Contact us at: sooddram@gmail.com

 

இந்தியாவையும் தேசியவாதிகளையும் சமாளிக்கும் அரசாங்கத்தின் சட்ட திருத்தம்

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளின் சில அதிகாரங்களை ரத்துச் செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் சில சிங்கள தேசியவாத கட்சிகள் மிக ஆவலோடு விரும்பிய மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறித்தல் அரசாங்கத்தின் உத்தேச திட்டத்தில் இல்லை. அரசாங்கம் முன்வைத்திருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து தனி மாகாணமாவதற்கு இருந்த வாய்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது. அதேவேளை சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற்றே அரசாங்கம் அவ்விடயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம் என்ற நிலையும் இல்லாமல் செய்யப்படுகிறது.

சில சிங்கள தேசியவாத கட்சிகள் நீண்ட காலமாக விடுத்து வந்த கோரிக்கையின் பிரகாரம் அரசாங்கம் மாகாண சபைகளுக்குறிய காணி மற்றும் பொலிஸ் அதகாரங்களை ரத்துச் செய்யாமல் மிக அண்மையில் ஜாதிக்க ஹெல உறுமய விடுத்த கோரிக்கையொன்றில் இருந்த சில விடயங்களை மட்டும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது ஏன்? மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அனுபவிப்பதை அரசாங்கத்தின் தலைவர்கள் விரும்புகின்றார்களா? அவர்கள் அதனை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அவ்வாறு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களில் கை வைக்காமல் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அண்மைக்கால சில சம்பவங்களை அலசிப் பார்த்தால் அது தெளிவாகிவிடும்.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்தே அதிகார பறிப்பு பற்றிய கூச்சல் எழத் தொடங்கியது. ஏனைய மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வைத்திருப்பதைப் பற்றி சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு எவ்வித பயமும் இருக்கவில்லை.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக 2012ஆம் ஆண்டு இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதன் முதலாக கருத்து வெளியிட்டு இருந்தார். 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இத்தேர்தலை நடத்துவதாகவே அப்போது ஜனாதிபதி கூறியிருந்தார்.

உண்மையிலேயே 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அத்தேர்தலை நடத்துவது என்று பாரதூரமாக நினைத்தே ஜனாதிபதி அப்போது அவ்வாறு கூறினாரோ என்னவோ தெரியாது. ஆனால் இந்தியா இந்த கூற்றை பற்றிப் பிடித்துக் கொண்டது. அதன் பிரகாரமே கடந்த மார்ச் மாதம் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தின் போது இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதென்ற விடயமும் உள்ளடக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளுக்கு தமது இருப்பை மக்களுக்கு அறிவிக்க பொருளாதார பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தில் உள்ள சிறு கட்சிகளுக்கு, குறிப்பாக சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு தமது இருப்பை அறிவிக்க பொருளாதார பிரச்சினைகளை தொட முடியாது. அது அரசாங்கத்தின் தலைவர்களின் கோபத்திற்கு உள்ளாகும் காரணமாகும். எனவே அவர்கள் அடிக்கடி இனப்பிரச்சினையை பிடித்துக் கொள்கிறார்கள்.

செப்டெம்பர் மாதம் நெருங்கவே அவர்கள் வட மாகாண சபைத் தேர்தலைப் பற்றி கூச்சலிட ஆரம்பித்தனர். முதலில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவே சர்ச்சையை ஆரம்பித்தார். அவரே பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என முதலில் கோஷம் எழுப்பினார்.

பின்னர் ஜாதிக்க ஹெல உருமயவும் அதில் தொற்றிக் கொண்டது. சிங்கள மக்களின் கண்ணோட்டத்தில் தாம் தேசிய சுதந்திர முன்னணியை விட சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக மாகாணசபை முறையையே இல்லாமல் செய்யும் வகையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்துச் செய்ய வேண்டும் என அக்கட்சி கோஷமிட ஆரம்பித்தது. இதற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவும் கிடைத்தது.

அவர்களது குரல் வலுப்பெற்று வரும் நிலையில் கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குரஷித் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸூடன் தொலைபேசி மூலம் பேசி மாகாண அதிகாரங்களை பறிக்க எடுக்கும் முயற்சிகளைப் பற்றி தமது அதிருப்தியை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அரசாங்கம் பெரும் அசௌகரித்திற்கு உள்ளாகியிருக்கும் என்று ஊகிக்க முடியும் ஏனெனில் தாமே சிங்கள மக்களின் பாதுகாவலன் என்று காட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தினால் தேசியவாத கட்சிகளின் கோரிக்கைகளை முற்றாக நிராகரிக்கவும் முடியாது. அதேவேளை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேணையின் போது இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தாலும் இந்தியாவை பகைத்துக் கொள்ளவும் முடியாது.

இதனிடையே ஹெல உறுமய, அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது. இதனால் அரசாங்கம் மேலும் அசௌகரியத்திற்குள்ளாகும் என பலர் நினைத்த போதிலும் அந்த திருத்தத்திற்குள் அரசாங்கத்திற்கு பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது.

முன்னர் கூறியதைப் போல் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முற்றாக ரத்துச் செய்வதற்காக ஹெல உறுமய இந்த திருத்த சட்ட மூலத்தை கொண்டு வரவில்லை. மாறாக மாகாண சபைகளுக்குரிய சில அதிகாரங்களை ரத்துச் செய்வதனையே அது நோக்கமாக கொண்டது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்பதற்கு மேலதிகமாக மாகாணங்கள் இணையும் அதிகாரத்தையும் ரத்துச் செய்து சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற நிலையும் ரத்துச் செய்ய வேண்டும் என்றே ஹெல உருமய கேட்கிறது.

தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்துச் செய்ய வேண்டும் என்று கேட்பது யதார்த்தம் அல்ல என ஹெல உறுமயவின் தலைவர்களில் ஒருவரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில கடந்த செவ்வாய்க்கிழமை மேல் மாகாண சபைக் கூட்டத்தின் போது கூறியிருந்தார். அதாவது இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் நெருக்குவாரம் பலித்துள்ளது. அது தான் அவர் கூறும் சர்வதேச நிலைமை என்பது புலனாகிறது.

ஆனால் சர்வதேச சமூகத்தின் கோபத்திற்குள்ளாகாமல் தேசியவாதிகளோடு சேர்ந்து செயற்பட ஹெல உறுமயவின் இந்த திருத்த சட்ட மூலம் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தை கொடுத்தது. அரசாங்கம் என்ன செய்ததென்றால் ஹெல உறுமயவின் சட்டமூலத்தில் இருந்த நான்கு காரணங்களில் இரண்டை மட்டும் எடுத்து அரசியலமைப்பை திருத்தப் போகிறது.

அதன் பிரகாரம் பொலிஸ், காணி அதகாரங்களில் கை வைப்பதில்லை. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து தனி மாகாணமாவதற்கு இருந்த வாய்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது. அதேவேளை சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற்றே அரசாங்கம் அவ்விடயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம் என்ற நிலையும் இல்லாமல் செய்யப்படுகிறது. இனி 9 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் விரும்பினால் போதும்.

இதனை அனேகமாக இந்தியா எதிர்க்காது. ஏனெனில் தமிழீழத்தை அமைப்பதற்காகவே தமிழ் கட்சிகள் ஆரம்ப காலத்தில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை கோரின. இந்தியா தமிழீழத்தை விரும்பவில்லை. அக்காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களை சமாளிப்பதற்காகவே இந்தியா அப்போது மாகாண இணைப்பை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டது.

அதிகர பரவலாக்கல் என்ற அர்த்தத்தில் மாகாண இணைப்பு அவசியமானதொன்றல்ல. ஏனெனில் அதிகார பரவலாக்கலின் ஒரு நோக்கம் நிர்வாகத்தை மக்களுக்கு சமீபமாக்குவதேயாகும். ஆனால் மாகாண இணைப்பானது இப்போது தமிழர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக இருப்பதால் அவர்கள் அதனை தொடர்ந்து கோரி வருகிறார்கள். இந்தியாவுக்கு அதைப் பற்றி இப்போது அவ்வளவு அக்கறை இருக்கும் என்று கூற முடியாது. அது இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியும்.

அரசியலமைப்பில் மாகாண சபை அதிகார பட்டியல், (மத்திய அரசாங்கத்திறகு) ஒதுக்கப்பட்ட அதிகார பட்டியல் மற்றும் ஒருங்கியல் (பொது) அதிகார பட்டியல் என மூன்று பட்டியல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒருங்கியல் பட்டியலில் உள்ள ஒரு விடயம் தொடர்பாக நாடாளுமன்றம் ஏதாவது தீரமானம் எடுப்பதாக இருந்தால் சகல மாகாண சபைகளினதும் ஒப்புதல் அதற்காக பெற வேண்டும். அரசாங்கத்தின் புதிய திருத்தத்தின் படி இனி பெரும்பாலான மாகாண சபைகளின் ஒப்புதல் பெற்றால் போதுமானதாகும்.

அனேகமாக மத்திய அரசாங்கத்தில் பதவியில் இருக்கும் கட்சியே தெற்கில் பெரும்பாலான மாகாண சபைகளிலும் பதவியில் இருக்கும். எனவே அரசாங்கத்தின் புதிய திருத்தத்தின் படி இனி எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒருங்கியல் பட்டியலில் உள்ள எந்தவொரு விடயம் தொடர்பாகவும் இலகுவில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற முடியும்.

சுருக்கமாக கூறின் இதன் மூலம் ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது. பெரும்பாலான மாகாண சபைகள் விரும்பினால் அரசாங்கத்தின் மோசமான திட்டங்களை தோற்கடிக்க முடியும் என சித்தாந்த ரீதியில் வாதிட முடியுமாக இருந்த போதிலும் அது நடைமுறையாகப் போவதில்லை.

ஒருங்கியல் பட்டியலில் உள்ள ஒரு விடயம் தொடர்பாக நாடாளுமன்றம் ஏதாவது தீரமானம் எடுப்பதகற்காக சகல மாகாண சபைகளினதும் ஒப்புதல் பெற வேண்டும் என்றால் ஒரு மாகாண சபை விரும்பாவிட்டாலும் அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது. எனவே அது ஏனைய மாகாண சபைகளுக்கு இழைக்கும் அநீதி என ஹெல உறுமய வாதாடுகிறது. அதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அதேவேளை நடைமுறையில் இனி ஒருங்கியல் பட்டியல் விடயத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரமே இல்லாமல் போய்விடுகிறது.

இதனையும் இந்தியா எதிர்க்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஏனெனில் சித்தந்த ரீதியில் இதில் தவறு இல்லை. சிலவேளை இதன் மூலம் தமிழ் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்து, ஆளும் கட்சி மாகாண சபையை கைப்பற்றிக் கொண்டு, போரின் பின்னர் தமிழ் மக்கள் தம்மோடு இருக்கிறார்கள் என்று உலகுக்கு காட்டிக் கொள்வதும் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம்.

(எம்.எஸ்.எம். ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com