Contact us at: sooddram@gmail.com

 

படைப்பது பிரம்மன் அல்ல

உயிர்களைப் படைக்கும் தொழில்நுட்பம்

மனிதன் அச்சத்தினால் கடவுளைப் படைத்தான். ஆனால் கடவுள் தத்துவம் சுரண்டல்வாதிகளுக்கு வசதியாய் இருப்பதைக் கண்டு சுரண்டல்வாதிகள் அதை நிலைப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், மனிதன் அறிவியலில் சிறுது சிறிதாக முன்னேறும்போது கடவுள் தத்துவங்கள் சிறிது சிறிதாகச் சிதைய ஆரம்பித்தன. ஆனால் சுரண்டல்வாதிகளும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் மதவாதிகளும் அறிவியலுக்கு மதச் சாயம் பூசியும்.  அறிவியலை உள்வாங்கிக் கொண்டு செரித்தும் சுரண்டலையும் மதத்தையும் நிலைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுடைய அசைக்க முடியாத வாதமாக இதுவரை இருந்து வந்தது என்னவென்றால்மனிதன் அறிவியலில் எவ்வளவுதான் முன்னேறினாலும் உயிர்களைப் படைக்க முடியாது. அது கடவுளின் உரிமை என்பதுதான்.

ஆனால், இவ் வாதத்தை கிரெயிக் வெண்டெர் என்ற அறிவியலாளரும் அவரது குழுவினரும் 20.05.2010 அன்று தகர்த்துவிட்டார்கள். இப்பொழுது மனிதனால் உயிரற்ற செயற்கைப் பொருட்களை வைத்துக்கொண்டு உயிர்களைப் படைக்க முடியும் என்ற அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்டது.

வழக்கம்போலவே அறிவியல் உலகம் இக் கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளது. மதவாதிகள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். இதுபோன்று கடவுள் விளையாட்டை விளையாடுவதற்கு மனிதனுக்கு உரிமையில்லை என்றும், அரசாங்கம் இதை ஊக்குவிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சரி! இக் கண்டுபிடிப்பினால் விளையப் போகும் விளைவுகள் என்ன? புவி வெப்பமயமாதலின் மீது இது ஒரு தீர்மானகரமான ஆதிக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.

பெட்ரோல் போன்றே இயற்கை எரிபொருட்களின் உபயோகத்தினால் வெளிவரும் காபனீரொசைட் வாயு வளிமண்டலத்தில் பரவி நின்று வெப்பத்தை வெளியேறவிடாமல் தடுத்து, புவி வெப்பத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது.

மேலும் புவியில் கிடைக்கும் இயற்கை எரிபொருள்கள் நிரந்தரமாகக் கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. இன்னும் 200 ஆண்டுகளில் தீர்ந்துபோகலாம். எரிபொருள் இல்லாமல் மனித சமுதாயம் இருக்க முடியுமா?

இந்த எரிபொருள் தீர்ந்து போனால் என்ன செய்வது என்ற கவலையில் மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் உயிர் எரிபொருள். உயிர் எரிபொருள் என்றால் உணவு தானிங்களிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது.

மேலும் எரிபொருளுக்கென்றே ஜெட்ரோபா போன்றவற்றை விளைவித்து அவற்றிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது. இம் முயற்சி 30 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிபெற்றுவிட்டது.

ஆனால் இயற்கை எரிபொருள்கள் காபனீரொசைட் வாயுவை உமிழ்வதுபோலவே உயிரி, எரிபொருள்கள் பசுமை இல்ல வாயுக்களை மிக அதிகமாக வெளியிடுகின்றன.

இப்பசுமை இல்ல வாயுக்கள் காபனீரொட்சைட்டு வாயுவைவிட அதிகமாகச் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தவும் புவி வெப்பத்தை உயர்த்தவும் செய்கின்றன. அதனால் உயிர் எரிபொருளை உபயோகத்தில் கொண்டுவர முடியவில்லை.

கிரெயிக் வென்டெரின் உயிர்களைப் படைக்கும் (அதாவது இதுவரையிலும் கடவுளால் மட்டுமே முடியும் என்று நம்பப்பட்டு வந்த ஆற்றலை) கண்டுபிடிப்பு இதன்மேல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. 20.05.2010 அன்று இவ்வரிய கண்டுபிடிப்பை வெளியிட்ட பொழுது அதன் பயன்பாட்டைப் பற்றியும் அவர் விளக்கினார்.

படைக்கும் ஆற்றல் பெற்ற மனிதன் தான் விரும்பும் பண்புகொண்ட உயிரினங்களைப் படைக்க முடியும். வளி மண்டலத்தில் இருக்கும் காபனீரொட்சைட்டு வாயுவை உறிஞ்சும் தன்மையுள்ள உயிரினங்களைப் படைக்க முடியும்.

பசுமையில்ல வாயுக்களைப் பிரித்தெடுக்கும் உயிரினங்களைப் படைக்க முடியும் என்றும் கூறினார். (இதனால் புவி வெப்பம் உயர்வதைத் தடுக்க முடியும் மேலும் புவி வெப்ப உயர்வு நிகழ்வைத் தேவையான அளவு எதிராகத் திருப்பிவிடவும் முடியும்)

இது மட்டுமன்றி இயற்கை எரிபொருட்களை தீர்ந்து போவதற்கு முன்னால் மாற்று எரிபொருள்களைக் கண்டுபிடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமல்லவா? இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் உயிர் எரிபொருட்கள் பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டுச் சுற்றுச் சூழலைக் கெடுத்துப் புவி வெப்பத்தை உயர்த்தும் தன்மையைக் இக்கண்டுபிடிப்பு மாற்றிவிடும்.

உயிர் எரிபொருட்களிலிருந்து பசுமை இல்ல வாயுக்களைத் தனியே பிரித்தெடுக்கும் உயிரினங்களைப் படைக்கும் ஆற்றலை இக் கண்டுபிடிப்பு வழங்கும். கூடிய விரைவில் மாசு ஏற்படுத்தாத உயிரியல் எரிபொருட்களை உற்பத்தி செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியும்.

இனி இயற்கை எரிபொருட்கள் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்படத் தேவையில்லை. உயிர் எரிபொருட்களைத் தேவையான அளவிற்கு உற்பத்தி செய்து கொள்ளலாம். இன்றே இது முடியாது என்றாலும் ஒரு நூற்றாண்டுக்குள் இப்பொழுது மிகத் தீவிரமாகப் பேசப்படும் எரிபொருட்கள் பற்றாக்குறை, மாசுபடுதல், புவி வெப்பம் உயர்தல் ஆகிய பிரச்சினைகள் களையப்பட்டுவிடும்.

என்ன? மகிழ்ச்சியாக இருக்கிறதா? அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்புகிaர்களா? என்னது, மதவாதிகள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிaர்களா? அப்படி நினைத்தால் நீங்கள் தவறு செய்கிaர்கள் இப்பொழுது இதை எதிர்க்கும் மதவாதிகள் சிறிது காலத்திற்குப் பின் கடவுள்தான் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல் கொடுக்க வேண்டுமென்று விருப்பங்கொண்டார் என்று கூறிவிடுவார்கள்.

உலகம் பாய்போல் தட்டையாகத்தான் இருந்தது என்று மதவாதிகள் கூறினார்கள். உலகம் உருண்டை என்று தீர்மானகரமாகப் புரிந்து கொண்டபின், மதவாதிகளும் உலகத்தை கடலுடன் கூடிய உருண்டையாகக் காண்பித்தார்கள். திரைப்படங்களிலும் அச்சுப் படங்களிலும் இப்படித்தான் இப்பொழுது காண்பிக்கிறார்கள்.

சூரியன், பூமியைச் சுற்றவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதற்காக 500 ஆண்டுகளுக்கு முன் திருச்சபையினரால் தண்டிக்கப்பட்ட நிக்கோலஸ் கொப்பநிக்கஸின் எலும்புகள் 22.05.2010 அன்று தோண்டியெடுக்கப்பட்டு முழு மரியாதைகளுடன் மீண்டும் புதைக்கப்பட்டன.

ஆகவே, எந்தப் புதிய கண்டுபிடிப்பையும், முதலில் எதிர்ப்பதும் சில காலத்திற்குப் பின் இரு மாறுபட்ட கருத்துக்களை ஒருங்கே ஏற்றுக்கொண்டு வெட்கப்படாமல் இருப்பதும் பலருக்குக் கைவந்த கலை ஆகவே, இக்கண்டுபிடிப்பினால் மதவாதிகள் துவண்டு விடுவார்கள் என்று நினைக்கத் தேவையில்லை. அப்படியானால் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முடிவு செய்து விடலாமா?

அவசரப்படாதீர்கள்; மனித சமுதாயத்தின் உழைக்கும் மக்கள் பிரிவின் நலனை முன்னெடுத்து நிற்கும் மனித நேயர்கள் இக்கண்டுபிடிப்பினால் மட்டுமன்று, எக்கண்டுபிடிப்பினாலும் முழு மகிழ்ச்சியை அடைய முடியாத நிலையிலேயே உள்ளனர்.

மலைகளைக் குடைவதற்காக ஆல்ஃபிரட் நோபல் கண்டுபிடித்த டைனமைட், போர் விரும்பிகளின் வெடிகுண்டாக மாறியது. வானில் பயணம் செய்ய ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் போர் விரும்பிகளிடம் போர் விமானமாக மாறியது. சக்திக்காக ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த அணுச்சக்தி, ஜப்பான் நகரங்களையே அழித்தது.

உயிரைப் படைக்கும் ஆற்றலுக்கான கண்டுபிடிப்பு மனித உறவில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் யாவை? இனி, இயற்கை எரிபொருட்களைத் தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் இருந்த தடைகள் நீங்கிவிடும் என்பதால் பெருமளவு உணவு தானியங்கள் எரிபொருள் உற்பத்திக்காகத் திருப்பிவிடப்படும்.

பெருமளவு விளை நிலங்களில் உணவுக்குப் பயன்படாத எரிபொருள் மட்டுமே தயாரிக்கக் கூடிய ஜெட்ரோபா போன்றவை பயிரிடப்படும். உணவுத் தானியங்களைச் சாகுபடி செய்வதற்கான விளைநிலங்களின் பரப்பளவு குறையும்.

ஏற்கெனவே உலகில் வளரும் நாடுகளில் பசியும் பட்டினியும் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. பசி பட்டினி காரணமாகத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை மனசாட்சி உள்ள மனிதர்களின் உள்ளத்தைப் பிசைந்து கொண்டிருக்கின்றது. இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் உள்ள நிலைமை இன்னும் மோசமாகும்.

கடவுள் தத்துவத்தை வென்ற இப்போதைய உயிர் படைக்கும் கண்டுபிடிப்பு வளரும் நாட்டு மக்களை எப்படியெல்லாம் வாட்டப்போகிறதோ என்று நினைக்கவே அச்சமாக உள்ளது.

1989 வரையில், பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத மொழிவழி நாடுகளின் ஒன்றியமாக சோவியத் நாடு இருந்தது. அங்கு சோசலிச அமைப்பு சிதைந்துபோன பின் பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியன தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன.

அடக்கியாளும் முதலாளிகள் இல்லாத காலம்போய், முதலாளிகளைக் கண்டு அஞ்சி நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முதலாளித்துவ உற்பத்தி முறையின் இன்னொரு தவிர்க்க முடியாத அம்சமான வி¨வாசி உயர்வு அவர்களைப் படாத பாடு படுத்தி வருகிறது.

புதியதாக உருவாகியுள்ள முதலாளி வர்க்கம், உழைக்கும் மக்களை அடக்கியாளும் அதிகார போதையைக் கண்டு இவ்வமைப்பு தொடர வேண்டுமென்று அரசு தன் அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறது. கிட்டத்தட்ட இதே நிலைதான் சீனாவிலும் உள்ளது.

இவற்றிற்குக் காரணமென்ன? முதலாளித்துவ சமுதாயத்தில் மிகச் சிலராக உள்ள முதலாளிகளும் அவர்களுடைய அடிவருடிகளும்தான் சுகமாக இருக்க முடியும். மிகப் பலராக உள்ள உழைக்கும் மக்கள் சுதந்திரமின்றி அடிமை வாழ்க்கையையே வாழ நேரிடும். மேலும் பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத கூறுகளாகும்.

சோசலிசத்திற்கு வெளியிலே மனித வர்க்கத்திற்கு யுத்தத்திலிருந்தும் பசிப்பிணியிலிருந்தும் கோடானுகோடி மக்களை வாட்டி வதைக்கும் இல்லாமையிலிருந்தும் விடுதலையில்லை.

ஆகவே, இப்போதைய கண்டுபிடிப்பும், முதலாளிகள் தங்கள் இலாப வேட்டையை நோக்கிச் செல்லும் பயணத்திற்கு உதவப் போகிறதேயொழிய, பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் வாடும் மக்களுக்கு எந்த வகையிலும் உதவும் என்று சொல்வதற்கில்லை.

இப்போதைய உயிர் படைக்கும் கண்டுபிடிப்பு கடவுள் தத்துவத்தை வென்றதாகத் தோன்றலாம். ஆனால், சுரண்டல் தத்துவத்தை வெல்லுமா? சுரண்டல் தத்துவத்தை வெல்ல எந்தத் தனி மனிதனாலும் முடியாது. உழைக்கும் மக்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என்ற உணர்வு வரவேண்டும். அவர்கள் ஒன்று சேர்ந்து வெற்றிபெற வேண்டும் அதுவே காலத்தின் தேவை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com