Contact us at: sooddram@gmail.com

 

இருவேறு உலகின் இருவேறு நங்கையர்

(கோவை ஈஸ்வரன்)      

சென்ற திங்களில் உலக நாளிதழ்களின் முகப்புகள் இரண்டு நங்கையர்களின் படங் களை -முரண்பாடுடைய இரு வேறு சமுதாய அமைப்புகளின் வாழ்க்கைமுறைகளைத் தாங்கிப் பாரெங்கும் பவனி வந்தன.கிரிஸ்டியானா மார்கரெட் கீலர் என்ற இருபத் தோரு வயது நிரம்பிய ஆங்கிலப் பொன்னிறக் கூந்தலழகி ஒருத்தி. வாலண்டினா தெரோஸ்கேவா என்ற இருபத்தாறு வயது நிரம்பிய ரஷ்யாவின் பேரழகுப் பெட்டகம் மற்றொருத்தி. முன்னவள் விலைமாது; பின்னவள் விண் வெளியைச் சுற்றிய வீராங்கனை! ஒருத்தி குற்றம் சுமத்தப்பட்டவள்; இன்னொருத்தி வெற்றி முரசு கொட்டியவள்! ஆனால் இந்த இரண்டு பேரும் தங்கள் தங்கள் தாயகத்தின் -தங்களைத் தயாரித்த சமுதாய அமைப்பு களின் அழியாச் சின்னங்கள்!

இருவருமே ஜூன் மாதத்தில் பத்திரிகை களின் தலையெழுத்துக்களோடு தங்களின் தலையெழுத்துக்களையும் பிணைத்துக் கொண்டனர். இந்தப் பரந்த பூபாகத்தில் உயிரோடு உலவிக் கொண்டிருக்கும் முந்நூறு கோடி வாய்களிலும் அந்த இரண்டு பேரின் பெயர்களும் பலமுறை விழுந்து எழுந்தன.

கிரிஸ்டியானா திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரமாவதைத் தன் லட்சியமாகக் கொண்டிருந்தபோது, வாலண்டினாவோ ஒளி வீசும் நட்சத்திர மண்டலங்களுக்கிடையே யும், பூமிப்பந்தைச் சுற்றித் திரியும் வான கோளங்களுக்கிடையேயும் ஊடுருவிப் பறப் பதிலே பேராவல் கொண்டிருந்தாள். மந்திரிப் பிரதானிகளைக் கீலர் ஈர்த்து திரிந்த நேரத் தில், வாலண்டினா ஈர்ப்புச் சக்திகளுக்கு அப் பாற்பட்ட விண்வெளியில் தன் சிந்தனை களைப் பதித்துக் கொண்டிருந்தாள்.

இந்த இருவருமே உழைத்துப் பிழைக்கும் வர்க்கத்தில் பிறந்தவர்கள்! பால்மணம் மாறாப் பிஞ்சுப் பருவத்திலேயே பெற்றெடுத்த தந்தை யை இழந்துவிட்ட அநாதைகள்! அதே நேரத் தில் தாங்கள் கொண்ட லட்சியங்களுக்காகத் தங்கள் இதயங்களை எதையும் தாங்குவதற் குத் தயாராக்கிக் கொண்டுவிட்டனர்! இத்து டன் இவர்களுக்கிடையேயுள்ள ஒற்றுமைகள் விடை பெற்றுக் கொள்கின்றன.

அமைச்சரவை ஆடும் வரை..

கொள்ளை லாபச் சுரண்டும் மனோபாவம் கொண்ட இங்கிலாந்தின் பூர்ஷ்வா சமுதாய அமைப்பு எப்படியும் பணக்காரியாகிவிடு-எந்த வழியானாலும் சரி, துணிந்துவிடு என்று தூண்டியது கீலரை! அவள் இங்கிலாந்தின் மண்ணிலே பிறக்கும் போது ஏழையாகத்தான் பிறந்தாள்- சேரியின் மத்தியில். தனது பதினாறாவது வயதில் அந்த ஏழைப் பெண் தன் அரை சாண் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேலை தேடி லண்டன் மாநகருக்கு ஓடி வந்தாள்! தக்காளி ரசங்களைத் தயாரிக்கும் வேலைக்குக்கூட இங்கிலாந்தின் சமைய லறைகள் அவளுக்கு வழிவிடவில்லை! அதே நேரத்தில் வேறு வழியில் வழி விட்டது அவள் வாழ!

அவள் கற்றுக் கொண்டது இது தான்.... இங்கிலாந்தின் நவீன சகாப்தத்தில் புகழ்பெற வேண்டுமானால், கண்ணாடிக் காலணி களோடு மாமயில் போன்று லண்டனின் வீதி களில் ஆடித் திரிய வேண்டும். பகிரங்கமாக நடத்தப்படும் இரவு விடுதிகளில் கேளிக் கைப் பொருளாக வேண்டும்!

அவள் ஆடத் தொடங்கினாள் இரவு விடுதிகளில்! ஆடினாள்... ஆடினாள .. சென்ற ஜூன் மாதம் மாக்மில்லன் மந்திரி சபையே அதிரும் வகையில் ஆடினாள்!

பிறந்த மண்ணின் சிறப்பு

அதே நேரத்தில் சரியான ஒழுங்கு நியதி என்ற அஸ்திவாரத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட சோஷலிச சோவியத்தின் மண்ணிலே தோன்றிய குடிமகளோ நட்சத்திர மண்டலங்களிடையே தன் பயணத்தை நடத்திக் காட்டினாள்! அது அவள் பிறந்த மண் ஏற்றுக் கொண்ட தத்துவத்தின் சிறப்பு!

இனி-கீலரைப் பார்ப்போம :

புராதனத் தொழிலை விடுத்து பூர்ஷ்வா சமுதாயத்தின்நாகரிக’த் தொழிலைச் செய் யத் துணிந்ததால், அவளுக்குக் கிடைத்தசிறப்புகள்பல. உலகத்தின் முதல் தரமான ராஜ தந்திரிகள் என்று முதலாளித்துவ ஏடு கள் ஏற்றிப் புகழும் பலர் அவள் காலடியில்- கதவோரத்தில் காத்து நின்றனராம். அந்த வேல்விழியாளின் பள்ளியறையில் இங்கி லாந்தின் பாதுகாப்பு மந்திரியே காவலிருந்த தாராம்! பாதுகாப்பு அமைச்சருக்குத் தன் நாட்டு மக்களைக் காப்பதில் எவ்வளவு கடமை உணர்வு பார்த்தீர்களா! இன்னும் அவ ளைச் சுற்றி வட்டமிட்ட கோடீஸ்வரர்கள் எத் தனை எத்தனை பேர்! அவள் வாழும் உலகத் தின் மனிதர்கள் சமுதாய அந்தஸ்திற்காக- அரசியல் அதிகாரத்திற்காக- பொருளாதார பாதுகாப்பிற்காகத் தங்கள் அறிவை -மானத் தை - திறமையை விற்பது மிகச் சாதாரணம்! அவள் மட்டும் சும்மாயிருப்பாளா என்ன! கடைசியில் அவள் எந்தப் புகழை விரும் பினாளோ அந்தப் புகழ் அவளுக்குக் கிடைத் துவிட்டது! இப்போது அவளது புகைப்படத் திற்குப் பல ஆயிரம் பவுன்களாம்! வாழ்க்கை வரலாற்றுக்கோ 15,000 பவுனாம்! இப்போது இங்கிலாந்து அவளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டதல்லவா! அவளைத் தூற்றி என்ன பயன்? முதலாளித்துவ சமுதாயத்தின் கோரப் பிடியில் சிக்கிச் சீரழிந்த பல கோடிப் பேரின் பட்டியலில் அவளும் ஒருத்தி! முத லாளித்துவ சமுதாயம் குடும்ப உறவுகளையே பண உறவாக்கி விடுகிறது! மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உணர்வையே ஒரு வியாபாரப் பரிவர்த்தனைப் பண்டமாக்கி விடுகிறது! அவள் மட்டும் எம்மாத்திரம்? மறந்துவிடாதீர்கள்! கீலர் முதலாளித்துவ சமுதாயத்தின் அடையாளச் சின்னம்!

அதே நேரத்தில் தனது வட்டநிலவொளி முகத்தை இரும்பு ஹெல்மெட்டில் பதித்த வண்ணம் பத்திரிகையின் முகப்பில் அலங் கரித்தாளே வாலண்டினா. அவளும் பெண் தான்; ஆனால் சோஷலிச சமுதாயத்தின் தயாரிப்பு- சோவியத் ரஷ்யாவின் உரிமை பெற்ற குடிமகள்! அவள் தனது குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தாள்! அவளது தந்தை நாஜிஸ வெறியர்களை எதிர்த்தார் என்ற காரணத்தால் இளமை யிலேயே கொல்லப்பட்டார்! அந்தப் பொற் கொடியைப் பெற்ற உத்தமியோ தான் பெற்ற குழந்தைகளை வளர்க்க நெசவாலையில் உடல் கடுக்க உழைத்தாளாம்.

அந்தக் குலமகளின் குடும்ப விளக்கோ தனது ஏழாண்டுக் கல்வியை முடித்துப் பின் டயர் கம்பெனிக்குச் சென்றாள், உழைத்துப் பிழைக்க. பகலெல்லாம் அங்கே பாடுபட்டுப் பின் மாலைக் கல்லூரியில் சேர்ந்து ரஷ்ய பொருளாதாரம், இலக்கியம் ஆகியவற்றைக் கற்று தேனீயைப் போல் அறிவைச் சேகரித் துக் கொண்டாள். லண்டனில் கீலரின் கருத் தில் பால் உணர்வூட்டும் நாவல்கள் நடமாடிக் கொண்டிருந்த நேரத்தில் வாலண்டினாவின் கரங்களை டால்ஸ்டாயும், செக்கோவும், கார்க்கியும், மார்க்ஸூம் அலங்கரித்தனராம்.

ககாரின் ககன விளிம்பைத் தொட்டுத் திரும்பியதும் அவளையும் அந்தப் பேராவல் கவ்வவே, கடுமையாகப் படித்துத் தேர்வுகள் பல பெற்றுத் தன்னைத் தகுதி உடைய வளாக்கிக் கொண்டாள்! தகுதி பெற்ற அந்தத் தங்கச் சிலைக்கோ அரசும் அழைப்புக் கொடுத்தது, விண்ணைச் சுற்ற. ஆபத்து நிறைந்த பணியை அந்த முழுநிலவு முத்துச் சிரிப்போடு ஏற்றுக் கொண்டது. இன்றோ விண்ணைச் சுற்றிய வீராங்கனை என்ற வீர விருதைப் பெற்றுத் திகழ்கிறாள் வாலண் டினா. புகழ் அவள் காலடியில் மண்டிக் கிடக்க, மேலை நாட்டு விஞ்ஞானிகளின் முகமோ சுண்டிக்கிடக்கிறது!

ஆம். கீலர்... அவளும் பெண் தான்! தன் எழிலுடம்பும் பாளைச் சிரிப்பும் தன் முத லாளித்துவ நாட்டிற்கு அவசிய அன்றாடத் தேவை என்கிறாள்!

வாலண்டினா... அவளும் பெண் தான்! விண்ணைச் சுற்றிய வீரப்புதல்வி! சோஷலிச சோவியத்தின் தவப்புதல்வி என்கின்றனர். அதிலே சிறப்பு அவளுக்கு.

பார்த்தீர்களா, முரண்பாடுடைய இரு வேறு உலகுகளை! இருவேறு தத்துவத்தின் சின்னங்களை! இல்லை, இரண்டு அழகிகள் இரு வேறு உலகத்தின் பிரதிநிதிகளாக நின்று பேசுகின்றனர்.

இப்போது சொல்லுங்கள். பழம்பெரும் நாடாம் பாரதத்தின் மண்ணில் தோன்ற வேண்டியது கிரிஸ்டியானா கீலர்களா அல் லது வாலண்டினா தெராஸ்கோவாகளா?

-13.7.63

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com