Contact us at: sooddram@gmail.com

 

நடக்காததை நடந்தது என்று கூறவிழையும் மன்னார் சம்பவம்

(அபூ அஸ்ஜத்)

வடக்கில் முஸ்லிம்களின் வரலாற்று பதிவுகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலம் போன்ற நிலையை மீண்டும் அங்கு காணமுடிகின்றது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வடமாகாணத்திலிருந்து விரட்டப்பட்டு 23 வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் தற்போது அம்மக்கள் தமது தாயகத்தில் மீள்குடியேற செல்கின்றபோது எண்ணிலடங்காத பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தாம் வாழ்ந்த பூர்வீக பூமியில் தமக்கு உரிமையில்லையென்று சொல்லுமளவுக்கு ஆக்கிரமிப்புக்கள் நடந்தேறுகின்றன.

வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டால் தமது செல்வாக்கு சரிந்துவிடும் என்ற பயத்தினாலோ என்னவோ ஆயுத இயக்கங்களில் இருந்து வந்து பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் சில அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் ஆதரவு தளம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அதனை தேடி அழிக்க முனைந்துள்ளனர். ஜனாதிபதியை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் குற்றவாளியாக காண்பிப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ் மக்கள் இன்று அச்சமும் பீதியும் இல்லாமல் வாழ்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே பிரதான காரணம் என்ற உண்மையை அவர்கள் மறக்கடிக்க முற்படுகின்றனர்.

அரசில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் அனைவரும் பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதற்கு பல்வேறு தியாகங்களையும் பங்களிப்பினையும் செய்துள்ளனர். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருந்தபோது தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் காலமுள்ளவரை மறக்கக்கூடியது அல்ல. வடக்கை பொறுத்த வரையில் மன்னார், வவுனிய ,முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அரச சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எதனை வடக்கில் செய்தாலும் அதனை விரோத செயல்களாக சர்வதேசத்திற்கு காட்டி வயிறு வளர்க்கும் அரசியல் தலைமைகளும், அரச சார்பற்ற சில அமைப்புக்களும் இடைவிடாது அதனை செய்துவருகின்றன. இந்த வரலாற்று பின்னணியில் வடக்கில் முஸ்லிம்கள் மீளக் கூடியேற வருகின்ற போது அதனை தடுப்பதில் இனவாத சக்திகள் மிகவும் மூர்க்கத்தனமாக நிற்பதை கூறாமல் இருக்க முடியாது. மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் நொச்சிக்குளத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். சன்னார் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற சென்ற போது அவர்கள் தடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வேறு இடத்தில் இடம் வழங்கப்பட்ட போது அதற்கெதிராக மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். புதுக்குடியிருப்புக்கும் எருக்கலம்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் 200 முஸ்லிம்களுக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியினை தனவந்தர் ஒருவருக்கு கொடுத்தமை, அரச நிர்வாகத்தின் சில உயர் அதிகாரிகள் முஸ்லிம்கள் தமது தேவை நாடி செல்கின்ற போது அவர்களை நிந்தனை செய்கின்றமை போன்ற செயற்பாடுகள் இன்னும் மன்னாரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இவ்வாறான தொடர்கதைகளில் ஒன்றாக மன்னாரில் அண்மையில் மக்களால் நடத்தப்பட்ட அமைதிப் போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட களேபரமாகும். மன்னாரில் ஏற்பட்ட சம்பவத்தின் வரலாற்று பின்னணியை பார்க்க வேண்டியது மேலும் எமது சிந்தனைக்கு வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட போது மன்னார் உப்புக்குளம் பிரதேசத்தில் உள்ள 70 சதவீதமான முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர். அங்கு வாழ்ந்த மக்களின் பிரதான தொழில் கடற்றொழிலாகும். அந்த மக்கள் தமது தொழிலுக்காக உப்புக்குளம் கோந்தப்பிட்டி துறையினை பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு விடத்தல்தீவைச் சேர்ந்த கத்தோலிக்க மீனவர்கள் தமது தொழிலினை மேற்கொள்ள மன்னார் பகுதிக்கு வந்து பள்ளிமுனை பகுதியில் சில காலம் தொழிலில் ஈடுபட்டனர். பள்ளிமுனை என்பது முழுமையாக கத்தோலிக்கர்களை கொண்ட கிராமமாகும். விடத்தல்தீவு மீனவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தி கண்ட மக்கள் அங்கிருந்து அம்மீனவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் பனங்கட்டிகொட்டு என்னும் மற்றுமொரு கத்தோலிக்க கிராமத்தில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டனர். அங்கிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்களது பரிதாப நிலையினை கண்ட உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்கள் தமக்கு சொந்தமான கோந்தப்பிட்டி துறையினை பயன்படுத்த அனுமதியளித்தனர். அப்போது புலிகளின் மன்னார் கடல் பிரதேச பொறுப்பாளராக இருந்த அமுதன் என்பவர் முஸ்லிம்களுக்கும் விடத்தல் தீவு மீனவர்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மீண்டும் முஸ்லிம்கள் தமது மண்ணில் குடியமர வந்தால் அவர்களது இந்த துறையினை கையளித்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டே அந்த உடன்படிக்கைக்கு சாட்சியாக அவர் கையொப்பமிட்டுள்ளார். அதன் பிறகு பல முறை 2005, 2006, 2007 ஆகிய காலப்பகுதியில் மன்னார் உப்புக்குளம் பகுதியில் 80 சதவீதமான முஸ்லிம்கள் மீள்குடியேறியிருந்தனர்.

அப்போது இந்த கோந்தப்பிட்டி துறையினை முஸ்லிம்களிடம் கையளிக்குமாறு கோரிய போதெல்லாம் விடத்தல்தீவு கத்தோலிக்க மீனவர்கள் விடாப்பிடியாக அதனை தர மறுத்தே வந்தனர். அதனால் இரு மீனவ சமூகத்திற்கும் இடையில் சிறிய மனக்கசப்பு இருந்தே வந்தது. இந்த நிலையினையடுத்து மன்னார் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் என பலதரப்பையும் உப்புக்குளம் மீனவர்கள் சந்தித்து நியாயம் பெற்றுத்தருமாறு கோரினர். அவர்கள் சில நடவடிக்கைகளை எடுத்தனர். இருந்தபோதும் அது பயன் அளிக்கவில்லை.

இதனையடுத்து இரு மீனவ சமூகத்திற் குமிடையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன. நீண்ட கால தமது தொழில்துறையினை செய்த மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்படும் போது அம்மக்கள் தமக்கு நியாயம் வழங்கு மாறு கோரி வீதிக்கு இறங்கினர். பொறுமையிழந்த மக்கள் அமைதியான முறையில் சுமார் மூன்று மணி நேரம் தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன், நியாயத்தை சம்பந்தப்பட்டவர்கள் தாருங்கள் என்று பெண்களும், ஆண்களும் கோரி நின்றனர். அவ்வேளை நீதிமன்றிலிருந்த நீதவான் தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வீதிக்கு வந்துசுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளுஎன்று பொலிஸாருக்கு பணிப்புரையிடவே மக்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் குண்டாந்தடி பிரயோகம் என்பனவற்றை மேற்கொண்டனர். இதில் பலர் சிறு காயங்களுக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மன்னார் நகரத்தின் பதற்ற நிலை குறித்து கொழும்பிலிருந்த அமைச்சர் றிசாத் மற்றும் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் எம்.பி ஆகியோருக்கு தகவல் வந்தது. கொழும்பில் வேட்புமனு விடயமாக ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த போது அங்கிருந்து விசேட விமானம் மூலம் மன்னார் தள்ளாடியினை அமைச்சர் வந்தடைந்தார். அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மன்னாரை வந்தடையும் போது மாலை 3.30 மணியிருக்கும். அவர்கள் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர அவர்களின் வாகனத்தில் மன்னார் நகரை நோக்கி பயணித்தனர்.

மன்னார் நகரில் எங்கும் பொலிஸ் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோர் குவிக்கப்பட்டிருந்தனர். அமைச்சர் றிசாத் உப்புக்குளம் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை ஆசுவாசப்படுத்தி பள்ளிவாசலுக்குள் அனைவரும் அழைத்து சென்று பொறுமை காக்குமாறும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் கூறினார். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்க அதிபர் தலைமையில் உயர் மட்ட மாநாடு அரசாங்க அதிபர் பணிமனையில் இடம்பெற்றது. அதில் பாதுகாப்பு தரப்பினர் அரச அதிகாரிகள் மீனவ சமாசங்களின் தலைவர், மன்னார் குரு முதல்வர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னாரில் காணப்பட்ட இந்த நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு விஜயம் செய்தமையினாலேயே முடிந்தது. ஆனால் இன்று அவருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அமைச்சர் செயற்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் விசமப் பிரசாரங்களை தமக்கு சார்பான ஊடகங்களை பயன்படுத்தி முடுக்கிவிட்டுள்ளன. மன்னாரில் நடக்காதவைகளை நடந்தது போன்று பிழையாக சித்தரித்து முஸ்லிம் சமூகத்திற்கும் வன்னி மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு இன, மத, பேதங்களின்றி பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த நாட்டில் சட்டமும், ஒழுங்கும் தமது ஆட்சியில் சரியாக முன்னெடுக்கப்படுவதாகவும், அண்மையில் தனது அமைச்சரவை அமைச்சர் ஒருவர் குறித்தும் பேசப்படும் விடயங்கள் குறித்து நினைவுபடுத்தியுள்ள ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்தும் கூறியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை சட்டத்தரணிகள் சங்கத்தினர் மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை அமைச்சர் றிசாத் பதியுதீனை நேரடியாக இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்து வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் முஸ்லிம்களுடன் பொதுமக்கள் பலரும் வீதியில் இறங்கி அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் மன்னார் ஜம் இய்யதுல் உலமா மற்றும் பல்வேறு அமைப்புகள் மன்னாரின் உண்மை நிலைமையை விளக்கியும் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எது எவ்வாறாக இருந்த போதும் இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நீதியினையும், நியாயத்தினையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் உருவாகுவதற்கு ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது என்பதே சமாதானத்தை விரும்பும் மக்களது வேண்டுகோளாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com