Contact us at: sooddram@gmail.com

 

மனிதன் உருவாக்கிய அறிவியல் புரட்சியினால் பிராணிகளும் மரங்களும் உயிர்வாழ்வதில் சங்கடம
 

(கிருஷ்ணன் ரஞ்சனா )

மிழ் நாட்டிலுள்ள ஓடைப் பட்டி கிராமம் திராட்சைகளின் சொர்க்கம். இங்கு கறுப்பு திராட்சை அதிகமாக விளையும். அதே சமயம் அணில்களும், சிறு குருவிகளும் ஆயிரக் கணக்கில் பழங்களைத் தின்பதற்கு கும்பல் கும்பலாக வரும். அவற்றை விரட்டுவதற்கென்று தோட்டம் முழுதும் ஆங்காங்கே இரண்டு உயர்ந்த மரக் கம்பங்களை ஊன்றி நூல் கட்டி அதில் பழைய தகர டப்பாக்களைத் தொங்க விட்டிருப்பார்கள். அதன் இறுதி முனையில் ஒரு நூல் தொங்கும் அதை இழுக்கும்போது ஒட்டுமொத்த டப்பாக்களும் ஆடுவதால் அதி பயங்கர சப்தம் எழும். விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கு வேலையே இதுதான். பிற நாட்களில் பெரியோர்கள் இவ்வேலையில் ஈடுபடுத்தப்படுவர். இதன் ஒலியால் அவை பயந்து ஓடும். இதையேதான் தினை புலத்தில் கவண் எடுத்து கல்லெறிந்து பறவைகளை விரட்டுவாள் சங்க கால இளம் கதாநாயகி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னேறிய அறிவியல் இன்று இந்த வேலையை தன் கையில் எடுத்து மனித உயிருக்கு மட்டுமல்ல, சிறு உயிரிகளுக்கும் உலை வைக்கத் துவங்கியுள்ளது.

வளர்ந்து வரும் உயிரின அறிவியல் இன்று அவைகளின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்ளத் துவங்கி யுள்ளது. மிக நுட்பமான ஆய்வின் மூலம் நாம் நினைக்க மறுக்கும், மறந்துவிட்டிருக்கும் அம்சங்களுக்கும் கூட அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

மனிதன் உண்டாக்கிய ஒலி மாசு சிறு பறவைகள், குருவிகள், பூச்சிகள் போன்ற உயிரினங்களைப் பாதிப்ப தோடல்லாமல் தாவரங்களையும் பாதிக்கச் செய்கிறது என்ற தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. உயிரினங்கள் மூலமே தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை பெருமளவு நடைபெறுவதும் வித்துக்கள் பல இடங்களுக்குப் பரவுவதும் இவை களால்தான் என்பதை நாம் அறிவோம்.

துர்ஹாமின் தேசிய பரிணாம தொகுப்பு மையத்தைச் சேர்ந்த கிளிண்டன் பிரான்சிஸ் என்ற விஞ்ஞானி இதற்கான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் தனது சக தோழர்களுடன் நடத்திய சோத னையில் சில உயிரினங்கள் ஒலியின் அளவு அதிகமுள்ள இடங்களில் மிக அதிக எண்ணிக்கையில் வசிப் பதையும், சில திடீரென தங்களது எண்ணிக்கையை இழந்து நிற்பதையும் கண்டறிந்துள்ளார். மனிதன் உருவாக்கிய ஒலி மாசால் தாவரங்கள் எவ்வாறு பாதிப்படைகின்றன?

பல தாவரங்கள் தங்கள் இனப் பெருக்கத்திற்காகப் பறவைகளையும் பிற உயிரினங்களையும் சார்ந்து வாழ்கின்றன 2007 - 2010 வரை நடத்திய தொடர் ஆய்வில் சில முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. நியூ மெக்சிகோ மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு தயாரிப்பு தளத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஒலி மாசு அதிகமுள்ள சாலை நகரம் செயற்கை விளக்குகள், வேதிப் பொருட்கள் உபயோகம் என தனித்தனியாகப் பிரித்து ஆய்வு செய்யப்பட்டது. முதலில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட செடிகளை நட்டு அதில் உயிருள்ள செடிகளை போல் வேதிப் பொருட் களை இட்டு தங்களது சோதனையைத் துவங்கினர். இதற்காக அடர் சிவப்பு நிறம் கொண்ட ஸ்கார்ட் ஜினியா போல உள்ள பிளாஸ்டிக் பூ உப யோகிக்கப்பட்டது.

ஐந்தைந்து செடி கொண்ட கொத்தாக நடப்பட்ட தாவரத்தின் உள் சிவப்பு நிறக் கயிறால் சுருட்டப்பட்ட மிக நுண்ணிய குழாய்களில் தேனைப் போல் சுவையுள்ள சர்க்கரை நீர் நிரப்பப்பட்டு கட்டப்பட்டது. அயல் மகரந்த சேர்க்கைக்கு ஏதுவாக பூச்சிகளும், பிற சிறு உயிரினங்களும் சந்தேகப்படாத வகையிலும், குழம்பிக் கொள்ளாதவாறும், பூவின் வண்ணங்கள் மாற்றப்பட்டன.

500 மீ. தொலைவில், நெடுஞ்சாலை யைப் போல் தொடர் ஒலி எழு ப்பப்பட்டது. அங்கு கறுப்பு வண்ண தேன் சிட்டுக்கள், ஒரு நாளைக்கு மிக அதிகமாக ஐந்து முறை வந்த தென்றும், சத்தம் அதிகமுள்ள இட ங்களை விரும்பாத இவைகளது முட்டைகளை குஞ்சுகளை உண்ணும் எதிரியான புதர்க் குருவிகளிடமிருந்து தப்பிக்கவே இவை இவ்வாறான இடங்களைத் தேர்வு செய்தன என்கிறார் பிரான்சிஸ்.

இவர் மேலும் கூறுகையில், தேன் சிட்டுகளின் அதிக வருகை அயல் மகரந்த சேர்க்கைக்கும், அதனால் அதிக விதை உற்பத்திக்கும் பெரிதும் உதவின. இது ஸ்கார்லட் ஜினியா போன்ற தாவரங்களுக்கு ஒலி மாசால் கிடைத்த மறைமுக நன்மை என்கிறார்.

மற்றொரு விதமான சோதனையும் அதே தளத்தில் நடத்தப்பட்டது. அதில் பைன் போன்ற ஊசியிலை மரங்களில் நடத்தப்பட்டது. 120 பைன் மர விதைகளை சேகரித்து அதை சத்தம் அதிகமுள்ள பகுதியிலும் சத்தமில்லாத பகுதியிலும் தூவிவிட்டு எவ்வகை விலங்குகள் இதை உண் கின்றன என்பதை தானியங்கி புகைப் படக் கருவி மூலம் சோதனை செய் தனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு அக்கருவியை சோதனை இட்டதில், அணில், சுண்டெலி, முயல், பறவைகள் போன்ற ஏராளமானவை வந்து உண்டன. அதில் குறிப்பிடும் படியாக சுண்டெலி சத்தம் அதிகமுள்ள இடத் தில் அதிகமாக வந்ததையும், புதர் குருவிகள், அவ்விடத்தை முற்றிலும் தவிர்த்ததையும் கண்டறிந்தனர். இயற்கையின் நியதிப்படி பறவைகளின் எச்சம் மட்டுமே ஊசி இலை மரங்கள் முளைக்க உதவும் ஊர்வனங்கள், பிற உயிரினங்களால் இந்த உபயோகம் இல்லை.

புதர்க் குருவிகள் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கில் வித்துக்களை விழுங்கி, அதை வருடம் முழுவதும் உண்பதற்காக மறைவான இடத்தில் அவற்றைக் கக்கி, மண்ணின் அடியில் புதைத்து வைக்கும். தேவைப்படும் போது அதைத் தோண்டி எடுத்து உண்ணும். இதன் எச்சில் பட்ட, இவைகளால் மீதம் வைக்கப்பட்ட விதைகள் புதுச் செடியாக முளைக்கும்.

இக்குருவிகள் வராத போது ஊசி இலை மரங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது. -குருவிகள், சத்தமில்லாத இடத்தையே அதிகம் விரும்புகின்றன என்பது நிரூபணமானது. இதேபோல் ஆல், அரசு, இச்சி போன்றவைகளின் இனப்பெருக்கம் கூட இச்சிறு உயிரிகளை சார்ந்தே உள்ளது.

தண்ணீருக்கடியில் ஒலி பெருக்கிகள் வேகப் படகுகள் எழுப்பும் ஒலி, அதன் நுண்ணிய அதிர்வுகளால், புள்ளி மீன், தேவதை மீன் போன்ற சில வகை மீன்கள் தாங்கள் வாழும் நல்ல வாழிடத்திலிருந்து இடம் பெயரத் துவங்கியுள்ளன.

இது சில சமயத்தில் அவற்றை மரணத்திற்கும் இட்டுச் செல்கின்றது. டாக்டர் பர்சர் என்பவர் செய்த ஆய்வில் கடலில் ஏற்படும் ஒலி மாசால் 10 வினாடிக்கும் குறைவாக உண்டான ஒலிகள் கூட மூன்று முள் கொண்ட ஸ்டிக்கிள் பேக்என்ற மீனினத்தின் நடத்தையில் மாறுபாட்டைக் கொண்டு வந்தது. மேலும், அவைகளின் வேட்டையாடும் திறனைக் குறைத்து அவற்றை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, கிடைக்கும் உணவைக் கூட முழுமையாக உண்ண முடியாத நிலைமைக்கு தள்ளியது. இதனால் அவை பருவம் எய்துவதில் சிரமம் கொண்டது. மற்றும் குறைப் பிரசவத்திற்கும் ஆளாகி உள்ளன என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

காற்றாலைகளின் இறக்கை சுற்றுவதன் மூலம் உருவாகும் சத்தம், காக்கை, புறா, தவிட்டுக் குருவி போன்றவைகளின் பருவ சுழற்சியை மாற்றியதன் விளைவு, அவை முட்டையிடும் காலங்களில் மாறுபாட்டினைக் கொணர்ந்துள்ளது என்பதை அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் சமீபத்தில் கண்டறிந்து 30 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

மீன்கள் தன் குணம் மாறுவதும் குருவிகள் அதிகளவு ஒலி எழுப்புவதும், பருவத்தில் செடிகள் பூக்காமல் மொட்டுக்களைத் தாங்களாகவே உதிர்த்துக் கொள்வதும், நமது சராசரி செவித்திறன் குறைந்து இருப்பதும் ஒலி மாசால்தான். நாம் உருவாக்கிக் கொண்ட அறிவியல் புரட்சியே இதற்கெல்லாம் காரணம் என்பதே நிதர்சனம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com