Contact us at: sooddram@gmail.com

 

அரசியலில் தமிழீழம் சோஷலிஸம் போன்ற லட்சியங்களுக்கு அர்த்தம் உண்டா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

 பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் அநாவசியமானவை என்றும் விலைவாசி மற்றும் மின்சார கட்டன உயர்வு போன்ற விடயங்களை மறக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் இவற்றை சர்ச்சையாக்கி  இருப்பதாகவும் எதிக்கட்சிகள் பல கருதுகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. அந்த நோக்கத்திற்காக அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விடயங்களை சர்ச்சையாக்கியது என்று திட்டவட்டமாக கூற முடியாவிட்டாலும் இறுதி விளைவாக நடந்திருப்பது அது தான். ஆனால், தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை மேலும் பரவலாக்குவதை அரசாங்கத்தின் சில தலைவர்கள் விரும்பாததினாலேயே அது 13ஆவது அரசியலமைப்பு தொடர்பான விடயங்களில் கை வைத்துள்ளது என தமிழ் தலைவர்கள் கருதுகிறார்கள். அதுவும் உண்மை தான்.

ஊடகங்களுக்கு தீனி போடுவது போன்று அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகளால் மக்கள் பொருளாதார பிரச்சினைகளை மறக்கும் நிலைமை மேலும் வலுப்பெறுகிறது. அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களை வட மாகாண சபை தேர்தல் களத்தில் இறக்கப் போவதாக வெளியாகியிருக்கும் செய்திகளை அதற்கு உதாரணமாக சுட்டிக் காட்டலாம்.

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கட்ட கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன், புலிகளின் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் மற்றும் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவின் தலைவி தமிழினி ஆகியோரை அரசாங்கம் அவ்வாறு களமிறக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் அவ்வாறு போட்டியிட்டாலும் அரசாங்கத்தின் வற்புறுத்தலின் காரணமாகவே போட்டியிடுகிறார்கள் என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது.

வட பகுதியில் தலைவர்கள் உட்பட முன்னாள் புலிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவர்களுக்கு மக்களிடம் இருந்த அந்தஸ்த்து இப்போது இல்லை. அதேவேளை பாதுகாப்புப் படைகள் அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பதனால் மற்றவர்கள் அவர்களோடு உறவாட அச்சப்படலாம். தொழில் மற்றும் திருமனம் போன்றவற்றின் போது அவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் கூறப்படுகிறது. சட்டம் எப்போதும் அவர்களை பணயக் கைதிகளாகவே வைத்திருக்கும்.

இந்த நிலையில் கே.பி, தயா மாஸ்டர் மற்றும் தமிழினி போன்றவர்களை அரசாங்கம் வட மாகாண சபை விடயத்தில் அணுகினால் அவர்களால் அதனை நிராகரிக்க முடியாது. போட்டியிட முன்வந்தால் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் பொது மேடைகளில் புலிகளை விமர்சிக்க வேண்டியிருக்கும் அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் போற்றிப் புகழ வேண்டியிருக்கும்.

புலித் தலைவர் எவராயினும் ஆளும் கட்சியை தவிர்த்து ஏதாவது எதிர்க் கட்சியொன்றின் சார்பில் போட்டியிட முன் வருவார்களா என்பது சந்தேகமே. புலிகளை விடுங்கள், முன்னாள் இராணுவத் தளபதிகளே எதிர்க் கட்சிகளின் கீழ் போட்டியிட முன்வந்து உயிராபத்துக்களை எதிர் நோக்கினார்கள். மேஜர் ஜெனரல்களான லக்கீ அல்கம மற்றும் ஜானக்க பெரேரா ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேர்தல்களில் போட்டியிட முன்வந்த போது அவர்களுக்கு அவ்வளவு உயிராபத்து இல்லை என்றே அரசாங்கம் அவர்களது பாதுகாப்பை பெருமளவில் குறைத்தது. இறுதியில் அவர்கள் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளுக்கு இரையானார்கள்.

புலிகளுக்கு எதிரான போரில் அரச படைகள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா 2010 அம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்த உடன் அவரது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 600 இலிருந்து 6ஆக குறைக்கப்பட்டது. அவருக்கு எதிராக வழக்குக்கு மேல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மூலம் அவரது பட்டம், பதவி, பதக்கங்கள், ஓய்வூதியம் ஆகிய அனைத்தும் பறிக்கப்பட்டன.

இந்த நிலையில் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் எதிர்க் கட்சியொன்றின் சார்பாக போட்டியிட முன்வந்தால் என்ன நடக்கும் என்பதை ஊகித்துப் பார்க்க வேண்டும். அதேவேளை அரசாங்கம் அதிகார பரவலாக்கலுக்குப் பதிலாக அதிகார பறிப்புக்கு முதலிடம் கொடுத்திருக்கும் ஒரு சந்தர்ப்பத்pல் முன்னாள் புலி உறுப்பினர்கள் சுய விருப்பத்தில் அரசாங்கத்தின் சார்பில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முன்வருவார்களா என்பது சந்தேகமே.

சந்தேகமாக இருந்த போதிலும் அவ்வாறு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் நிர்ப்பந்தத்தின் காரணமாக அல்லது வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக தத்தமது லட்சிய இயக்கங்களில் இருந்து விலகிய பலர் பின்னர் அதே லட்சியத்திற்கு எதிராக செயற்பட்ட சம்பவங்கள் வரலாற்றில் எவ்வளவோ இருக்கின்றன.

நிர்ப்பந்தத்தின் காரணமாக தமது லட்சியத்தை கைவிட்ட சிலர் பின்னர் அந் நிர்ப்பந்தத்திற்கு அப்பால் சென்று தாமாகவே இந்த லட்சியத்தை அலட்சியம் செய்யும் வகையிலும் அதற்கு எதிராகவும் செயற்படும் போது அரசியலில் லட்சியம் என்பது வெறும் அர்த்தமற்றச் சொல் என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கருணா புலிகள் இயக்கம் தவறான வழியில் செல்வதாக குற்றஞ் சாட்டியோ அல்லது தனித்தமிழ் நாட்டுக்கான கோரிக்கை பிழையானது என்று உணர்ந்தோ அவ் இயக்கத்திலிருந்து பிரியவில்லை. கடைசி நேரத்திலும் அவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்கவே முயற்சித்தார். 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாம் புலிகள் இயக்கத் தலைமையால் தண்டிக்கப்படப் போகிறோம் என்ற நிலை வந்த போது முதலில் அவர் பிரபாகரனை சமாளிக்கவே முயற்சித்தர். பிரபாகரனை அப்போதும் (தமது இறுதி கடிதத்திலும்) சூரிய தேவன் என்றே அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பின்னர் அவரே புலிகள் இயக்கத்தை அழிப்பதில் பெரும் பங்காற்றினார்.

பிரபாகரன் அவரை இயக்கத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர் தமிழீழ லட்சியத்தை கைவிட்டு இருப்பாரா?

விமல் வீரவன்சவும் மக்கள் விடுதலை முன்னணி பிழையாக நடக்கிறது என்றோ அல்லது சோஷலிஸம் பிழையான தீர்வு என்றோ அக் கட்சியிலிருந்து பிரியவில்லை. 2008ஆம் ஆண்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னரும் தாம் நீக்கப்பட்டது அநீதியானது என்றே வாதாடினார். இறுதி நேரத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது 'எனது கட்சி ஏன் என்னை சுட்டுத் தள்ளியது?' என்று அவர் கேட்டார். ஆனால் ஓரிரு வாரங்களில் அவர் சோஷலிஸ லட்சியத்தை மறுத்தே செய்றபடலானார்.

மக்கள் விடுதலை முன்னணி அவரை நீக்கிவிடாமல் இருந்தால் அவர் சோஷலிஸ கொள்கையை கைவிட்டு இருப்பாரா?

இதேபோல் 2009ஆம் ஆண்டு மலேசியாவில் வைத்து கைது செய்யப்படாது இன்னமும் உலகை வலம் வந்து கொண்டிருந்தால் கே.பி. தமிழீழ லட்சியத்தை கைவிட்டு இருப்பாரா? புலிகள் இயக்கம் தோல்வியடையாது, தாமும் கைது செய்யப்பட்டிருக்காவிட்டால் தயா மாஸ்டரும் தமிழினியும் தமிழீழ கொள்கையை கைவிட்டு இருப்பார்களா? நிர்ப்பந்தத்தின் காரணமாக லட்சியத்தை கைவிட முடியும் என்றால் அது லட்சியமா?

இதில் மற்றொரு விந்தை என்னவென்றால் இவர்கள் எவரும் தத்தமது முன்னைய லட்சியங்களுக்காக போராடும் காலத்தில் அந்த லட்சியங்களின் விடயத்தில் நேர்மையற்றவர்களாகவோ அல்லது அந்த லட்சியத்திற்காக தியாகம் செய்வதற்கு தயங்கியவர்களாகவோ இருந்தார்கள் என்று கூற முடியாததே. அவ்வாறு இருந்தார்களேயானால் அவர்கள் எவரும் அவ் இயக்கங்களில் அவ்வளவு உயர்வான பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். கருணா, தமிழினி போன்றவர்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருந்தவர்கள்.

பொதுவாக பார்த்தால் கூட்டாக ஒரு லட்சியத்திற்காக போராடும் போது இவர்களும் இவர்களை போன்ற மேலும் பலரும் லட்சியவாதிகளாக அந்த லட்சியங்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் தனித்து நிர்ப்பந்தங்களை எதிர்நோக்கிய போது லட்சியங்களை கைவிடுவது மட்டுமல்ல, அதற்கு எதிராகவும் செயற்படுகிறார்கள்.

இதற்கு விதிவிலக்கானவர்கள் இல்லாமல் இல்லை. சிலர் கூட்டாக இருக்கும் போதே லட்சியற்களை கைவிட்டதும் உண்டு. சிலர் தனித்த போதும் லட்சியங்களை கைவிடவில்லை. ஆனால் இங்கு குறிப்பிடப்படுவோர் தலைவர்களாக இருந்தவர்கள். இவர்கள் மட்டுமல்ல, கம்யூனிஸ்டாக சிறைக்குச் சென்ற மண்டெலாவும் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் கம்யூனிஸத்தை கைவிட்டவராகவே விடுதலையானார்.

இவர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் கூட லட்சியங்கள் இருக்கின்றனவா என்று தான் கேட்க வேண்ியிருக்கிறது. புலிகளை ஒரு காலத்தில் போற்றிப் புகழ்ந்த மக்களும் இப்போது அவர்களை மதிப்பதில்லை. அதேபோல் புலிகளுக்கு எதிராக செயற்படுவதே தேசப் பற்று என்று கூறும் அரசாங்கம் புலிகளுக்கு எதிரான போரில் பெரும் பங்காற்றிய ஜானக்க பெரேரா, லக்கீ அல்கம போன்றோரின் பாதுகாப்பை வேண்டும் என்றே குறைத்து அவர்களை புலிகளுக்கு இரையாக்கியது. பொன்சேகாவினது பாதுகாப்பையும் அசாதாரணமாக குறைத்தது.

அரசியலில் லட்சியத்திற்கு இருக்கும் இடம் அவ்வளவு தான் போலும். அடைய முடிந்தால் அல்லது முடியும் போல் தெரிந்தால் லட்சியம், இல்லாவிட்டால் அலட்சியம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com