Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு மாகாண சபை தலைவர் பதவிக்கு திரு.சம்பந்தர் அவர்களும் திரு. ஆனந்தசங்கரி அவர்களும் பொருத்தமானவர்கள்.

'இந்திய-இலங்கை' ஒப்பந்தமானது ஒரு பொறி(Trap) என்று கூறி, 13வது திருத்தச் சட்டம் தமிழருக்கு எதுவும் தரப்போவதில்லை என்றும்,13 10 10 என்றும், அதற்கும் மேலாக ஒரு ஒப்பந்தத்தினை நாங்கள் ஜனாதிபதி ராஜபக்சேயுடன் கையெழுத்திட இருக்கிறோம் என்று கூறிவிட்டு, இன்றோ வடக்கு மாகாண அரசில் முதலமைச்சர் பதவியை அடைய அனைத்து காய்களையும் நகர்த்தி வருகிறார் திரு. மாவை சேனாதிராஜா அவர்கள். 'இந்திய-இலங்கை' ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றதுதான் இந்த மாகாண அரசு. இதை ஓர் பொறி(Trap) என்று கூறி வந்த சேனாதிராஜா அவர்கள், அந்தப் பொறியினால் உருவான மாகாண அரசுக்குத் தலைமை அமைச்சர் ஆவதற்கு கடந்த ஒரு வருட காலமாக தமிழரசுக் கட்சி அங்கத்தினரை தனக்கே ஆதரவளிக்குமாறு பெரு முயற்சி மேற்கொண்டு வந்தார்.

தான் முதலமைச்சர் ஆவதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால்,' நாங்கள் உலகுக்கு எங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும், உலகம் எங்களைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது, உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் நாம் இந்தத் தேர்தலைப் பார்க்க வேண்டும். ஆகவே, என்னை நீங்கள் முதலமைச்சராக்க வேண்டும்' இதுதான் இவரது இன்றைய தந்திரப் பிரச்சாரமாகும்.

சரி, இவரை முதலமைச்சராக்கி ஒற்றுமையைக் காட்டிவிட்டால், அடுத்தப்படியாக இவர் என்ன செய்வார் என்பது யாருக்கும் தெரியாது. 'இந்திய-இலங்கை' ஒப்பந்தம் இவருக்குப் பிடிக்காது. ஆனால் முதலமைச்சர் பதவி மட்டும் இவருக்குப் பிடித்த ஒன்றாகும்.

திரு. மாவை சேனாதி ராஜா அவர்கள் இன்றைய காலகட்டத்தில் நான்கு முகங்களை உடையவராக இருக்கிறார்.பிற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஒரு முகம், தமிழ் நாட்டில் வைகோ, நெடுமாறன் போன்ற வகையறாக்களுக்கு ஒரு முகம், ஜனாதிபதி ராஜபக்சே குடும்பத்தினருக்கு ஒரு முகம், இலங்கையில் குறிப்பாக வடக்கு வாழ் தமிழர்களுக்கு ஒரு முகமாக காண்பித்து வருகிறார் திரு. மாவை சேனாதிராஜா அவர்கள்.

தன்னை ஓர் இந்திய எதிர்ப்பாளராக மூன்று தரப்பினருக்குக் காண்பித்து வருகிறார். நான்காவது தரப்பான இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்குத் தன்னை ஓர் இந்திய ஆதரவாளராகக் காண்பிக்கிறார். திரு. சேனாதி அவர்கள் முதலமைச்சரானால் திருப்தியடையப் போவது ராஜபக்சே குடும்பத்தினரும், சிங்கள மக்களும் மட்டுமே!

ராஜபக்சேவுடன் ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து, அவரை நம்பி, கையொப்பமிடும் அளவுக்கு மாவை சேனாதிராஜா அவர்கள் தயாராக இருந்தார் கடந்த ஆண்டு. இது எதனைக் குறிக்கிறதென்றால், ராஜபக்சேவுடன் சேர்ந்து 'இந்திய-இலங்கை'ஒப்பந்தத்தினை முழுவதும் இல்லாமல் செய்யும் நடவடிக்கைதான் சேனாதிராஜா அவர்களின் நடவடிக்கை என்பதை தெளிவுபடுத்துகிறது.

சிங்கள அரசு தமிழ் இனத்தவருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, அவற்றுக்;குத் தடையாக வரக்கூடிய நாடே இந்தியாவாகத்தான் இருக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவுடன் ஓர் ஒப்பந்தத்தினை போட்டுத் தொலைத்துவிட்டார் ஜெயவர்த்தனா. இந்த ஒப்பந்தத்தை ஒழித்துக் கட்டுவதுதான் ராஜபக்சேயின் இன்றைய வில்லங்கமான கடமையாக உள்ளது, இவரது இந்தச் சதிச் செயலுக்குப் பொருத்தமான மற்றும் விபரம் தெரியாத தமிழரின் தலைவராக அவர் கருதுவது நமது சேனாதிராஜா அவர்களைத்தான். அதிலும் முதலமைச்சராகி விட்டால் இது இன்னமும் சுலபமாகிவிடும்

எப்படியென்றால், முதலில் இந்தியாவின் முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்கள் கொல்லப்பட்டதால் இந்தியா ஒதுங்கி நின்றது. இப்போது திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் முதலமைச்சராக்கப்பட்டால், அவருடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் போதும்,ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா முற்றாக ஒதுங்கிக் கொள்ளும் என்று திடமாக நம்புகிறார் ராஜபக்சே!

மாவை சேனாதிராஜா அவர்கள் முதலமைச்சராக வேண்டும் என்பது ஜனாதிபதி ராஜபக்சேயின் குடும்பத்தினருக்கு இன்றைய விருப்பமாகும். இதற்காகவே தென் ஆப்ரிக்க அமைச்சர்களை அழைத்து வந்து இரண்டு தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி தயார் நிலையில் வைத்துள்ளார் ராஜபக்சே.

தமிழர்களை ஏமாற்ற கோடாலி காம்பாக இருப்பவர் நமது சேனாதிராஜா அவர்கள்தான். ஏனென்றால் இவர் மேடைகளில் பேச ஆரம்பித்தால், என்ன விசயத்தைப் பேச வந்தோம் என்பதை மறந்து, தனது பேச்சை சவ்வாக இழுத்து, கேட்பவர்கள் கல்லெறியும் வரையில் நகர்த்துவாரே தவிர, அதுவரை பாதை மாறி பயணித்துக்கொண்டே இருப்பார். விவரமில்லாத வடக்குத் தலைவர் இவர்.

அடுத்து முதலமைச்சர் பதவிக்கு இழுத்து வர இருப்பவர் திரு. விக்ணேஸ்வரன் அவர்கள். இவர் 40 ஆண்டுகள் சிங்கள அரசின் நீதிபதி பதவியில் அசையாமல் கொள்ளாமல் இருந்தவர். தமிழ் இனத்துக்கு ஏதாவது செய்திருக்கிறாரா என்றால், யாராலும் எதனையும் சுட்டிக்காட்ட முடியாது. அரசு பதவிகள் வகித்த எத்தனையோ தமிழர்கள், சிங்கள அரசின் அநியாயங்களால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்கள். ஆனால் இவரோ, எந்தவித இடையூறுமின்றி தனது அரசுக்குச் சார்பான கொள்கையால் பதவி காலம் முழுவதையும் கடமை உணர்வோடு ஆற்றி முடித்தவர்.

தனது பதவிக்கு இடையூறு எதுவும் வந்துவிடக் கூடாது என்று தனது பிள்ளைகளை சிங்கள இனத்தவருக்கு திருமணம் செய்து கொடுத்து, தனது பதவியைக் காப்பாற்றி வந்தவர் நமது நீதிபதி விக்ணேஸ்வரன் அவர்கள். தனது பதவி காலத்தில் பலருக்குப் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவை என்னவென்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்,'இந்தத் தனிநாடு கினிநாடு என்று உங்கள் வருங்காலத்தை வீணடிக்காதீர்கள், எங்கெளுக்கென்று ஒர் கௌரவம் இருக்கிறது, அந்தக் கௌரவங்களைப் பாதுகாத்து, அரசாங்கத்துடன் அனுசரித்து நமது தொழிலை மட்டுமே கவணமாக்க வேண்டுமே தவிர, இந்த விணாய்ப்போன அரசியலுக்குள் நுழைய வேண்டாம்'என்பதுதான் இவரது கடந்தகால ஆலோசனைகளாகும்.

தனிநாடு கோரியவர்கள் எல்லாம் தரம் குறைந்தவர்கள் என்பது இவரது கனிப்பாகும். இப்போது ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் பதவி தேவைபடுகிறது இவருக்கு. தரம் குறைந்த அரசியலுக்குள் இறங்கி பதவியை அடைய முயற்சிக்கும் நமது நீதிபதி விக்ணேஸ்வரன் அவர்கள் தமது தூரத்து உறவான திரு. சம்பந்தன் அவர்களின் ஆதரவை நாடி நிற்கிறார். சிலவேளை திரு. விக்ணேஸ்வரன் அவர்கள் முதலமைச்சரானால், சிங்கள ஆட்சியாளர்கள் தங்களது விருப்பப்படி மாகாண அரசை நடத்த இவர் பயன்படுத்தப்படுவார். ஏனெனில், சிங்கள இனத்தவர் ஏற்கனவே இவருக்கு உறவினர்களாக உள்ளனர். தமிழ் மக்களின் கொள்கைகளை நிலைநாட்ட இவர் முதலமைச்சராக்கப்படவில்லை. இவர் முதலமைச்சராக்கப்படுவது சிங்கள இன மக்களின் வசதிக்காகவே அல்லாமல் தமிழ் மக்களின் கொள்கைகளுக்குக் கடமைபட்டவராக இவர் இருக்க முடியாது.

இந்த இருவரில் யார் முதலமைச்சரானாலும் ராஜபக்சே குடும்பத்தினருக்கும், தமிழர் எதிர்ப்பு சிங்களக் கட்சிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த இருவரும் தமிழ் இனத்தை மீள முடியாத சிக்கலுக்குள் இழுத்துச் செல்வார்கள் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை.

இவை ஒரு புறம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய நான்கு கட்சிகளையும் இழுத்து வந்து தமிழரசுக் கட்சி தாம் நினைத்ததை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. தமிழரசுக் கட்சி தனியாக, தானே தீர்மானித்த நபர்களை முதலமைச்சர் பதவிக்கு நியமிக்க ஏனைய நான்கு கட்சிகளும் ஆதரித்ததாக தமிழர்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது.

தமிழரசுக் கட்சியின் இந்த முடிவினை நிராகரிக்க முடியாமல் விழி பிதுங்கி பரிதாபமாக, நடைபெற்றுக்கொண்டிருக்கும் இழுபறியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ஏனைய நான்கு கட்சியினரும். திரு. சம்பந்தன் அவர்களுக்கும் திரு. சேனாதி ராஜா அவர்களுக்கும் இடையில் நடைபெறும் போட்டியின் முடிவு தமிழ் இனத்துக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுக்கும்.

இந்தச் சூழலில் சிறிலங்காவின் பிரதம மந்திரி ஆவது தமிழர்களால் முடியாத காரியம் என்பதால், முதலமைச்சர் பதவியையாவது கைப்பற்றிட வேண்டும் என்பதை திரு. சேனாதிராஜா அவர்கள் நீண்டகாலமாக ஆசைப்பட்டு வருகிறார். இவரது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது தமிழ் மக்களின் இன்றைய கடமையாக இருக்கிறது. ஏனெனில் இவர் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் இறந்த பின்னர் அவரது இடத்தில் எம்.பி.யானார் அப்படி எம்.பி.யான சேனாதிராஜா அவர்கள் அளப்பரிய சேவைகள் செய்து, தமிழ் இனத்துக்குப் பலதரப்பட்ட உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து,முள்ளிவாய்க்கால் யுத்தத்தையும் நிறுத்தி தமிழ் இனத்தைக் காப்பாற்றியவர்தான் நமது சேனாதிராஜா அவர்கள். எனவே,அவரை முதலமைச்சராக்கி அழகு பார்க்கவேண்டியது தமிழர்களின் கடமையாக்கப்பட்டுவிட்டது.

தகுதியற்றவர்களால் தமிழரின் தலைமை நிரப்பப்படவிருக்கிறது.ஈழத் தமிழர்களின் 60 ஆண்டு காலப் போராட்டம் வீணலுக்கு இறைத்த நீராகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ் இனம் இவர்களிடமிருந்து விடுபடுவதற்கு எதிர்காலத்தில் பல தியாகங்களை செய்ய வேண்டியதிருக்கும்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே தகுதியானவர்கள் இருக்கிறார்கள் என்பது அர்த்தமல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளேயே தகுதியானவர்கள் இருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இரண்டு அனுபம் வாய்ந்த மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் திரு. சம்பந்தர் அவர்கள் மற்றவர் திரு. ஆனந்தசங்கரி அவர்கள். இவர்களில் யாராவது ஒருவர் முதலமைச்சராக வந்தால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

இருவருமே அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகளும் தகுதியான தலைவர்களுமாவர்.

(D. Isaac)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com