Contact us at: sooddram@gmail.com

 

இப்படியும் சொல்கின்றார்கள்

இப்போது எங்கே பாலகுமார்? இறுதி நேரத்தில் பிரபாகரன் அருகில்...

(இரா.சரவணன்)

''அழிவுகளில் இருந்து மீள வேண்டும் என்பது எவருக்கும் ஏற்படும் முன்னர் எமது தேசியத் தலைவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல என்பது அனைத்துத் தளபதிகளுக்கும் தொடர்பாளர்களுக்கும் தெரியும். தன் சொந்தப் பாதுகாப்பையும் புறந்தள்ளி அவர் செயற்பட்டது எல்லோருக்கும் தெரியும். மிஞ்சியோரும் மிஞ்சாமல் இறந்தோரும் மீட்கப்பட்ட வரலாறும் அனைவருக்கும் தெரியும்!'' - 2004- டிசம்பர் மாதம் சுனாமிப் பேரலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி கிளம்பிய வேளையில், அதனை அறவே மறுத்து, 'புலிகளின் குரல்' வானொலியில், வே.பாலகுமார் வார்த்த நம்பிக்கை இது. அதன் பிறகுதான் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை உலகத் தமிழினம் நம்பத் தொடங்கியது. காரணம்... வே.பாலகுமார் அந்த அளவுக்கு நம்பகமான சீனியர். இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை சொல்ல ஆள் இல்லை என்பதுதான் துயரம்!

ஆரம்பத்தில் 'ஈராஸ்' அமைப்புக்குத் தலைவராக இருந்தவர் வே.பாலகுமார். 'இந்திய அமைதிப் படை' ஈழத்தில் வெறியாட்டம் போட்ட இக்கட்டான நேரத்தில் புலிகள் அமைப்பில் இணைந்து, தனது ஆதரவுத் தரப்பினரையும் புலிகளின் பின்னால் அணிவகுக்கச் செய்தவர். உலகளாவிய அரசியல் முன்னெடுப்புகளைப்பற்றி நல்ல ஆலோசகராக பிரபாகரனுக்கு உரைத்தவர். கடந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதி, ஈழப் போர் முடிவுக்கு வந்தபோது புலிகளின் முக்கியத் தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை நீடிக்கும் புதிராக இருக்கிறது. அதேபோல், புலிகளின் சிறப்பு உறுப்பினர் வே.பாலகுமார், போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி, பண்பாட்டுக் குழுத் தலைவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதையும் சிங்கள அரசுத் தரப்பு அறிவிக்கவில்லை.

இதற்கிடையில் போரின் கடைசி நாளில் புலிகள் பலரும் சயனைடு சாப்பிட்டும், கரும்புலிகளாக மாறியும் உயிர் துறக்க... பாலகுமார், யோகி உள்ளிட்ட மூத்த புள்ளிகளை ராணுவம் உயிரோடு பிடித்ததாகவும், அவர்களைப் பொது முகாம்களில் அடைக்காமல் கொழும்பில் உள்ள ராணுவ ரகசிய அறைகளில் வைத்து சித்ரவதைகள் செய்வதாகவும் செய்தி கிளம்பியது. கொழும்பு ஊடகங்களும் இதுபற்றி தொடர்ந்து எழுதி வந்தன.

சில மாதங்களுக்கு முன்பு முகாமில் இருந்து தப்பி வந்த புலி உறுப்பினர்கள், ''சந்தேகத்தின் பேரில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகளை சிங்கள ராணுவம் சித்ரவதைப்படுத்தி வருகிறது. புலிகளின் முக்கியத் தளபதிகளும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் அங்கே இருக்கிறார்கள். பாலகுமார், யோகி ஆகியோருக்குப் போரில் படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்குப் போதிய சிகிச்சையை வழங்கி வரும் சிங்கள ராணுவம் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கவிஞர் இரத்தினதுரை முகாம் மக்களோடு கலந் திருக்கிறார்!'' எனச் சொன்னார்கள்.

இந்த நிலையில்தான், திடீரென ஒரு குண்டை வீசி இருக்கிறார் இலங்கையின் சிறைச்சாலைகள் மீள் அமைப்பு மற்றும் புனர்வாழ்வுத் துறை அமைச்சரான குணசேகர. சமீபத்தில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பகுதிகளில் விசிட் அடித்து திரும்பிய அவர், ''போரினால் கணவனை இழந்த பெண்களைப் பார்வையிடு வதற்காகப் போயிருந்தேன். அங்கே நான் சந்தித்த கணவரை இழந்த பெண்களில் வே.பாலகுமார், யோகி ஆகியோரின் மனைவிகளும் அடக்கம்!'' எனச் சொல்லி இருக்கிறார். ''பாலகுமார், யோகி ஆகியோர் எங்கே எப்படி கொல்லப்பட்டார்கள்?'' என்கிற கேள்விக்கு, ''பாலகுமார் கடந்த ஆண்டு, வன்னி கிழக்குப் பகுதியில் நடந்த போரின்போதே கொல்லப்பட்டுவிட்டார்!'' என்று மட்டும் சொன்ன குணசேகர, யோகி குறித்தோ, பால குமார் எப்படிக் கொல்லப்பட்டார் என்பது குறித்தோ ஏதும் சொல்லவில்லை.

இது குறித்து இலங்கையின் தமிழ்ப் பிரதிநிதிகள், ''ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர்களை மனரீதியாகத் துவளச் செய்யும் செயல்களை சிங்கள அரசு திட்டமிட்டுச் செய்து வருகிறது. பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட அத்தனை புலித் தலைவர்களும் கொல்லப்பட்டதாக ஆரம்பம்தொட்டே அடித்துச் சொல்லும் சிங்களத் தரப்பு, இன்று வரை அதற்கான மரணச் சான்றிதழ்களை இந்தியாவிடம் கொடுக்கவில்லை. பிரபாகரனின் மனைவிமதிவதனி கொல்லப்பட்டதாகவும், அவருடைய உடல் கிடைக்கவில்லை எனவும் அரசுத் தரப்பில் அதிகாரபூர்வமாகவே செய்தி வெளியிடப்பட்டது. அடுத்த சில வாரங்களிலேயே அந்தப் பதற்றம் அடங்க... பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரனின் முகத்தை, ஒரு சிறுவனின் உடலோடு கிராபிக்ஸ் செய்து இணையதளத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ஈழ ஆதரவாளர்களையும் உலுக்கிப்போட்டது சிங்கள சதி. கொஞ்சம் இடைவெளிவிட்டு புலிகளின் நிதர்சனம் ஒளிபரப்புத் துறையில் பணியாற்றி போரில் மடிந்த இசைப்பிரியாவின் சடலத்தைக் காட்டி, 'பிரபாகரனின் மகள் துவாரகாவும் கொல்லப்பட்டார்' எனச் சொல்லி பகீர் கிளப்பினார்கள். பாலகுமார், யோகி ஆகியோர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவதும் இந்த வகையிலான சதிதான்.

ஐ.நா-வின் விசாரணைக் குழு இலங்கைக்குள் நுழையக் கூடாது எனப் போர்க் குரல் எழுப்பியபடியே போர்க் குற்றத் தடயங்களை அடியோடு அழித்து வருகிறது சிங்கள அரசு. இதை மீறி ஐ.நா-வின் விசாரணைக் குழு இலங்கையின் போர்க் குற்றம் குறித்து விசாரிக்கும்போது, புலிகளின் முக்கிய உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்படும். குறிப்பாக, இறுதிக்கட்ட போரின்போது சர்வதேச சமூகத்திடம் போராடியவர் யோகி. அதுபோல், இலங்கையின் கடைசிக் கட்ட சமாதான மோசடிகளை நன்கு அறிந்தவர் பாலகுமார். இவர்களின் சாட்சியங்கள் என்றைக்கு இருந்தாலும் இலங்கைக்கு மோசமான விளைவை உண்டாக்கும். அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகத் திட்டமிட்டுப் பரப்புகிறது சிங்கள அரசு. உண்மையாகவே பாலகுமார் போரில் கொல்லப்பட்டு இருந்தால், அவருடைய சடலத்தைக் காட்டி சிங்கள அரசு கொக்கரிக்கத் தவறி இருக்காது!'' என்கிறார்கள் உறுதியாக.

ஈழப் போர் உக்கிரமெடுத்த காலகட்டங் களை நினைவுகூரும் சிலர், ''உடையார்கட்டுப் பகுதியில் நடந்த கொடூரத் தாக்குதலில் பாலகுமார் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. அப்போதே அவர் கொல்லப்பட்டதாக சொன்னது சிங்கள ராணுவம். ஆனால், பெரும் சிரத்தையெடுத்து அவரைக் காப்பாற்றிய புலிகளின் மருத்துவப் பிரிவு, தேசியத் தலைவர் பிரபாகரனிடம் கொண்டுசேர்த்தது. இறுதி நேரங்களில் பிரபாகரனுக்கு மிக அருகில் இருந்து பன்னாட்டுப் பிரதிநிதிகளிடம் பேசி, போர் நிறுத்த முன்னெடுப்புகளைச் செய்தவர் பாலகுமார். அதேபோல் போர் ஆய்வு மையப் பொறுப்பாளரான யோகியும் கடைசிக் கட்ட சூழல் வரை பன்னாட்டு ஆட்களுடன் தொடர்பில் இருந்தார். கவிஞர் இரத்தினதுரை மக்களோடு மக்களாக வற்புறுத்தி அனுப்பப்பட்டார். புலிகளின் இறுதி நேர இக்கட்டுகளையும், ராணுவ சதிகளையும் ஒருசேரப் பார்த்த சாட்சிகள் இந்த மூத்த புலிகள்தான். பாலகுமார், யோகி ஆகியோர் கொல்லப்பட்டதாகச் சொன்ன இலங்கை அமைச்சர் குணசேகர, அந்த விவகாரம் பெரிய சர்ச்சையான பிறகு எவ்விதப் பதிலும் சொல்லவில்லை. ஆனால், 'விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்த கணவனை இழந்தோர் குறித்து நான் விசாரிக்கவில்லை' என்று மட்டும் மழுப்பலாகச் சொன்னார். இப்போது கேணல் ராம், கே.பி. உள்ளிட்டோரை வைத்து தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை விதைத்து வரும் சிங்கள அரசு, இனவெறிக் கொடூரங்களைப் பக்கத்தில் இருந்து பார்த்த சாட்சிகளாக இருக்கும் மூத்த புலிகளை என்ன செய்யக் காத்திருக்கிறதோ?'' என்கிறார்கள் பதற்றம் குறையாமல்!

(விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com