Contact us at: sooddram@gmail.com

 

கோள் பட்டியலிலிருந்து புளுட்டோ வெளியே தள்ளப்பட்ட காரணம்

பள்ளிக் கூடத்தில் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் (Planets) இயங்குகின்றன என்று படித்திருக்கிறோம். புதன், வெள்ளி, பூமி தொடங்கி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று ஒன்பதையும் வரிசைப்படுத்தி சரியாக எழுதினால் புள்ளிகள் கிடைக்கும். இவை எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு ஒரு நீள் வட்டப் பாதையில் (elliptical orbits) இயங்குகின்றன. இப்படிச் சூரியனைச் சுற்றும் கோள்களுக்கும் கோள்கள் உண்டு. அவை துணைக்கோள்கள், அல்லது உபக்கிரகங்கள் என்று அழைக்கப்படும். இவை கோள் களைச் சுற்றி இயங்குகின்றன. உதாரணமாக சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆகும்.

செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட சுற்றுப்புறம் கொஞ்சம் கலங்கலானது. அங்கே கோள்கள் துணைக்கோள்களுடன் இன்னும் பல குப்பைக் கூளங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. திட்டத்தட்ட ஒரு தட்டையான மேகக் கூட்டம் போல பல சிறிய சமாச்சாரங்களும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும். இந்தப் பகுதிக்கு அஸ்ட்ரொய்ட் பெல்ட் (Asteroid Belt) என்று பெயர்.

இதேபோல நெப்டியூனைத் தாண்டி ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதற்குக் குய்ப்பர் பெல்ட் (Kuiper Belt) என்று பெயர். அதற்கு அப்பாலும் எண்ணற்ற சிறு வஸ்துகள் சூரியனை மையமாகக் கொண்டு சுழல்கின்றன. இந்த இடத்திற்கு ஸ்கட்டேர்ட் பெல்ட் (Scattered Belt)  என்று பெயர். இங்கே இருக்கும் சமாச்சாரங்களெல்லாம் மிகவும் குளிர்வானவை (சூரியனுக்கு வெகு தொலைவில் இருப்பதால்).

சில வருடங்களுக்கு முன்னார் (ஜனவரி 2005) கால்டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக் ப்ரெளன் என்பவர் ஹபிள் தொலைநோக்கியைக் கொண்டு செனா  (Xena) என்ற ஒரு சமாச் சாரமும் இந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதன் விட்டம் 2400 கி.மீ. ப்ரெளனின் குழு செனா (Xena) என்று செல்லப் பெயரிட்ட இதற்கு, பன்னாட்டு வானியல் குழுவினர் UB 313 என்று அடையாளமிடப்பட்டது.

புளூட்டோவின் விட்டம் 2306 கி.மீ UB 313 ன் விட்டம் அதை விடக்கிட்டது தட்ட நூறு கி.மீ. அதிகம். இந்த நிலையில் இதைப் பத்தாவது கோளாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தார்கள். இதற்குச் சில வருடங்களுக்கு முன்னதாகவே 975 கி.மீ. விட்டம் கொண்ட இன்னொரு சமாச்சாரம் (இதற்கு செரஸ் என்று பெயரிடப்பட்டது) அஸ்ட்ரொய்ட் பெல்ட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந் தது.

செரஸ் புளூட்டோவைவிடச் சின்னதாக இருந்ததால் புளூட் டோவின் கோள் அந்தஸ்திற்கு எந்த பாதிப்பும் விளைந்துவிட வில்லை. ஆனால் செனா அதை விடப் பெரியதாக இருந்ததால் வந்தது தொந்தரவு. செனாவைப் பத்தாவது கிரகமாக அறிவிப்பதா அல்லது புளூட்டோவைக் கழித்து கோள்கள் எட்டு என்று சொல்வதா என்று ஆராய பன்னாட்டு வானியல் கழகம் ஒரு அறிஞர் குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு அறிவியல் கோட்பாடு களையும் தரவுகளையும் ஆராய்ந்து குறுங்கோள் என்பதற்குப் பின்வரும் நான்கு வரி வரையறையை விதித்தது.

1. சூரியனைச் சுற்றி வரவேண்டும். (Should be in orbit around sun)

2. அது நீர் நிலையியற் சமநிலையில் இருக்க வேண்டும். ஆதலால் கோள்வடிவானது எனக் கொள்ள முடியும்.

3. அதைச் சுற்றி இருக்கும் சமாச்சாரங்களுக்கு எந்தத் தொந்தரவும் தராமல் அவற்றையும் அண்மையிலே இருக்க அனுமதிக்க வேண்டும். (should not have cleared its orbit)

4. வேறெந்தக் கோளுக்கும் துணைக்கோளாக இருக்கக் கூடாது.(Is not a satellite for any other planet)

விதி நான்கின்படி நம் புவியின் சந்திரன், சனிக்கிரகத்தின் டைட்டன் இன்னபிற கோள்கள் குறுங்கோள் தகுதியை இழந்து விடுகின்றன. இவை ஒவ்வொன்றும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றாமல் ஒரு தனிக்கோளை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. (கவனிக்கவும், கோளுடன் சேர்ந்து சுற்றுவதால் இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆனால் இவற்றின் பாதை மையம் சூரியன் கிடையாது). ஒரு வகையில் இந்த விதி 4, விதி 1இன் விளக்கம்தான்.

விதி 2 இன்படி, ஒரு பொருளுக்கு பொருண்மை அதிகரிக்க அதிகரிக்க அதன் சமநிலை விசைகள் திறம்படச் செயற்பட்டு அவற்றுக்குக் கோளவடிவத்தைத் தருகின்றன. உள்ளிழுக்கும் விசை அதிகமாக இருந்தால் பரப்பில் குழி விழும். புறவிசை அதிகமாக இருந்தால் கரடுமுரடாகக் கற்கால மனிதனின் ஆயுதங்களைப் போன்ற தோற்றம் தான் கிடைக்கும்.

கோளம் அற்புதமான சமநிலை வடிவம். இவ்வடிவில்தான் குறைந்த பட்ச மேற்பரப்பிற்கு அதிகபட்ச பொருண்மை சாத்தியமாகும். பூமி, சந்திரன், வியாழன், நெப்டீயூன் போன்ற எல்லா கோள்களும் கோளவடிவானவை. நாம் ஏற்கனவே சொன்னது போல நெப்டியூன் ஏரியா கொஞ்சம் தூசு துகள்கள் நிறைந்தது. இங்கே பல கற்கள் சுற்றிக்கொண்டிருக் கின்றன. இவற்றுக்குப் பொதுவில் விண் கற்கள் என்று பெயர். இவை யெல்லாம் கோளம் தவிர்த்த பல வடிவங்களில் இருக்கும். இவற்றுள் அம்மிக் குழவி வடிவம் மிக அதிகமாகக் காணப்படும். விதி 2ன்படி இவையெல்லாம் குறுங்கோள்கள் அல்ல.

அருகில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமல் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்ற விதி 3 மிக முக்கியமானது. இதுதான் கோள்களையும் குறுங் கோள்களையும் மாறுபடுத்துகிறது. ஓரளவுக்குக் கொழுத்துப் போய் விட்டால் யாரையும் கிட்டவிடா மல் நீக்கு விசை செயற்படத் தொடங்கும். அப்பொழுது ஒன்றுடன் ஒன்று விலகிக் கொண்டு தனித்தனியே பேட்டைகளை உருவாக்கிக் கொள்ளும்.

இங்கேதான் புளூட்டோ உதை வாங்குகிறது. அஸ்ட்ரொய்ட் பெல்ட்டில் கிடக்கும் நிறைய விஷயங்கள் புளூட்டோவிடம்அடிக்கடி நெருங்கி வருகின்றன. (வந்தால் மோதிக் கொண்டு அது உதை வாங்கி உடைந்து போகும் அபாயமும் உண்டு). செனாவுக்கு இதே பிரச்சினைதான். ஒரு பேட்டையை வளைத்துப் போடும் திறமை இவை இரண்டுக்கும் கிடையாது.

ஆக, செனாவைக் கோள் இல்லை என்று சொல்லி விட்டார்கள், அத்துடன் கூட ஜெனா என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்ட ஸிகி 313க்கு ஈரிஸ் என்று பெயர் விண்ணாய்வுக் கழகப் பெரியவர்களால் ஞானஸ் நானம் ஆகியது. ஆனால் தனக்கு இரண்டு கண்களும் போனால் மருமகளுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்ற மாமி யாரைப்போல, ஈரிஸ் புளூட்டோ வையும் கோள்கள் பட்டியலில் இருந்து வெளியே தள்ளிவிட்டது. இப்பொழுது புளூட்டோ ஒரு குறுங்கோள்தான்.

குழந்தைகளை ஏங்க விடுவதா? இல்லை விஞ்ஞானக் கோட்பாடு களுக்கு இணங்க கோள்களின் எண்ணிக்கையை மாற்றி எழுதுவதா என்று வந்தால் அறிஞர்கள் பின்னத்தைத்தான் தெரிந்தெடுப்பார்கள். செனா என்று அழைக்கப்பட்ட ஈரிஸ்க்குக் கோள் அந்தஸ்து கிடைக்காமல் போனதில் அதைக் கண்டுபிடித்த மைக் ப்ரெளனுக்கு வருத்தம்தான்.

ஒரு கோளை அடையாளம் காட்டியவர் என்று வரலாற்றில் தனியிடம் பெறும் சாத்தியம் அவருக்கு இல்லாமல் போயிற்று. பத்தோடு பதினொன்றாக இன்னொரு குறுங்கோளை மாத்திரமே. கண்டுபிடித்தார் என்று தான் அறியப்படப் போகிறார். ஆனால் ப்ரெளனுக்கு இதில் எந்தவித வருத்தமும் இல்லை. விஞ்ஞானம் எப்பொழுதுமே திறமாகத்தான் செயல்படுகிறது. தனி நபர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மை நிலைக்கிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான் என்று சொல்லிவிட்டு தன் தொலை நோக்கியை வேறுபக்கம் திருப்பப் போய் விட்டார்.

ஆக இன்றைய புரிதலின்படி சூரியனைச் சுற்றி எட்டு கோள்கள் தான் இருக்கின்றன. மூன்று குறுங்கோள்கள் - செரஸ், புளூட்டோ, ஈரிஸ். நாளை நம் தொலைநோக்கிகள் இன்னும் சக்தி வாய்ந்தவையாக மாறும் பொழுது இவையும் மாறலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com