Contact us at: sooddram@gmail.com

 

ஐ.தே.க., ஜே.வி.பியும் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும்

இந்நாட்டின் தன்னிகரற்ற தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்பதை கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 65 உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் வழங்கிய ஆணை உறுதிப்படுத்தியுள்ளது. 2005ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூடி இந்நாட்டின் வரலாற்றில் தென்னிலங்கையில் இருந்து தோன் றிய ஒரு உதய சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அன்றிலிருந்து தொடர்ச்சி யாக மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகின்றதை அவதானிக்கும் எவரும் ஒரு தேசத் தலைவரின் நேர்மையான ஆளுமையும் பாரபட்சமற்ற நிர்வாக முமே இதற்கான பிரதான காரணமென்று சான்று பகர்வார்கள்.

தேர்தலுக்கு தேர்தல் ஜனாதிபதி அவர்களின் அரசாங்கத்திற்கு அதி கரித்து வரும் மக்கள் ஆதரவு இன்றைய அரசாங்கத்தின் நல்லாட் சிக்கு அளிக்கும் ஒரு அங்கீகாரமாக இருக்கின்றது.

பொதுவாக இடைநடுவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது இடைத் தேர்தல்கள் நடைபெறும் போது அரசாங்க கட்சிக்கு எதிர்ப்பைக் காட்டும் முகமாக எதிர்த்து வாக்க ளிப்பதுண்டு. இத்தகைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களினால் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய முடியாவிட்டாலும் அரசாங் கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை வலுப்படுத்துவதற்கு பொதுவாக எதிர்க்கட்சிகள் பெருமளவு பணத்தை இத்தகைய தேர் தலுக்கு செலவழித்து வெற்றிபெறுவதற்கான பெரு முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வெற்றியடைந்து அதி கார பீடத்தில் அமர்வதற்கு முன்னர், இருந்த அரசாங்கங்கள் அனைத் திற்கும் எதிராக எதிர்க் கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்கள் பெரும் வெற்றி அடைந்து அரசாங்கக் கட்சியை பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவீனப்படுத்தியிருக்கிறது.

இது வரலாறு. ஆனால், இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களின் பேராதரவினால் மிகவும் வலுப்பெற்று, நல்லாட்சி புரிந்து வருவதனால் எதிர்க் கட்சியினரின் போலிப் பிரசாரங்களுக்கும் அவர்கள் வீசியெறியும் பணத்திற்கும் மக்கள் தங்கள் வாக்குரிமையை விட்டுக் கொடுக்காமல், சொல்வதை செய் வேன் செய்வதை சொல்வேன் என்று பகிரங்கமாக அறிவிக்கும் இன்றைய தலைவரின் மீது மக்கள் அசையாத நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்து அரசாங்கக் கட்சியை ஆதரித்து வாக் களித்த அதே வேளையில், ஐக்கிய தேசிய கட்சியையும், தென் னிலங்கை சிங்களவர்களின் பிள்ளைகள் என்று தங்களை பறை சாற்றிக் கொள்ளும் ஜே.வி.பியினரையும் படுதோல்வியடையச் செய்து அவர்களை செல்லாக்காசாக்கி, அரசியல் குப்பைக் கூடைக்குள் இன்று வீசியெறிந்து விட்டார்கள்.

ஜனாதிபதியின் இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக, தரம் குறைந்த எரிபொருளை விநியோகித்தார்கள். ஹெஜின் வங்கி மோசடி, விலை வாசி உயர்வு, மனித உரிமை மீறல் போன்ற பலதரப்பட்ட போலிக் குற்றச் சாட்டுக்களை சுமத்தி, மக்கள் ஆதரவை இந்தத் தேர்தலில் பெறுவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்துமே மக்களின் வாக்குப் பலம் என்ற ஒரு சக்தி தவிடு பொடியாக்கிவிட்டது.

எனவே, இனிமேலாவது ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஜே.வி.பி. யினரும் யதார்த்தம் எதுவென்பதை புரிந்துகொண்டு, புத்திசாலித் தனமாக தங்கள் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை மக்களை ஏமாற்றாத வகையில் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அவ் விதம் செய்தால் சில சந்தர்ப்பங்களில் மக்கள் அவர்கள் மீது பாவம் பார்த்து ஏதாவது சில உள்ளூராட்சி மன்றங்களில் ஓரிரு ஆசனங் களை வெற்றி பெறுவதற்காக ஆதரவளிக்கும் வாய்ப்பும் ஏற்படலாம்.

அதைவிட்டு வெறுமனே அரசாங்கத்தை தூசிக்கக்கூடிய முறையில் பகிரங்கமாக எதிர்க்கட்சியினர் நடந்தால் அவர்கள் மீதான மக்கள் எதிர்ப்பு வலுப்பெற்று அக்கட்சிகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவது திண்ணம்.

அரசாங்கத்தை ஏதாவது தில்லுமுல்லுகள் செய்து வெளிநாட்டு நாசகார சக்திகளின் ஆதரவுடன் கவிழ்த்து விடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட திருகு தாளங்கள் இனிமேலும் எடுபடப் போவதில்லை.

ஆகவே அவர் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களையும் எதிர்ப்பு நடவடிக்கை களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு தனக்கு தனது கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்புக்களை தணித்துக் கொண்டு தனது தலைமைத் துவ ஆசனத்தை காப்பாற்றிக் கொள்வதில் முழுக்கவனத்தையும் செலுத்துவது அவசியமாகும்.

ரணில் விக்கிரமசிங்க அவ்விதம் கட்சியின் தலைமைத்துவத்தை மற்ற வர்களிடமிருந்து காப்பாற்றிக்கொண்டால் 2016ம் ஆண்டில் நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டு மீண்டுமொரு தடவை படு தோல்வியடைந்தவர் என்ற சாதனையை ரணில் விக்கிரமசிங்க வினால் எமது நாட்டின் வரலாற்றுப் புத்தகங்களில் பதித்துக் கொள்ள முடியுமென்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

இதே யோசனையை நாம், இன்று நாடெங்கிலும் மக்கள் ஆதரவை இழந்து ஒதுக்கப்பட்டு வரும் ஜே.வி. பியினருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். தொடர்ந்தும் இதே போக்கில் ஜே.வி.பி. செயற்பட்டால் அக்கட்சி வெறுமனே அறிவிப்பு பலகைகளை மாத்திரம் கொண்டிருக்கும் மக்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சியாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com