Contact us at: sooddram@gmail.com

 

பிளாஸ்டிக் இல்லாத நாட்டை எப்போது உருவாக்கப் போகிறோம்?

சில காலங்களின் முன் ஸ்பெயின் நாட்டின் கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கிலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டன.

இதனால் அந்த திமிங்கலம் கடலில் நீந்த முடியாமலும் கடல் அலையில் எதிர்த்து செல்ல முடியாமலும் பலவீனமாகி இறந்து போனது. நாம் வீசி எறியும் பிளாஸ்டிக் பொலித்தீன் பைகள் பூமியில் உள்ள விலங்குகளை மட்டுமன்றி, கடலில் உள்ள உயிரினங்களையும் பாதி க்கின்றன.

பிளாஸ்டிக்கை அதிக அளவு பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளிவரும் கழிவுப் பொருட்களால் சுற்றுச் சூழல் அதிக அளவில் மாசடைகிறது. புவி வெப்பம் அடைகிறது. காலநிலை மாற்றம் ஏற்படுகிறது.

மனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பனீரொட்சைட்டு மெதேன், காபன் மொனொக்சைட்டு, கந்தகவீரொட்சைட்டு போன்றவைகள் வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. இதற்கு பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருட்களும் குப்பைகளும் ஒரு காரணமாக அமைகின்றன.

இந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பமடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களையும், பிளாஸ்டிக் கைப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். தமிழ் நாட்டின் சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பை பொருட்களின் அளவு 1.86 இலட்சம் கிலோவாகும்.

ஒரு பிளாஸ்டிக் பொருள் உக்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அவை உக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் கடலில் மிதக்கும் உக்காத களைகள், கழிவுப் பொருட்களில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களாக உள்ளன.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை மீன்கள் உணவாக உட்கொள்ளும் அந்த மீனை மனிதன் உணவாக உண்ணும் போது மனிதனுக்கு மீனின் மூலம் பல்வேறுபட்ட நோய்கள் வருவதாக ஓர் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் 7 சதவிகிதமானவை மட்டுமே மறுசுழற்சி மூலம் திரும்பப் பயன்படுத்த முடியும் தன்மையுடையதாக உள்ளன.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துகிறார். வளர்ந்துவரும் நாடுகளிலோ ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக அதன் இரு மடங்கு பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 250 கோடி பிளாஸ்டிக் போத்தல்கள் உபயோகிக்கப்படுகின்றன. உலகளவில் ஆண்டுக்கு 30 இலட்சம் தொன் எடையுள்ள பிளாஸ்டிக் போத்தல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் அதிகமானவை பூமியில் வீசி எறியப்படுகின்றன. இதனால் மண் அதிக அளவு மாசு அடைகிறது. பிளாஸ்டிக் பொருட்களி லிருந்து வெளியாகும் பிஸ்பீனோல் - ஏ என்ற அமிலம் மனிதனின் மூளையின் செயற்பாடுகளையும் மனநிலையையும் பாதிக்கச் செய்யும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சில நாடுகளும் பிரதேசங்களும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்துள்ளன.

வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகுசாதனப் பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருட்கள், தொலைத் தொடர்புச் சாதன பொருட்கள், கணனி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.

இப்பொழுது பிளாஸ்டிக் பொருட்க ளின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப் புகளும், தடைகளும் கூட அதிகரித்து வருகின்றன. சுற்றுச் சூழல் வல்லுநர்க ளும், இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவ தால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவை ஒருபுறம் நடந்தாலும் அன்றாடம் நாம் தொழிற்சாலைகளில், வீடுகளில், வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கி தீவிரப்படுத்த முயலவேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றால் எதிர்காலத்தில் எமது தேசமே பிளாஸ்டிக் குப்பைமேட்டில் தான் அமைந்திருக்கும் நிலைமை ஏற்படும். இதனைத் தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் ஆய்வுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மரபுப் பொறியியல் மூலம் உயிர் மீள் சுழற்சி பிளாஸ்டிக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளை தனியார் நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

உயிர் மீள் சுழற்சி மூலம் பிளாஸ்டிக் மாற்றுப் பொருளாகத் தயாரிக்கப்படும் மாற்றுப்பொருளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வரிச்சலுகை, இலவச இடம், இலவச மின்சாரம் அல்லது சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் போன்றவை வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் மாப்பொருள் மற்றும் பல் லக்டிக் அமிலம் என்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற் சாலைகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக் கும் ஊக்கம் அளித்து உதவி செய்து வருகின்றன. இதேபோன்று எமது நாட்டிலும் அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.

பிளாஸ்டிக் குப்பைகளை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருட்கள் தயாரித்து விநியோகம் செய்யும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எமது போக்குவரத்தில் பெரும்பா லான சதவிகிதம் வீதிப் போக்குவரத்தாக அமைகின்றது. இந்த வீதிகளின் மேம்பாட்டுப் பணிகளில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி னால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். குறிப்பாக வீதிப் பணிகளில் தார் பொருட்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களைப் பயன்படுத் தலாம்.

ரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லேட் உறை, பேனாக்கள், எண் ணெய் பொருட்கள், கயிறுகள், பேணிகள், ஏனைய உணவுப் பொரு ட்கள், உறைகள், விளம்பரப் பதாகைகள் போன்றவற்றை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அட்டை, அலுமினியப் பொருட்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவை பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, சணல் பைகளையும், வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென சகல அரசாட்சி மட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்தலாம்.

பிளாஸ்டிக் போத்தல்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்து கண்ணாடி போத்தல்கள், உலோக போத்தல்கள், தகர அலுமினியப் போத்தல்களைப் பயன்படுத்த நிறுவனங்களும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

விழிப்புணர்வுக் கூட்டம், கருத்தரங்கு, போராட்டங்கள் போன்றவற்றால் மட் டுமே பிளாஸ்டிக் குப்பைகளை ஒழி த்துவிட முடியாது. அரசு கடுமையான சட்டம் இயற்றுவதன் மூலமும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மூலமும் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களையும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளையும் நாடளாவிய ரீதியில் ஒழிக்க முடியும். ஆகையால் மாசு இல் லாத தேசமாக உலக நாடுகளுக்கு முன் னோடியாக விழித்த தேசமாய் எழு ந்து நிற்க யாவரும் ஒன்றிணைவோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com