Contact us at: sooddram@gmail.com

 

இயல்பாக வாழவிட்டாலே போதும்

ப்பொழுது நான் சிறுவனாக இருந்தேன். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது, ஒரு சிறு கூட்டம் வேலி ஓரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தது. நான் அருகே சென்று பார்த்த போது, அவர்கள் ஒரு பாம்பைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் அம்பாம்பையும் கண்டோம். அது ஒரு பச்சைப்பாம்பு. கொடியில் படர்ந்து நின்றது. ஒரு வேலியின் மீது கொடியோடு கொடியாக வித்தியாசம் தெரியாமல் தன் பச்சை நிற உடலை நீட்டி ஒரு செடியின் மீது செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தது.

அது ஒருகண் கொத்திப் பாம்புஎன்றும் அதை அடித்துக் கொல்வதே நல்லது என்றும் அக்கும்பல் பாம்பைக் கொல்ல முயற்சித்தது. அவர்களை சமாதானப்படுத்தி, அப்பாம்பை காப்பாற்றுவது அன்று எனக்குச் சாதாரணமான காரியமாக இல்லை. இச்சம்பவத்துக்குப் பின்னர் பல முறை பல வகையான பாம்புகளைக் காப்பாற்றி, மனித நடமாட்டம் இல்லாத செடிகொடிகள் செழித்த பகுதிகளில் விடுவது எனக்கு வழக்கமான ஒன்றாக மாறியது. ஆனால் மக்களிடம் இருந்து பாம்புகளைப் பற்றிய பயம், மூட நம்பிக்கைகளை மாற்றுவது எனக்கு எளிதானதாக இல்லை.

இந்தப் பச்சைப் பாம்பை கண் கொத்திப் பாம்பு (வைன் ஸ்னேக்) என்று அழைப்பதற்கு, அதன் கூரிய நீண்ட முகமே காரணம். இந்த வகைப் பாம்புகள் கண்ணைக் கொத் துவதாகக் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையே. ஆனால் யாரும் இதை ஏற்றுக் கொள்வதில்லை. அதே நேரம் இந்தப் பாம்பின் கூரிய முனையைத் தொட்டுப் பார்த்தால், அது எவ்வளவு மென்மையானது என்று மக்களுக்குப் புரியும். ஆனால் நாம் எதையும் அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்ளாமல், விஷமற்ற இந்தப் பாம்பை கண்கொத்திப் பாம்பாக்கி, அதைக் கொன்றும் விடுகிறோம்.

இது பச்சைப் பாம்புக்கு மட்டுமல்ல, எல்லா பாம்பு வகைகளுக்கும் பொருந்தும், உலகில் வாழும் உயிரினங் களில் பல்வேறு தவறான நம்பிக்கைகள், உண்மையற்ற கட்டுக்கதைகளால் மோசமாக பாதிக்கப்படும் உயிரினம் என்று பாம்பைக் கூறலாம். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

கொம்பேறி மூக்கன் (பிரான்ஸ் பேக் டிரீ ஸ்னேக்) ஒரு விஷமற்ற பாம்பு. இது உயரமான மரக்கிளைகளின் மீது ஏறிச் செல்லும் இயல்புடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்த வகைப் பாம்பு ஒருவரைக் கடித்தபின், இறந்தவரது இறுதி ஊர்வலத்தைப் பார்க்கவே உயரமான கிளைகளின் மீது ஏறுகிறது என்று எந்த ஆதாரமும் இன்றி நம்பப்படுகிறது. அதனாலேயே இப்பாம்பு கொல்லப்படுகிறது.

சாரைப் பாம்பும் ஒரு விஷமற்ற பாம்பே. விவசாய நாடான நம் நாட்டில் உற்பத்தி யாகும் தானியங்களை ஏராளமாக வீணடிப் பவை எலிகள், அப் படிப்பட்ட எலிகளை அதிகம் உணவாகக் கொள்ளும் பாம்பு இது. ஆனால் இது தன் வாலில் உள்ள விஷமுள்ளைக் கொண்டு தாக்கும் என்பது ஒரு தவறான நம்பிக்கை. இதன் வாலில் எந்த முள்ளும் கிடையாது. சாரைப் பாம்பு நல்ல பாம் போடு சேர்ந்து நடன மாடும். இனப் பெருக்கம் செய்யும் என்பதும் கட்டுக் கதையே.

மன்னுள்ளிப்பாம்பு (கொமன் சாண்ட் போவா) மற்றுமொரு வித்தியாசமான பாம்பு. இதன் தலையும் வாலும் அதிக வித்தியாசம் இல்லாமல், ஒரே அளவுக்குப் பருத்துக் காணப்படுவதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இதன் தலையும் வாலும் மாறி மாறி இருக்கும் என்று கூறப்படுவதும் உண்மையற்ற செய்தி. இப்பாம்பு தீண்டினால் தொழு நோய் வரும் என்பது மிகப் பெரிய மூடநம்பிக்கை.

இப்படி பாம்புகளைப் பற்றி கட்டுக்கதைகளும் தவறான தகவல்களும் மூடநம்பிக்கைகளும் உலவி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது மதம், பண்பாடு சார்ந்த சம்பிரதாயமும் சடங்குகளும். இவற்றை பிரதிபலிப்பது போல் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் தவறான கருத்துக்களைப் பதிய வைக்கின்றன.

சடங்கு, சம்பிரதாயங்கள் ஏதோ ஒரு நோக்கத்தால் உருவாக்கப்பட்டிருக் கலாம். ஆனால் கால ஓட்டத்தில் அவற்றை எதற்காகச் செய்கிறோம் என்பதை முற்றிலும் மறந்து, வெறும் செயலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுகிறது. உதாரணமாக, முன்பு நாட்டார் தெய்வங்களாக இருந்து இந்துக் கடவுள்களாக மாற் றப்பட்ட பல தெய் வங்களுக்கு வாகனங் களாக விலங்குகள், பறவைகள் வைக்கப்பட் டிருப்பது, அவற்றைப் பற்றி மனிதர்கள் மனதில் அந்நிய மனப் பான்மையை உதறி, நெருக்க மனப்பான் மையை உருவாக்கி காப்பாற்றவே, சிவனின் கழுத்தில் பாம்பும், அம்மனின் மற்றொரு வடிவமாக பாம்பும் இருப்பது இந்தக் கூற்றுக்கு சில உதாரணங்கள்.

ஆனால், ஒரு பக்கம் பாம்புப் புற்றுக்கு பாலும் முட்டையும் ஊற்றும் நம்மில் பலர், அவற்றை அடித்துக் கொல்வதையும் நிறுத்தவில்லை. மேலும் பாம்புகளால் பாலையும் முட்டையையும் சாப்பிட முடியாது என்பது பலரும் உணராத அறிவியல் உண்மை. உடைத்த முட்டையை பாம்பு எந்தக் காலத்திலும் சாப்பிடுவது கிடையாது. இயற்கையாக பறவைக் கூடுகளில் இருந்து முட்டையை சில நேரம் பாம்புகள் விழுங்குவது உண்டு. கறையான் புற்றில் வந்து தஞ்சமடையும் பாம்புகள் முட்டை, பாலை ஊற்றுவதால் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடும்.

திரைப் படங்களில் அடிக்கடி தோன்றும் மற்றொரு காட்சி, ஒருவன் பாம்பைக் கொன்றால், அந்தப் பாம்பின் துணை அம்மனிதனை தேடி வந்து கொல்வது போல் காட்டுவது. இந்த மூடநம்பிக்கை முற்றிலும் தவறு. ஒரு பாம்பை அடித்துக் கொல்லும் போது, அதன் உட்பாகங்கள் வெளியே வருகின்றன. இதில் பாம்பு தன் துணையைக் கவர்வதற்காக பயன்படுத்தும் சில ஹார்மோன்களும் வெளியேறும். இதனால் கவரப்பட்டு, அந்த இடத்துக்கு மற்ற பாம்புகள் வரக்கூடும். பாம்பைக் கொன்றவரை கொல்வதற்காகவோ, அடையாளம் பார்த்து வைத்துக் கொண்டு பழிவாங்குவதற்காகவோ அவை அப்படிச் செயற்படுவதில்லை.

பாம்பு வித்தியாசமான ஒரு உயிரியாக இருப்பதாலும், சரசரவென சருகுகள் இடையே ஊர்ந்து செல்வதாலும், திடீரென தோன்றுவதாலும் நிறைய பயம் ஏற்படுகிறது. இது எல்லாவற்றையும்விட பெரிய பயம் எல்லா பாம்புகளும் விஷமுள்ளவை என்று தவறாக நம்புவது. ஆனால் பொதுவாகக் காணப்படும் பாம்பு வகைகளில் நான்கைத்தவிர மற்ற அனைத்தும் விஷமற்றவையே. விஷமுள்ள பாம்புகள் நல்ல பாம்பு (கோப்ரா), கட்டுவிரியன் (கிரெய்ட்), கண்ணாடி விரியன் (ரஸ்ஸல்ஸ் வைபர்), சுருட்டைப் பாம்பு (சாஸ்கேல்ட் வைபர்), மற்ற அனைத்தும் விஷமற்றவை. விஷமற்ற விஷமில்லாத பாம்புகள் இடையே வேறுபாடு கண்டறியத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா பாம்புகளும் ஒன்று என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொல்லக்கூடாது.

மற்ற உயிரினங்களைப் போலவே மனிதர்களைக் கண்டால் பாம்புகளும் ஒதுங்கியே செல்கின்றன. இயற்கை - விலங்குகள் உணவுச் சங்கிலியில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பாம்புகள் குறைந்தால், நமக்குத் தேவையான தானியங்களை அழிக்கும் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, பாம்புகளால் நமக்கு இயற்கையாகவே நிறைய நன்மைதான் ஏற்படுகிறது.

ஆறறிவு கொண்ட மனிதர்களான நாம், இதை உணர்ந்து அவற்றைத் தேடித் தேடி பாதுகாக்க வேண்டியது கூட இல்லை. அவற்றை தொந்தரவு செய்யாமல், கொல்லாமல், இயல்பாக வாழ விட்டாலே போதும், நமக்கு நிறைய நன்மை கிடைக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com