Contact us at: sooddram@gmail.com

 

தினகரன் ஆசிரியர் தலையங்கம் இப்படிக் கூறுகின்றது

சனல் 4 தொலைக்காட்சி எல்.ரி.ரி.ஈ.யின் டொலர்களுக்காக ஆட்டம் போடுகிறது

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிலையம் இலங்கை அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் நாட்டு மக்களையும் இழிவுபடுத்தக்கூடிய வகையில் எல்.ரி.ரி.ஈ. டொலர்களுக்கு அடிமையாகி உலக அரங்கில் பொம்மலாட்டம் போட்டு வருவது குறித்து நாம் எமது கடும் கண்டனத்தை வெளியிட விரும்புகிறோம்.ஆதாரமற்ற, போலியாக ஜோடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்துக் கொண்டு எல்.ரி.ரி.ஈக்கு எதிரான 30 ஆண்டுகால யுத்தத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களை மிலேச்சத் தனமாக சுட்டுக் குவித்து யுத்தக்குற்றங்களை புரிந்தார்கள் என்று பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிலையம் செய்தி அறிக்கைகளை யும் விவரண குறும்படங்களையும் உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்து, இலங்கையின் நற்பெயரை இழிவுபடுத்தும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டது.

அத்துடன் இந்த யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கத்தின் தலைவரும் ஆயுதப் படைகளின் பிரதம தளபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவும் பொறுப்பை ஏற்க வேண்டுமென்றும் அவர்கள் இருவரும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு யுத்தக்குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை நடத்தி தண்டிக்கப்பட வேண்டுமென்றும் சனல் 4 தொலைக்காட்சி நிலையம் தொடர்ந்தும் சுமார் 4 ஆண்டுகளாக பொய்யான பிரசாரங்களை உலக நாடுகளில் செய்து வருகின்றது.

நோ பயர் ஸோன் என்ற, ஆதாரமற்ற தகவல்களையும் போலியான நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் ஒன்றிணைத்து தயாரிக்கப்பட்ட விவரண குறுந்திரைப்படம் முதலில் சில வாரங்களுக்கு முன்னர் மலேசியாவில் திரையிடுவதற்கு எடுத்த முயற்சி அவ்வரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டு சனல் 4 தொலைக்காட்சி நிலையத்தின் பணிப்பாளரை கைது செய்து விசாரணை செய்யவிருந்த நிலையில், கெலம் மெக்ரே என்ற அந்த பொல்லாத மனிதன் மலேசியாவில் இருந்து தப்பியோடிவிட்டான்.

பின்னர் இத்திரைப்படம் கடந்தவாரம் கனடாவின் டொரண்டோ நகரில் திரையிடப்பட்ட போது இந்த நிகழ்வை உலகெங்கிலும் உள்ள எல்.ரி. ரி.ஈயை ஆதரிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் முழுமையாக ஆதரித் தார்கள்.

இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய கெலம் மெக்ரே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவும் ஏனைய யுத்தக் குற்றமிழைத்த இலங்கையர் அனைவரும் சர்வதேச யுத்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை தனக்கு தூங்க முடியாதென்று அகங்காரமான முறையில் பேசியிருப்பது அந்த மனிதன் எல்.ரி.ரி.ஈயின் டொலர் நோட்டுகளுக்கு எதையும் செய்யக்கூடிய ஒரு பெரும் குற்றவாளி என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கலந்து கொள்ளுமாறு அழைப்பைப் பெற்றிருந்த போதிலும், அவர் ஸ்கைப் மூலம் இந்த நிகழ்வின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

கெலெம் மெக்ரே தன்னை ஓர் ஊடகவியலாளர் என்று அறிமுகம் செய்து கொள்கின்ற போதிலும், அவர் ஊடகவியலாளர்களின் ஒழுக்க நெறி களை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமான, இத்தகைய போலியான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத் தலைவர்களுக்கு எதிராக சுமத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

ஐக்கிய தேசியக்கட்சியுடன் இப்போது ஒட்டிக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது மனசாட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கத் தலைவர்களும், இராணுவத்தினரும் யுத்தக்குற்றச்சாட்டுகளை புரிந்திருக்கிறார்கள் என்று பொதுநலவாய நாடுகளுக்கு எழுதியிருக்கும் கடித மொன்றில் குறிப்பிட்டிருப்பது அவர் எந்தளவுக்கு நாட்டுப் பற்றுடையவர் என்பதற்கு சான்று பகர்வதாக இருக்கின்றது.

கெலெம் மெக்ரே எவ்விதம் எல்.ரி.ரி.ஈயின் கைம்பொம்மையாக மாறினார் என்பதற்கு இப்போது ஆதாரங்கள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஷிராணி சபாரட்ணம் சனல் 4 தொலைக்காட்சி நிலையத்தின் பணிப்பாளர் ஸ்டுவர்ட் கொஸ்குரோவை மணம் முடித்ததன் மூலம் எல்.ரி.ரி.ஈ. டொலர் நோட்டுகளை இலட்சக் கணக்கில் இந்த நிலையத்தில் முதலீடு செய்து அதனை எல்.ரி.ரி.ஈ.யின் பிரசார நிலையமாக மாற்றினார்.

கெலெம் மெக்ரே இவர்களுக்கு கீழ் கைகட்டி சேவகம் புரியும் ஒரு மனிதன். இந்த மனிதனுக்கு சனல் 4ல் நல்ல சலுகைகளும் பெரிய சம்பளமும் கொடுக்கப்படுகிறது. கெலெம் மெக்ரே இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பிரசார பீரங்கியாக மாறி போலி வதந்திகளை இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் பரப்பி வருகிறார்.

ஷிராணி சபாரட்ணம் இலங்கைக்கு இரண்டு வெவ்வேறான கடவுச்சீட்டுக ளுடன் வந்ததனால் அவர் முதலில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டார்.

சனல் 4 தொலைக்காட்சி நிலையம் ஒரே வீடியோ படங்களை சுமார் 4 வரு டங்களாக உலக நாடுகளில் காண்பித்து, அந்நாட்டு மக்களை ஏமாற்று வதற்கு எடுத்துவரும் முயற்சிகள் இன்று படுதோல்வியில் முடிவடைந் துள்ளன. சனல் 4 ஒழுங்கு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் மாத் திரமே வருகிறார்கள். வெளிநாட்டவர்கள் அவற்றைப் பார்க்க தங்கள் பொன் னான நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை என்று சனல் 4 நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சகர் ஒரு பத்திரிகைக்கு எழுதியிருக்கிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com