Contact us at: sooddram@gmail.com

 

கறுப்பு ஜூலை நினைவாக...

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகத் தூண்டிவிட்ட இனவன்செயல்கள் இருபத்தியேழு வருடங்களுக்கு முன்னர் சரியாக இன்றைய தினத்திலேயே நாடு பூராவும் பரவத்தொடங்கின. 1983 ஜூலை 23 வெள்ளிக்

கிழமை இரவு யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்கள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அரசாங்கத்திற்குள் இருந்த இனவெறிச் சக்திகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு வசதியான வாய்ப்பாக அமைந்தது. இலங்கையின் வரலாற்றில் அந்த ஜூலை மாதம் ஒரு எல்லைக்கோடு. எதுவுமே மீண்டும் முன்னரைப் போன்று இருக்கப்போவதில்லை என்பதை உணர்த்திய அனர்த்தங்கள் மிகுந்த அந்த மாதத்தை காலஞ்

சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை என்று வர்ணித்திருந்தார். நேற்றைய தினம் கறுப்பு ஜூலை தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரப்பத்திரிகையொன்றில் கட்டுரையொன்றை எழுதிய சிங்கள அரசியல் விமர்சகர் ஒருவர் அந்த ஜூலைக்குப் பிறகு இலங்கையில் சகலதுமே கறுப்பாகவே இருந்து வருகிறது என்று குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் தலைவிரித்தாடிய வன்முறைகளின் கொடூரம், அதனால் விளைந்த உயிரிழப்புகள் மற்றும் சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் மனங்களில் வேரூன்றிய வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் உண்மையில் கணிப்பிடமுடியாதவையாகும். கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடித்த உள்நாட்டுப் போரில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் அதன் விளைவான அவலங்களும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விட எத்தனையோ மடங்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப் போரை மூளவைத்தது என்பதால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதற்கு ஒரு பிரத்தியேகமான எதிர்மறைக் குறியீடு இருக்கிறது.

கறுப்பு ஜூலைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு இராணுவத்தீர்விலேயே அக்கறை காட்டின. சகல ஜனாதிபதிகளுமே உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வைப் பற்றிப் பேசினார்களேதவிர, இராணுவத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்குத் தங்களாலியன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேச சமூகத்தின் பங்களிப்போ இலங்கையில் அரசியல் தீர்வொன்று காணப்படுவதற்கு உதவுவதற்குப் பதிலாக இராணுவத் தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைவதை உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது. இறுதியில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்குக் கிடைக்கச் செய்தன. போரில் அரசாங்கப் படைகள் வெற்றி பெறுவதற்கு வழிவகுத்த உருப்படியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று பெருமைப்படும் ராஜபக்ஷ போர் வெற்றியை அடிப்படையாகக் கொண்டே தனது சகல அரசியல் வியூகங்களையும் வகுத்து சிங்கள மக்கள் மத்தியில் உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்திருக்கிறார்.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது இரண்டாவது தடவையாகும். இச்சந்தர்ப்பத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது? கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் 10 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் விடுபடமுடியாமல் பல்வேறு வகையான இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி புனர்வாழ்வு அளிப்பதற்கான பணிகளைக் கூட அரசாங்கம் வெளியுலகைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் அசமந்தமாக மேற்கொள்கின்றதேதவிர, சொந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குப் பயனுறுதியுடைய செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டுமென்ற மானசீகமான அக்கறையை அதனிடம் காணமுடியவில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமான உருப்படியான மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளிலோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதை நோக்கிய அரசியற் செயன்முறைகளிலோ அரசாங்கத்துக்கு அக்கறையில்லை என்பதை சர்வதேச சமூகம் உணரத்தொடங்கியிருப்பதன் விளைவே இராஜதந்திர ரீதியில் அரசாங்கம் இன்று எதிர்நோக்கும் சிக்கல்கள். ஆனால், இலங்கையை வழிக்குக் கொண்டுவரக்கூடிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் சர்வதேச சமூகம் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

போரின் முடிவுக்குப் பிறகு தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவ மயத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. தமிழ்ப் பகுதிகளில் மேலும் கூடுதலான எண்ணிக்கையில் நிரந்தரமான இராணுவக் கட்டமைப்புகளை நிறுவுவதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வருகிறது. தமிழ்ப் பகுதிகள் அநேகமாக பரந்த இராணுவ கொத்தளங்களாகவே காட்சி தருகின்றன. தங்களது சொந்தப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு அரசாங்க அனுசரணையுடனான குடியேற்றங்கள் மூலமாக குடிப்பரம்பலின் இனவிகிதாசாரம் பாரதூரமான முறையில் மாற்றியமைக்கப்படப் போகிறது என்று தமிழ் மக்கள் அஞ்சுகிறார்கள். இதைத் தடுக்கக்கூடிய அரசியல் வலு தமிழ் மக்களிடம் இன்று இல்லை. வெளிநாடுகளிடம் குறிப்பாக இந்தியாவிடம் செய்யக்கூடிய முறைப்பாடுகள் பயனளிக்குமென்ற நம்பிக்கையும் தமிழ் மக்களிடம் பெரும்பாலும் இல்லை.போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவுக்குவரவில்லை. ஆனால், அரசாங்கத்தினதும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தினதும் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் நோக்கும் போது இன்று இனப்பிரச்சினை என்ற ஒன்று இருக்கிறதென்று அவர்கள் நினைப்பதாக இல்லை!

(தினக்குரல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com