Contact us at: sooddram@gmail.com

 

ஒரு செங்கொடி நகர் உதயம்

(கே.பி.பெருமாள்)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங் குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள, ஊரைச்சுற்றி விவசாய நன்செய் நிலங்கள் நெல், வாழை, உளுந்து ஆகிய பிரதான விவசாயப் பயிரைக் கொண்ட அழகிய கிராமம் ஆராம்பண்ணை. இங்கு பெரும்பகுதி முஸ்லிம் மக்கள் வாழ்கி றார்கள். சிறு பகுதியினர் இதர சமூகத்தை சார்ந்தவர்கள். விவசாய நிலங்களுக்கு சொந்தக் காரர்களாக முஸ்லிம்கள் ஏராளமானோர் உள் ளனர். விவசாயத்தின் மூலம் வசதி படைத்த வர்களாகவும், சிலர் வெளிநாடுகளில் வேலை செய்து அந்த வருவாய் மூலம் நல்ல நிலை யிலும் உள்ளனர். ஒரு பகுதி முஸ்லிம்கள் விவ சாய கூலி வேலை செய்பவர்களாக, பீடி சுற் றும் தொழில் செய்பவர்களாக உள்ளனர். இவர் களில் பெரும்பாலானோர் வாடகை வீடு களில் குடியிருந்து வருகிறார்கள்.

கடந்த 2006ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் வாடகை வீட்டில் வாழும் ஏழை முஸ்லிம் களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங் கியது. நிலத்தை அளந்து (சர்வே) கொடுக்கப் பட்ட வட்டாட்சியர் கையொப்பமிட்ட ஒப்புதல் கடிதமும் பயனாளிகளுக்கு அப்போது வழங் கப்பட்டது. இதனால் அவர்களுக்கு பெரும் சந்தோஷம் ஏற்பட்டது. அரசு வழங்கிய இல வச வீட்டுமனைப் பட்டா நிலம் உள்ள சர்வே எண் 207ல் சென்று வீடுகட்ட மற்றும் குடிசை அமைக்க இவர்கள் சென்றபோது அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கிராமத்தின் வசதி படைத்தவர்கள் அந்த நிலத்தை தங்க ளுடைய கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார்கள். ஏழை முஸ்லிம்கள் அரசு அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக் கின்றனர். நேரடியாக அதிகாரிகளுடன் பேசு கின்றனர். அரசு அதிகாரிகள், உங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்தாகிவிட்டது; அளந்தும் (சர்வே) கொடுத்தாகிவிட்டது. நீங்கள் போய் அங்கு குடிசை அல்லது வீடு கட்டுங்கள் என்று தெரிவித்துவிடுகிறார்கள்.

ஏழை முஸ்லிம்கள் என்ன செய்வது என்று புரியாமல், ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் ஜமாத் மூலம் பேசுகிறார்கள். உடன்பாடு ஏற்பட வில்லை. கடைசியாக ஜமாத்தும் கைவிடு கிறது. வேறு சமூகத்தை சார்ந்த பெரியவர்கள் மூலம் பேசுகிறார்கள். அதிலும் எந்த முன் னேற்றமும் இல்லை. நேரடியாக நிலத்தில் இறங்கி அதில் உள்ள வேலி மரங்களை வெட்ட ஜேசிபி இயந்திரத்தை மூன்று முறை கொண்டு வருகிறார்கள். நிலத்தை ஆக்கிர மித்த முஸ்லிம்கள் அந்த இயந்திரத்தை ஊரின் எல்லையிலேயே மடக்கி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் செய்துங்கநல்லூரில் மக்கள் குறைகேட்கும் கூட்டம் நடத்தியபோது, அங்கு இந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் கலெக்டரை முற்றுகை யிடுகிறார்கள். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவிக்கிறார். அதற்கும் பலன் இல்லை. 2007ம் ஆண்டில் எதிர்தரப்பு முஸ் லிம்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில், அவர் களது நிலத்தை இலவச பட்டா போட்டு கொடுத்த மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இலவச பட்டா கொடுத்தது சரி என்று தீர்ப்பு வருகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, வழக்கு தற்போது நடந்து வருகிறது.

இப்படியே ஐந்து ஆண்டுகள் கடந்து விடுகின்றன. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையேஎன்ற ஏக்கத்தில் ஏழை முஸ்லிம் பெண்கள் கடைசியாக ஏப்ரல் 24ம் தேதியன்று தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தை அணுகினர். அன்றே திருவைகுண் டம் வட்டாட்சியர் அவர்களை மாவட்ட துணைச் செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். நாங்கள் அளந்து (சர்வே) அவர்களுக்கு கொடுத்தாகி விட்டது; அவர்கள் போய் அங்கு இருக்க வேண்டியது தானே? என்று வட்டாட்சியர் எதிர்கேள்வி கேட்டார். தமிழ்நாடு முழுவதும் மே 21 முதல் 26 வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளூர் கோரிக்கைகளுக்கான இயக் கம் நடத்திட தீர்மானித்திருந்தது. அந்த போராட்டத்தையொட்டி மே 25ம் தேதியன்று திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மே 28ம் தேதியன்று தலைவர்களும் பய னாளி முஸ்லிம் பெண்களும், மரம் வெட்டுப வர்கள் 14 பேரும் நிலத்திற்குள் இறங்கி வேலி மரம் வெட்டும் வேலை நடைபெற்றது. அப் போது, ஆக்கிரமிப்பு செய்த அப்துல்பாரி வந்து, இது எங்கள் நிலம். வழக்கு கோர்ட்டில் உள் ளது. எப்படி வேலியை வெட்ட முடியும் என்று கேட்டார். அவர், காவல்துறைக்கு தகவல் தெரி வித்து இன்ஸ்பெக்டர், இரண்டு உதவி ஆய் வாளர்கள் வந்து தலைவர்களிடம் விசாரித் தனர். நீதிமன்ற தீர்ப்பு, பட்டா, அளந்து கொடுத் ததற்கான அத்தாட்சி ஆகியவைகளை காண் பித்தவுடன், வேலை நடக்கட்டும் என்று கூறிச் சென்றனர். இன்னும் பலர், இது எங்கள் நிலம் என்று அவர்கள் வைத்திருந்த பத்திரங் கள் மற்றும் இதரவைகளை கொண்டுவந்து காண்பித்தனர். இதற்கெல்லாம் மாரியப்பன் லாவகமாக பதில் தெரிவித்தார். முதல் நாள் சிறு சலசலப்புகளுடன் வேலை முடிந்தது.

மே 29ம் தேதியன்று மரம் வெட்டும் பணி நடைபெறுகிறது. ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வேலையை வேகப்படுத்த முயற்சி எடுத்தால், ஜேசிபி இயந்திரம் வைத்திருப்ப வர்கள் வர மறுக்கிறார்கள். காரணம், எதிர் தரப் பினரின் செல்வாக்கு என்று பின்னர் தெரிய வந்தது.

இரண்டாம் நாளில் வேலை நடக்கின்ற போது அக்கிராம முஸ்லிம் இளைஞர்கள் 5 பேர் வந்து, ‘ஜமாத் இடத்தில் வேலி வெட்டுகிறீர் கள். அங்கு வெட்டக்கூடாது. நாங்கள் இப் போது வழக்கறிஞர்களை அழைத்து வருகி றோம் பார்என்று சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் கேமரா சகிதம் வந்து மரம் வெட்டு பவர்களை போட்டோ எடுத்தனர். அங்கு இருந்த தலைவர்களையும் போட்டோ எடுக்க முயற்சி செய்து அருகில் வந்தனர். அப்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மே 30ம் தேதியன்று மூன்றாம் நாள் அந்த இளைஞர்களும், வேறு சர்வே எண்ணில் உள்ள பெண்ணும் முறப்பநாடு காவல்நிலை யத்தில் சங்க தலைவர்கள் மாரியப்பன், கண்ணன் மீது புகார் செய்தனர். புகார் செய்யப்பட்ட விபரம் எங்களுக்கு அன்று தெரி யாது. கடுமையான முயற்சிக்குப் பின் அன்று ஜேசிபி இயந்திரம் வேலை செய்ய பகல் 11.30 மணிக்கு வந்தது. அப்போது அந்த ஏழை முஸ்லிம் பெண்களின் முகத்தில் பெரும் உற் சாகம் தெரிந்தது. நான் கேட்டேன்-‘மிகவும் சந் தோசமாக காணப்படுகிறீர்களே, ஜேசிபி இயந் திரம் என்ன கடவுளாஎன்றேன். இல்லை மூன்று முறை ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்த போது ஊருக்கு வெளியிலேயே திருப்பி அனுப்பி விட்டனர். இப்போதும் அது நடக் குமோ என்ற அச்சம் தான்!’ என்றனர். அன்று மாலையில் இருபது முஸ்லிம் இளைஞர்கள் ஜேசிபி இயந்திரத்தை மறித்து பிரச்சனை செய்தனர். உடனே காவல்துறையினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தோம்.

அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தோம். உங்கள் மீதும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். நாளைக்கு வாருங்கள் பேசிக்கொள்வோம் என்றனர். மே மாதம் 31ம் தேதியன்று பெட் ரோல் விலை உயர்வுக்கு எதிரான மறியல் போராட்டத்தில் 24 முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனர்.

ஜூன் 1ம் தேதியன்று மாலை 3 மணிக்கு உயர் போலீஸ் அதிகாரிகளை தூத்துக்குடி யில் நாம் சந்தித்து பேசினோம். மாலை 6 மணிக்கு முறப்பநாடு காவல்நிலையத்தில் அங்குள்ள உதவி ஆய்வாளர் இரண்டு தரப் பினரையும் விசாரணை செய்தார். எதிர் தரப் பினர் இரண்டு வழக்கறிஞர்களுடன் வந்திருந் தனர். இறுதியில் சர்வே எண் 207ல் எந்த பிரச்சனையும் இல்லை. ஆகவே நாளைக்கு நீங்கள் வேலை பார்க்கலாம் என்று பேசி முடிவு எட்டப்பட்டது. ஜூன் 2ம் தேதியன்று காலை தூத்துக்குடி ரூரல் துணை கண் காணிப்பாளர் அவர்கள் மீண்டும் இரண்டு தரப்பினரையும் விசாரணை செய்திட வேண் டும், வாருங்கள் என்றார். நாம் சென்று நமது நியாயங்களை அவரிடம் விளக்கினோம். எதிர் தரப்பில் இந்த பிரச்சனைகளுக்கு தூண்டு கோலான இஸ்மாயில் மற்றும் ஐந்து இளைஞர் கள் வந்திருந்தனர். காவல் உதவி கண்காணிப் பாளர்ஆதாரம் இருந்தால் என்னிடம் கொண்டு வா. இல்லையேல் அந்த இடத் திற்கே செல்லக்கூடாஎன்று மிகக் கடுமை யாக பேசினார். பகல் 12 மணிக்கு மேல் அன்று எல்லோருக்கும் நிலத்தை அளந்து (சர்வே) தனித்தனி பிளாட்டுகளாக பிரித்துக் கொடுக் கப்பட்டது. அப்போது எதிர்தரப்பை சார்ந்த இஸ்மாயில் என்பவர் சர்வே செய்ய வந்த வரிடம் விபரங்களை கேட்டறிந்தார். இரவில் குடிசை போடும் பணி துவங்கி அதிகாலை 4.30 மணிக்கு நிறைவு பெற்றது. ஆறாவது நாள் குடிசை போடும் பணி தொடர்ந்து நடைபெற் றது. 7வது நாள் அனைத்துப் பணிகளும் முழுமையாக நடைபெற்று முடிந்தது.

இந்த மகத்தான பணிகளுக்கு மிக முக்கிய மானவர், இந்த குழுவை ஒருங்கிணைத்தவர் உம்முகுல்தூம் என்ற 56 வயது பெண்மணி ஆவார். முஸ்லிம் பெண்கள் வீட்டில் முடங் கிக் கிடப்பவர்கள் அல்ல என்பதை நிரூபித் தவர். இவரோடு இவரது மகள் ஹபிபா மற்றும் மரியம்பீவி, ஹதிஷா பானு, சபுரா, ஆசியா, சேனு, சபுரா, தொ.பாத்திமா, அலிமா, முகமது பாத்திமா, ஹாசரா மற்றும் சில பெண்களும் இவர்களோடு இப்ராஹீம், ரகமத்துல்லா உள் ளிட்ட ஐந்து ஆண்களும் தொடர்ந்து ஒருங்கி ணைந்து நம்மோடு செயல்பட்டதால் ஒரு மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளனர்.

இறுதியில் அனைவரும் கலந்து கொண்ட கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் இந்த இடத்திற்கு பெயர் வைக்க வேண்டும். என்ன பெயர் வைக்கலாம் என்று கருத்து கேட்கப்பட்டது.

எங்கள் இடத்துப் பெயரை கேட்டாலே அதி காரிகள், காவல்துறையினருக்கு உடனடியாக புரியக் கூடிய வகையில் பெயர் வையுங்கள் என்று ஒரே குரலில் அனைவரும் தெரிவித் தனர். நாம், செங்கொடி நகர் என்று வைக்க லாமா? என்று கேட்ட அடுத்த விநாடி, சூப்பர் பெயர். இப்படிப்பட்ட பெயரைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்றனர். ஆம் அவர்களு டைய இடத்திற்குசெங்கொடி நகர்என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த வெற்றிசாது மிரண்டால் காடு கொள்ளாதுஎன்பதற்கு ஏற்ப வும், ‘போராட்டத்தினால் எதனையும் யாராலும் பெறமுடியும்என்பதையே உணர்த்துகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com