Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைக்கு அரசுக்கு இது தேவையா?

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்தாகக் கூறினார்கள். வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அதில் சில பகுதிகளை இல்லாதொழிப்பதாகக் கூறினார்கள். இப்போது எதுவுமே இல்லாமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்திய நெருக்குதலினாலேயே இந்த நிலை ஏற்பட்டது என்பதை உலகமே கண்டுகொண்டது. இது தேவையா? மக்கள் விடுதலை முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக்க ஹெல உருமய போன்ற கட்சிகள் மாகாணசபை முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்த போதிலும் ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிக அண்மைக் காலத்தில் இருந்தே அந்த கோரிக்கையை விடுத்து வருகிறது. மாகாணசபை முறை 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அக்கட்சியும் அம்முறையை எதிர்த்த போதிலும் பின்னர் அந்த எதிர்ப்பு மங்கிப்போயிருந்தது.

திவிநெகும் சட்டமுலத்திற்காக சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை பெற வேண்டும் என அண்மையில் முன்னாள் பிரதம் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் தலைமையிலான உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்தே ஸ்ரீ.ல.சு.க.வும் மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டுள்ளது. முதலில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே மாகாண சபைகளை இல்லாதொழிக்க வேண்டும் என்றார். பின்னர் அரசியல் பேசும் ஒரே அரசாங்க அதிகாரியான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் சேர்ந்து கொண்டார்.

ஆனால் அவர்களும் அதற்கு அப்பால் செல்லவில்லை. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் செப்டம்பரில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனிடையே தான் வடமாகண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்தே அதனை நடத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச கூச்சலிட ஆரம்பித்தார். வீரவன்ச இதனால் அரசியல் ஆதாயம் பெறுவாரோ என்று சிந்தித்த ஹெல உருமயவும் அதில் தொற்றிக் கொண்டது.

இந்த சிறிய கட்சிகளுக்கு தமது இருப்பை தமது உறுப்பினர்களுக்கும் நாட்டுக்கும் அறிவித்துக் கொள்ள அடிக்கடி ஏதாவது சுலோகம் ஒன்று தேவைப்படுகிறது. எனவே தான் வீரவன்ச இதை பிடித்துக் கொண்டார். அது சூடு பிடிக்கவே ஸ்ரீ.ல.சு.கவும் அதற்கு ஆதரவாக நடந்து கொள்ள முற்பட்டது. எனவே தான் பொலிஸ், காணி அதிகாரங்கள் உட்பட மாகண சபைகளிடமிருந்த நான்கு அதிகாரங்களை பறிக்க அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் முற்பட்டது.

ஆனால் இலங்கை வெயியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கான இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் ஒரு தொலைபேசி அலைப்போடு அந்த நான்கு அதிகாரங்களில் பொலிஸ், காணி அதிகாரங்களை பறிக்கும் யோசனையை அரசாங்கள் கைவிட்டுவிட்டது. அதன் பின்னர் இந்தியா அவ்வளவு எதிர்க்காது என்று எண்ணக்கூடிய இரண்டு அதிகாரங்களை மட்டும் பறிப்பதற்காக புதிய அரசியலமைப்புத் திருத்தமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை அடுத்து சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சென்று இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார். அவர் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே இங்கு சென்றதாக கூறப்பட்டது.

ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது தெளிவாகவில்லை. இலங்கையில் சகல அரசியல் கட்சிகளும் சபாநாயகர் நியமித்துள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியதாக இலங்கை பத்திரிகைகள் கூறிய போதிலும் இந்திய ஊடகங்கள் அதனை நிராகரித்து இருந்தன.

அதனை அடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவஷங்கர் மேனன் இவ்வார ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை ஜனாதிபதி அவருக்கு எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது. அதேவேளை நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணையுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை தூண்டுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் செல்லும் வகையில் அரசியல் தீர்வொன்றை காண்பதாக இந்தியாவுக்கும் சர்வதேச சமுகத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வெண்டும் என மேனன் வலியுறுத்தியதாகவே இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அதன் பின்னர் மேனன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களை சந்தித்தார்.  13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருதலைபட்சமாக மாற்றி அமைக்க இந்தியா இடமளிக்கப்பொவதில்லை என மேனன் இச்சந்திப்பின் போது கூறியிருக்கிறார்.

அதாவது ஜனாதிபதிக்கு நேரடியாக கூற வேண்டியதை மேனன் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் மு.கா.விடம் கூறியிருக்கிறார். இதற்கிடையே வடமாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு இம்மாதம் 25ஆம் திகதி முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

அதாவது வீரவன்ச வற்புறுத்தியது போல் பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிக்;கப்பட்ட நிலையில் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறப்போவதில்லை. அதுமட்டுமல்ல, ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு அதிகாரங்களை பறிப்பதற்கான திருத்தமும் நிறைவேற்றப்படுமா என்பது இப்போது சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில் மாகாணசபை தேர்தல் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பான திருத்தங்களை நிறைவேற்ற முடியுமா என்ற வாதமும் இங்கே எழுகிறது.

பொதுவாக பார்த்தால் எதிலுமே மாற்றம் இல்லாமல் வட மாகாண சபைக்கான் தேர்தல் நடைபெறப் போகிறது. அத்தேர்லுக்குப் பின்னரும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் தற்போதைய நிலையிலேயே இருக்கும் என்றே ஊகிக்க முடியும். இந்திய நெருக்குவாரத்தின் காரணமாகவே அரசாங்கத்தால் இந்த மாற்றங்களை கொண்டு வர முடியாமல் போயிற்று என்பது தெளிவான விடயமாகும்.

இந்தியாவிற்கு இந்த விடயங்களில் தலையிட முடியாது என்றும் இது இலங்கையின் இறைமை தொடர்பான விடயம் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கான பங்கினை இந்தியா நிறைவேற்றாத நிலையில் இந்தியாவுக்கு இவ்வாறு நெருக்குதலை பிரயோகிக்க உரிமை இல்லை என ஹெல உருமய கூறுகிறது. பாதுகாப்புச் செயலாளரும் அண்மையில் இக்கருத்தை வெளியிட்டு இருந்தார்.

அந்த வாதத்தை ஏற்பதாக இருந்தால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பரவலாக்குவதில் உள்ள கஷ்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிவசங்கர் மேனனுக்கு எடுத்துக் கூறத் தேவையில்லை. தெரிவுக் குழுவில் இணையுமாறு தமிழ் தேசிய கூட்மைப்பை தூண்டுமாறு மேனனை கேட்டுக்கொள்ளத் தேவையில்லை. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்குச் செல்லவும் தேவையில்லை.

இந்தியாவுக்கு இதில் தலையிட முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும் தமது அரசியல், பொருளாதார நலன்களின் காரணமாக இந்தியா தலையிட நினைத்தால் தலையிடும். அதற்குத் தான் அரசியலில் நிபுணர்கள் பூகோள அரசியல் (geo-politics) என்கிறார்கள். இந்த பூகோள அரசியல் என்று வரும் போது நீதி, நியாயம், இறைமை ஆகிய அனைத்தும் அர்த்தமற்றுப் போகின்றன.
1980களில் இந்தியா தாமாகவே வற்புறுத்தி இலங்கையோடு செய்து கொண்ட ஒப்பந்தமொன்றின் கீழ் இலங்கைக்கு படைகளையே அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம். ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com