Contact us at: sooddram@gmail.com

 

13வது திருத்தம் தொடர்பான அச்சமும் தெளிவும்

13வது திருத்த அதிகாரங்களும் ஜனாதிபதியின் பங்கும்

இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியே 13 வது திருத்தமாகும். தேசி யப் பிரச்சினையான இனப்பிரச்சினையில் இன்றுவரையில் ஒரு சட்டபூர்வ ஆவணமாக இருப்பது 13வது திருத்தமே. பல மும்மொழிவுகள் பின்மொழிவுகள் உத்தேச நகல் வரைவுகள் பரிமாறப்பட்ட ஆவணங்கள் என பலவிதமான ஆலோசனைகள் அரங்கேறியும் எவையும் சட்டபூர்வ அந்தஸ்தையோ, அமுலாக்கத்தகு தகைமையையோ பெறவில்லை என்ற வகையில் அதிகாரம் பெற்ற ஒரு பொதுவான அடிப்படை ஆவணமாக 13வது திருத்தம் காணப்படுகிறது.

குறையும் குற்றச்சாட்டும்

மறைந்த மு.கா. தலைவர் மர்ஹ¥ம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் 13வது திருத்தம் வெளிவர உறுதுணையாக அமைந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம்களைப் பற்றி எதுவும் கூறப்படாதிருந்ததையிட்டு அதனை ஒரு அடிமைச்சாசனம் என்று வர்ணித்தார். 13வது திருத்தம் எமது தொண்டைக்குள் திணிக்கப்பட்ட திரவம் என்று பெரும்பான்மைவாதிகள் கூறிக்கொண்டுள்ளனர். அந்தத் திருத்தத்தை முறையாக அமுலாக்கினால் பிரிவினை வாதம் தலைதூக்கும், நாடு இரண்டாகப் பிளவுபடும். நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் தேசியவாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மனப்பாங்கும் மக்களும்

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டுகள் கடந்தும் வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தும் மனப்பாங்கில் மாற்றமில்லை. அரசியல், சமூக,பொருளாதாரம் போன்ற விடயங்களில் பின்னோக்கிப்பார்த்து நமது சமீபகால சாதனைகளை பகுப்பாய்வு செய்வதற்கு ஒரு ஏற்புடைய காலமே இதுவாகும். அந்த வகையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால பயங்கரவாத கொடூரத்தை அனுபவித்த ஒரு நாட்டின் பிரஜைகள் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கைகளின் பாதையைப் பற்றி மீள சிந்திக்க வேண்டும். இந்த நிலையில், உறுதியான அபிவிருத்தி, நிலையான சமாதானம் பொருத்தமான அரசியல் தீர்வு ஆகியவற்றை நோக்கி நகர்வதற்கு தங்களது மனப்பாங்கில் ஒரு மாற்றத்தை மக்களும், தலைவர்களும் ஏற்படுத்த வேண்டும்.

அனுபவமும் அச்சமும்

வெல்ல முடியாதென்ற யுத்தத்தை வென்ற அனுபவம் இலங்கைக்கு உண்டு. வரதராஜப் பெருமாளின் தமிbழ பிரகடனத்தை தடுத்து நிறுத்திட நிலைமையை வழமை நிலைக்கு கொண்டு வந்த அதிகாரம் மத்திக்கு இரு ந்தது. முன்னர் தீவிரவாத உணர்வுடனி ருந்த ஒருவரை முதலமைச்சராக்கிப் பார்க்க வாய்ப்பு கிட்டியது. ஒரு தளபதியையே கட்சியின் உபதலைவர்க ளில் ஒருவராக்க முடிந்தது. இத்தகைய அனுபவங்களையும் அதிகாரங்களை யும் கொண்டமைந்துள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கு 13வது திருத்தத்தின் படியான அதிகாரங்களை வழங்கி பரீட்சார்த்த அடிப்படையில் ஓடவிட்டு நிலைமையை அவதானித்து தீர் மானமெடுக்கும், அல்லது தடுத்து நிறுத் தும் நெறிமுறையும், நெம்பு கோலும் இல்லாமலில்லை.

தெளிவும் தெம்பும்

13வது திருத்தப்படி காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதிலுள்ள அச்சத்துக்கும் ஒரு தெளிவுண்டு. பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபை களுக்கு வழங்கப்படின் மத்திக்கு எத்த கைய அதிகாரங்களும் எஞ்சியிருக்காது என்றும், தலையீடுகளையோ, முன் மொழிவுகளையோ, அமைதி பேணும் நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக்கூடிய அதிகார நிலை அற்றுப் போய்விடும் என்ற பேச்சுக்களும் உண்டு.

ஆனால், பொது ஒழுங்கமைதி பேணுதல் பொலிஸ் தத்துவங்களை பிரயோகித்தல் தொடர்பில் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் முதலமைச் சருக்கு பொறுப்பாளியாகவும், கட் டுப்பட்டவராகவும் இருப்பாராகிலும் ஜனாதிபதிக்கு பின்வரும் தகைமைகள் அமைந்திருக்கும்.

மாகாணத்தில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டால் ஜனாதிபதி ஒழுங்கு விதிகள் மூலமாக முதலமைச்சரின் தத்துவங்களையும், பொறுப்புடமைகளையும், மாகாணத்தின் பொது ஒழுங்கமைதி தொடர்பான மாகாண நிர்வாகத்தையும் பொறுப்பேற்கலாம்.

ஒரு மாகாணத்தின் பந்தோபஸ்து நிலைமை அல்லது பொது ஒழுங்கமைதி கடுமையான உள்ளக குழப்ப நிலைமை காரணமாக அச்சுறுத்தப்படுவதாக ஜனாதிபதி அபிப்பிராயப்படின் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தாமல் முதலமைச்சரின் கலந்தாலோசனையுடன் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கு இணங்க பொது ஒழுங் கமைதியை நிலைநாட்டுவதற்காக சிவில் தத்தவத்திற்கு உதவியாக மாகாணத்தில் தேசியப் பகுதியின் ஏதேனும் பிரிவை அமர்த்தலாம்.

இது மாத்திரமன்றி புலனாய்வு வழக்குத்தாக்கல், பொலிஸ் தத்துவ பிரயோகம், ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு, ஒழுக்காற்று நடவடிக்கை போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஒருவகை மேற்பார்வையுண்டு. இந்த நிலையில் மாகாண பொலிஸ் அதிகாரங்களில் சமநிலை தலையீடுகளுக்கோ ஜனாதிபதி யின் பங்காற்றுகைக்கோ இடமில்லை என் றும் மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு மத்திக்கும், மாகாணத்துக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைத்து பிளவுபட்டுச் செல்ல வாய்ப்பை தோற்றுவிக்கும் என்ற கருத்துக்கள் இல்லாமலில்லை. ஆனால் 13 வது திருத்தமானது அத்தகைய கருத்துக்களு க்கு ஆப்புவைப்பதை போன்றும், பிரதான அழுத்தி மத்தியில் புதைந்து கிடக்கத்தக்கதாக தென்படாமலுமில்லை.

அந்தவகையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் 13வது திருத்தம் எந்தெந்த அடிப்படையில் சமநிலைத் தலையீடுகளையும் ஜனாதிபதியின் பங்காற்றுகைகளையும் கொண்டுள்ளது என்பதை காண்போம்.

ஜனாதிபதியின் பங்கு - சமநிலைத் தலையீடுகள்

மாகாணத்தின் பொலிஸ் எல்லைகள் ஜனாதிபதியினால் குறித்துரைக்கப்படுகிறன.

மாகாண பொலிஸ் ஆணைக்குழுவில் ஜனாதிபதியின் பிரதிநிதி.

முதலமைச்சரின் சம்மதத்துடன் பொலிஸ் மா அதிபர் - பிரதிப் பொலிஸ் மா அதி பரை நியமிப்பதில் உடன்பாடு காணப்ப டாத பட்சத்தில் இவ்விடயம் ஜனாதிபதி க்கு ஆற்றுப்படுத்தப்படும். அந்நிலை யில் ஜனாதிபதி முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பின்னர் நியமனம் வழங்கப்படும்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு அல்லது மாகாண பொலிஸ் ஆணைக்குழு அதன் தத்துவங்களுள் விதித்துரைக்கப் படக் கூடியவாறானவற்றை குறித் துரைக்கப்படும் வேறு ஆளுக்கு அல்லது அதிகார சபைக்கு கையளிப்பதற்கு உரித்துடையாதல் வேண்டும்.

தேசிய பகுதியின் எல்லாப்பதவித் தரங்களையும் சேர்ந்த பொலிஸ் அலுவலங்களின் ஊழியர் கோப்புகள் இலங்கை அரசாங்கத்தினால் நிர்ண யிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாகாணப் பகுதியினதும் அலுவலர்களினதும் வேறு பதவித் தரத்தினதும் ஊழியர் கோப்பு - மாகாணத்தின் பரப்பளவு, மாகாணத்தின் சனத்தொகை அத்துடன் உடன்பட்டுக் கொள்ளப்படக்கூடியவாறான அல்லது விதித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய வேறு அளவைக் கட்டளைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் மாகாண நிருவாகத்தினால் நிர்ணயிக்கப்படுதல் வேண்டும். இது எல்லா மாகாண பகுதிகளுக்கும் ஒரு சீராக ஏற்புடைய னவாதல் வேண்டும்.

சனத்தொகை, பரப்பளவு சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை போன்ற இயைபான நெறிகளையும் வேறு இயைபான காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப் படல் வேண்டும்.

தேசிய மாகாண பதவித்தரத்தினராலும் துய்க்கப்படும் சம்பள அளவுத்திட்டங்களும், அலுவலக மேலதிக வருவாய்களும் முதலமைச்சர்களைக் கலந்தாலோசித்த பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படுகிறது.

தேசிய பகுதிக்கான சுடுபடைக் கலங்களினதும், வெடிமருந்துகளினதும், வேறு சாதனங்களினதும் தன்மையும், வகையும், அளவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படு கிறது.

மாகாணப் பகுதிக்கான சுடுப டைக்கலங்களினதும், வெடிமருந்துகளின தும், வேறு சாதனங்களினதும் தன்மையும், வகையும், அளவும் மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவுடனான கலந்தாலோச னையின் பின்னர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

தேசிய பகுதிக்கான ஆட்சேர்ப்பு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினா லும், மாகாண ஆட்சேர்ப்பு மாகாண பொலிஸ் ஆணைக்கழுவினாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆயினும் சேர்க்கப்படும் ஆள் நியமிக்கப்பட்டதன் மேல் சேவையாற்ற விரும்பும் இடத்துக்கு முன்னுரிமை வழங்கலாம் விரும்பும் பகுதியில் சம்மதத்துடன் பதவிக்கமர்த் தப்படலாம்.

சேர்க்கப்பட்டவர்களுக்கான பயிற்சியை இலங்கை அரசாங்கம் வழங்குகிறது. அவசியமாயின் மாகாணப் பகுதியின் உறுப்பினர்களுக்கு மாற்றுப் பயிற்சிய ளிக்குமாறு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு.

தேசியப் பகுதியினதும் மாகாணப் பகுதிகளினதும் உறுப்பினர்கள் ஒரே சீருடையையும் பதவித்தரத்துக்குரிய சின்னங்களையும் அணிதல் வேண்டும். ஆயினும் ஒவ்வொரு பகுதியினதும் உறுப்பினர்களின் சீருடைகள் அவர் எப்பகுதியை சேர்ந்தவரோ அப்பகுதி யினை சுட்டிக்காட்டும் தனிவேறான தோள்பட்டியொன்றைக் கொண்டிருந்தல் வேண்டும்.

மாகாணப் பகுதியின் உறுப்பினர்களை யும் அதற்கு மாற்றுச்சேவைக்கு விடு விக்கப்பட்ட அலுவலர்களையும் கொண்டமைந்த சீரான பொலிஸ் படையொன்று ஒவ்வொரு மாகாணத்திலும் இருத்தல் வேண்டும்.

தேசியப் பகுதியின் உறுப்பினர்கள் வழமையான சாதாரண உடையில் இருப்பர் பொது ஒழுங்கமைதியை பேணுதல், நிலைநாட்டுதல் சம்பந்தமான கடமைகள் எவற்றையும் புரியும் போது சீருடைகளை அணிய முடியும். ஆயினும் பொலிஸ் மா அதிபரும், குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய ஏனைய அலுவலர்களும் பொதுவான சீருடை அணிந்திருத்தல் வேண்டும்.

தேசியப் பகுதியின் கூறுகளிலும், ஏதெனும் மாகாணத்தின் மாகாணப் பகுதிகளிலும், சேவையாற்றும் எல்லாப் பொலிஸ் அலுவலர்களும் அத்தகைய மாகாணத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் பணியாற்றுதல் வேண்டும்.

முதலமைச்சர் ஒரு மாகாணத்தினுள் பொது ஒழுங்கமைதியை பேணிப் பாதுகாப்பதற்கு தேசியப் பகுதியின் உதவியை நாடுமிடத்து பொலிஸ் மா அதிபர் அந்நோக்கத்துக்கு அவசியமாகக் கூடியவாறான தேசியப் பகுதியின் அத்தகைய ஆளணியினரை அமர்த்தலாம். அத்தகையோரை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தல் வேண்டும்.

மாகாணத்தில் அவசரகால நிலைமை யொன்று வெளிப்படுத்தப்படுமிடத்து பொலிஸ் மா அதிபர் பொது ஒழுங்கை நிலைநாட்டிட தேசிய கூறுகளை மாகாணத்திற்கு அமர்த்தலாம்.

தேசிய பகுதியினதும், மாகாணப் பகுதிகளினதும் எல்ல கெஸட் அலுவலர்களும் சிங்களத்திலும் தமிழிலும் விதித்துரைக்கப்பட்ட தரத்தை எய்தும் படி தேவைப்படுத்தப்படுதல் வேண்டும். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவித்தரத்திலும் அதற்கு மேற்பட்ட தரத்திலும் உள்ளவர்களான சகல அலுவலர்களும் ஆங்கிலத்திலும் விதித்துரைக்கப்பட்ட தரத்தை தேவைப்படுத்தப்படுதல் வேண்டும்.

இலங்கைப் பொலிஸ¤க்கு ஆட் சேர்க்கப்படும் ஒவ்வொருவரும் அவரது தாய் மொழியில் திறமைபெற்றிருத்தல் வேண்டும். முதலாவது பதவியுயர்வுக்கு அவர் தமது தாய்மொழி தவிர்ந்த ஒரு மொழியில் திறமை பெறுதல் வேண்டும். அடுத்த பதவியுயர்வுக்கு அவர் மூன்றாவது மொழியில் அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

இந்த நோக்கத்துக்காக ஏற்றங்கீ கரிக்கப்பட்டதான மூன்று மொழிகளான சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியன காணப்படுகின்றன. இந்த விஷயம் 25 ஆண்டுகளுக்கு முன்பே 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜனாதிபதி மும்மொழிக்கொள்கையின் முக்கியத்துவத்தைக் கூறினார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிய இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் இதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிச் சென்றதையும் அறிந்து கொள்ள முடியும்.

காணி தொடர்பான சமநிலைத் தலையீடுகள்

காணி நீர்ப்பாசன செயற்திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கும்.

குறித்த திட்டங்களின் மூலம் தோன்றும் கமத்தொழில் மற்றும் குடியிருப்புக்காணிகள் வைத்திருக்கப்படும் அளவு தொடர்பான நெறிகளும், கோட்பாடுகளும் மாகாண சபைகளின் ஆலோசனையுடன் இலங்கை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும்.

காணியற்றோர் அளவு விண்ணப்பகாரரின் வருமானம் விண்ணப்பகாரரது குடும்பத்தின் அளவு மற்றும் அவரது கமத்தொழில் பின்னணி உட்பட குடியிருப்பவர்களை தெரிவு செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய கோட்பாடுகளை கருத்திற் கொண்டு அத்தகைய காணிகளை குறித் தொதுக்கப்படுவோரைத் தெரிவு செய்தலானது இலங்கை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் இக்கோட்பாடுகளை உள்ளபடியாகக் கடைப்பிடித்தல் / காணி குறித்தொதுக்கப்படுவோரை தெரிவு செய்தல் மற்றும் அதனோடு தொடர்புபட்ட இடை நேர்விளைவான ஏனைய கரும ங்கள், மாகாண சபைகளின் தத்து வத்துக்குட்பட்டனவாக இருக்கும்.

குறித்த செயற்திட்டங்களில் அத்தகைய காணிகளை குறித்தொதுக்கிப் பகிர்தலானது தேசிய இன விகித அடிப்படையில் இடம்பெறும். அத்தகைய விகித அடிப் படையில் குறித்தொதுக்கலை பகிரும் போது அச்செயல் திட்டத்தின் மூலம் காணி பறிக்கப்பட்டவர்களான ஆட்களுக்கும் அச்செயற்திட்டம் அமைந்துள்ள மாவட்டத் திலிருக்கும் காணியற்றோருக்கும் அதன் பின்னர் மாகாணத்திலுள்ள காணியற்றோ ருக்கும் முதலிடமளிக்கப் படுதல் வேண்டும்.

ஏதேனும் அத்தகைய செயற்திட்டத்தில் ஏதேனும் சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர் கள் தமக்கென குறித்தொதுக்கப்பட்ட உரித்து நிலங்களைப் பெறாதுவிட்டால் அல்லது பெற முடியாதிருந்தால், அவர்களை, மாகாணங்களுக்கிடையி லான நீர்ப்பாசன அல்லது காணி அபிவிருத்தித் திட்டத்தில் சம அளவான குறித்தொதுக்கல்களை பெற்றுக்கொள் வதற்கு உரித்துடையவர்களாவர். இத்த கைய பயன்படுத்தப்படாத காணியின் அளவு, கொடுக்கப்பட்ட ஒரு காலப் பகுதிக்குள்ளாக பயன்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் அத்தகைய செயல் திட்டங்களில் குறித்தொதுக்கல்களை பகிர்தலானது அம்மாகாணத்தின் குடி நிலைப் புள்ளியியல் அமைப்பை பெருமளவில் பாதிக்காத விதமாகவும் மனித குடியிருப்புகளில் சமுதாய ஒட்டுறவை உறுதிப்படுத்தும் கோட்பாட்டுக் கிணங்கவும் இயலக்கூடியவரை செயல்படுத்தப்படும்.

இத்தகைய செயல்திட்டங்களின் நிருவாகமும், முகாமையும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும்.

இலங்கை அரசாங்கம் தேசிய காணி ஆணைக்குழுவொன்றை தாபிக்கும். இது அரச காணியின் பயன்பாடு தொடர்பாக தேசிய கொள்கையொன்றை உருவாக்குவதற்குப் பொறுப்புடையதாக இருக்கும். இவ்வாணைக்குழு தீவின் சகல மாகாண சபைகளினதும் பிரதிநிதி களை உள்ளடக்கியதாக இருக்கும்.

தேசிய காணி ஆணைக்குழுவுக்கு தொழில்நுட்பச் செயலகம் ஒன்றிருக்கும் இயற்கை மூலவள முகாமைக்கு இயைபான பெளதீக மற்றும் சமூக பொருளியல் காரணிகளை மதிப்பீடு செய்வதற்குத் தேவைப்படும் இயைபான அறி வுத்துறைகளை இது பிரதிநிதித்துவப் படுத்தும்.

காணிப்பயன்பாடு மீதான தேசியக் கொள்கை தொழில்நுட்ப அம்சங்களை (அரசியல் அல்லது இனவாரி அம்சங்கள ல்ல) அடிப்படையாகக் கொண்டிருக்கும் மண்வளம் காலநிலை, மழை வீழ்ச்சி, மண்ணரிப்பு, காட்டு வனப்பு, சுற்றாடல், காரணிகள், பொருளாதார நிலைப்பாடு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு காணிப் பயன்பாடு தொடர்பான பொதுக்கோட்பாடுகளை ஆணைக்குழு வகுக்கும்.

மாகாண சபைகள், அவற்றுக்களிக்கப் பட்ட தத்துவங்களை பிரயோகிக்கையில், அத்தத்துவங்கள் தேசிய காணி ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட தேசியக் கொள்கையை கருத்தில் கொண்டு மாகாண சபைகளினால் பிரயோகிக்கப்பட வேண்டும்.

எது எவ்வாறாயினும் அபிப்பிராயங்கள் கருத்துமோதல்கள் ஏற்காமை, ஆர்ப் பாட்டங்கள், எதிர்ப்பலைகள் மத்தியிலேயே இதுவரையில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து முக்கிய அம்சங்களும் நடந்தேறியுள்ளன. அந்தடிப்படையில் ஒரு பரீட்சார்த்த அடிப்படையில் ஒரு முக்கிய விஷயத்தை நிறைவேற்றிப் பார்ப்பதில் தவறில்லை.

சட்டத்தரணி

இஸ்மாயில்

பி. மஆரிஃப்

(தலைவர் சுயாதீன தேசிய முன்னணி (ஐநா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com