Contact us at: sooddram@gmail.com

 

உழவு இயந்திரம் உழும், ஆனால் சாணம் போடுமா?

நெருக்கடியான நிலையிலும் உணவின் உறுதிப்பாட்டை அடைதல் (Achieving Food security in times of Crisis)  என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு பக்கம் ஒருவேளை உணவுக்காய் காத்திருக்கும் பிச்சை எடுக்கும் கூட்டம், மறுபுறம் துரித உணவுக்காய் காத்திருக்கும் பணக்காரக் கூட்டம். இடையில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

ஏறத்தாழ 10 கோடி ஏழைகள் உணவே இல்லாமலும் 102 கோடி ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளும் இவ்வுலகில் இருப்பதாக ஐ. நா. அமைப்பு ஒன்று கூறுகிறது.  உலக வரலாற்றில் 100 கோடிக்கு மேல் ஊட்டச் சத்தில்லாத குழந்தைகள் இருப்பது இதுவே முதல் முறையாம் 2006 – 08 ஆண்டுகளில் ரொக்கெட் வேகத்தில் 40 – 80% வரை பறந்த தானிய விலை உயர்வு மற்றும் 2008 – 09 இல் ஏற்பட்ட தொடர்ச்சியான சந்தை சரிவுகளும் தான் இந்த நிலைக்கு காரணம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

உணவு வாழ்வின் அடிப்படை ஆதாரம். உலகின் அத்தனை உயிரினங்களும் அவற்றின் பரிணாமங்களும், படிநிலை வளர்ச்சிகளும் உணவைச் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன. சாதாரண கிளமிடாமுனசில் இருந்து கிளைத்து கிளைத்து இன்று புவி வெப்பமடைதலை யோசிக்கும் ஆறு அறிவு ஆசாமிகளாய் நாம் உருவானதற்கு உணவுக்கான தேடல் ஒரு முக்கிய காரணம்எண் சாண் உடலுக்கு வயிறே பிரதானம். என்றாகிவிட்ட நிலை இன்று உருவாகிவிட்டது.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூம

விட்டோன் என்பார்க்கின் நிலை

என்ற குறள் உணவும் அதற்கு ஆதாரமான உழவும், அது இல்லாமல் போனால் துறவிக்கும் கூட வாழ்க்கை இல்லை என்ற மகத்தான கருத்தை அறிவிக்கிறது. ஆனால் உழவின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உழவின் பங்கு குறைவடைந்து வருகிறது.

நவீன தொழில் நுட்பத்தையும் கணினியையும் மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதைப் பலர் உணர்வதில்லை.

நாட்டின் உண்மையான பாதுகாப்பும் இறையாண்மையும் உணவில் தன்னிறைவு காணும் போதே கிடைக்கும். ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று சமூக சிந்தனையாளர்கள் வலியுறுத்தியது 21ஆம் நூற்றாண்டில் கூடுதல் கவனம் பெற்று வருகிறது.

எனவே, உணவு உற்பத்தி, விநியோகத்தைவிட அக்கறைப்பட வேண்டிய முக்கியமான விஷயமாக வேறு எதுவும் இருக்க முடியாது. அதை மீறி பசிப் பிணி போக்க மறுத்தால் எவையும் நிலைக்காது என்பதுதான் வரலாற்று உண்மை. ஆனால் இன்றைய உலகில் அரங்கேறிக் கொண்டிருப்பதெல்லாம் விசித்திரமாகவும் வருத்தமாகவும் இருக்கின்றது.

உழவின் அத்தனை அம்சங்களும் வணிகப் பிடிக்குள் திட்டமிட்டுத் தள்ளப்படுகின்றன. உழவுக்கான வளர்ச்சிப் பணிகள் என்று சொல்லப்படுபவை, செய்யப்படுபவை அனைத்தும் அரசியல்வாதிகள் பெரும் ஒப்பந்ததாரர்களின் வணிகப் பசிக்கும், பெரும் செல்வந்தர்கள் வர்த்தக விவசாய நிறுவனங்களின் வசதிக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.

கண்மூடித்தனமாகக் கட்டப்படும் உட்கட்ட உற்பத்தித் திறனைப் பெருக்கும் உத்திகள் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களாகட்டும், உழவை ஒருநாளும் பெருக்கப் போவதில்லை. மாறாக நம் உழவுச் சந்தையை மொத்தமாக அடிமைப்படுத்தவும், அந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் உருவாகவுள்ள பெரும் நோய்களின் மூலம் மருத்துவ சந்தைக்கு வித்திடவுமே வழிகோலுகின்றன.

இந்தியாவின் முதல் மரபணு மாற்றப் பயிரான கத்தரியில் உள்ள புழுவை அழிகக் கத்தரிக்குள்ளேயே விஷப் புரதத்தை விதைத்திருக்கிறார்கள். இதனால் ஒவ்வாமை தொடங்கி புற்று நோய், குழந்தைப் பேறின்மை, எதிர் நுண்ணுயிர்கள் செயற்படாத நிலை என எத்தனையோ உடல் நலப் பிரச்சினைகள், பிற பயிர்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்க் குணங்கள் கலந்து ஏற்படும் விளைவுகள் எனப் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளது இக்கத்தரி இனம்.

இதேபோல அரிசி என வரிசையாய் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன. இப்படிப் பன்னாட்டு வணிகப் பிடிக்குள் உள்நாட்டு விவசாயத்தை அடகு வைக்கும் நிலைப்பாடு எங்கே கொண்டு சென்றுவிடப் போகிறது?

இலங்கையிலே, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் தடைசெய்யப்பட்டிருப்பது மிகவும் ஆக்கபூர்வமான விடயமாகும்.

பட்டினியைப் போக்கவும் வறுமையைப் போக்கவும் என்ற முகமூடிகளுடன் இவ் உணவுப் பயிர்கள் நாடுகளுக்குள் நுழைகின்றன. இதே காரணத்தைக் கூறித்தான் பல ஆண்டுகளுக்கு முன் பசுமைப்புரட்சி நுழைந்தது.

விவசாயத்தில் எவ்வளவு தன்னிறைவு கண்டாலும் இன்னும் பல இலட்சம் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

உலக மயமாக்கம் முன் எப்போது இல்லாத வகையில் வேகமாக பசியையும், ஊட்டச் சத்தில்லாத மக்கள் கூட்டத்தை பரவலாக்கியும் உள்ளது.

வளரும் நாடுகள், பசியில் தவிக்கும் நாடுகள் அனைத்தும் வணிகத்தில், வேளாண் சந்தையில் பெரும் நாடுகளைச் சார்ந்திருப்பதும், உலக பொருளாதாரச் சரிவும் சேர்ந்துதான் முன் எப்போதும் இல்லாத வகையில் பட்டினி கிடப்போர் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டது.’ என்கிறார் ஐ. நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் (டபிள்யு. எச். ஓ.) தலைவர்.

தன்னிறைவான உணவு உற்பத்தி, விவசாயிகளுக்கு சுயமாக விலை நிர்ணயிக்கும் உரிமை, சமூக, பொருளாதாரப் பின்னணியில் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருப்பதால் அதற்கேற்ற விவசாயப் பொருளாதாரக் கொள்கைகளும் மானியங்களும், அதற்கு பொருந்திவரும் நட்பு நாடுகளுக்கு இடையிலான வணிக ஒப்பந்தங்கள் ஆகியவையே நமக்குத் தேவைநாம் என்ன சாப்பிட வேண்டும்? நமக்கு என்ன நோய் வர வேண்டும்? நோய் வந்தால் என்ன மருந்து உட்கொள்ள வேண்டும்?’ என்பதை உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழும் பணக்காரன் தீர்மானிக்கும் நிலைக்கு நாம் ஏன் சம்மதிக்க வேண்டும்? விவசாயத்தில் உழவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில், மகாத்மா காந்தியின் பொருளாதார ஆலோசகர் ஜே.சி. குமரப்பா சொன்னதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

உழவு இயந்திரம் நல்லாத்தான் உழும். ஆழமாகக் கூட உழும்! ஆனால் சாணி போடாதே!’ என்றார் அவர். சாணியைப் பற்றி கவலைப்படாத நம் முன்னோர்கள் அந்த இயந்திரங்களைச் சார்ந்து மண்ணையும் உடலையும் அழித்ததுதான் மிச்சம்.

எங்கே போனது அந்தப் பெரிய மனிதர்களின் சிந்தனைகள்? எதிர்காலம் குறித்த தெளிவான விழிப்புணர்வும், நேர்மையான பரவலாக்கப்பட்ட வளர்ச்சியும் சாத்தியப்படாத வரை, ‘நமது உணவு உறுதிப்பாடுஎன்பது வெறும் பகல் கனவுதான்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com