Contact us at: sooddram@gmail.com

 

வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்

தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம்

'ள்ளத்தனமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற  ஈழ அகதிகள் கேரள போலீஸாரிடம் பிடிபட்டார்கள்’, 'திருவண்ணாமலையில் நடைபெற்ற சமூக சேவகர் கொலையில் போலிக் குற்றவாளிகளாக அகதி முகாம் இளைஞர்கள் இருவர் சரண்’, 'அகதி முகாமில் பெண் தற்கொலைஎன்று அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அகதி முகாம் மக்களது வாழ்க்கை நிலைமை என்ன என்பதை அறிய மண்டபம் முகாம் பற்றி விசாரித்தோம்மண்டபத்தில்தான், தமிழகத்திலேயே பெரிய அகதிகள் முகாம் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலம் தொடங்கி இயங்கிவருகிறது. ஈழப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முதலில் வந்து சேர்வது, இங்கேதான். இங்கே இருந்துதான் தமிழகம் முழுக்க உள்ள 103 முகாம்களுக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள். மண்டபம் அகதி முகாமில் உள்ளவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்து வந்திருக்கிறார் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா. அவரிடம் பேசினோம்.

''முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மாத உதவித் தொகை சரியாகக் கிடைத்துவிடுகிறது என்றாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. நீண்டகாலமாக முகாமில் தங்கி உள்ளவர்கள் விடுமுறையில் செல்லவேண்டும் என்றாலோ, வேறு முகாம்களுக்கு மாறிச் செல்லவேண்டும் என்றாலோ, முன்பு இங்குள்ள அலுவலரிடம் கோரிக்கை வைத்தாலே போதும். இப்போதோ ராமநாதபுரம் கலெக்டரிடம் சென்று அனுமதி பெற வேண்டி உள்ளது. இதற்காக அவர்கள் அடிக்கடி அலைவதால் பேருந்துக்குச் செலவு ஆவதோடு, மன உளைச்சலும் அடைகிறார்கள். இவர்கள் சமையல் செய்வதற்காக இலவச கேஸ் சிலிண்டர்கள் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டன. தற்போது அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. இவர்களின் அனைத்துக் குறைகளையும் முதல்வரிடம் நேரடியாகப் பேசித் தீர்க்க முயல்வேன்'' என்றார்.

இவரை அடுத்து அகதிகள் நிலைமை அறிவதற்காக சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பெரியகுளம் எம்.எல்.ஏ. லாசர், மதுரை எம்.எல்.ஏ. அண்ணாதுரையுடன் மாநில, மாவட்டக்குழு நிர்வாகிகள் கிளம்பி வந்தனர். முகாமுக்குள் செல்ல ஏற்கெனவே அனுமதி வாங்கி இருந்த நிலையிலும், அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் இவர்களை முகாம் வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். 'நாங்கள் கலெக்டரிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம்என்று அவர்கள் எடுத்துச் சொல்லியும் உள்ளே விடவில்லை. அதனால் முகாம்வாசிகள் வெளியில் வரும்போது குறைகளைக் கேட்டனர்.

எம்.எல்.ஏ-க்கள் லாசர் மற்றும் அண்ணாதுரையிடம் பேசினோம். ''முகாமுக்குள் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை. வீடுகள் மோசமாக பழுதடைந்து உள்ளன. மருத்துவ வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தொண்டு நிறுவனம் வழங்கிய ஆம்புலென்ஸை அதிகாரிகள் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச கேஸ் ஸ்டவ்களையும் பறிமுதல் செய்துவிட்டதால், சமைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். முகாம்வாசிகள் கூடுதல் வருமானம் பெறுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களையே முகாமுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்றால் உள்ளே அந்த அளவுக்குச் சிக்கல் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இதுதான் அகதிகள் மீது தமிழக அரசு காட்டும் அக்கறை'' என்றனர்.

முகாமில் இருக்கும் ஓர் ஈழத்தமிழரிடம் பேசினோம். ''ஓரளவு வாழ்வதற்கு ஏற்ற குடியிருப்புகள் முன்பு இருந்தன. இப்போது எல்லாமே பழுதடைந்து விட்டன. இங்கேயே இந்த கதியென்றால் மற்ற முகாம்களைபற்றி ஒன்றும் சொல்ல இயலாது. முன்னே 5,000 பேர் இங்கே இருந்தாங்க. இப்போ 2,000 பேர்தான் இருக்கோம். கட்டட வேலை, மர வேலை, கடல் தொழில் எல்லாம் தெரியும். முகாமுக்குள் அப்பப்ப சோதனை போடுறோம்னு அதிகாரிங்க  அடிக்கடி வர்றதால வெளி வேலைக்குப் போக முடியலை. தமிழ்நாட்டுக்கு முக்கிய ஆளுங்க விஜயம் செஞ்சா, எங்களை மூணு நாளைக்கு வெளியே விட மாட்டாங்க. ஒரு அவசரம்னாகூட போகமுடியாது. ஜெயில் வாழ்க்கைதான். காசுள்ள எங்க ஆட்கள் அப்பவே வெளிநாடுகளுக்குப் போயிட்டாங்க. தொப்புள்கொடி உறவென்று தமிழகம் வந்தோம். சொல்ல முடியாத துயரத்தில் வாழ்கிறோம். இங்குள்ள அதிகாரிங்க எங்களை கேவலமாத்தான் பாக்குறாங்க. எப்பாவது வெளியில வேலைக்குப் போனாலும், எங்களுக்கு மட்டும் கூலியைக் கம்மியா தர்றாங்க. இப்படியே கழியுது எங்கட வாழ்க்கை'' என்றார் வருத்தத்தோடு.  

மண்டபம் முகாம் தனித் துணை ஆட்சியரான துரையிடம் பேசினோம். ''நான் எதைப்பற்றியும் பேசக் கூடாது. இங்குள்ள அகதிகளுக்கு வருகைப் பதிவேடு எடுப்பது மட்டும்தான் என் வேலை. எந்த முடிவையும் சென்னையில் இருக்கும் கமிஷனர்தான் எடுக்க முடியும்'' என்று சொன்னார்.

நம்மிடம் பேசிய தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ''ஐ.நா-வின் அகதிகள் மறுவாழ்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டாலே, அத்தனை உதவிகளையும் அவர்களே செய்துவிடுவார்கள். நாங்களே பார்த்துகொள்கிறோம் என்று நம் நாடு இருப்பதால்தான் இந்த நிலை. திபெத் அகதிகள், வங்க தேச அகதிகளுக்கு எல்லாம் நிறைய சலுகைகள் கொடுக்கும் மத்திய அரசு, ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும் வஞ்சனை செய்கிறது'' என்கின்றனர்.மரணம் தான், கொடுமையான ஒரு விஷயம். இது இந்திய அரசின் பாரபட்ட்ச முகத்தை காட்டுகிறது.

வாகசர் கருத்துக்கள்:

"தேடிவந்த நாடும் சரியில்லை என்றால் நாதியற்ற மக்கள் என்னதான் செய்வார்கள்?

தேடிவந்த நாடும் சரியில்லை என்றால் நாதியற்ற மக்கள் என்னதான் செய்வார்கள்?"

"தேடி வந்த நாடு சரியல்லையா..? எவன் சொன்னான்..? இவர்கள் இந்தியாவை பழித்துக்கொண்டு, சீமான் வைகோ பேச்சுடன் ஆட்டம் போட்டால் இப்படித்தான்.... நாடு திரும்பட்டுமே இவர்கள்..."

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com