Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழர் தலையெழுத்தும்!

(வன்னியிலிருந்து ஈழப்பித்தன்)

தமிழ் இனத்தவர்அரசியல் தலைமை இன்றிதவித்தவேளை, புலிகளின் ஏற்பாட்டில் இதோ நாங்கள் இருக்கிறோம் என்றுவந்தவர்கள்தான் தமிழ் தேசியக் கூட்;டமைப்பினர். 2009ல் தமிழ் இனத்தவர்படுகொலைசெய்யப்பட்டபோதுஅதனைத் தடுத்துநிறுத்தமுடியாமல் ஏதோதோகதைகள் சொல்லிகொழும்புக்கும், இந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கும் பயணித்துவந்தனர் இந்தத் தலைவர்கள். யுத்தத்தை நிறுத்த என்ன திட்டங்கள் இருக்கின்றன என்றுகேட்டதற்கு, 'தம்பிமார் இருங்கோபார்க்கலாம்' நாங்கள் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறி மொத்த மக்களும் இறந்தபின் மீண்டும் நாங்கள்தான் தலைவர்கள் என்றுநாடாளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றிவிட்டனர்,பிளைக்கத் தெரிந்த கூட்டமைப்பினர்.

பாராளுமன்றம் சென்றுஎங்கள் இனத்தவர்சந்தித்துவரும் இன்றைய பிரச்சினைகளை தடுத்துநிறுத்தினரா என்றால் அதுவும் இல்லை. வடக்குமாகாணத்தில் ராஜபக்சதேர்தல் நடத்தப் போகிறார்என்றதும் மீண்டும் உற்சாகமடைந்துமுதலமைச்சர்ஆகும் போட்டியில் மல்லுக்கட்டஆரம்பித்துவிட்டனர்.

இந்தமல்லுக்கட்டைப் பார்த்தசிங்களஆட்சியாளர்மாகாணஅரசுக்கானஅதிகாரங்களில் நிலம் ,பொலிஸ் இரண்டையும் பறிக்கவேண்டும் என்றுகளத்தில் இறங்கினர். இந்திய - இலங்கைஒப்பந்தத்தின் படி 13வது திருத்தச் சட்டம் பொலிஸ்,நிலம் போன்றவற்றுக்குஅதிகாரங்களைவழங்குகிறது. எனவே இந்த 13வது திருத்தச் சட்டம் இருக்கும்வரைசிங்களஆட்சியாளர்தமிழரதுநிலங்களைஅபகரிப்பதுபிரச்சினைக்குரியஒன்றாகும் என்றுகண்டபின்னர்அதனைநீக்கமுற்பட்டுள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க,கடந்தமேமாதத்தில் சிறிலங்காஅரசுக்குசிலநிபந்தனைகளைவிதித்தது இந்தியஅரசு. இந்திய-இலங்கைஒப்பந்தத்தைசெயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாதுஎன்பதுதான் அந்தநிபந்தனை. இதைக் கேள்விப்பட்டகோத்தபாயா ராஜபக்சகடும் கோபம் கொண்டார்.

இந்திய-இலங்கைஒப்பந்தம் இருக்கும் வரைதான் இந்தியா இலங்கையில் மூக்கைநுளைக்கமுடியும்,தமிழர்தலைவர்களுடன் சிறிலங்காஅரசு ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டால் இந்திய-இலங்கைஒப்பந்தம் தானாகவேகாலாவதியாகிவிடும். இதற்குஎன்ன வழி என்றுசிந்தித்துஉடனே இரகசியமாகதென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டார்கோத்தபாயா!

தென்னாப்பிரிக்காவைத் தரகராகவைத்துசிறிலங்காஅரசுக்கும்- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் புதியஒப்பந்தம் ஒன்றைஏற்படுத்தஅத்திவாரத்தைஅமைத்துவிட்டுநாடுதிரும்பினார்கோத்தபாயா.தென்னாப்ரிக்கா இலங்கையில் பலதரப்பட்ட மூதலீடுகளைச் செய்யவிருக்கிறது. அவர்கள் தேவையான மூதலீட்டைச் செய்வதற்குகோத்தபாயாநிபந்தனை இல்லாமல் ஆதரவுதெரிவித்ததுடன்,தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைதென்னாப்பிரிக்கஅமைச்சர்கள் சந்தித்துக் கதைத்தால் அவர்கள் சம்மதிப்பார்கள். ஏனெனில் இந்தத் தலைவர்களில் முக்கியமானவர்கள் சிறிலங்காஅரசின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் என்றும் கூற,தென்னாப்பிரிக்காவிலிருந்துபுறப்பட்டுவிட்டார்அதன் வெளியுறவுதுணைஅமைச்சர் இப்பிராகிம்.

இவரதுமுதல் அறிவித்தலேஆச்சரியமானது. எங்கள் திட்டத்தில் முதலாவது'சிறிலங்காவின் தேசியகீதத்தைத் தமிழில் பாடுவது' இதுதான் இப்பிராகிமின் முதற்சலுகை. கோத்தபாயாவின் ஏற்பாட்டில் அனைத்துவாக்குறிதிகளும் இவர்களுக்குவழங்கப்பட்டன. விவரம் தெரியாதநமதுதலைவர்கள் 'நாங்கள் றெடிநீங்கள் றெடியா?' என்றுகேட்டுள்ளனர் இப்பிராகிமிடம். அவரோஅவசரப் படவேண்டாம்,வடக்கில் தேர்தல் முடியட்டும் என்றாராம்.

இந்திய-இலங்கைஒப்பந்தத்தில் எதுவுமே இல்லை. 13வதிலும் எதுவுமே இல்லைஎன்று கூறப்படும் ஒப்பந்தத்தையே இல்லாதுஒழிக்கும் முயற்சியில் சிங்கள இனம் இருக்கும் போது இவர்களுக்கு101010 தரப்போகிறார்கள் என்றுசொல்லியாரைஏமாற்றப் பார்க்கிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

தேசியகீதம் தமிழில் இசைத்தால் தமிழரதுஉரிமைகள் கிடைத்துவிடுமா? அதிலும் மொழிபெயர்ப்பைத்தான் இசைக்கமுடியும்! இருப்பதைவிட்டுவிட்டு இல்லாதஊருக்கு வழி தேடுகின்றனர்நமதுதலைவர்கள் என்றுசொல்லப்படுபவர்கள்.

இவர்கள் போக,பிரித்தானியதமிழர்பேரவைஎன்பவர்கள்வேறுதங்கள் பங்குக்குகுட்டையைக் குழப்பும் பணியில் தீவிரமாகஈடுபட்டுள்ளனர். சர்வதேசமத்தியஸ்தம் வேண்டும்,சர்வதேசவாக்கெடுப்புவேண்டும்என்கின்றனர்அவர்கள்.அருமையானகோரிக்கை! யார் இதைச் செய்வது? இவை எல்லாம்நடைமுறைக்குவரும் போதுவடக்குக் கிழக்கில் சிங்களஎம்.பி.க்களும்,சிங்களமாகாணசபைஉறுப்பினர்களும் அமர்ந்து இவர்களுக்குடாடாகாண்பிப்பார்கள்!

சுவையானவிசயங்களைச் சொல்லலாம்,நடைமுறைக்குஎப்படிச் சாத்தியம் என்றுசிந்திக்கவேண்டாமா? பிரித்தானியாதமிழர்பேரவைபலஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் இந்தியஎதிர்ப்புப் பிரசாரங்களையும் மேற்கொண்டனர் 2008 முதல்.ஏதாவது பயன் ஏற்பட்டதா இவைகளால்? தமிழரதுகோரிக்கைகளைஅரசியல் ரீதியாகஎப்படிவென்றெடுப்பதுஎன்றுதெரியாமல் இந்தியாவுக்குஎதிராகச் செயற்படுவதன் மூலம் தங்களைதமிழரின் இரட்சகர்களாககாண்பிக்கமுற்படுவதுமிகவும் தவறானதாகும். பட்டுத் தெளிந்துவிடுவார்கள் என்றுபார்த்தால் மேலும் படுகுழிநோக்கிதமிழர்களைத் தள்ளவிடமுற்படுகின்றனர்பிரித்தானியஅறிவாளிகள்.

எங்களுக்குஅருகில் இருக்கும் ஓர் உபகண்டத்தைநிராகரித்துஅன்னியசக்திகளின் துணையுடன் விடுதலையைப் பெற்றிடலாம் என்றுகருதுவதுதவறாகும். இந்தியாமுன்னெடுத்தமுயற்சிதோல்விகண்டால் மட்டுமேஅடுத்தநகர்வுக்குநாம் செல்லலாம்.

இந்தியாவைத் தமிழரிடமிருந்துஅன்னியப்படுத்தும் பணியினைபலரும் மேற்கொண்டனர். சிங்களஅரசுக்குஇந்தப் பணிபெரும் உதவிகரமாக இருந்தது. தமிழர்களேதங்கள் தலையில் மண்ணைஅள்ளிப்போடும் பணியினைகச்சிதமாகச் செய்துமுடித்தனர். இன்றுசர்வதேசம் சர்வதேசம் என்று கூச்சலிடும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளது.

ர்p.என்.ஏ தனதுதலைமையில் ஒர்ஒப்பந்தத்தைஏற்படுத்திவிட்டால் செல்வா-பண்டாஒப்பந்தம்,செல்வாடட்லிஒப்பந்தம் போன்றுமாவை-ராஜபக்சஅல்லதுசம்பந்தர் ராஜபக்சேஒப்பந்தம் என்றுவரலாற்றில் எழுதப்பட்டுவிடும் என்றுகருதுகின்றார்கள். சிங்களத் தலைவர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டதுபோதாதா? எந்தவிதப் பின்பலமும் இல்லாமல் ஒப்பந்தம் என்பதுதமிழர்களைஏமாற்றும் வேலையேதவிரவேறில்லை.

தென்னாப்பிரிக்காவின் தரவுவேலையால் ஒப்பந்தம் ஏற்பட்டபின்னர்ஏமாற்றப்பட்டால் (ஏமாற்றப்படும்) தென்னாப்பிரிக்காபடையெடுத்துவந்துதமிழர்களுக்குஉரிமைகள் பெற்றுக் கொடுக்குமா? கோத்தாபாயாவின் சதியில் ரி.என்.ஏ. மாட்டிக்கொண்டுள்ளது, இதுதான் உண்மைநிலை!

உலகத் தமிழர்கள் இன்றையநிலையில் இந்தியாவுடன் இணைந்துசெயற்படவேண்டும். தமிழரின் உரிமைமீட்பு இந்தியாவைச் சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் கடமைதமிழ் மக்களைமையமாகக் கொண்டது. தமிழரின் திட்டமிடாதசெயற்பாடுகள் இந்தியாவைவிலகிநிற்கவைத்ததுகடந்தகாலங்களில். ர்p.என்.ஏ. என்பதுதமிழ் இனத்தின் விருப்பால் ஏற்பட்ட ஓர் தலைமைகிடையாது. சந்தற்பம் அவர்களைத் தலைமைக்குதள்ளிச் சென்றுள்ளது. தாமேதமிழினத்தின் ஏகப்பிரதிநிதிகள் என்றநினைப்பில் செயல்படக்கூடாது. வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் மனங்களில் இவர்களுக்குநேர்மாறானகருத்துக்களேநிலவுகிறது. யாரோசெய்துவிட்டுப் போனதவறுகள் இவர்களைத் தலைவர்களாக்கிவிட்டதுஎன்றுதமிழர்கள் கருதுகிறார்கள்.

எனவேபுதியஒப்பந்தம் என்றுபுறப்பட்டால் இதன் பின்விளைவுகளுக்கு இவர்கள் கட்டாயம் பதில் கூறியேஆகவேண்டும்.!

தமிழ் இனத்தின் தலையெழுத்து????

வன்னியிலிருந்து ஈழப்பித்தன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com