Contact us at: sooddram@gmail.com

 

நோர்வே கொலையாளியை உருவாக்கியவர்கள ?

(சபா நாவலன்)

நோர்வே நாட்டில் அப்பாவிப் பொது மக்கள் மீது ஒரு தனி நபர் நிகழ்திய பயங்கரவாதக் கொலை வெறித் தாக்குதல் கனவுகள் சுமந்த மனித உயிர்களை கண நேரத்தில் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது. ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே மாண்டு போனார்கள். நோர்வேயின் அத்தனை தெருக்களிலும் மரணத்தின் ஓலம் ஒலிக்கிறது. நோர்வேயின் வலது சாரிக் கட்சிகள் பன்முகக் கலாச்சாரத்தின் தோல்வியே தாக்குதலுக்கான காரணம் என்கின்றன. ஆளும் கட்சி சட்டவிதிகள் இறுக்கமாக்கப்படும் என்று கூறுகின்றன.

மேற்கு நாடுகளில், வன்முறை குறித்து அதிகமாகப் பேசப்படாத நோர்வேயில் இத்தாக்குதல் ஒரு குறித்த அரசியல் பின்னணியின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளது. இஸ்லாமிற்கும் மார்க்சிசத்திற்கும் குறிவைக்கப்பட்டதாக தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஏற்கனவே இந்து அடிப்படை வாதிகளும், இனவாதிகளும் முன்வைக்கின்ற அதே சுலோகங்கள் இன்னும் ஒரு முறை பதியப்பட்டது. இந்து அடிப்படை வாதிகள் சாரிசாரியாக மக்களைக் கொன்று போட்டுவிட்டு கூறிய அதே நியாய தர்மங்களின் பின்னர் தெற்காசிய அரசியல் கட்சிகள் நடந்துகொண்ட அதே வகையில் தான் நோர்வேஜியக் கட்சிகளும் செயற்பட்டன.

Anders Behring Breivik என்ற தனி மனிதனை உருவாக்கிய சமூகப் புறச் சூழல் ஐரோப்பா எங்கும் உருவாகி வருவது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்தப் பகைப் புலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் ஐரோப்பிய நாடுகளில் மீளவும் நடைபெற வாய்ப்புகள் உண்டா? இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் யார் என்ற வினாக்கள் மனித குலத்தை அச்சுறுத்தும் விடைகளையே தரவல்லன.

ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதார நெருக்கடிக்கும் இராணுவமயமாக்கலுக்கும் (relationship between economic crisis and the militarization) இடையாயான உறவு குறித்த விசாரணையிலிருந்து சில விடயங்கள் தெளிவாகலாம்.

உலகின் மிகப்பெரும் பொருளாதார இராணுவ வல்லரசான அமரிக்காவிற்கு சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதன் சாராம்சம் அமெரிக்கா தனது கடன் எல்லையான 14.3 ரில்லியன் டாலர்களை உயர்த்தாவிடின் நாடு திவாலாகிப் போகும் என்பது தான் அது. ஐரோப்பியக் கூட்டமைப்பு இனிமேலும் நிலை பெற முடியுமா என்ற நிலை உருவாகிவிட்டதாக பல பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கிரேக்கத்தை மறுபடி தூக்கி நிறுத்துவதற்கு இன்னும் மூன்றாவது தடவையாகப் பண உதவி வழங்கப்பட்டுள்ளது. போத்துக்கல் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஜூன் மாதத்தில் 80 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டது. ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியின் உச்சத்தை அடைந்துவிட்டன. இந்த நாடுகளை மீட்பதற்கான வலு தம்மிடம் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே கையை விரித்துவிட்டது.

பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதை விட அதிகமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இன்னும் ஐந்து வருடங்களுக்கு உள்ளாக இத்தகைய நெருக்கடி இந்த மூன்று நாடுகளிலும் உருவாகும் என பொதுவாக எதிர்வு கூறப்பட்டாலும் கால எல்லை குறித்த பல முரண்பட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதற்காகவும் தமது நாடுகள் சரிந்து விழுவதைத் தவிர்ப்பதற்காகவும் மூன்று பிரதான திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1. சர்வதேச வங்கிகளிடையேயான ஒத்துழைப்பு.

2. எண்ணை மற்றும் கனிம வழங்களைக் கொண்ட நாடுகளைச் ஆகிரமித்தலும் சுரண்டுதலும்.

3. மேற்கு நாடுகளின் உள்ளே மக்களுக்கான சமூக உதவித் திட்டங்களை அழித்தல்.

இவற்றிற்கான அரசியல் ஒழுங்கு பல சிக்கலான சமூகப் பொறிமுறைகளைக் கொண்டதாக இயங்குகிறது. இந்தச் சமூகப் பொறிமுறைகளின் தொகுப்பே புதிய உலக ஒழுங்கு என அழைக்கப்படுகின்றது.

இந்த மூன்று திட்டங்களில் முதல் இரண்டும் நீண்டகால நோக்குடையவையும் பல நிகழ்ச்சித் திட்டங்களூடான நீண்ட நடவடிக்கைகளும் ஆகும். இதற்கான செயல்வடிவங்களாக மத்திய கிழக்கின் மீதான ஆக்கிரமிப்பு, இந்திய பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள், ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போன்ற பல நிகழ்வுகளைக் காணலாம்.

ஏகபோக அரசுகள் தமது நாட்டின் எல்லைக்குள்ளேயே மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் மூன்றாமுலக நாடுகளின் தரத்த்திற்குக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்கின்றன. குறிப்பாக சமூக உதவித்திட்டங்கள், சுகாதார சேவை, ஓய்வூதியம் போன்றன கேள்விக்குள்ளாக்கப்படுகின்ற அதே வேளை வரித் தொகை, வாழ்க்கைச் செலவு போன்றன எதிர்பாராத வகையில் அதிகரிக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக வேலையற்றோர் தொகை பல மடங்காக அதிகரித்துள்ளது.

இவற்றிற்கான அடிப்படைக் காரணமாக உலகப் பொருளாதார நெருக்கடி முன்வைக்கப்பட்டுகின்றது. உலகப் பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணமே உலக முதலாளித்துவத்தின் அதீத வளர்ச்சி என்பது கூறப்படுவதில்லை. உலக முதலாளித்துவம் மாறாக உலக முதலாளித்துவமோ, மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்ற பணத்தை எவ்வாறு உறிஞ்சுவது என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது.

1. மூன்றாம் உலக நாடுகளின் மூலவளங்களைச் சுரண்டுதல்.

2. மூன்றாம் உலக நாடுகள் உழைப்பு மூலதனத்தைச் சுரண்டுதல்.

3. தமது நாடுகளில் வரி கொடாமை.

இவற்றின் வழியாக அளவிற்கு அதிகமாகப் பணக் குவிப்பை மேற்கொண்டுள்ள உலக முதலாளித்துவமே பொருளாதார நெருக்கடியின் பிரதான காரணமாகும்.

தகவல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ (CISCO)7 மில்லியன் வரியை எவ்வாறு கொள்ளையடித்தது என்பது குறிப்பிடத்தக்க உதாரணம். தனது உப அலுவலகங்களை சுவிட்சிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிற்கு மாற்றியதனூடாகக் கடந்த 2009 – 2010 ஆம் ஆண்டுகளில் 7 மில்லியன் வரிப்பணத்தைச் செலுத்தாமல் தக்கவைத்துள்ளது. அதே வேளை அமரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் 2.9 மில்லியன் தொழில்கள் வெளி நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளன. பிரான்சிலும் பிரித்தானியாவிலும் 1.9 மில்லியன் தொழில் வாய்ப்புக்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதே வேளை இந்த நாடுகளில் எல்லாம் உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு என மக்களிடமிருந்து வரிப்பணம் அறவிடப்படுகிறது. ஏழ்மையும், வேலையின்மையும் இந்த நாடுகளின் இருப்பையே கேள்விகுள்ளாக்கியிருக்கின்றது, இன்னும் ஐந்தாண்டுகளுக்குள்ளாக இந்த நாடுகளின் தற்போதைய வாழ்க்கைத் தரம் தலை கீழாக மாறிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது. இவற்றிற்கெல்லாம் எதிரான அரசியல் உறுதியானதாக இல்லாதிருப்பினும், புதிய எழுச்சிகளும் போராட்டங்களும் ஐரோப்பாவையும், அமரிக்காவையும் அச்சத்திற்கு உள்ளாக்குகின்றன.

இன்னும் குறுகிய கால எல்லைக்குள் இவ்வாறான போராட்டங்கள் புதிய எதிர்ப்பியக்கமாக வலுப்பெறும் 'அபாயம்' காணப்படுவதாக அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையயம் அச்சம் தெரிவிக்கின்றது.

இதனை எதிர்கொள்வதற்காக ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் இராணுவ மயமாக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகிவிட்டது.

இதன் நுளைவாசலாக உலகத்தை ஆயுத மயமாக்கலையும் உலகை சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு ஒவ்வாத பிரதேசமாக்குவதற்கும் நவீன ஏகாதிபத்திய அரசுகள் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தையும், அதனை எதிர்கொள்ள சாரி சாரியான மனிதப் படுகொலைகளையும் தீர்வாக முன்வைத்தன. இவ்வாறான மனிதப் படுகொலைகள் சமூக அங்கீகாரமாகவும் சமூகத்தின் பொதுப் புத்தியாகவும் மாற்றப்பட்டது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவிகள் சாரி சாரியாகக் கொல்லப்படும் போது, ஏகபோகங்களின் படைகள் இரத்தக்குளிப்பு நடத்தும் போது மேற்கின் ஊடகங்கள் மூச்சுக்கூட விடுவதில்லை. அதே வேளை மேற்கின் இராணுவம் தாக்குதலில் கொல்லப்பட்டால் தேசத்திற்காக உயிரிழந்த மா வீரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

நோர்வேயில் கொலை நிகழ்ந்த அதே நாள் இன்னொரு நாள் போன்று ஆப்கானில் விடிந்தது. ஐந்து அப்பாவிக் குழந்ததைகள் நேட்டோ படைகளின் குண்டுகளால் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.

ஆக, கடந்த தசாப்தம் உருவாக்கிய உலகின் பொதுச் சிந்தனையின், பயங்கரவாததிற்கு எதிரான யுத்தம் என்ற முழக்கத்தின் இன்னொரு பிரதிநிதி நோர்வே கொலையாளி. அதன் மற்றொரு பிரதிநிதி ராஜபக்சவும் கூட.

நோர்வே வின் கொலைகாரன் இந்த நாடுகள் தாம் ஆக்கிரமிக்கும் நாடுகளின் நடத்துகின்ற அதே கொலைகளை அதே சுலோகங்களோடு உள்நாட்டிலேயே நடத்தி முடித்துள்ளான்.

இரண்டிற்கும் அடிப்படையில் சித்தாந்தப் பின்னணி ஒன்றுதான். மார்க்சியத்திற்கும் இஸ்லாமிற்கும் எதிரான ஜனநாயக யுத்தம் என்பதுவே இரண்டும். இவை இரண்டையும் இணைத்து ஏகாதிபத்தியங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என அழகிய தலையங்கத்தை வழங்கியுள்ளன.

இலங்கையில் பேரினவாதிகளும், அவற்றின் பிரதிநிதிகளும், ராஜபக்ச குடும்பத்தினரும் வன்னியில் நடத்திய தர்பார், கோரக் கொலைகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றே பெயரிடுகின்றனர்.

மேற்கு தனது நலன்களுக்காக உருவாக்கிய மனிதம் மரத்துப் போன, கொலைகளை அங்கீகரிக்கும் பொதுப் புத்தி இன்னும் ஆயிரம் கொலைகளை கட்டவிழ்க்கும். லண்டனின் நடந்த நிறவாதிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறும் நோர்வே கொலைகாரனின் கூற்று ஐரோப்பியத் தொழிலாளர்களை, வேற்று நாட்டவரை எச்சரிக்கின்றது.

Anders Behring Breivik ஐயும் அவனின் மனிதத் தன்மையை மரத்துப் போகச் செய்த மேற்கின் அரசுகளும், ஊடகங்களும் இன்னும் நிறுத்தியாகவில்லை. பிரித்தானிய தொழில்கள் பிரித்தானியர்களுக்கே என்று மீண்டும் ஒரு முறை மிடுக்கோடு கூறியிருக்கிறார் பிரித்தானியத் தொழிலமைச்சர். மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைச் சுரண்டுகின்ற தமது கோழைத்தனத்தை அவர்கள் எப்போதும் பேசியதில்லை.

மேற்கின் அரசுகளை ஆட்டம்க்காணச் செய்யும் அரச எதிர்ப்புப் போராட்டங்களைத் திசைதிருப்புவதற்கு நோர்வேயின் கொலைகாரன் எவ்வாறு அவசியமாகின்றானோ அவ்வாறே மூன்றாமுலக நாடுகளின் ஆக்கிரமிப்பு யுத்ததை முன்னெடுக்க ராஜபக்ச போன்றோர் அவசியமாகின்றனர்.

உலக முதலாளித்துவம் உருவாக்க முனையும் புதிய உலக ஒழுங்கின் மரத்துப் போன சிந்தனை முறைகளைம் மீறி மக்களின் போராட்டம் உலகின் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் புதிய சகாப்தத்திற்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறோம். இங்கு இறுதித் தீர்மானத்தை பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களே மேற்கொள்வர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com