Contact us at: sooddram@gmail.com

 

மனவடுக்களை போக்கும் மனமாற்றம்

அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது காலம் என்ற கூற்றில் உண்மையுண்டு.

காட்சிகளை மட்டுமன்றி மனங்களையும் மாற்றக் கூடியது காலம். எமது நாட்டில் மூன்று தசாப்த காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து வந்த கொடிய யுத்தத்தினால் உண்டான மனவடுக்களையும் மாற்றக் கூடிய வல்லமை கொண்டது காலம்.  கொடிய யுத்தமானது இங்குள்ள பல்வேறு இன மக்கள் மனங்களிலும் பதித்திருந்த காயங்கள் படிப்படியாக ஆறி வருவதை இப்போது நாம் உணரத் தொடங்கியுள்ளோம்.

கிழக்கிலும் வடக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் துளிர் விடத் தொடங்கியுள்ள ஐக்கியமும் தென்பகுதியில் தமிழ், சிங்கள மக்களிடையே மீண்டும் உருவாகியுள்ள நட்புறவும் மனவடுக்கள் குணமடைந்து வருவதற்கான அடையாளங்களாகும். இரு இனங்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்ற விழாக்களின் போது நாம் இன ஐக்கியத்தைக் காண்கிறோம். காரைதீவில் சில தினங்களுக்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து கோலாகலமாக நடத்திய தமிழ் செம் மொழி விழாவில் விபுலானந்த அடிகளாரின் சிறப்பையும் தமிழ்மொழியின் மேன்மையையும்விட தமிழ், முஸ் லிம் இன ஐக்கியமே மேலோங்கியிருந்ததெனலாம். இது போன்று கதிர்காமம் உற்சவத்துக்காக இம்முறை யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பக்தர்களை தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்கள் உபசரித்துப் போஷித்த விதமும் இன ஐக்கியம் மேம்பட்டு வருவதற்கான அடையாளமாகவே தெரிகிறது. நயினாதீவு நாக பூஷணியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்துக்காக தென்னிலங்கை யிலிருந்து இம்முறை பெருமளவில் சென்ற சிங்கள மக்களும் அங் குள்ள தமிழ் மக்களால் இவ்வாறே உபசரிக்கப்பட்டனர்.

வேற்றுமையினால் விளையும் நன்மை எதுவுமேயில்லையென்ற யதா ர்த்தத்தை நீண்ட கால யுத்தம் எமது மக்களுக்கு நிதர்சனமாகப் புரிய வைத்துள்ளது. கொடிய யுத்தமானது இலங்கையில் தனியொரு தர ப்பு மக்களை மாத்திரமே பாதித்துள்ளதென்று ஒரு போதும் கூற முடியாது. யுத்தப் பாதிப்பின் தழும்புகள் எமது நாட்டில் ஒவ்வொரு இனத்தின் மீதும் பதிந்துள்ளன. முப்பது வருடத்துக்கு மேலாக நாம் அனைவரும் அனுபவித்த அவலத்தை கருத்தில் கொள்ளும் போது, எவரையும் நோவதால் இனிமேல் கிடைக்கப் போகும் நன்மை எதுவுமேயில்லை என்பதே நிஜம்.

யுத்தம் ஓய்ந்து போன ஒரு வருட காலப் பகுதியில் நம்மவர்கள் மத் தியில் ஏற்பட்டுள்ள மனமாற்றமானது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. இத்தகைய மனமாற்றம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதென்பதே ஆறுதல் தருகின்ற விடயம்.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்க ளைப் புறந்தள்ளி வைத்து விட்டு எமது நாட்டின் கடந்த கால யுத் தத்தின் பின்புலத்தை ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானதல்ல... அதேசமயம் இலங்கையில் ஐக்கியமும் அமைதியும் நிலவுவதன் மூலமே இங்குள்ள சகல இன மக்களும் நிம்மதியுடன் வாழலாமெ ன்ற மனமாற்றம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியிருக் கும் இத்தருணத்தில் யுத்தத்தின் பின்புலக் காரணிகளை அலசி ஆராய்வது ஆரோக்கியமானதுமல்ல.

மனமாற்றத்தின் மூலம் மனவடுக்கள் நீங்குவதே இலங்கையின் ஐக்கிய த்துக்கான அடிப்படை அம்சமென்பதை அனைவரும் உணருவதே இங்கு முக்கியமாகும். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக் குப் பொறுப்பான உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்பிளேக் கூறியிருந்த விடயமொன்றும் எமது கருத்துக்கு இசைவான தாகவே உள்ளது.

புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தற்போது மனமாற்றம் ஏற் பட்டுள்ளதாக ரொபேர்ட்பிளேக் கூறுகிறார். இலங்கையில் தற் போது இடம்பெற்று வரும் பொருளாதார அபிவிருத்தி, மீள்கட்ட மைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க புலம்பெ யர் தமிழர்கள் விரும்புவதாகவும் ரொபேர்ட்பிளேக் தெரிவித் திருக்கிறார்.

மனமாற்றத்தின் வெளிப்பாடாகவே இதனைக் கொள்ள வேண்டும். புல ம்பெயர் தமிழர்களின் இம்மனமாற்றத்தின் வெளிப்பாடானது இலங் கையின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்குமாக இருந்தால் அதனை வரப்பிரசாதமென்றே கருத வேண்டும். வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கும் பொருளாதார அபிவிருத்திக்கான முதலீடுகள் அதிகளவில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும். யுத்தத்தின் விளைவினால் பொருளாதாரப் பின்ன டைவு காணப்பட்ட எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொழில் முயற்சிக்கான முதலீடுகளே அவசியமாகின்றன.

புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை இதுவொரு வாய்ப்பான சூழ் நிலையாகும். அவர்களது முதலீடுகள் தனிமனித நலனுக்கான முய ற்சியாக மட்டும் இருக்கப் போவதில்லை. எமது நாட்டின் பொரு ளாதாரத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப உதவுமென்பதிலும் சந்தேகமில்லை.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com