Contact us at: sooddram@gmail.com

 

தொடர்கதையாகும் மீனவர்களின் துயரம்

(சி.ஆர்.செந்தில்வேல்)

ஒரு நாள் போவார் மறுநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்

படகோட்டி திரைப்படத்தில் வரும் மேற்கண்ட பாடல் வரிகள் மீனவர்களின் தேசிய கீதமாக இன்றும் உலா வருகிறது என்றால், அது மிகையில்லை. சமூகத்தில் உள்ள உடலுழைப்பு அனைத்துமே கடினமென்றாலும் ஆழ் கடல் சென்று மீன்பிடிக்கும் தொழிலாளிக்கோ அதைவிட பத்து மடங்கு அதிகம்.

இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, மீன் பிடி உபகரணங்களின் விலையேற்றம், பிடித்த மீனுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமை என காலம் முழுவதும் மீனவன் சந்திக்கும் துயரங்களுடன் தமிழக மீனவன் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனை இலங்கை கடற்படையின் தாக்குதல். 1983ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை நூற்றுக்கணக்கான உயிரி ழப்புகள், ஆயிரக்கணக்கானோர் உடல் ஊனப்படுத்தப்பட்டனர்.

தற்போது இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கும் மேல்ஆகிவிட்ட நிலையில், இந்த ஓராண்டில் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது பல்வேறு தாக்குதல் களைத் தொடுத்தனர். ஆனாலும், இந்த ஓராண்டில் எந்தமீனவரும் உயிர்ப்பலி ஆகவில்லை என்றபோது மீனவர்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கை தகர்ந்து போகும் விதத்தில் நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவக் குப்பத்தை சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது.

இது தொடர் கதையாகுமோ என்ற அச்சமும் பீதியும், தமிழக மீனவர்களின் மத்தியில் மேலும் வலுப்பெற்றுள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதியில் தான் தமிழகத்தின் 80 சதவீதம் மீன் பிடிப்பு உள்ளது. இந்த இரண்டு கடல் பரப்பும் மிகவும் குறுகிய எல்லைகொண் டது. தொன்றுதொட்டு இருநாட்டு மீனவர் களும் இரு கடல் பிராந்தியத்திலும் மீன் பிடித்து வந்தனர். இந்த பாரம்பரிய வழக் கத்தை மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நமது மீனவர்களுக்கு உத்தரவாதப் படுத்துவதன் மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும்.

முன்நெடுங்காலத்தில் படகுகளில் பாய்மரம் கட்டி காற்றின் விசையில், கரை யிலிருந்து கடலுக்குள், ஐந்து கடல் மைல் களுக்கு உட்புறமாகவே மீன்பிடித்தனர். தற்போது நமது கடல் பகுதியின் கடல் வளம் குறைய, குறைய, நமது மீனவர்கள் எந்திரம் பொருத்திய படகுகளில் மீன் களை தேடி 30, 40 கடல் மைல் தூரம் பய ணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிலநேரம் மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர்.

உள்நாட்டுச் சந்தையின் தேவைக்காக பெரும் பகுதி உற்பத்தி செய்யப்பட்ட நமது மீன்பிடிப்பு முறை, புதிய பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசு நடைமுறைப்படுத்திய பின், அந்நியச் செலாவணி கையிருப்புத்தேவைக்காக நமது மீன்பிடிப்பு முறை, உள்நாட்டுச் சந்தையின் தேவையைப் புறக்கணித்து விட்டு, ஏற்றுமதிக்கான மீன் உற்பத்தி முறையை நோக்கி இந்திய அரசு வளர்க்க துவங்கியது.

பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றை கிழித்து முட்டை எடுத்த கதையாக, ஏற்றுமதித் தேவைக்கான மீன்களான, இறால் கனவாய், நண்டு, சிங்கி போன்ற மீன் இனங்களை அதிகமாக பிடிக்க, அதற்குரிய மீன்பிடி தொழில் நுட்பங்களை நார்வே போன்ற நாடுகளின் உதவியுடன் நமது மீனவர்களுக்கு கற்றுக்கொடுத்தது.

இன்று உலகத்தின் பெரும்பகுதி நாடுகள், நார்வே உட்பட அந்த தொழில்நுட்பம் அபாயகரமானது என கைவிட்டுவிட்டன. இந்திய அரசு மட்டும் ஏற்றுமதி நிறுவனங் களின் தேவைக்காக அந்தத் தொழில் நுட்பங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கிறது. அதில் ஒரு வகைத் தொழில் நுட்பம்தான் கொல்லிமடி என்கிற ராட் சஷ இழுவலை. இந்த வலைகளை சாதாரண சிறு ஏழை மீனவன் பயன்படுத்த முடியாது. இரண்டு நவீன விசைப்படகுகள் கொண்டு இந்த வலை வைத்து மீன்பிடிக்கும் முறைக்கு மூலதனமாக ரூ.40 முதல் 50 லட்சம் வரை தேவைப்படும். இந்த வலை தொழில் நுட்பத்தை தடை செய்யக்கோரி சிறு ஏழை மீனவர்கள் நீண்டகாலமாகப் போராட்டம் நடத்தினர். அவர்கள், உச்சநீதிமன்றம் வரை அணுகி இறுதியில் இந்த வலைக்கு 1996ஆம் ஆண்டு நிரந்தர தடை உத்தரவு பெற்றனர்.

தடையை அமல்படுத்தக்கோரி மீனவர்கள் பல போராட்டங்கள் நடத்தியும் தடையுத்தரவு 1996 முதல் இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. தடை உத்தரவை இன்று வரை அரசு அமல் படுத்தவில்லை.

இந்த வசதி படைத்தவர்களிடம், மீன் துறை நிர்வாகம், பல லட்ச ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, தடை செய்யப்பட்ட இந்த வலைகளை சிறு மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி பயன்படுத்த அனுமதிக்கிறது. இவர்கள் தினசரி டன் கணக்கில் மீன்கள் பிடிப்பதன் மூலம், சிறு மீனவர்கள் பிடித்து வந்த மீன் வளம், கட்டுப்பாடின்றி சீரழிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதி பாரம்பரிய சிறு மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளையில், இன்னொரு புறத்தில் இலங்கையில் தமிழ் மீனவர்கள் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசு விதித்த கடுமையான கட்டுப் பாடுகள் காரணமாகவும், உள்நாட்டு யுத்தத்தின் பொருட்டு, வெளிநாடுகளுக்கும், உள்நாட்டுக்குள்ளும் அகதிகளாக இடம் பெயர்ந்ததன் காரணமாகவும், அவர்களது மீன்பிடிப்பு நடைபெறவில்லை. தற்போது உள்நாட்டுக் கலவரம் முடிவுக்கு வந்தபின், இலங்கை தமிழ் மீனவர்கள் பழையபடி சுதந்திரமாக தங்களது மீன்பிடிப்பைத் துவக்கியுள்ளனர். அவர்களது மீன்பிடிப்பு முறை வளர்ச்சி அடையாமல், இந்திய மீன்பிடிப்பு முறையை விட ஐம்பது வருடம் பின்தங்கியுள்ளது.

தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிக்க இந்திய அரசு அனுமதித்ததன் மூலமும் இந்திய-இலங்கை கடல் பிராந்தியங்களில் இருநாட்டு அரசுகளும் அந்நிய மீன்பிடிக் கப்பல்களுக்கு, தங்குதடையற்ற மீன்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதன் மூலமும், மீன்பிடித் தொழிலில் மாபெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்வளம் குறைந்து இரு நாட்டு மீனவர்களும் மீன்களைத் தேடி எல்லை தாண்ட வேண்டிய சூழல் ஏற்படுவதுடன் இருநாட்டு மீனவர்களிடையே முரண்பாடாக மோதலுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இச்சூழலில் இலங்கை மீனவர்களின் மீன்பிடிப்பு முறையை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது உண் மை. ஆனால் கடந்த காலத்தில் இந்திய அரசு செய்த தவறை தற்போது இலங்கை அரசு செய்கிறது. ஏற்றுமதியை நோக்கிய மீன்பிடித் தொழில் முறை வளர்ச்சி என்ற பெயரில், நார்வே தொழில் நுட்பத்தை இலங்கை மீனவர்களுக்கு பயிற்சி கொடுப்பதாக செய்தி வருகிறது. இது மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எனவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தனது ராஜாங்க ரீதியான நிர்ப்பந்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க வலியுறுத்தியும், கச்சத்தீவையொட்டியுள்ள இலங்கை கடல்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை பெற்றுத்தரக்கோரியும், இந்திய அரசு கடைப்பிடிக்கும் உலகமயம், தாராளமயம் போன்ற உழைக்கும் மக்களுக்கு விரோதமான பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியாக, இந்திய கடல் பிராந்தியத்தில் அனுமதிக்கப்பட்ட அந்நிய மீன்பிடிக் கப்பலுக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஏற்றுமதியை நோக்கிய மீன் உற்பத் திக்காக இந்திய அரசால் வளர்த்து விடப் பட்ட, நீதிமன்றத்தால் தடை செய்யப் பட்ட கொல்லிமடி போன்ற வலைகளை முற்றிலுமாக தடுக்கக்கோரியும், மீனவர் கள் அணிதிரண்டு போராடுவதன் மூலமே இப்பிரச்சனைக்கு இறுதித்தீர்வு கிடைக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com