Contact us at: sooddram@gmail.com

 

வெளி மாநிலத்தவரிடம் உழைப்புக் கொள்ளை

(காண்டீபன், சென்னை)

(இக்கட்டுரையின் சாராம்சம் இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழ் பிரதேசங்களின் கட்டுமானப் பணிகளுக்கும் மெத்தப் பொருந்துகின்றது. இதனால் இது சிறப்பாக இங்கு பிரசுரிக்கப்படுகின்றது - ஆர்)

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகர் ரயில் நிலையம் அருகில் 1200 அடி உய ரம் உள்ள புகைபோக்கிகள் (சிம்னி), அதற்கு அருகாமையில் 300 அடி உயரம் உள்ள இரும் பினால் ஏராளமான சாதனங்கள். கடலிலி ருந்து நீரைக் கொண்டு வருவதற்கான ராட் சசக் குழாய்கள், எண்ணூர் துறைமுகத்திலி ருந்து அனல்மின்நிலையத்திற்கு தேவை யான நிலக்கரியைக் கொண்டு வருகின்ற கி.மீ. கணக்கில் உள்ள கன்வெயர் பெல்ட்டு கள், நிலக்கரியைக் கொண்டு வருவதற்கான ரயில் பாதைகள் இவைகள் அனைத்தும் அமைந்து வருகின்றன. ஒரு அனல் மின் நிலையத்திற்கு மட்டும் சுமாராக 70 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்படுகிறது.

மின்வெட்டு குறித்து எந்தப் பிரமுகராவது அல்லது கட்சியாவது கேள்வியை எழுப்பி னால் ஆட்சியாளர்களால் உடனடியாக பதில் சொல்வதற்கு உண்டான மின் உற்பத்தி நிலையங்கள்தான் இவைகள்.

1200 மெகாவாட் மின்திறனுள்ள வட சென்னை மின்நிலையம். இது முழுக்க முழுக்க தமிழக மின்வாரியத்திற்கு சொந்த மானது. மற்றொன்று வல்லூர் அனல் மின் நிலையம். 1500 மெகாவாட் திறன் கொண்டது. தமிழக மின்வாரியமும் தேசிய அனல்மின் கழ கமும் நிதி ஆதாரம் உட்பட பகிர்வு செய்து இணைந்து நடத்தும் அனல்மின்நிலையம் (38 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மத்திய அரசிற்கு சொந்தமான தேசிய அனல்மின் கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 35 ஆண்டுகளில் இதுவரை ஒரு அனல் மின்நிலையத்தைக் கூட தமிழகத் தில் துவக்கவில்லை. தமிழகத்தின் மீது மத் திய அரசிற்கு அவ்வளவு அக்கறை)

தினந்தோறும் ஊடகங்களும் சரி, ஆட்சி யாளர்களும் சரி இவ்வளவு பிரம்மாண்டமான மின்நிலையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றி சற்றாவது கவலைப்பட்டிருப்பார்களா? அவர்கள் யார்? எங்கிருந்து வந்து வேலை செய்கிறார்கள்? அவர்களது நலனைப்பற்றி. தங்கியிருக்கும் இடம் பற்றி யாராவது கவலைப்பட்டுள்ளோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

சென்னை சென்ட்ரலிலிருந்து எண்ணூர் வழியாக ஆந்திராவிற்கு ரயிலில் செல்லும் பய ணிகள் உயரமான கட்டுமானங்களை கொண்ட அனல்மின் நிலையங்களைப் பார்க்கும் போது, அதன் அருகாமையில் அமைந்துள்ள தகர ஷெட்டுகளை பார்க்காமல் இருக்க முடி யாது. தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு மணிநேரம் மின்சார வெட்டை குறைப்பதற் கான மின்நிலையத்தை கட்டி முடிக்கும் தொழிலாளியின் நிலை எவ்வளவு கேவல மானது என்பது அவர்களது வாழ்விடத்தை பார்த்தாலே தெரிந்துவிடும்.

அத்தொழிலாளிகள் முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து வேலை செய்திட அழைத்து வரப்பட்டவர்கள். லாரிகளும் பெரிய இயந்திரங்களும் விரைவாக சென்று கொண் டிருக்கின்றன. அப்பகுதியில் கனரக வாகன இயந்திரங்கள் செல்லும் சாலையின் மத்தி யில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவன் மீது காலை 8 மணிக்கு லாரி ஒன்று மோதி மூளை சிதறிக் கிடக்கிறது. விபத்தை நிகழ்த்திய லாரியை காணவில்லை. ஏராளமான வெளி மாநிலத் தொழிலாளிகள் பயத்துடன் ஒதுங்கி நிற்கின்றனர். செத்தவன் வடசென்னை அனல் மின்நிலைய கட்டுமானத் தொழிலாளி என்று, பின்னர்தான் தெரிகிறது. எங்கு வேலை செய்கிறான் என்று அடையாள அட்டை கூட இல்லை. இதுபோன்ற பல சம் பவங்கள் நடைபெறுகின்றன.

வெளிமாநிலங்களிலிருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரிகின் றனர். அனல்மின்நிலையங்கள் அமையும் பொழுது அதில் கட்டுமானப் பணியை செய்கின்ற ஒப் பந்தக்காரர்கள், அனல் மின்நிலையம் கட்டும் இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் வாழ் வாதாரம் பறிக்கப்பட்ட மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு ஊதியம் அதிகமாக வழங்க வேண்டும். தொழிற்சங்கம் வைத்து உரிமையை கேட்பார்கள். அதற்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அதைவிட ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் சிறிது செலவு செய்தால் போதுமானது. தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பெரும் தொகையை முதலாளிகள் சுருட்டியும் விட்டார்கள்.

வடசென்னை அனல் மின்நிலையம் வல்லூர் அனல்மின்நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்து கொண்டு வருகிறது. இரண்டு கட்டுமானப் பணிகளும் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடந்துள்ளன. இப்பணியைச் செய்திடுவதற்கு பி.எச்.இ.எல். நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. பிஎச்இஎல் நிறுவனம் இப்பணியை பல ஒப்பந்தக்காரர்களுக்கு பிரித்துக் கொடுத்தது. இப்பணிகளைச் செய்திட வெளி மாநிலங் களிலிருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். வெளிமாநிலத் தொழிலாளிகள் குறிப்பாக பீகார், ஒடிசா, மேற்குவங்காளம், சத்தீஸ்கர் மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து தமிழகம் வருகின்றனர்.

வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத் திற்கு வர வேண்டிய அவசியம் என்ன? அம் மாநிலங்களில் கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு குறைதல், விவசாயம் செய்ய முடியாத நிலை, வேலை வாய்ப்பின்மை ஆகிய கார ணங்கள் தொழிலாளர்களை மாநிலம்விட்டு மாநிலம் இடம்பெற வைக்கின்றன.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத் திற்கு வரும் தொழிலாளர்களை பாதுகாத்திட தொழிலாளர் சட்டம் உள்ளது. அதற்கு மாநி லங்களுக்கிடையே இடம்பெயரும் தொழிலா ளர் சட்டம் 1979 என்று பெயர் ஆகும். இது மத் திய அரசினால் 1979 ஆம்ஆண்டு நிறைவேற் றப்பட்டது. மாநில அரசுகளும் அச்சட்டத்தை ஏற்றுக்கொண்டன.

வெளி மாநிலங்களிலிருந்து வந்து முறை சாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கு, இச்சட்டம் பயன்படாது. கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கும் பயன்படும் வகையில் இச்சட்டம் உள்ளது.

இத்தகைய வெளி மாநிலத் தொழிலாளர் கள் தமிழகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தமிழகத்தின் அனைத்து தொழிற்சாலை மிகுந்த மாவட் டங்களிலும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர்.

வெளி மாநிலத்தொழிலாளி ஒவ்வொரு வருக்கும் குறைந்தபட்ச கூலிக்கும் மேலாக ரூ.75 தினம் சட்டப்படி அளிக்கவேண்டும். ஆனால் நிர்வாகம் அளிப்பதில்லை. இதில் அடித்த கொள்ளை ரூ.36.60கோடி ஆகும். இதுபோக வருடம் ஒன்றுக்கு சொந்த வீட் டிற்கு சென்று வர பயணப்படியுடன் ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு அளித்திட வேண்டும். இதுவும் அளிக்கப்படுவதில்லை. இதன் மூலம் நிர்வாகம் இதுவரை சுரண்டியது ரூ.130 கோடி ஆகும்.

தொழிலாளர்கள் தங்கியுள்ள நரக பட்டி களிலிருந்து பணி செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு லாரி ஒன்று வரும். அதில்தான் தொழிலாளிகளை ஏற்றிச் செல் வார்கள். மருத்துவ வசதி இல்லை. வருங் கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப் பட்டாலும், அதை முறையாக தொழிலாளியின் கணக் கில் சேர்ப்பதில்லை.

இறந்து போன தொழிலாளியின் உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு நிர்வாகத் தின் செலவில் அனுப்பி வைக்க வேண்டும். தொழிலாளியை வேலைவாங்கிய கம் பெனிக்கு செலவு ஆகும் என்பதால் இறந்து போன தொழிலாளியின் குடும்பத்தின் சம் மதத்தை பெற்றதாக கூறி, மீஞ்சூர் காவல் துறையின் ஒப்புதலுடன் அப்பகுதியிலேயே அடக்கம் செய்துவிடுகின்றனர். இறந்துபோன தொழிலாளியின் குடும்பத்திற்கு எந்தவித உதவித்தொகையும் அளிப்பதில்லை. விபத் தில் சிக்கிய தொழிலாளர்களை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை. விபத்திற்கான பதிவேடுகள் எதுவும் பராமரிப்பதில்லை. தொழிலாளர் துறையைச் சார்ந்த எந்த அதிகாரியும் ஆய் வுக்கு வருவதில்லை.

வெளி மாநிலத் தொழிலாளிக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்படுவது குறித்து தொழிலாளர் ஆணையாளருக்கு புகார் செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. குறைந்தபட்சக் கூலிச் சட்டம் 1948ன் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரியே நேரில் சென்று, கட்டுமானப் பணி நடைபெறும் இடங் களை ஆய்வு செய்து, குறைந்தபட்சக் கூலிச் சட்டம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி வாங்கப்படவில்லை என்றால், அந்த நிர்வாகத்தின் மீது வழக்கு போடு வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் செய்வ தில்லை. காரணம், ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் பெரிய முத லாளிகள் ஆயிற்றே. கேமன் இந்தியா. முத் தையா செட்டியார் குழுமத்தைச் சேர்ந்த நுனுஹஊ கம்பெனி, லாயிட்ஜ், லான்கோ, க்ஷழுசு எலக்ட்ரிக் கம்பெனி. பஜாஜ் போன்ற பெரிய கம்பெனிகள் வேலையை செய்வதற்கு பெல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் பெற்றுள்ளன.

இரண்டு மின்நிலைய கட்டுமானப் பணியின் மதிப்பீட்டுத் தொகையான 12,000 கோடி ரூபாயில் ஐந்து சதவீத தொகையான ரூ.600 கோடியை வெளி மாநிலத் தொழிலாளி யிடம் உழைப்புச் சுரண்டல் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தொழிலாளியின் வறுமை நிலைமை, தொழிலாளி சார்ந்துள்ள மாநிலத்தின் பின்தங்கிய நிலைமை, மொழிப் பிரச்சனை ஆகியவை அத்தொழிலாளர்களை இக்கொடுமைகளுக்கு எதிராக ஒன்றுசேர விடாமல் தடுக்கிறது. சென்னைக்கு அருகா மையில் நடக்கும் கட்டுமானப்பணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கே இந்த நிலைமை என்றால் மேட்டூர், தூத்துக்குடி மின்நிலையங்களில் பணியாற்றும் தொழி லாளர் நிலைமை எப்படி இருக்கும் என்று நாம் ஊகித்துக் கொள்ளலாம். வெளி மாநிலத் தொழிலாளர் வருகையினால் தமிழகத் தொழி லாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறி போகின்றன. வெளி மாநிலத் தொழிலாளியை வெறுக்கும் நிலைமை தமிழகத்தில் உருவா கின்றது.

வெளி மாநிலத் தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய சட்டப்படியான சலுகைகளை அமல்படுத்தாத முதலாளிகள் மீது தமிழக காவல்துறை பாயாமல், சுரண்டலுக்கு ஆளா கும் தொழிலாளர்களை திருடர்களாக சித் தரிக்கிறது. வெளி மாநிலத் தொழிலாளர்களுக் கான சலுகைகளை பெற்றுத் தருவதற் கான போராட்டம் வலுவாக்கப்படுவதே இக்கால கட்டத்தின் அவசியமாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com