Contact us at: sooddram@gmail.com

 

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள

வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் மீண்டும் திறப்பு

யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் காணிகளை அரசாங்கம் இராணுவத்தின ரிடம் இருந்து விடுவித்து பொதுமக்களுக்கு மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகிறதென்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும், ஏனைய எதிர்க்கட்சிகளும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கத்திற்கு எதிராக வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள இன்றைய காலகட்டத்தில் சுமத்தி வருகின்றன. இத்தகைய போலிப் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுத்து, அரசாங்கமும் இராணுவமும் மக்களை துன்புறுத்தவில்லை, அவர்களின் சொந்தக் காணிகளை ஆக்கிரமிக்கவுமில்லை.  அவை படிப்படியாக மக்களுக்கு மீள பெற்றுக் கொடுக்கப்படும் என்ற உறுதி மொழியை வழங்கி அதனை தற்போது வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இதற்கு உதாரணமாக வடமராட்சியில் இருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தை மீண்டும் அரசாங்கம் திறந்து இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களின் அறிவுக்கண்களை திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டக்கூடிய விடயமாக அமைந்துள்ளது.

1986ம் ஆண்டில் இலங்கை இராணுவத்தினருக்கும், எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் யுத்தம் உச்சகட்டத்தை அடைந்தமையால் பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் இருந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளி யேற்றப்பட்டனர்.

வசாவிளான் மத்திய மகா வித்தியாலயமும் இப்பிரதேசத்தில் இருந்ததனால், அவ்வாண்டில் அப்பாடசாலையும் மூடப்பட்டு, அங்கு கல்வி கற்ற பிள்ளை கள் புன்னாலைக் கட்டுவன் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டார்கள்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கப் படைகள் வெற்றிவாகை சூடி, எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளை மண்டியிட வைத்ததை அடுத்து அரசாங்கம் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்நிர்மாண, புனர்வாழ்வு செயற்பாடுகளை செய்து கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தியது.

இதையடுத்து 2010ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதியன்று மீண்டும் பாடசாலை திறக்கப்பட்டது. யுத்தத்தினால் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் முற்றாக சேதமடைந்த நிலையில் கூரைகள் இல்லாத சிதைந்து போன சுவர்கள் மாத்திரமே அங்கு எஞ்சியிருந்தன. அவற்றை பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பெரு முயற்சியினாலும், பொருளாதார உதவியினாலும் இந்த பாடசாலை கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் வேகமாக ஆரம்பமாகின.

என்.டி.பி. வங்கி மற்றும் நவோதய ஆகிய அமைப்புகளும் இதற்கு உதவி செய்தன. யுனிசெப் ஸ்தாபனமும் இப்பாடசாலையின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு மனமுவந்து உதவிகளை செய்தது. இந்தப் பாடசாலை அபி விருத்திப் பணிகள் புனர்நிர்மாணப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் பாடசாலை இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 23ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.
இப்பாடசாலையின் அதிபராக இன்று வீ.ரி.ஜயந்தன் நியமிக்கப்பட் டுள்ளார். இந்தப் பாடசாலையின் கட்டடம் அமைந்திருக்கும் 36 ஏக்கர் பொன் விளையும் பூமியை ஈழகேசரி பொன்னையா என்பவரே இந்தப் பாடசாலையை நிர்மாணிப் பதற்காக அன்பளிப்பு செய்திருக்கிறார்.
யுத்தத்துக்கு முன்னர் இப்பாட சாலையில் 4இ000 மாணவஇ மாணவியர் கல்வி கற்றார்கள். அப்போது மாணவஇ மாணவிய ருக்கென இரண்டு வெவ்வேறான விடுதிகளும் இருந்தன. இன்று புதுப்பொலிவுடன் அழகிய வடிவமைப்புடன் நிர்மாணிக் கப்பட்டிருக்கும் இப்பாடசாலையில் 1இ100 பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள்.
இந்தப் பாடசாலையில் 6ம் தரத்தில் இருந்து 13ம் தரம் வரையிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு கணிதம்இ விஞ்ஞானம் மற்றும் கலைத்துறைப் பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன் தகவல் தொழில்நுட்ப பாடத்தை நடத்துவதற்காக புதிய தகவல் தொழில்நுட்ப கணனி நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் இன்று 52 ஆசிரியர்களும்இ ஆசிரியைகளும் பணி புரிகிறார்கள். ஆயினும் இங்கு சிற்றூழியர்கள் இருவர் மாத்திரமே இருப்பதனால் தங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறதென்று பாடசாலை அதிபர் ஜயந்தன் கூறுகிறார்.
இப்பாடசாலையை சென்று பார்ப்பதற்கு நான் அங்கு சென்றிருந்த போது ஏதோ ஒரு பூஞ்சோலைக்குள் நுழைவது போன்ற எண்ணம் மனதில் ஏற்பட்டது.
அந்தளவுக்கு பாடசாலையின் சகல வெற்றிடங்களி லும் பூஞ்செடிகளும்இ செடிஇ கொடிகளும் திட்டமிட்ட முறையில் அழகாக வளர்க்கப் படுவதைப் பார்த்து அங்கு செல்பவர்கள் ஆச்சரியப் படுகிறார்கள்.
இந்தப் பணியை விரைவில் சேவையில் இருந்து இளைப் பாற இருக்கும் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ். ':!திலிங்கம் என்பவர் சிறப்பாக செய்கிறார். இவர் வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 6.00 மணிக்கு வந்துஇ மாலை 6.00 மணி வரையில் இந்த தோட்டப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பாடசாலை குறுகிய காலத்தில் விளையாட்டுத் துறையிலும் சிறப்புற்று விளங்குகிறது. இப்பாடசாலையின் 15 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட அணியினர் அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான போட்டியில் வெற்றியீட்டிஇ இப்பாடசாலைக்கு பெருமையை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இப்பாடசா லைக்கென தனியான சர்வதேச தரத்திற்கு ஏற்புடையதான ஒரு விளையாட்டு மைதானத்தை யும் இராணுவத்தினரின் உடல் உழைப்பை பயன்படுத்தி நிர்மாணிக் கும் பணியில் இன்று துரிதமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்தப் பாடசாலை வடபகுதியில்இ வடமராட்சியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரித்து பயன்படுத்தி வருகின்றது என்ற போலியான குற்றச்சாட்டு களுக்கு ஒரு சிறந்த பதிலாகவும்இ முன்னுதாரணமாகவும் விளங்குகிறது.
கடந்த 21ம் திகதி முதல் 5 நாட்களுக்கு நான் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கண்டும்இ கேட்டும் அறிந்து கொண்ட சில தகவல்களை அடுத்து தர விரும்புகிறேன்.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாணத் தைச் சேர்ந்த சுமார் 40 பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடக வியலாளர்களுக்கான பயிற்சிப் பாசறையொன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை ஊடக தகவல் துறை அமைச்சின் கீழ் இயங்கும் தகவல் திணைக்களம் ஒழுங்கு செய்திருந்தது. தகவல் திணைக் களத்தின் பணிப்பாளர் நாயகமான பேராசிரியர் ஆரியரத்ன அத்துகலவினதும்இ தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் அவர்களினதும் முயற்சியினால் இந்த பயிற்சிப் பாசறை வெற்றிகரமான முறையில் நடைபெற்றது.
பயிற்சிப் பாசறையில் பிரதான உரையாற்றிய யாழ்ப் பாண அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்இ யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் புள்ளி விபரங்களுடன் எடுத்துக்காட்டி நீண்ட உரையாற்றினார்.
அங்கு வரவேற்புரை ஆற்றிய தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகலஇ யுத்தம் முடிவடைந்து இன்று உருவாகியிருக்கும் அமைதியான சூழ்நிலையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பற்றிய செய்திகளுக்கு ஊடகவிய லாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்.
அங்கு தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்ற முறையில் தகவல் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று உரையாற்றிய நான்இ யுத்தம் முடிந்து நாட்டில் சமாதானமும் அமைதியும் திரும்பி யிருக்கின்ற இவ்வேளையில் ஊடகவியலாளர்கள் இனிமேலும் யுத்தம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக் காமல் நாட்டின் மேம்பாட்டுக்கான அபிவிருத்தி தொடர்பான செய்திகளுக்கு ஊடகவியலாளர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டேன்.
ஊடகவியலாளர்கள் தாங்கள் எப்போதும் இந்நாட்டு பிரஜைகள் என்பதை மனதில் வைத்து நாட்டுக்கு தீங்கிழைக்கும் செய்திகளை தவிர்த்துக் கொள்வது அவசிய மென்றும் ஊடக தர்மத்தை கடைப் பிடிக்கும் ஊடகவியலாளர்கள் தேசத்தின் பாதுகாப்புக்கும் முக்கி யத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என்றும் எனது உரையில் கேட்டுக் கொண்டேன்.
ஊடகவியலாளர்கள் சட்டத்திற்கு மதிப்பளித்து மற்றவர்களின் தனிப் பட்ட சுதந்திரத்திற்கு தீங்கிழைக்காத வகையில் எவ்விதம் செய்திகளை வெளியிட வேண்டும் என்பது குறித்து சட்டத்தரணி ஏ.எம். வைஸ்இ பல வழக்குகளை மேற்கோள் காட்டி விரிவான உரையொன்றை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் 512ம் படையணியின் கட்டளைத் தளபதி கேர்ணல் அஜித் பல்லவெலவும்இ லெப்டினன்ட் கேர்ணல் ஜீ.ஜீ.ஏ.பிரியன்தவும் கலந்து கொண்டனர்.
வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட இருக்கும் தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வே.தயாநிதி அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அனைத்தும் வெளிநாட்டு உளவுத் துறையினரால் வழிநடத்துவது தெட்டத்தெளிவாக உள்ளது. ஒரு வெளி நாட்டு நிறுவனம் அரசியல் நடவடிக் கையில் தலையிடுவது கண்டனத்திற்குரியதென்று தெரிவித்த தயா மாஸ்டர்இ கடந்த 40 வருடகாலமாக நாட்டிலே நடந்த யுத்தத்திற்கும்இ அழிவுக்கும் இந்த உளவுத்துறை தான் காரணமென்று தெரிவித்தார்.
எனவேஇ இத்தகைய சதி வேலைகளை நிறுத்து வதற்கு தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தான் அவருக்கு அவசர தந்தியொன்றை அனுப்பியிருப்பதாகவும் தயாமாஸ்டர் கூறினார்.
எனது யாழ் விஜயத்தின் இறுதிக் கட்டமாக நான் யாழ்ப்பாணத்தில் பணிபுரியும் இந்திய தூதரகத்தின் கவுன்சில் ஜெனரல் என்ற உயர்பதவி வகிக்கும் இராஜதந்திரியான வீ. மகாலிங்கம் அவர்களை சந்தித்தேன்.
காங்கேசன்துறை துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணிகளில் 4வது கட்ட செயற்பாடுகள் இப்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் 4 மீற்றர் ஆழமாக இருந்த இந்த துறைமுகத்தின் ஆழம் இப்போது 8 மீற்றர்களாக அதிகரிக்கப்பட்டி ருப்பதனால் பெரிய கப்பல்கள்கூட காங் கேசன்துறை வந்து பாரிய பொருட்களை ஏற்றிஇ இறக்க வசதியாக இருக்குமென்று கூறினார்.
இந்த துறைமுகத்தின் பணிகள் பூர்த்தி யானவுடன் நாட்டில் 50 வீதமான பகுதி களுக்கு தேவையான சீமெந்துஇ சீனி மற்றும் இரும்புஇ உருக்கு பொருட்களை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்க முடியுமென்று சொன்னார்.
காங்கேசன்துறைக்கும் சென்னைக்கும் இடையிலான புதிய சரக்கு கப்பல்சேவை 2015ம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிப் பதற்கான ஒழுங்குகள் இப்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக கூறினார். தலை மன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கும் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகாலிங்கம் கூறினார்.
இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத்திட்டம் வெற்றிகர மான முறையில் நடைமுறைப்படுத் தப்படுகிற தென்றும் இதனடிப்படையில் 50ஆயிரம் வீடுகள் இந்தியாவினால் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் இதில் 42ஆயிரம் வீடுகள் வடபகுதியிலும்இ தலா 4ஆயிரம் வீடுகள் கிழக்கு பகுதியிலும்இ மலையகத்திலும் 2015ம் ஆண்டு ஒக்டோபருக்குள் நிர்மாணித்து முடிக்கப்படும் என்றும் திரு. மகாலிங்கம் மேலும் தெரிவித்தார்.
வடபகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட தரைக் கண்ணி வெடிகளை இந்திய அரசாங்கம் சர்வாராஇ ஹோரியா என்ற இரு நிறுவனங்கள் மூலம் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில் 70 மில்லியன் சதுர மீற்றர் நிலப்பரப்பில் உள்ள கண்ணி வெடிகள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டி ருப்பதாகவும் மகாலிங்கம் தெரிவித்தார்.
திரு. மகாலிங்கத்துடன் நடத்திய சம்பாசணை பற்றிய மேலும் விபரங்களும் யாழ்ப்பாணம் குருநகரில் அமைந் துள்ள கடல்சார் மற்றும் சமுத்திரவியல் பல்கலைக்கழகம் பற்றிய விபரங்களையும் அடுத்த வாரத்தில் எழுத உள்ளேன். இந்த வடபகுதி விஜயத்திற்கு எனக்கும் மற்ற ஊடகவிய லாளர்களுக்கும் உதவி செய்த தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் அவர்களுக்கும் தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி எம்.எஸ். மிஸ்வருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
எஸ். தில்லைநாதன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com