Contact us at: sooddram@gmail.com

 

‘3R’ முறைமை சொல்வது என்ன?

(சாரதா மனோகரன்)

சுமை, சூழல் மாசு, காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு என்ற பல சொற்பதங்களை அன்றாடம் கேள்விப்படுகிறோம். அதேவகையில்தான் ‘3R’ எனற் சொற்பதமும் அமைகிறது. எந்த ஒரு செயற்பாடாயினும் ‘3R’ முறைமைக் கமைய மேற்கொள்ளப்பட வேண்டு மென்ற நியதி உலகளாவிய ரீதியிலே உருவாக்கப்பட்டு வருகிறது. ‘3R’ எனப்படுவது Reduse, Reuse, Recycle  என்ற 3 சொற்க ளையும் சுருக்கமாகக் குறிக்கும் சொற் பதமாகும். அதாவது, பாவனைக்குறை ப்பு, மீள்சுழற்சி, மீள்பாவனை ஆகிய மூன்று விடயங்களையும் கருத்தில் கொண்டே எம் அன்றாடச் செயற் பாடுகள் அமைய வேண்டுமென்ற நியதி உருவாக்கப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், தொழில்நுட்ப வளர்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் அவற்றினாலான வருமானம் என புதிய பல இலக் குகளைத் தேடி மனிதன் தொடக்கிய பயணத்தின் வேகம் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கியது. ஓசோன் படை அரிப்பு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றம் எனப் புதிய பல பிரச்சினைகள் அவனது பயணத்தின் வேகத்தைக் குறைத்தன.

இயற்கையைக் கருத்தில் கொள்ளாமல் மனிதன் தொடுத்த கணைகளுக்கு இயற்கையும் எதிர்க்கணை தொடுத்தது. இயற்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முயற்சியில் சற்றும் தளராத மனிதன், புதுப்புது வழிமுறைகளைக் கண்டுபிடித்தான்.

அந்த வழியிலேலே உருவாக்கப்பட்ட கொள்கை தான் ‘3R’ முறையாகும். பாவித்த பின் தூக்கியெறியும் கலாசாரம் 1980களில் பின்பு பரவத் தொடங்கியது. மேற்குலக நாடுகளிலே ஆரம்பிக்கப்பட்ட போதும், காலப் போக்கில் மூன்றாம் உலக நாடுகளினுள் நன்றாக ஊடுருவியது.

அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகள், சிறந்த கலாசாரப் பின்னணியையும் இயற்கையுடன் இணைந்து செல்கின்ற வாழ்வியலையும் கொண்டவை. ஆனால் அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகள் தமது உற்பத்திகளையும், கழிவுகளையும் நவீன யுகம், உலக மயமாதல் எனும் போர்வைகளில் மூன்றாம் உலக நாடுகளிடம் சந்தைப் படுத்தின. விளைவு, பாவித்ததும் தூக்கியெறியும் கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது.

அது மட்டுமன்றி, இயற்கை வளங்கள் மிகையாக நுகரப்பட்டன. பணக்கார நாடுகள், வறிய நாடுகளின் வளங்களைச் சுரண்டின. விளைவாக, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் உருவாகின. அவற்றைத் தொடர்ந்து சமூக பொருளாதாரப் பிரச்சினைகளும் அணிவகுத்தன.

தொட்டிலைக் கிள்ளியவர்களே பிள்ளையையும் ஆட்ட வேண்டு மல்லவா? ‘3R’ முறையையும் அதே பணக்கார நாடுகள் உருவாக்கின. இன்று எம் மத்தியில் பிரபல்யப் படுத்துகின்றன.

எந்த ஒரு பொருளினதும் தேவையற்ற, தேவைகளுக்கு மேலதிகமாக பாவனை குறைக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் பாவனையற்ற அறைகளிலும் மின் விளக்குகள் எரிந்தபடி இருக்கும். ஆனால் அவற்றைச் சிறிதளவிலேனும் கருத்தில் கொள்ளாதவர்களாக நாம் இருந்து விடுகிறோம். அவ்வாறு இருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்பதையே ’3R’ முறைமையின்பாவனையைக் குறைத்தல்செயற்பாடு எதிர் பார்க்கிறது.

ஒரு தடவை பாவித்தபின், பயனில்லையெனப் பல பொருட்களை எறிந்துவிடுகிறோம். ஆனால், அவற்றை இயன்றளவு மீள மீள ஏதோ ஒரு வழியில் பாவிப்பதே சூழலுக்கு நன்மை பயக்குமெனத் தெரிவிக்கப் படுகிறது. ஒரு பக்கம் எழுதியோ அல்லது அச்சிடப்பட்ட கடதாசிகளை அவற்றின் தேவை முடிந்ததும் கசக்கியெறிந்து விடுகிறோம்.

ஆனால் மாறாக அவற்றின் அச்சிடப்படாத மறுபக்கத்தை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாமே? இத்தகைய செயற்பாடுகளைத்தான்மீள் பாவனைஎனும் பதவி ஊக்குவிக்கிறது.

ஒரு பொருளின் பாவனை முடிந்த பின், அப்பொருளை அதேவடிவில் மீள உபயோகிக்க முடியாத ஒரு நிலையில், அதனை பயனுள்ள இன்னொரு பொருளாக்கிப் பயன்படுத்துதல் இன்று நடைமுறையில் உள்ளது. பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கடதாசிப் பொருட்கள் பல அவ்வாறு உருமாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகளைத் தான்மீள் சுழற்சிஎனும் பதம் ஊக்குவிக்கிறது.

‘3R’ முறைமையானது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு ஒன்றும் புதிதானதல்ல. எம் முன்னோர்கள் கைக்கொண்டு வந்து பின் காலப் போக்கில் புறந்தள்ளிய முறைமைகளை மேற்குலக நாடுகள் புதிய வர்ணத்தீட்டி அறிமுகப்படுத்துகின்றன. நாமும் ஆவலுடன் அறிய முயல்கிறோம்.

வாழையிலைலே உணவருந்தியவர்கள் இன்று வாழையிலை போன்றே வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டில் பெருமையாக உண்கிறார்கள். மாவிலே கோலம் போட்டு மாவிலைத் தோரணம் கட்டியவர்கள் வீடுகளை பிளாஸ்டிக் கோல ஸ்டிக்கர்களும் பிளாஸ்டிக் மாவிலை தோரணங்களும் அலங்கரிக்கின்றன. கடவுளைக்கூட நாம் விட்டுவைக்கவில்லை.

அவரது திருவுருவங்களையும் வாசனை திரவியம் பூசிய செயற்கைப் பூக்கள் தான் அலங்கரிக்கின்றன. இவற்றையெல்லாம் கெளரவம் எனக் கருதி பெருமை பேசுவோர் பலரைக் கண்டிருப்போம். ஏன் அவர்களில் ஒருவராக நாங்களும் இருக்கலாம்.

நாம் ‘3R’ முறையைக் கடைப்பிடிப்பதற்காகப் புதிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. கால ஓட்டத்தில் நாம் தொலைத்துவிட்ட எம் பண்பாட்டு, கலாசார நடைமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கைக்கொண்டாலே போதும் ‘3R’ முறைமை எம் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்து விடும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com