Contact us at: sooddram@gmail.com

 

மக்கள் மாற்றத்தை விரும்பினால் தமிழரசுக்கட்சிக்குள் அங்கம் வகிப்பவர்களுக்கு அரசியல் அஸ்தமனம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது

(எஸ்.எஸ்.கணேந்திரன )

இலங்கைத்தமிழர்கள் மட்டுலல்லாமல் சர்வதேசமே மிகவும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் எதிர்பார்த்திருக்கும் வடமாகாண சபை தேர்தலினை ஒரு பிரதேசசபை தேர்தலுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தைகூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்து செயல்படுகின்றதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்புக்குள் உள்ளடங்கப்பட்ட கட்சிகளுக்கிடையிலான குத்துவெட்டுக்கள் தொடக்கம் வேட்பாளர்கள் தெரிவுவரை  இலங்கை தமிழரசுக்கட்சியினரும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தமது இஷ்டப்படி செயற்படுவது மிகவும் துரதிஸ்ட்டவசமானதே.

மிக நீண்டகால அரசியல் அனுபவங்களும் மக்கள் பலமுமுள்ள எத்தனையோ அரசியல் தலைமைகள் உள்ள நிலையிலும் எந்தஒரு தேர்தலானாலும் அத்தேர்தலின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்களையும் மாணவ சமூகத்தையும் புறம் தள்ளி உறவினர்களுக்கும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் வேட்பாளர் நியமனங்கள் வழங்கியுள்ள கூட்டமைப்புக்குள் இருக்கும் தமிழரசுக்கட்சி மற்றும் சுரேஸ் குழுவினர் வட மாகாண தமிழ் மக்களுக்கு இதனைவிட பெரிதொரு துரோகம் செய்துவிட முடியாது.

தானே முதலமைச்சர் வேட்பாளராகவும் வடக்கின் முதலமைச்சராகவும் வந்தேதீருவேன் என கனவுகண்டுகொண்டிருந்த சேனாதிராசாவுக்கும் பெரும்பாலான தமிழரசுக்கட்சியினருக்கும் எப்போதுமே அரசுடன் அரவணைந்து தமது சுய தேவைகளை பூர்த்திசெய்யும் சம்பந்தன் சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்;றோரால் ஆப்பு வைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமே.

ஜே ஆர் ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது திருகோணமலை விருந்தினர் விடுதிக்கு மதுபான அனுமதிப்பத்திரம் பெற்ற சம்பந்தன,; சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலங்களில் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறி குண்டுதுளைக்காத வாகனத்தையும் ஜனாதிபதி விசேட பாதுகாப்புப்பிரிவினரின் பாதுகாப்பும் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கும் விசேட உலங்கு வானூர்தி வசதிகளையும் பெற்ற உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம .

அதேபோன்று தனது உன்னத தலைவனையும் மத்திய செயற்குழு உறுப்பினர்களையும் ஒரே தினத்தில் புலிகளுக்கு பலிகொடுத்து தன்னைத் தானே தலைவராக்கிக் கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட மிகமுக்கியமான ஒருவர். அதன் காரணத்தினால் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலங்களில் மீன்பிடித்துறை அமைச்சராகவிருந்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஸவின் அமைச்சின் ஆலோசகர் பதவியினைப்பெற்ற்றதோடு சமிற் மாடிக்கட்டிடத்தில் அரசாங்க வீடுஒன்;றினையும் பெற்று சுகமான வாழ்வு வாழ்ந்ததை மறக்க முடியாது.
பின்னர் புலியின் வாலைப்பிடித்தாலே பாராளுமண்ற ஆசனத்தைக் கைப்பற்றமுடியும் என்பதை தெளிவாக புரிந்திருந்த சுரேஸ் புலிகளுக்காக வக்காலாத்து வாங்குவதில் தன்னை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு படம் காட்டியவர்.

இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுக்காரர்களிடமிருந்து தமிழரசுக்கட்சியை காப்பாற்ற சமுபந்தனால்  ிரு.விக்னேஸ்வரன் கொழும்பில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டார் எண்றால் அது மிகையாகாது.

இது ஒருபுறமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகளுடன் மிக நெருங்கிய நட்பினைக்கொண்டுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி பத்மனாபா அமைப்பினரையும் உள்வாங்கிச்செல்லவேண்டுமென பலர் விரும்பியிருந்த வேளையில் தம்க்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் ஒண்றை அவர்களுக்கு வழங்க தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்வந்தபோதும் தனது சொந்த சகோதரனை தேர்தல் களத்தில் இறக்கிய சுரேஸ் பிரேமச்சந்திரனின் கடுமையான எதிர்ப்பினால் அந்தமுயற்சி ; கைகூடாமல் விடப்பட்டிருக்கின்றது.

அதே நேரம் புளொட் அமைப்பின் தலைவர் திரு.சித்தார்த்தனை தொடர்புகொண்டு பல்கலைக்கழக மாணவ பிரதிநிதி  தர்ஸனனை தமிழரசுக் கட்சியினர் ஓரம் கட்டியுள்ளது ஒரு சிறந்த நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியுமா என வினவியபோது; தர்ஸனன் விரும்பினால் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் இரண்டில் ஒன்றை தாம் வழங்க தயார் எனத்தெரிவித்தர்ர்.

தேர்தல் அரசியலிலும் விட்டுக்கொடுப்பு தேவை என்பதனை தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் புளொட் அமைப்பினரும் எண்ணுவது வரவேற்கப்படவேண்டியதே. ஆனால்தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் அங்கம் வகிப்பவர்கள் இத்தகைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதும் தெரிந்ததே.

தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே தமது இருப்புகளுக்காக மட்டுமே இளைஞர்களையும் மாணவர்களையும் பாவிக்கும் தமிழரசுக் கட்சியினருக்கெதிராக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அமைப்பும் யாழ் பல்கலைக்கழக மாணவ சக்தியும் கடுமையான எதிர்ப்பினை காட்டிவரும் இந்த நிலையிலாவது குடித்தால் பழைய கள்ளு நிறுத்தினால் மீசை நரைத்தவன் எண்ற கொள்கையை தாமதமின்றி மாற்றி வயது வந்தவர்களை இல்லத்தில் இருத்திவிட்டு இளைய சமூகத்திற்கு வழிவிடுவதே சிறந்த செயலாக அமையும்.

மாறாக வேட்டி கட்டி விபூதியணிந்து உருத்திராக்கமாலை போட்டவர்கள்தான் வேட்பாளர்கள் எண்று தமிழரசுக் கட்சி எண்ணும் பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதமே தமிழரசுக் கட்சினருக்கு வடமாகாணத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் அரசியல் அஸ்த்தமனம் என்பதனை மக்கள் நிரூபிப்பார்கள்

(நன்றி: தேனி இணையம்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com