Contact us at: sooddram@gmail.com

 

தொழிலாளர் விரோதத்தை வளர்க்கும் ஊடகங்கள் 

(எஸ். கண்ணன்)

அரசியல் கட்சிகள் தங்களைச் சார்ந்த தொழிற்சங்க அமைப்புகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டியத் தேவை இருக்கிறது. இல் லையென்றால் கட்சியின் கொள்கைக் கட்டுப் பாட்டில் இல்லாமல், தலைமைக் கட்டுப்பாட் டிலும் இல்லாமல், தனித்துச் செயல்படும் நிலைமை உருவாகி விடும். இது பல தகராறு களுக்கும், கொலைகளுக்கும் வழிவகுத்து விடும்” - இந்த வார்த்தைகளை தொலை நோக்கு அக்கறையுடன் முன் வைத்ததாக நினைத்துக் கொண்டு, தினமணி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது. தொழிற்சங்கங் கள் தொழிலாளர்களின் நலனுக்காகக் குரல் கொடுப்பவையாக இல்லாமல், இடைத்தரகர் களாக மாறுவதுதான் பிரச்சனைகளுக்குக் காரணம் என்பதை யாரும் சொல்லத் தயாராக இல்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது? என தினமணி தலையங்கத்தை நிறைவு செய் துள்ளது.

இறுதி வார்த்தைகள் வர்க்கப் பாசத்தில் இருந்து உதித்தது என்பது சொல்லாமல் விளங்கும். மேற்படி அக்கறையும், அவதூறும் மானேசரில் உள்ள மாருதி சுசூகி நிறுவனத் தில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து முன் னெழுந்தது. அராஜகத்தைக் கண்டிப்பது அவசியம். மாருதி சுசூகியில் நடந்த படு கொலையையும் அதைத் தொடர்ந்து நடை பெறும் தொழிலாளர் விரோத அணுகுமுறை யையும், தொழிற்சங்கங்களும், இடதுசாரி களும் கண்டித்துள்ளனர். ஆனால் தினமணி மட்டுமல்ல, எல்லா ஊடகங்களும் சூப்பர்வை சரின் சாதிரீதியான வசைச் சொற்களையும், வசைகளுக்கு ஆளான தொழிலாளியை மனிதவள மேலாளர் சஸ்பெண்ட் உத்தர விட்டு வெளியேற்றியதையும், நிர்வாகம் அடி யாட்களைக் ( ெய்டு பவுண்ஸர் ) கொண்டு தொழிலாளர்களைத் தாக்கியதையும் உல கிற்கு சொல்ல மறுக்கின்றன. சூப்பர்வைசர் தொழிலாளரை சாதியைச் சொல்லி திட்டியது நியாயப்படுத்தக் கூடியதா? தொழிற்சங்கங் களின் கவலை, தொழிலாளர்களை ஆத்திர மூட்டி முதலாளித்துவம் தன் சுரண்டல் குணத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது என்பதே.

தொழில் நிறுவனத்திற்குள் புகைப்படங் கள் மற்றும் வீடியோ எடுக்கும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வைத்துள்ளனர். இந்தக் கரு விகளில் தொழிலாளர் செய்யும் தவறுகள் பதி வாகிறது. ஆனால் தொழிலாளரை அவமானப் படுத்தும் வார்த்தைகளோ, தொழிலாளரின் சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகளோ பதிவு செய்யப்படுவதில்லை.

21ம் நூற்றாண்டில், ஜனநாயகமும், மனித உரிமையும் உரக்கப் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2011 துவக்கத்தில் டுனீசியாவில் ஒரு தொழிலாளரை காவல்துறை மிகக் கேவல மாக நடத்தியது. அதை அந்த ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. தொழிலாளர்களின் ஆவேசமான போராட்டத்தில் மக்களும் கரம் கோர்த்தார்கள். அந்த நாட்டின் அதிபர் பென் அலி, தினமணியைப் போல் ஒரு அமெரிக்க ஆதரவாளர். இருந்த போதும் மக்கள் சக்திக்கு முன், பென் அலியை அமெரிக்கா ஜனநாயகம் என்ற போர்வையில் காவு கொடுத்தது. மனித உரிமை அல்லது ஜனநாயகம் என்பது அமெ ரிக்காவும் அதன் ஆதரவாளர்களும் பேசு வதற்கு பயன்படும் சொற்களல்ல, என்பதை அமெரிக்க ஆதரவு ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே மானேசர் சுசூகி நிறுவனத்தில் 33 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொழிற்சங்கத்தை அங்கீ கரிக்க வேண்டும்; தொழிற் சங்கம் அமைத்தகுற்றத்திற்காக’, சஸ்பெண்ட் செய்யப்பட்ட வர்களை மீண்டும் பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக மேற்படி வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப் போது போராட்டக் காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக எந்த ஒரு பதிவும் இல்லை. இப் போது நடைபெற்றது முழுக்க முழுக்க ஆத்திர மூட்டல் மற்றும் அடக்குமுறை பின்புலத்தில் இருந்து நடைபெற்றது.

இரண்டாவது, அகிம்சை முறையில் தொழிற்சங்கம் நடத்த வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் இதில் மறைக்கப் பட்டிருக்கும் உண்மை யாதெனில், நிர்வாகம் தொழிலாளர் நலத்துறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை மதித்ததுண்டா? நிர் வாகங்களின் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வருவோர், வந்த நாட்களை விட, வராமல் புறக் கணித்ததே அதிகம். நடைபெறும் பேச்சு வார்த்தைகளில் தொழிலாளர் துறை அதி காரிகள் அரிதாக அளிக்கும் அறிவுரைகளை மதித்து நடப்பதுண்டா?

மூன்றாவது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிறைவேற்றிய, தொழிற்சங்கங் களை அங்கீகரிக்க வேண்டும் ( இணக்க விதி 87 ) மற்றும் கூட்டு பேர உரிமைக்கு உத்தர வாதம் செய்ய வேண்டும் ( இணக்க விதி 98 ) ஆகியவற்றிற்கு இன்று வரை இந்திய அரசு ஒப்புதல் தரவில்லை. பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற நாடுகள் கூட இதற்கு ஒப் புதல் தந்துவிட்டன. இது பன்னாட்டு நிறுவ னங்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு மட்டு மல்ல. தொழிலாளர்களின் உரிமைகளை கைகழுவுகிற அணுகுமுறையும் ஆகும்.

நான்காவது, ஒரு நிறுவனத்தில் வேலை நிறுத்தம் என்றால் உடனடியாக காவல்துறை வந்து, தொழிலாளர்களை மிரட்டுகிறது. பல நேரங்களில் கைது செய்கிறது. ஆனால் என் றாவது, தொழிலாளர் கொடுத்த புகார் மீது, காவல்துறை அல்லது அரசு நடவடிக்கை எடுத்ததுண்டா? ஜனநாயக ரீதியில் போராட் டங்களை நடத்த அனுமதித்ததுண்டா? மிகச் சமீபத்தில் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஊழியர் சங்கத்தின் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, ஏற்றுக் கொண்ட தொழிலாளர் துறை ஆணை யரின் அறிவுரையை அமலாக்க மறுத்து வரு கிறது நிர்வாகம். பன்னாட்டு நிறுவனங்கள் இதை விட பலமடங்கு அத்துமீறல்களைச் செய்கின்றன.

அகிம்சை வழியில் இந்திய அரசியல் சட்டம் அனுமதித்த ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதில் இருந்தே, இது போன்ற குழப்பங்கள் அரங்கேறுகின்றன. இந்த குழப் பங்களைப் பயன்படுத்தி, தொழில் நிறுவனங் களும், அரசும் கூட்டாக இணைந்து மேலும் உரிமைகளை மறுப்பதற்கு முயற்சிக்கின்றன. இந்த முயற்சிக்கு ஊடகங்களும் தங்கள் வாதத்திறமையால் வலுச் சேர்க்கின்றன.

கொலையுண்ட அவனிஷ்குமார் குடும் பத்திற்கு மாருதி நிறுவனம் பெரும் தொகை வழங்கும், அரசாங்கமும் கூட அவரது குடும் பத்திற்கு கருணைத் தொகை அளிக்கலாம். மாருதி நிறுவனம் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் மீண்டும் பழைய படி செயல் படத் தொடங்கி விடும். ஆனால் இந்த சம்ப வங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள 99 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு யாரும் நிதி உதவி அளிக்கமாட்டார்கள். இவர்கள் பிணையில் வந்தாலும், இதே நிறுவனத்தில் வேலைக்கு அனுமதிக்கப் படுவது, மிகமிக அரிது. வேறு இடத்தில் வேலை கிடைப்பது அதைவிட அரிது. அந்தக் குடும்பங்களின் கதி என்ன?” இந்த வரிகளையும் தினமணி தலை யங்கம் தான் கூறுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் நிர்வாகத்தை விட விரைவாக குற்றவாளியாக்கித் தீர்ப்பையும் எழுதிவிட்டது தினமணி.

நிலப் பிரபுத்துவ ஆதிக்க சக்திகள், தங் களின் சாதிய மேலாதிக்கத்தை நிலைநாட்ட, “அடக்கு முறைக்கு எதிர்ப்பு என்ற பெயரில், நிலப்பிரபுக்களை பகைத்துக் கொண்டால் வேலை கிடைக்காதுஎன மிரட்டுவார்கள். அதை தினமணி வேறு வார்த்தைகளில், தொழிலாளர் மீதான பச்சாதாபத்தில் கூறுவது போல் மிரட்டுகிறது.

இந்தியாவின் மோட்டார் வாகன உற்பத்தி யாளர்கள் ஜூலை 25 அன்று சந்திக்கிறார்கள். மாருதி நிறுவன சம்பவத்தில் ஒரு பகுதியாக நிரந்தரத் தொழிலாளர் மற்றும் ஒப்பந்தத் தொழி லாளர் ஆகியோருக்கு இடையிலான பாரபட்ச மும் ஒரு காரணம் என்பதை ஏற்காவிட்டா லும், ஒப்பந்தத் தொழிலாளர் நியமனத்தில் நியாயம் இருப்பதாக, அதன் தலைவர் சாண் டில்யா ஒப்புக்கொண்டுள்ளார். இன்று இந்தி யாவில் வந்து முதலீடு செய்கிற அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், 20 சதவீதம் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்களை கொண் டிருக்கின்றன. 80 சதவீதம் ஒப்பந்தத் தொழி லாளர்கள் ஆவர். ஒரே வேலைக்கு இரண்டு விதமான சம்பளம் கொடுப்பதை நிறுவனப் பிரதிநிதிகள் நியாயப்படுத்துகின்றனர்.

ஒரு ஒப்பந்தத் தொழிலாளர் 480 நாட்கள் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை மதிப்பதில்லை. மாருதி தொழிலாளர் சங்கம் ஒப்பந்தத் தொழிலாளர் களை நிரந்தரப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததும் நிர்வாகத் தின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைக்குக் கார ணமாகும்.

சில ஆங்கில நாளிதழ்களில் அரசு குறிப் பிடுவதாக வெளியிட்டுள்ள செய்திகள், மேலும் தொழிலாளர் உரிமைகளைப் பறிப் பதற்கு எடுத்துக் கொடுப்பதாக அமைந்துள் ளது. அதாவது, இந்தப் போராட்டங்களுக்குப் பின்னணியில் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் இருக்கலாம் என்று கருதுவ தாக செய்தி சொல்கிறது. மாவோயிஸ்டுகள் இருக்கும் இடங்களில் காவல் துறையினா லும் அரசுகளினாலும் எந்தவித சட்டவிரோத நடவடிக்கையையும் தடுக்க முடியவில்லை. மாறாக, இக்காலத்தில் அரசு அதிதீவிர இயக் கங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்து வது போல் நடந்து கொண்டன. இப்போது தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க மாவோயிஸ்டு முத்திரை குத்த முயற்சிக் கிறார்கள். இந்த முயற்சி தவறு செய்கிற அதி தீவிரவாதிகளுக்கு, மேலும் மயக்கத்தை உரு வாக்குவதற்கு தான் பயன்படும். இது ஜன நாயக ரீதியாக செயல்படும் தொழிற்சங்கங் களின் செல்வாக்கை மறைக்கும் நோக்கத் துடன் எழுதப்படுவதாகும்.

மாருதி சுசூகி நிறுவனத்தில் நிகழ்ந்த சம் பவம் இனி எதிர்காலத்தில் நடக்கக் கூடாத ஒன்று. தொழிற் சங்கத்தை அங்கீகரிப்பது, ஒப்பந்தத் தொழிலாளர்களை சட்டப்படி நிரந் தரப்படுத்துவது ஆகியவை நிறைவேறுகிற போது ஜனநாயகத்தின் மீது கூடுதல் நம் பிக்கை கொள்பவர்களாக தொழிலாளர் உள் ளிட்ட அனைத்துப் பகுதியினரையும் உரு வாக்கிட முடியும். அதை உடனடியாக செய் வதே அரசின் கடமை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com