Contact us at: sooddram@gmail.com

 

தமிழினத்தை அடக்கியாள முனைந்த ஆடிக்கலவரம்

ஆடிக்கலவரம், அது இடம்பெற்று இருபத்தொன்பது வருடங்கள் கழிந்து விட்டன. ஆனாலும் அதன் தாக்கம் தமிழர் மனங்களிலிருந்து இன்னமும் அகலவில்லை. இலங்கையின் வரலாற்றில் கறைபடிந்த தினங்களாகவே 1983 ஜுலை இனக்கலவரம் அமைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தின் உச்ச நிலையைப் பயன்படுத்தி அன்றைய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் நடச்தேறிய ஒரு இனச் சுத்தி கரிப்புச் செயற்பாடே ஆடிக் கலவரமாகும்.

தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக அமைந்துள்ள அந்த நாட்களின் வலிகளை எண்ணிப்பார்க்கவும் முடியாதுள்ளது. தமிழரின் உடைமைகளுக்கு மட்டுமல்ல உயிர்களுக்கும் தீவைத்துக் கொளுத்தி மகிழ்ந்த காடையர்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமாறு படையினருக்குப் பணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியாளர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. என்றாலும் சிலர் அதே கொடூர விஷத்துடன் இன்றும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

தமிழரைப் பெட்டிப் பாம்பாக அடக்கிவைத்து ஆள நினைத்த ஐ.தே.க. தலைமைத்துவம், வேண்டுமென்றே தமிழர் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. தப்பியோடும் போது பாதையில் உயிருடன் டயரில் போட்டு எரிக் கப்பட்ட தமிழரும், காடையரின் வாள் வீச்சுக்கு அவயவங்களை இழந்த தமிழர்களும் ஆடிக்கலவரத்தின் ஆதாரத்திற்கு இன்றும் சான்று பகர்வர்.

கல்வியில், விளையாட்டில ,நிர்வாகத்துறையில், வர்த்தகத்தில் எனப் பல்துறைகளிலும் கொடிகட்டிப் பறந்த தமிழரை மேலும் மேலெழும்ப விடாது தடுக்கும் ஒரு கைங்கரியமாகவே அந்த இனக்கலவரம் அமைந்திருந்தது. நன்கு திட்டமிட்டு நாட்டிலுள்ள காடையர்களை ஒன்று திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக ஐ.தே.க. ஏவி விட்டது. அவர்களும் தமது பணியை நன்கு விசுவாசமாகச் செய்து முடித்தனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்கள் சிலர் மேற்கொண்ட இப்பாரிய வரலாற்றுத் தவறு அமைதியாக இருந்த இலங்கைக்கு முழு உலகிலுமே என்றுமே மாறாத ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தியது. அண்ணன்,தம்பி போன்று ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்த தமிழ், சிங்கள மக்களிடையே பாரிய விரிசலை ஏற்படுத்த ஆடிக்கலவரம் ஆணிவேராக இருந்தது. அன்று ஏற்பட்ட இன விரிசலானது இன்றுவரை ஒருவரை யொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

அதன் விளைவாக இன்று சமூகமே யுத்த இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. சுமார் முப்பது வருடகால யுத்தம் தமிழருக்கு மட்டுமல் , சிங்கள மக்களுக்கும் பாரிய அழிவையே தந்தது. சிங்களப் பொதுமக்கள் பலரும் புலிகளினால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இறுதி யுத்தம் வரை புலிகளால் பல இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் சிங்களவர்களாகக் காணப்படுகினறனர். அதேபோன்று பயங்கரவாதிகள் எனப் படையினரால் கொல்லப்பட்ட புலிகள் தமிழர்களாக உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவருமே இலங்கையர் என்பதை உணரநாம் எல்லோருமே மறந்துவிட்டோம்.

1983 ஆடிக் கலவரத்தில் ஆரம்பித்த யுத்தம் சுமார் முப்பது வருட காலத்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என பல்லாயிரக்கணக்கான உயிர்களை இதுவரை காவுகொண்டு விட்டது. படுகொலை கலாசாரத்தை 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி ஆரம்பித்துவைத்த ஐ.தே.க. தனக்கு ஆட்சி செய்ய இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பம் வரை புலிகள் மூலமாகத் தமிழரை ஒடுக்கும் கைங்கரி யத்திலேயே ஈடுபட்டு வந்தது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்று பாசாங்கு செய்த காலத்திலும் தமிழருக்குத் தீங்கிழைப்பதில் குறியாகவே இருந்தது.

ஆனால் இன்று புலிகளும் இல்லை, ஆடிக்கலவரமும் ஏற்பட வாய்ப்பும் இல்லை எனுமளவிற்கு நாட்டில் அமைதிநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ.தே.க. ஆரம்பித்து வைத்த இன விரோதப் போக்கு இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டதனால் இன்று முழு நாடும் அமைதியாக உள்ளதுடன் நாட்டு மக்களும் இன,மத,மொழி பேதமின்றி மீண்டும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த இன ஒற்றுமை இனி எந்தக் காலத்திலும் சீர் குலையக் கூடாது. அதற்கு மக்கள் ஒருபோதும் இட மளிக்கவும் கூடாது.

1983 ஆடிக்கலவரத்தின் போது ஏவிவிடப்பட்ட காடையர் கூட்டத்தால் தமிழர் கொல்லப்பட்டும், அடித்துத் துன்புறுத்தப்பட்ட போதும் அதை பார்த்துக் கண்ணீர் வடித்து முடிந்தளவிற்கு உதவிக்கரம் நீட்டி, பல வழிகளிலும் பாதுகாப்புத்தந்த சிங்களச் சகோதரர்களை இலகுவில் மறந்துவிட முடியாது. அதேபோன்று சில சந் தர்ப்பங்களில் புலிகளால் துன்புறுத்தலுக்குள்ளான சிங்களச் சகோதரர்களைக் காப் பாற்ற தமிழர் என்றுமே பின்னின்றதும் கிடையாது. இவைதான் உண்மையான சகோதரத்துவம். இந்த சகோதரத்துவம் தொடரவேண்டும் என்பதே எமது அவாவாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com