்ததிலிருந்து அதனை வளர்த்து, கல்வி ஊட்டி ஆளாக்குவது பெற்றோரின் கடமையாகும். குழந்தைக்குரிய மேற்படி வசதி வாய்ப்புகளை வழங்கத் தவறுவது அடிப்படை உரிமை மீறலாகும். ஆனாலும் இவற்றையெல்லாம் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர் பலர் கருத்தில் கொள்வதில்லை. இதற்குக் காரணம் தோட்டப் பகுதி குடும்பங்களில் நிலவும் வறுமை மட்டுமன்றி மதுபானப் பழக்கமும் தான்....

மலையகத் தோட்டங்களில் மதுவுக்கு அடிமையான பெற்றோரே பெரும்பாலும் தங்களது பிள்ளைகளை பணிப்பெண் வேலைக்கு அனுப்புகின்றனர். இது ஒருபுறமிருக்க செல்வந்த வீடுகளில் மலையக யுவதிகளை வேலைக்கென ஒழுங்கு செய்து கொடுக்கும் செயலில் தரகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. இதுவொரு சமூகப் பிரச்சினையென்பதை மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மலையக தொழிற்சங்கங் களுக்கு உண்டு. மக்கள் பிரதிநிதிகளான தொழிற்சங்கத் தலைவர் கள் மனிதாபிமானத்தின் பேரில் இந்த அவலத்துக்கு முடிவு காண முன்வர வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com