Contact us at: sooddram@gmail.com

 

வெற்றிப் பயணத்தில் சீனக் கம்யூனிஸ்டுகள்

(என். குணசேகரன்)

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் 10 பேர் கொண்ட குழு கடந்த ஜூலை 4 முதல் 14 வரை சீனாவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டது. சீனாவின் பல மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்ட இந்த குழுவிற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில செயற்குழு உறுப்பினர் சிரிதீப் பட் டாச்சார்யா தலைமை வகித்தார். கடைசி மூன்று நாட்களில் சீனக் கட்சியின் மூத்த தலைமைத் தோழர்களை சந்தித்தபோது, அச்சந்திப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் சீத்தாராம் யெச்சூரி தலைமையேற் றார். கீழ்மட்ட அளவில் விரிவான, ஆழ மான ஆய்வுகளை மேற்கொண்ட இந்தக் குழுவின் பயணத்திற்கு சீனக் கம்யூ னிஸ்ட் கட்சியும், சீன அரசும் திட்டமிட்ட சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தன.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டும் பணியும், மார்க்சிய - லெனினிய அரசியல் சித்தாந்தப் பயிற்சியும் எவ்வாறு மேற் கொள்ளப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதே இப்பயணத்தின் முக்கிய நோக்கம். அத்துடன், சீனப் பொருளாதாரத் தின் இன்றைய நிலை, உலக அரங்கில் சீனாவின் பணி உள்ளிட்ட பல விஷயங் களும், தகவல்களும் விளக்கப்பட்டன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கி 90 ஆண்டுகள் நிறைவடைந்த சூழலில், சீனாவின் 130 கோடி மக்கள் நிறைவு விழாவை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த சூழலில், இந்தப் பயணம் நிகழ்ந்ததுதான் முக்கியச் சிறப்பு. கட்சி யின் மகத்தான புரட்சிகர பாரம்பரியம், வரலாறு, சாதனைகள் என எங்கு திரும்பி னாலும் குதூகலமும், எழுச்சியும் எதிரொ லித்தன.

பயணத்தின் போது நடைபெற்ற வட்ட மேசைக் கூட்டங்கள் சீனாவின் சாதனை விளக்கங்களாக மட்டும் அமைய வில்லை. சீனச் சமூகம் எதிர்கொள்ளும் பல எதிர்மறைப் பிரச்சனைகள், நீடிக்கும் குறைபாடுகள், திறந்தவெளிப் பொருளா தாரத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஊழல்கள், சுற்றுச் சூழல் பாதிப்பு உள் ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த மனந்திறந்த கருத்துக்கள் சந்திப்புக் களில் வெளிப்பட்டன.

இந்தக் குறைபாடுகளை அவர்கள் மூடிமறைக்கவில்லை. அவற்றை நன்கு ணர்ந்து, உரிய தீர்வுகளை இடைவிடாது மேற்கொள்ளும் அசாத்திய மனத்திண் மையை சீனக் கட்சியின் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை காண முடிந்தது.

சாதனைகளுக்கும் குறைவில்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்கள் மேற்கொண்டுவரும் பெரும் முயற்சிகள் பலன் அளித்து வரு கின்றன. உதாரணமாக, மத்திய அரசின் நேரடிப் பார்வையில் பெரும் வளர்ச்சி பெற்று வருகின்ற சுயாட்சி நகரப் பிரதேச மான சோங்சிங், சமீபத்தில் 30 லட்சம் மக் களை வறுமைப்பிடியிலிருந்து விலக்கி, மேலே கொண்டு வந்துள்ளது. இதனை கட்சியின் மாநில துணைத் தலைவரும், உயர்ந்த அதிகாரப் பொறுப்புக்களை வகிக் கும் பெண்மணியாகத் திகழும் தோழர் ஜாங்சுவான் விளக்கினார். குறிப்பாக மக்க ளுக்கு குறைந்த விலையிலும், மிகக்குறைந்த வாடகையிலும், பிரம்மாண்டமான அடுக்கு மாடி வீடுகளைக் கட்டிக் கொடுத்து, வீடற் றோர் பிரச்சனையை தீர்த்து வருகின்ற நடவடிக்கைகளை அவர் விளக்கினார்.

இதுபோன்ற வெற்றிகரமான முயற்சி கள் அனைத்து மாநிலங்களிலும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.நா. மன்றம் உள்ளிட்டவை உலகின் பெரும்பகுதி மக்கள் ஒரு டாலருக்கு (சுமார் ரூ. 44) குறை வான வருமானத்தில்தான் ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக் கிறார்கள் என கணக்கிட்டுள்ளன. ஆனால் சீனாவில் வறுமைக்கோட்டு எல் லையில் இருப்பவர்களின் ஒரு நாள் வரு மானம் ஐந்து டாலர்கள் (ரூ. 220). இவர் களை மேலே கொண்டு வரவே, பிரம்மபிர யத்தின முயற்சிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன.

உலகப் பொருளாதாரத்தில் விரைவில் முதல் இடத்திற்கு வரவிருக்கும் வல் லமை கொண்ட நாடு சீனா. ஜனநாயக மத் தியத்துவக் கோட்பாட்டில் நடைபோடு கிற உறுதியான, கட்டுப்பாடு கொண்ட கம் யூனிஸ்ட் கட்சிதான் இந்த வரலாற்றுச் சாதனைக்கு முக்கிய காரணம். அதிலும் கீழ்மட்ட, உள்ளூர் சார்ந்த கிளை அமைப் புக்களின் அசுரத்தனமான பணிகளே சீன வெற்றிக்கு ஆதாரம். கட்சியை கட்டுவதி லும், வழிநடத்துவதிலும் சீனாவில் கடைப்பிடிக்கும் நடைமுறைகள், லெனி னியத்திற்கு படைப்பாற்றல் மிகுந்த பங்க ளிப்பாகத் திகழ்கின்றன.

இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை நேரில் கண்டறியும் அரிய வாய்ப்பு பயணக் குழுவிற்கு கிட்டியது. ஜியாங்சி மாகாணத் தில் உள்ள ஜியான் நகரத்தின் கட்சி அலு வலகத்தில் நடந்த வட்டமேசை சந்திப் பில், நகரத்திற்கு உட்பட்டு நடைபெறும் கட்சி பணிகள் பற்றிய விபரங்களை கட்சி நகரப் பொதுச் செயலாளர் விளக்கினார். பெண்கள் சரிசமமாக கட்சி நடவடிக்கை களில் பங்கேற்பதும், கட்சிக் குழுக்களில் பொறுப்புக்களை வகிப்பதையும் காண முடிந்தது. கட்சி அலுவலகத்தில் உள்ள பல பிரிவுகள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. அதில் ஒன்று, நகரத்தில் வேலையிழப்போர், வேலையற்றோரை கண்டறிந்து, பதிவு செய்து அவர்களுக்கு உடனடியாக வேலை பெற்றுத்தரும் பணி யைச் செய்திடும் துறை. 40 கிளைகள் கொண்ட அந்த நகரக் கட்சி அலுவலகத் தில் கட்சிக் கல்விக்கென்று நூலகம், கணினி, பவர்பாய்ண்ட் என அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு பெரிய கூடம் ஒன்று இடைவிடாது இயங்கி வருகின்றது.

ஜியாங்சி மாகாண அளவில் இயங்கும் கட்சிக் கல்வி வளாகம் ஒரு பெரிய பல் கலைக்கழக வளாகம் போன்று இயங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 2000 ஊழியர்களை சிறந்த மார்க்சிய - லெனி னிய ஊழியர்களாக உருவாக்கும் பணியை செவ்வனே செய்து வருகின்றனர். கட்சி யின் மாகாண உதவி கட்சி செயலாளர், கட்சிக் கல்வித்துறையின் இயக்குநராக பணியாற்றி வருகின்றார். சோங்சிங், நான் சாங் மாகாணக்குழு சீனத் தலைநகரில் உள்ள பிஜீங் நகரக்குழு, இவற்றையொட் டிய பல கிராமப்புற கட்சிக் குழுக்களுக்கு சென்ற பிரதிநிதிகள் குழு, கட்சிக் கல்வி, கட்சி கட்டும் பணிகளை கண்டறிந்தது.

சீனத் தன்மைகள் சார்ந்த சோசலிசம், சோசலிச சந்தைப் பொருளாதாரம், மார்க் சிய, லெனினிய மாவோ சிந்தனைகள், டெங்சியோ பிங் தத்துவார்த்தக் கருத்துக் கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் விரி வான அளவில் கட்சிக் கல்வி நடைபெறு கின்றது. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளி லிருந்து உயர்மட்டத் தலைவர்கள் வரை கட்சிக் கல்வி பெறுகின்றார்கள். கட்சிக் கல்விக்கென அமைக்கப்பட்டுள்ள வளா கங்களில் தங்கிப் பயில்கின்றனர்.

கட்சியின் 90வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கட்சியின் பொதுச் செய லாளர் ஹூஜிண்டாவோ ஆற்றிய உரை பரவலாக பேசப்படுகிறது. சீன நிலைமை மற்றும் எதிர்காலம் பற்றிய அழுத்தமான அந்த உரையில் கட்சி மக்களோடு நெருக் கமான பிணைப்புக்களை வலுப்படுத் திடும் கடமை முக்கியமாக வலியுறுத்தப் படுகிறது. பிரதிநிதிகள் குழு சந்திப்புக் களின் போது சீனத் தலைவர்கள் அனை வரும் இக்கடமையை கட்சி ஆற்றி வரு வது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

பயணத்தின் நிறைவு நாட்களின் போது பிஜீங்கில் மிகப் பிரபலமான இரண்டு பேராசிரியர்கள் சீ சுண்டோ, ஷூ செங்சாங், மார்க்சியத்திற்கு சீனக் கட்சி யின் புதிய பங்களிப்புக்கள், சோசலிச சந் தைப் பொருளாதாரம் என்கிற முக்கிய தலைப்புகளில் ஆழமான கருத்துரை களை நிகழ்த்தினர்.

வறட்டுத்தனமான மார்க்சியப் பிரயோ கத்தை எதிர்த்த சித்தாந்தப் போரினை மாவோ நிகழ்த்தினார். இதையொட்டி சீன நிலைமைகளில் மார்க்சியத்தை அவர் வளர்த்தெடுத்தார். இந்த வரலாற்றை நன்கு அறிய முடிந்தது. சந்தை சக்திகள் பிரவாகமாக பங்காற்றிக் கொண்டிருந்தா லும், சோசலிச அடிப்படை பலமாக இருப் பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

பயணத்தின் முத்தாய்ப்பாக, இரண்டு சந்திப்புக்கள் சீத்தாராம் யெச்சூரி பங்கேற் போடு நிகழ்ந்தன. வெளியுறவு துணை அமைச்சர் அய்பிங்குடன் நடந்த சந்திப் பின் போது உலக நிலைமைகளில், சீனா உலக அமைதி, முன்னேற்றத்திற்காக ஆற்றி வரும் பங்கு விளக்கப்பட்டது. அமெ ரிக்கா பல வகைகளில் சீனாவின் முன் னேற்றத்தை கட்டுப்படுத்தவும், தடை போடவும் முயற்சிப்பதை கவலையோடு அமைச்சர் எடுத்துரைத்தார்.

நிறைவு நாளன்று, அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், மத்தியக்குழு வின் ஸ்தாபனத்துறையின் தலைவரு மான லி யுவான்சாவோ உடன் சந்திப்பு நிகழ்ந்தது. மார்க்சிய - லெனினிய கோட் பாடுகள் அடிப்படையில் கட்சி செயல்படு வதை அவர் எடுத்துரைத்தார். கட்சி ஊழி யர்களை வளர்த்தெடுக்கும் பணியை மிக அறிவியல் பூர்வமாக ஸ்தாபனத்துறை செய்து வருகின்றது.

இந்தியா - சீனா நல்லுறவு பலப்படு வதையும் அவர் வலியுறுத்திப் பேசினார். சீத்தாராம் யெச்சூரியும் இதன் தேவையை வலியுறுத்தி உரையாற்றினார். இந்த நல்லு றவுக்காக மார்க்சிஸ்ட் கட்சி 1980-ம் ஆண்டுகளிலிருந்து ஆற்றிவரும் பணி களை அவர் எடுத்துரைத்தார். கட்சி அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறவுகள் பலப்படுவதை சீனத் தலைமை உளப்பூர்வமாக விரும்புவதாக தோழர் லீ குறிப்பிட்டார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தா பனத்துறை, அரசின் வெளியுறவுத்துறை சார்ந்த தோழர்கள் நிகழ்ச்சி நிரல்களை கூர்மையாக திட்டமிட்டு கொண்டு சென்றதால், பயணம் வெற்றிகரமாக நிறை வடைந்தது. அவர்களுக்கு பிரதிநிதிகள் குழு உளமார்ந்த நன்றிகளை பாராட்டுக் களை தெரிவித்தது.

இருவார கால இந்தப் பயணம் இடை விடாது நிகழ்ச்சிகள் நிறைந்ததாக அமைந்தது. இந்தியா திரும்புகிற போது சோசலிசத்தின் மீது இருந்த நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்தது. இன்றைய நிலையில், உலகின் சிறந்த முன்மாதிரி யாக சீன சோசலிசம் திகழ்கிறது. அத் துடன் இப்பூவுலகின் எதிர்காலம் கம்யூனி சமே என்பதையும் அது பறைசாற்றுகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com