Contact us at: sooddram@gmail.com

 

வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மக்கள் விடுதலைப் பிரகடனம !!

இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மொழி இன கலாச்சாரங்களில் இணைந்தவர்கள் அவர்கள் தமது இனஉறவுகளின் அடிப்படையை நன்கு புரிந்தே வரலாற்று காலம் தொட்டு வாழ்கிறார்கள் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த இனவாத கட்சிகள், தமது பதவிக்காலங்களில் பௌத்த இனவாத இராணுவ அரச இயந்திரங்களை பாவித்து இலங்கையில் இரு மொழிபேசும் மக்களையும் பிரித்து மோதவிட்டு தமது சுயலாபங்களை ஈட்டி சென்று விடுகின்றனர் இதன் அடிப்படையில் இன்றுள்ள இலங்கை அரசும் அதன் உச்சக்கட்டமான நடவடிக்கையில் தானே மாட்டிக் கொண்டிருப்பது நல்ல உதாரணங்களாகும்.

1956,1958,1961,1977,1981,1983,2009(முள்ளிவாய்கால்), இலங்கையில் தமிழ் மக்களி மீதான தொடரச்சியான இனப்படுகொலைகள், சிறைச்சாலைகளில் கொலைகள், தமிழ்மக்கள் காணாமல் போதல், தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் வாழ்வியல் அத்துமீறல்கள்,  போன்றவற்றிலிருந்து இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த இனவாதமே இலங்கைத்தீவின் பிரதான எதிரியாகும், எதிரிகளாக்கும் உணர்ச்சி  அரசியல் இலங்கையில் நிரந்தர அமைதியை தராது என்பதையும் தெளிவாக அடையாளம் கண்டு இலங்கையில் தமிழ்-சிங்கள் சமத்துவத்துவத்திற்கான  போரட்டத்தை மக்கள் நடாத்த வேண்டும் என்பதை தோழர் தங்கத்துரையின் விடுதலைப் பிரகடனம் வெளிப்படுத்துகின்றது.

தமிழ் உரிமைப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான தோழர் தங்கத்தரையின் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பிரகடனத்தை இலங்கையில் இனவாதத்தின் உச்ங்களில் ஒன்றான 1983ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தில் கொல்ப்பட்ட தமிழ் மக்களினதும், அன்று சிறையில் கொல்லப்பட்ட 52 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவு அஞ்சலியாகவும் இங்கு பதிவிடுகின்றோம்.

1983 பெப்ரவரி 24ம் திகதி சிறிலங்காபாசிச நீதிமன்றத்தில் தோழர் தங்கத்துரை அவர்கள் வெளியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் பிரகடனம்

கனம் நீதிபதி அவர்களே!

சிறீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான அதிகாரம் உரிமை கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபனையையும் மீறி சிறீலங்கா அரசின் நிதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.

நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஸ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது இம்மன்றத்தின் விசாரணைக்கு சமூகமளித்தோம். எமது குற்றமற்ற தன்மை மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி சாட்சிகளின் மூலமாகவும் சித்திரவதைப் புகழ் சிறீலங்கா அரசு பொலிஸ் அதிகாரிகளை தமது குறுக்கு விசாரணையின்போது அடிக்கவைத்த குத்துக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்துவிட்டமை கண்கூடு.

வெள்ளையர் இந்நாட்டை சிங்களப்பிரபுகளிடம் தமிழ்மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்து செல்கையிலே தமிழ்மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாக சிங்களப்பிரபுக்கள் எம்மை இரண்டாம்தர பிரஜையாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.

இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்துவிடக் கூடாது என்ற தீர்க்க தரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது மலையகத் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்பு.

அடுத்து வந்த கால்நூற்றாண்டு காலமாக தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும் தமிழ் தலைவர்களினது கடும் எதிர்ப்புகளையும் மீறி திட்டவட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விடயங்கள் அல்ல. இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான மக்களும் தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையிலேயே மிக நாகரீகமாகவும் உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன? தீ நாக்குகள் தீண்டின!

நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன்முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள் தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகிகள் மீது சிறீலங்காவின் ஏவல் இராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரீக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.

இப்படி ஒன்றா? இரண்டா? கடந்த முப்பத்தைந்து வருட காலமாக இத்தீவின் வாழ் தமிழ்மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள் வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன. எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டது.

காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப்பொக்கிசங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்கள் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.

இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா. இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா எனினும் கிடையாது. இவ் இம்சைகள் யாவும் இவர்களின் இலட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ் மக்கள் அதை சிறிலங்கா அரசால் நடத்திமுடிக்கப்பட்ட தேர்தல்களில் அதை உறுதியாய் நிரூபித்தனர்.

இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடாத்துவதன் மூலமாயும் அரசியல் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசு நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்து பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரைநூற்றாண்டு பூர்த்தியைக் கொண்டாடிய அதேவேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்த சாமத்தில் இராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொழுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றன.

எமது பூமியை எம்மிடம் தாரும்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com