Contact us at: sooddram@gmail.com

 

'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'

பெண்கள் இல்லாத வீடுகளில் நிகழும் தடுமாற்றங்களையும், தவறுகளையும் பார்த்துத்தான் 'பெண்கள், வீட்டின் கண்கள்!’ என்று சொல்லியிருப்பார்கள் போல! அதை முழுவதுமாக உணர்ந்து, தவித்து, இப்போது உயிர் துறந்திருக்கிறார் விவேகானந்தன்! மதுரை, கண்ணனேந்தல் எம்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். மகள், திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார். மகனுக்கு திருமணமாகி, அவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய்விட்டார் மருமகள். ஆக, பெண்கள் இல்லாத அந்த வீட்டில் கடைசியாக விவேகானந்தனும், மகன் விக்னேஸ்வரன் மட்டுமே!

இந்நிலையில்... விபத்து ஒன்றில் சிக்கி, கிட்டத்தட்ட கோமா நிலைக்கு மகன் சென்றுவிட, விவேகானந்தன் தாயுமானார். படுக்கையில் இருக்கும் மகனிடம் அன்பு காட்டவும், பணிவிடை செய்யவும் அவரால் முடிந்தது. ஆனாலும் ஏதோ ஒரு குறை. அதேபோல, தள்ளாத வயதில் இருந்த தன்னிடம் அன்பு காட்ட ஆளில்லையே என்ற ஏக்கமும் அவருக்கு இருந்தது. மே 31 அன்று இரவு மகனை கருணைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார் விவேகானந்தன்.

''பொம்பள இல்லாத வீடு... வீடா தம்பி?'' என்று பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு கேட்கும் விவேகானந்தனின் நண்பரும், 80 வயதைக் கடந்தவருமான அழகரின் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை.

''பாவம் அவரு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிட்டாரு. யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு மிடுக்கா திரிஞ்ச மனுஷனுக்கு, வீட்டு வேலை எதுவும் தெரியாது. எல்லாத்தையும் அவரோட சம்சாரம் தமிழரசிதான் பார்த்துக்கிடும்.

படுத்த படுக்கையான மகனை, பல லட்சம் செலவழிச்சும் குணப்படுத்த முடியல. டாக்டர்களும் கையை விரிக்க, வீட்டுக்குத் தூக்கியாந்துட்டாங்க. அந்தம்மாதான் விழுந்து விழுந்து கவனிச்சுது. அவங்களுக்கு ஏற் கெனவே பிரஷர். பையனை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டே இருந்ததால, உடம்பு மோசமாகி... ஹார்ட் அட்டாக் குல போய்ச் சேர்ந்துட்டாங்க.

மனைவி இறந்ததும், இந்த மனுஷன் ரொம்பவே இடிஞ்சி போயிட்டாரு. சமைக்கத் தெரியாது. கஷ்டப்பட்டு சோறு மட்டும் வடிப்பாரு. பக்கத்து வீட்டுக்காரங்கதான் குழம்பு கொடுத்து உதவுவாங்க. அதைச் சாப்பிட உட்கார்ற நேரத்துல, படுக்கையிலயே பையன் ஏதாவது பண்ணிடுவான். பழக்கம் இல்ல பார்த்தீங்களா? அதைச் சுத்தம் பண்ணிட்டு வந்து அவரால சாப்பிட முடியாது. ஆனாலும், பையன் பாசத்துல தனி ஆளா போராடிட்டே இருந்தாரு.

நாளாக நாளாக பையனுக்கு முதுகெல்லாம் புண்ணாயிடுச்சி. வீட்டுக்குள்ள இருக்க முடியாத அளவுக்கு வாடை கிளம்பிருச்சு. ஒரு கட்டத்துல அந்தப் பையனே, 'என்னைக் கொன்னுருப்பா!’னு புலம்பியிருக்கான். இதை எல்லாம் என்கிட்ட சொல்லி, 'மகராசி எனக்குத் துணையா இல்லாம இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாளே’னு குழந்தை மாதிரி அழுவாரு விவேகானந்தன்'' என்ற அழகரின் பேச்சுக்கு தடைபோட்டது, முட்டிக் கொண்டு வந்த கண்ணீர்.

பேச்சைத் தொடர்ந்த அழகரின் மகன் கண்ணன், ''30-ம் தேதி ராத்திரி என்னோட பலசரக்குக் கடைக்கு வந்தார் விவேகானந்தன். அவருக்கு என் புள்ளைங்கனா உசுரு. 'எங்கப்பா, என் பேரப்புள்ளைங்க?’னு கேட்டாரு. 'மாமனாரோட ஊருக்குப் போயிருக்காங்கய்யா’னு சொன்னேன். ஓங்கித் தலையில அடிச்சுக்கிட்டவரு, 'சே புள்ளைகளைப் பார்த்துட்டுப் போயிடலாம்னு பார்த்தேனே...’னு புலம்பினாரு. 'அதுக்கு எதுக்குய்யா தலையில அடிக்கிறீங்க. அதான் ரெண்டு, மூணு நாள்ல வந்துருவாங்கள்ல’னு சொன்னேன். அப்புறம் எங்கப்பாவ கையப்பிடிச்சு தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டிப் போனாரு...'' என்று நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார் அழகர்...

''வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் மகனுக்குத் துருநூறு போடச் சொன்னாரு. போட்டு முடிச்சதும் எனக்கு ஒரு கிளாஸ் தண்ணி (மது) கொடுத்தாரு. மறுபடியும் குடிக்கச் சொன்னாரு. 'யப்பா என் வயசுக்கு இதுவே அதிகம்’னு சொல்லிட்டு வந்துட்டேன். வீட்டு வாசல் வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டுப் போன மனுஷன் ராத்திரியோட ராத்திரியா இந்தக் காரியத்தைப் பண்ணிட்டாருப்பா'' மறுபடியும் வெடித்து அழுகிறார்.

''பையனுக்கு விஷத்தைக் கொடுத்துட்டு, அவரும் தற்கொலை பண்ணிக்கிட்டாரு. காலையில, வீட்டு வாசல் தெளிச்ச எதிர்வீட்டு பொண்ணுதான், வேப்பமரத்துல அவர் தூக்குப் போட்டு தொங்கறதைப் பார்த்திருக்கு'' என்று அதிர்ச்சி விலகாமல் சொன்ன அழகர்,

''வயசான காலத்துல, ஆம்பள செத் துட்டு... பொம்பள இருந்துடலாம். ஆனா, பொம்பள போயிட்டா ஆம்பளையால இருக்க முடியாதுனு சொல்லுவாங்க. இதுவே இந்த வீட்டுல ஒரு பொண்ணு இருந்திருந்தா, ரெண்டு உசுருக போயிருக்குமா..? பொம்பள இல்லாத வீடு சுடுகாடுனு சும்மாவா சொன்னாங்க? இதோ இப்ப இங்க அது நடந்துருச்சே. வீட்டுக்கு வீடு சமைச்சுப் போடவும், சுக துக்கம் பகிர்ந்துக்கவும் ஒரு பொம்பளை இல்லைனா, உலகமே சுடுகாடாதான் இருக்கும். வீட்டுல இருக்கிற பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'' என்றார் அழகர் கண்ணீர் துடைத்தபடி!

தேவை, பாஸிட்டிவ் எண்ணம்!

மதுரையைச் சேர்ந்த மனநல நிபுணர் வி.கே.அரவிந்த், இந்த கொடுமையான சம்பவம் பற்றி பேசும்போது... ''தனி ஆளாக மகனைப் பராமரித்து, தன்னுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு, வயதான ஒரு ஆண் வாழ்வது... மிகவும் கஷ்டமான காரியம். பேரக்குழந்தைகள் இருந்தாலாவது, ஒரு தெம்பு கிடைத்திருக்கும். இங்கே அதுவும் இல்லாமல், எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் போனதுதான் விவேகானந்தனின் துரதிர்ஷ்டம். இதுபோன்ற சூழ்நிலையில்தான் மனஅழுத்தம் பல மடங்கு கூடிப்போய் எதிர்மறை சிந்தனைகளும், தற்கொலை எண்ணமும் அதிகரிக்கும்.

விவேகானந்தன் போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால்...  தனிமையில் போராடாமல், பிரத்யேக காப்பகங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடலாம். ஏழைகளாக இருந்தால், சுயமாக தன்னுடைய வேலைகளைச் செய்ய முடியாதவர்களுக்கு அரசின் நிதி உதவி கேட்டு மாவட்ட மறுவாழ்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

'கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது! நாம் நலமுடன் இருந்தால்தான், மற்றவர்களைக் கவனித்துக் கொள்ள முடியும்' என்கிற பாசிட்டிவ் எண்ணத்தோடு எப்போதும் இருப்பதுதான் பெரியவர்களுக்கு நல்லது'' என்று சொன்னார் அக்கறை பொங்க!

(நன்றி: விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com