Contact us at: sooddram@gmail.com

 

இனங்களுக்கிடையில் கருத்தொருமைப்பாடு ஏற்பட மும்மொழி;த் திட்டம் உதவுமா?

நமது நாடு பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்தபோது ஆங்கிலம் அரச கரும மொழியாகவிருந்தது. அரச கருமங்கள் சுயமொழிகளான சிங்களம், தமிழில் நடைபெற வேண்டுமென்ற பிரேரணை 1932ஆம் ஆண்டு சட்டசபையில் முன்வைக்கப்பட்டது. எனினும் சுயமொழியில் நிர்வாகம் செய்வது அமுலில் வரவில்லை. தேசபக்தியுடன் நாடு சுதந்திரம் அடையப் பாடுபட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்களிடையே இனம் மொழி சார்ந்த பேதங்கள் இருக்கவில்லை. தேச நலனே அவர்களது இலட்சியமாக அமைந்தது. அதுபோலவே சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையேயும் சுயமொழிப்பற்றைத் தவிரப் பிறமொழி வெறுப்போ இன வெறுப்போ இருந்ததில்லை. இன நல்லிணக்கம் ஆரோக்கியமாக அமைந்தது.

எனவேதான் சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில் தமிழ் மொழி மூலம் பாட போதனை நடைபெற்ற பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்கள் சிங்கள மொழியைக் கற்பிக்க வசதி செய்யப்பட்டது. சிங்கள ஆசிரியர்கள் கடமையுணர்வுடன் தமிழ் மாணவருக்குச் சிங்களம் கற்பித்தனர்.

தமிழ் பேசும் மாணவர் ஆர்வத்துடன் சிங்களம் கற்றனர். தமிழில் பாட போதனை பெற்ற மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு சிங்களத்தை ஒரு பாடமாக எடுத்துச் சித்தியடைந்தனர். சிங்களம் கற்ற கணிசமான மாணவர்கள் அந்தக் காலத்தில் காணப்பட்டனர். இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் சிறப்பு முயற்சியாக இது கருதப்பட்டது.

காலப்போக்கிலே பேரினவாதிகளின் மத்தியில் உருவான கடும்போக்காளர்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றனர். அதன் காரணமாக ஆட்சியாளர்கள் சிங்களம் மட்டுமே நாட்டின் அரச கரும மொழி ஆக்கப்பட வேண்டுமெனும் நிலைப்பாடு கொண்டனர். 1956 ஜுனில் சிங்களம் மட்டுமே அரச கரும மொழி என்ற மசோதா ஆட்சிமன்றத்தில் நிறைவேறியது. இந்த நாட்டிலே வாழும் மக்களுள் 25 சதவீதமானவர்களின் தாய்மொழி தமிழ் என்பதால் தமிழுக்கும் அரச மொழியாகும். உரிமை உண்டென்று தமிழ்த்தலைவர்கள் வாதாடினர். எனினும் தமிழ் மக்களின் பிறப்புரிமைக் கோரிக்கை சிங்களத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்ற நிலைப்பாடு நாட்டிலே இன முறுகலை ஏற்படுத்தியது. தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலே இருந்த அந்நியோன்ய நிலைமையில் இடைவெளியை ஏற்படுத்தியது. இனப் பிரச்சினைக்கு மூல காரணமாக அமைந்தது. இதனால் தமிழ்மொழிப் பாடசாலைகளில் கற்பித்த சிங்கள ஆசிரியர்கள் பாதுகாப்புக் கருதி மாற்றம் பெற்றுச் சென்றனர். தமிழ் பேசும் மாணவர்களின் சிங்கள மொழிக்கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தமிழும் அரசகரும மொழியாக வேண்டுமென்ற கோரிக்கை ஆட்சியாளர்களுக்குத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. பல ஆண்டுகள் இழுபறியின் பின்னர் தமிழும் அரச கரும மொழி என்ற தீர்மானம் நிறைவேறியது. தமிழ் அரச கரும மொழியாகிப் பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் கொள்கையளவில் அரச கரும மொழி என்ற நிலைப்பாடு இருக்கிறதே தவிர அரச கரும நடைமுறையில் தமிழ் மொழி தொடர்பாகப் பாரிய பின்னடைவு காணப்படுகின்றது. தமிழ் பேசும் சமூகம் தங்களது தேவைகளையும் கருமங்களையும் தமிழ் மூலம் அரசுடன் தொடர்பு கொண்டு நிறைவேற்ற விரும்புவது இயற்கையானது. தமிழில் கருமங்களை முடிக்கக் கூடியவாறு திணைக்களங்களிலும் அரச பணிமனைகளிலும் வசதிகள் குறைவாக இருக்கின்றனர். தமிழ்க் கடிதத்தை விளங்கிச் செயல்பட தமிழ்க் கற்றவர்கள் திணைக்களங்களில் இல்லை. ஓரிரண்டு பேர் இருந்த போதிலும் போதிய தமிழ் பரிச்சயமற்றவராயும், தமிழில் கடிதம் எழுதவோ தட்டச்சைப் பயன்படுத்தத் தெரியாதோராயும் இருப்பதால் தமிழ் மொழியைப் பேசும் சமூகம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது.

வடபுலத்திலே, ஒரு முறைப்பாட்டை பொலிஸில் கொடுக்கச் செல்லும், தமிழ் மட்டும் தெரிந்தவர் சிங்களம் மட்டும் தெரிந்த பொலிஸாருடன் கதைத்து தன் கோரிக்கையை முன்வைக்க முடிவதில்லை.

இவ்வாறு அரச பணியகங்கள், தனியார் அமைப்புகளின் காரியாலயங்கள் அனைத்திலுமே தமிழ் பேசும் குடிமகன் பாதிக்கப்படுகிறான்.

டெங்கு நோய் கண்ட பிள்ளையைக் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சேர்த்த தமிழ்த்தாய்க்கு வைத்திய அதிகாரி, தாதிமாருடன் தனது பிள்ளையின் சிகிச்சை தொடர்பாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. சிங்களம் தெரிந்த ஒரு பெண்ணை உதவிக்குப் பிடித்துத் தினமும் 1000 ரூபா கொடுத்துப் பிள்ளையின் மருத்துவ வசதியைக் கவனிக்கிறார்.

சிங்கள மொழி மூலம் பதவிக்கு வந்த சிங்கள அதிகாரிகள், அலுவலர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் பயிற்சி முடித்துச் சித்தி பெற்றவர்களுக்கு ஊக்குவிப்புப் பணமும் கிடைக்கிறது. எனினும் அத்தகைய பணியாளர்கள் தமிழில் பரிச்சயம் போதிய அளவு இன்மையால் தமிழில் அரச கருமங்கள் செய்யப் பின்னிற்கின்றனர்.

எனவே தமிழ் மொழி மூலம் பரீட்சை எழுதிப் பதவிக்கு வந்தவர்களைப் போதிய அளவு அரச, தனியார் நிறுவனங்களில் அமர்த்துவதனால் மொழிப் பிரச்சினையை ஓரளவு தீர்க்க முடியும்.

பிறப்பு, இறப்பு, திருமணம், வெளிநாடு செல்லுதல், அனுமதிப் பத்திரங்கள் பெறுதல் போன்ற பல்வேறு தேவைகளுக்குமான படிவங்கள் தனிச் சிங்களத்தில் மட்டும் அச்சடிக்கப்படுவதால் தமிழ் புறக்கணிக்கப்படுவதுடன், தமிழ் சமூகம் பாதிக்கப்படுகின்றது. எனவே படிவங்கள் அனைத்தும் மும்மொழிகளிலும் அமைவது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். அதுபோலவே அரச சுற்று நிருபங்களும் மும்மொழியிலும் அமைய வேண்டும். தமிழ் அரச மொழி ஆனபின் அடிக்கப்படும் புதிய பண நோட்டுக்களிலே சிங்களம் மட்டுமே காணப்படுகிறது. மும்மொழியிலும் இடம்பெறுவதுதான் சிறப்பானது.

அரச பணியகங்களில் விகிதாசாரப்படி 94.8 சதவீத சிங்கள மொழி தெரிந்தவர்களும் 15.7 சதவீத தமிழ் கற்றவர்களும் 32 சதவீத ஆங்கிலம் தெரிந்தவர்களும் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தமிழ் மொழி மூலமான அலுவலர்களை அதிகரித்தும் பிரச்சினைக்கு முடிவு காண முடியும். பொது வாகனங்களான அரச, தனியார் பேரூந்துகளில் காணப்படும் பெயர்ப்பலகைகள் தனிச்சிங்களத்திலோ அல்லது தனித்தமிழிலோ அமையாமல் இருமொழிகளிலும் அமைவதால் இரு மொழி சார்ந்தவர்களும் பயனடைவர். பிரதான தெருக்கள் சாலைகளை இனங்காட்டும் பெயர்ப்பலகைகளும் இரு மொழிகளிலும் அமைதல் வேண்டும்.

நாட்டிலே சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன நல்லுறவு விருத்தி அடைந்து வருகிறது. சிங்களம், தமிழ் மொழியைப் பேசுவோரிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.

அதனால் சிங்கள மொழி சார்ந்தவர்கள் தமிழ் மொழியைக் கற்பதும் தமிழ் பேசுவோர் சிங்களம் கற்பதும் இன்றைய தேவையாக உள்ளது.

மொழிசார்ந்த சமகாலப் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ள நமது ஜனாதிபதி எதிர்காலத்தில் மொழிசார்ந்த பிரச்சினைகள் எழாதிருக்கத் தீர்க்கமான செயற்றிட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் மும்மொழிச் செயற்றிட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரியில் மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த முக்கியமான வைபவத்திலே இந்திய முன்னாள் ஜனாதிபதி அபுல்கலாம் அவர்களும் கலந்து சிறப்பித்தார். இந்தப் பத்தாண்டின் தேசிய திட்டம் நாட்டின் ஒருவரால் அறிமுகம் செய்யப்படுவது சிறப்பான முயற்சி, அற்புதமான நிகழ்ச்சி என அபுல்கலாம் அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கை மக்கள் அனைவரும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெறவேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கமும் ஜனாதிபதியின் இலட்சியம் ஆகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1977ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் இருந்தபோது இலங்கையர் அனைவரும் மும்மொழியும் கற்கவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்ததாக ஜனாதிபதியின் செயலாளர் நினைவுபடுத்தியுள்ளார். சிங்கள மாணவர்கள் இரண்டாம் தேசிய மொழியாகத் தமிழையும் தமிழ் மாணவர்கள் இரண்டாம் தேசிய மொழியாகச் சிங்களத்தையும் கற்க வேண்டும். அதனால் தேசிய மொழிகள் மதிப்புப் பெறுவதுடன் இனங்களுக்கிடையில் உள்ள கருத்தொருமைப்பாடு வலுப்பெறும் என்றும் ஜனாதிபதி கருதியதாகவும், ஆட்சி மன்றத்தில் இந்த யோசனையை முன்வைத்ததாகவும் ஜனாதிபதியின் செயலாளர் நினைவுபடுத்தினார். சிங்களமும் தமிழும் இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுவதும் ஆங்கிலம் அனைத்துப் பாடசாலைகளிலும் இணைப்பு மொழியாகக் கற்பிக்கப்படுவதும் இன்றியமையாத செயற்பாடு என்பதே ஜனாதிபதியின் குறிக்கோளாக இருக்கிறது.

ஜனாதிபதியின் திட்டத்தை நிறைவேற்றக் கல்வி அமைச்சின் செயலாளர் அவர்கள் சிங்களப் பாடசாலைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் களையும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு சிங்களம் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதற்கான சுற்று நிருபங்கள் அனைத்தும் பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. ஒரே நாடு ஒரே மக்கள் என்ற குறிக்கோளை அடைய ஜனாதிபதியின் மும்மொழிச் செயற்றிட்டம் வழிவகுக்கும் என நம்புவோமாக!

(சுஐப் எம். காசிம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com