Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் இன்னொரு பக்கம்

சென்னையில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் தமிழ் ஈழம் குறித்த தீர்மானம் இடம்பெறாது என்று திமுக தலைவர் கருணா நிதி கூறியுள்ளார். டெசோ மாநாட்டிற்கான கருத்துருவை அவர் வெளியிட்டுள்ளார். அதி லும் தமிழ் ஈழத்தை வலியுறுத்துவதற்கான வாசகங்கள் இடம்பெறவில்லை. இலங்கையில் இனப்பிரச்சனை துவங் கிய காலத்திலிருந்தே தமிழ் ஈழம் சாத்தியமா? சாத்தியமில்லையா? என்ற விவாதமும் தமி ழகக் கட்சிகளிடையே நடைபெற்று வரு கிறது. இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தீர்வாகாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும். இலங்கையில் தமிழ்மக்கள், பெரும்பான்மை யான சிங்கள மக்களை போன்று அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் பின் முரணின்றி வலியுறுத்தி வந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற் கொண்டுள்ள இந்த காரியசாத்தியமான நிலைப்பாட்டிற்காக திமுக உள்ளிட்ட தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று கூறிய கட்சிகள் வசைமாரி பொழிந்து வந்துள்ளன.

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடி வுக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும்; அவர்களை மீள்குடியமர்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண் டும்; அவர்களது பொருளாதார, சமூகப் பண் பாட்டு வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண் டும்; போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நம்பகத்தன்மை கொண்ட விசார ணை நடத்தப்படவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. டெசோ மாநாட்டின் கருத்துருவிலும் இத்தகைய அம்சங்கள் தான் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் மொழிசார்ந்த பண்பாட்டு வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலோ, இனரீதியான ஒடுக்குமுறை எந்த வடிவிலும் கூடாது என்பதிலோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. இனப்பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டதில்லை. சர்வதேச பொதுவுடைமை இயக்கமும் இனப்பிரச்சனைக்கு உரிய முக்கியத் துவம் அளித்து வந்துள்ளது. இலங்கைத் தமிழ் மக்களின் இன ரீதி யிலான பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப் படவேண்டும். அவர்களது மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, வாழ்வுரிமை பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு அழுத்தமான கருத்துண்டு.

அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும், ஊடகங்களும் இலங்கை இனப்பிரச்சனையை மட்டுமே முன்னிறுத்தி வந்துள்ளன. இலங்கையில் உள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் பொரு ளாதார ரீதியிலான பிரச்சனைகள் உண்டு. அதற்காக ஒன்றுபட்ட முறையில் வர்க்க அணிதிரட்டல் அடிப்படையில் போராட்டங் களும் நடந்து கொண்டேயிருக்கின்றன.

இலங்கையில் தற்போதுள்ள ராஜபக்சே அரசும் அதற்கு முந்தைய அரசுகளும் இந்திய அரசைப் போன்று நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளையே பின்பற்றி வந்துள்ளன. இதனால் அந்த நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி மக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள். இந்தியாவைப் போன்றே தொழி லாளர் வர்க்கம், நடுத்தர மக்கள் அரசின் பொரு ளாதாரக் கொள்கைகளை எதிர்த்து போராடி வருகின்றனர்.

இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், அனைத்து வகை யான அரசியல், சமூக, பொருளாதாரச் சீர்கேடு களுக்கும் யுத்தமே காரணம் என்று ஆட்சி யாளர்களால் கூறப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 3 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் நாட்டின் நிலைமை சீரடைவதற்கான எந்த அறிகுறி யும் காணப்படவில்லை. பொருளாதார நிலை மை மேலும் மேலும் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. குற்றச்செயல்கள் அதி கரித்தவண்ணம் உள்ளன. லஞ்சம், ஊழல் கட்டுப்படுத்தப்படவில்லை. அரசின் மீது அதிருப்தி தெரிவிப்பவர்கள் அனைத்து வகையிலும் நசுக்கப்படுகிறார்கள். அரசு நிறு வனத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை நாளுக்குநாள் சிதைந்துவருகிறது.” இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இவ்வாறு பேசியுள்ளார்.

மறுபுறத்தில் இந்திய ஆட்சியாளர்கள் போன்றே இலங்கை அமைச்சர் ஒருவர், நாட் டின் பொருளாதாரம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது; எரிபொருளுக்கு கூடுதல் வரி, மின்கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று அலறியுள்ளார்.

இந்தக் குரல்களின் மொழி வேறாக இருக் கலாம். ஆனால் இதே குரலில் தான் இந்திய ஆட்சியாளர்களும் பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆட்சியா ளர்களின் நவீன தாராளமயமாக்கலுக்கு எதி ரான போராட்டங்களை இந்தியத் தொழிலாளி வர்க்கம் நடத்திவருவதைப் போன்று இலங் கையிலும் நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்தப் போராட் டம் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள், மின்வாரிய ஊழியர் கள், வங்கி ஊழியர்கள் என பல்வேறுபட்ட தொழிலாளர்கள், ஊழியர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங் கள் உள்ளிட்ட அனைத்துப்பகுதி பல்கலைக் கழக ஆசிரியர்களும் நீண்ட நெடிய போராட் டத்தை நடத்திவருகின்றனர். அவர்களது மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, இலங்கையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற் பத்தியில் 6 சதவீத அளவுக்கு உயர்கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்பதாகும்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்ட மைப்பின் (எப்யுடிஏ) தலைவர் நிர்மல் ரஞ்சித் தேவஸ்ரீ கூறுகையில், இலங்கையில் உள்ள கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி சட்டம், மருத்துவம் உள் ளிட்ட அனைத்து உயர்கல்வி நிலைய ஆசிரியர் களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாகக் கூறியுள்ளார். உயர்கல்விக்கான நிதியை உயர்த்தினால் மட்டுமே தர மான உயர்கல்வியை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் தரமுடியும் என்று அவர் கூறியுள்ளார். இதே குரல் இந்தியாவிலும் ஒலிப்பதை காணமுடியும்.

உயர்கல்வியில் தனியார் மயம், தாராள மயத்தை அனுமதிக்க ராஜபக்சே அரசு மேற் கொண்டுள்ள முயற்சிகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது. பல் கலைக் கழகங்களின் தன்னாட்சி உரிமை யை பாதுகாக்க வேண்டும் என்பதும் அவர் களது கோரிக்கைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தவர்களில் ஒருவரான டாக்டர் விக் கிரமசிங்கே போன்ற ஒரு சில தலைவர்கள் மட்டுமே உயர்கல்வியின் பெரும் மதிப்பை உணர்ந்துள்ளதாக தேவஸ்ரீ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரி கள் ஆகியோருக்கு பெருமளவு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வில்லை. ஆசிரியர்களுக்கான ஊதியமும் உயர்த்தப்படவில்லை என்று அவர் கூறியுள் ளதிலிருந்து எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களின் சிந்தனை ஒரே மாதிரியாகவே உள்ளதைப் புரிந்து கொள்ள முடியும்.

இதேபோன்று பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் அல்லாத அலுவலர்களும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். இதற்கு அனைத்துத் தொழிற்சங்கங் களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சிலோன் மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஜூலை 6ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தியுள்ளன. 120 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்ததை கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்தத் தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பாக்ஸ்கான், ஹூண்டாய், போர்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதும், அதை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருவதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் சிஐடியு தலைமையில் நடைபெறவிருந்த நடைபய ணம் தடை செய்யப்பட்டு, தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். உலகம் முழுவதும் ஆளும் வர்க்கப் பிரதி நிதிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடை யிலான போராட்டங்கள் ஒரே மாதிரி யானவையாகவே உள்ளன.

இந்தியாவைப் போன்று பி.எப். நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை எதிர்த்து, இடிஎப் மற்றும் இபிஎப் தொழிலாளர்கள் போராட்டம் இலங்கையில் நடத்தியுள்ளனர். சேமநலநிதியை பாதுகாக்க அரசியல் வித்தியாசங்களைக் கடந்து அனைத்துத் தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நிர்வாகத்தின் சீர் கேடுகளைக் கண்டித்து மருத்துவர்கள் மற் றும் ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தியுள் ளனர். இதற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதே போன்று செவிலியர்களும் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இலங்கையில் உள்ள அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தியுள் ளன. ஊழியர்களின் கூட்டுப்பேர உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அவர் களது கோரிக்கைகளில் ஒன்று.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் மாணவர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இத்தகைய போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை. மேலும் மேலும் ஒன்றிணைக் கப்படவேண்டியவை. வர்க்க ரீதியிலான போராட்டங்கள் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும். ஆளும்வர்க்கம் திட்டமிட்டு ஏற்படுத்தும் பகைமையையும், பிரிவினை யையும் குறைக்கும்.

இன்றைய உலகமயச் சூழலில் முதலாளி கள் நாடுகளை கடந்து ஒன்றுபட்டு நிற்கின் றனர். இதை எதிர்த்த போராட்டத்தில் தொழி லாளர்களும் ஒருங்கிணையவேண்டியது அவசியமாகும். இந்திய -இலங்கை தொழி லாளர்களுக்கும் இது பொருந்தும்.

(டி. கே.ரங்கராஜன் எம்.பி.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com