Contact us at: sooddram@gmail.com

 

தமிழர்கள் இன்றைய தேர்தலில் நல்ல முடிவெடுத்து பயனடைய வேண்டும்

எங்கள் நாட்டில் இன்று பாராளுமன்ற ஜனநாயக உரிமை தழைத் தோங்கி இருக்கின்றது. கடந்த சுமார் 40 ஆண்டு காலமாக, முதலில் ஜே.வி.பி.யினர் 1971 ஏப்ரலில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டத்தின் மூலம், அன்றைய பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண் டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எடுத்த முயற்சியை அடுத்து, அதனை ஒரு முன்மாதிரியாக வைத்து, எல்.ரி. ரி.ஈ.யினர் நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக உரிமையை பறித்து விடுவதற்கு நடத்திய பயங்கரவாத யுத்தமும் இன்று வெற்றிகரமான முறையில், நாட்டுத் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் மூலம் முறியடிக்கப்பட்டது.

பாராளுமன்ற ஜனநாயக உரிமை அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டது என்று இன்று வெறுமனே கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. யினர், இந்தியாவின் அன்றைய பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜய வர்தன 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டவுடன், மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து மக்க ளுக்கு கொடுமை புரிந்து அரச உடமைகளை அழித்தும், அப்பாவி சிங்கள மக்களை மரணிக்கச் செய்தும் வந்த இருள் சூழ்ந்த கடந்த கால அனுபவங்கள் இன்றும் நம்நாட்டு மக்கள் மனதில் வேரூன்றி பதிந்திருக்கிறது.

இவ்விதம் எங்கள் நாட்டில் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்க எத்தனித்த முயற்சிகளை எதிர்த்து, மக்களை மீட் டெடுத்து அவர்களின் ஜனநாயக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக உதய சூரியனைப் போன்று, தென்னிலங்கையிலிருந்து தோன்றிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதி பதியாக தெரிவாகிய தினம் முதல் நாடு எத்தனையோ சவால்களை யும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியிருந்தாலும், ஜனநாயகத்தி ற்கு தீங்கு ஏற்படாத வகையில், அவர் தன்னுடைய ஆளுமைத்தி றமை மூலம் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தார்.

அன்னாரது இந்த கடும் உழைப்பின் மூலம் நம் நாட்டு மக்கள் பயங்கர வாதிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டு, நாட்டின் சகல பகுதிகளிலும் நிம்மதி யான வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தத் தலைவரின் நற்பணிகளை நன்கு உணர்ந்திருந்த மக்கள் 2005 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் ஆரம்பித்து அதையடுத்து நடத்தப்பட்ட சகல தேர்தல்களிலும் அடுத்தடுத்து, முந்திய தேர்தலில் அரசாங்க கட்சிகள் பெற்ற வாக்குக¨ள் விட, கூடுதலான வாக்குக ளுடன் அரசாங்கக் கட்சியை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தொடர்ந்தும் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

எமது நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், குறிப்பாக வடபகுதி மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைப் பெற் றுக்கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

இதுவரை காலமும் வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு தங்கள் விருப்பத்தி ற்கு அமைய, ஒரு கட்சியை அல்லது ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யும் உரிமையை எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் பறித்து, அவர் களை அடிமைகளைப் போன்று சர்வாதிகார நாடுகளில் நடத்தப்ப டும் ஒரு கட்சித் தேர்தலைப் போன்று தங்கள் ஆணைப்படி தாங் கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும், வேறு சில சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் முற்றா கப் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டு தமிழ் மக் களின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை முற்றாக அபகரித்திருந் தனர்.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜனாதிபதி அவர்கள் இந்த மக்களை பயங்கரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்குப் பூரண ஜனநாயக சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தி ருக்கிறார்.

இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிப் பெற்றாலும், அது இந்நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரம் அடைந்த மாபெரும் வெற்றி என்றே, நாம் நினைக்கிறோம். இதுவரை காலமும் அடிமைகளைப் போன்று எல்.ரி.ரி.ஈ. எசமானர்களின் சொற்படி தங்கள் வாக்கை பிர யோகித்து வந்த வடபகுதி தமிழ் மக்கள் இன்றைய தேர்தலில் தாங் கள் விரும்பிய கட்சிக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ வாக்க ளிக்கும் பூரண சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஜனாதிபதி அவர்கள் இதுபற்றி ஒரு தடவை கருத்துத் தெரிவிக்கையில், வடபகுதி தமிழர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், அது ஜன நாயகத்திற்குக் கிடைக்கும் ஒரு வெற்றி என்று கூறியிருக்கிறார். எனவே, தங்களுக்கு இந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த தேசத் தலைவர் தொடர்ந்தும் தமது பிரதேசத்திற்கு தன்னுடைய நற்பணி களை நீங்கள் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ செய்யத்தான் போகிறார்.

ஆகவே, இன்றைய தேர்தலில் வடபகுதி தமிழ் மக்கள் எந்தக்கட்சி தங் களுக்கு நன்மையளிக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றும், எந்தக் கட்சி பேசிப் பேசி வாக்குறுதிகளை மாத்திரம் அளிப்பதுடன் கால த்தை கடத்திவிடும் என்று தீர்மானிப்பது அவசியமாகும்.

வடபகுதி தமிழ் மக்கள் இது விடயத்தில் தீர்க்கமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்து, இன்றைய தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த விலை மதிப்பற்ற வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி, நன் மையடைய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com