Contact us at: sooddram@gmail.com

 

13ஆவது திருத்தம்

அரசாங்கத்தின் சிறு கட்சிகளின் எதிர்ப்பு நிலையானதா?

அரசாங்கத்திற்கு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முற்றாக ரத்துச் செய்ய முடியாது என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகிறது. முடியுமாக இருந்தால் அரசாங்கத்தின் தலைவர்கள் அதனை முற்றாக இல்லாமல் செய்யாது மாகாண சபைகளிடமிருந்து இரண்டு அதிகாரங்களை மட்டும் பறிக்க சட்டம் கொண்டுவர முற்பட்டு இருக்க மாட்டார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது அடிப்படையிலேயே அதிகார பரவலாக்கத்திற்கு எதிரான கட்சியாகும். 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போதும் அக்கட்சி அதற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியது. அதிகார பரவலாக்கலை மனப்பூர்வமாக ஆதரிக்கும் சந்திரிகா குமாரதுங்க தலைமை தாங்கிய காலத்தில் மட்டுமே அக்கட்சி அதிகாரப் பரவலாக்கலை ஆதரித்தது.

அந்தப் பின்னணியில் தான் சில மாதங்களுக்கு முன்னர் 'திவிநெகும' சட்டமூலத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை அடுத்து அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் மற்றொரு சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என கோஷமெழுப்பினர்.

இவை அனைத்தும் சுட்டிக்காட்டுவது என்னவெனின், அரசாங்கம் முடியுமென்றால் மாகாணசபை முறையை ரத்துச் செய்யும் என்பதே. ஆனால் அரசாங்கத்தின் தலைவர்களால் அதனை செய்ய முடியாது. தேசிய மற்றும் சர்வதேச நிலைமைகளே அதற்குக் காரணமாக இருப்பதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர்களில் ஒருவரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில கூறிய போதிலும் சர்வதேச நிலைமைகளே இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது. உள்நாட்டுக் காரணி இரண்டாந்தர தடையாகவே இருக்கிறது.

குறிப்பாக இந்தியா மாகாண சபைகளை ரத்துச் செய்வது ஒரு புறமிருக்க அவற்றின் அதிகாரங்களை குறைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களில் இப்போதைக்கு கை வைக்காமல் இருக்கிறது. தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகிய கட்சிகள் மாகாண சபை முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரிய போதிலும் இந்திய எதிர்ப்பின் காரணமாக அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. அதன் பின்னர் அவர்கள் தாம் பயங்கர அதிகாரங்களாக கருதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்யுமாறு கோரிய போதிலும் அரசாங்கம் அதனையும் செய்யவில்லை.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அம்மாகாண சபை தனித் தமிழ் நாடாக பிரிந்துவிடும் என இவர்கள் கூறி வருகின்றார்கள். அவர்கள் மட்டுமல்ல, அரச அதிகாரியான கோட்டாபய ராஜபக்ஷவும் அவ்வாறு கூறுகிறார். ஆனால் இப்போது வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் மாகாண சபைகளுக்கு அவ்வதிகாரங்கள் இருக்கும் நிலையிலேயே அது நடைபெறப்போகிறது.

ஆனால் அதற்காக மாகாண சபைகளை ரத்துச் செய்ய வேண்டும். அல்லது அவற்றின் அதிகாரங்களை பறிக்க வேண்டும் என்று கூச்சலிடும் இக்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை. உண்ணாவிரதங்களை நடத்தவுமில்;ல. அரசாங்கம் இந்தியாவிடம் மண்டியிட்டது என்று கூறவுமில்லை.

இந்த விடயத்தில் அரசாங்கம் அல்லாத மற்றவர்கள் தமது கருத்துக்களுக்கு இணங்காவிட்டால் அவர்களை புலிகள் என்பார்கள். துரோகிகள் என்பார்கள். பிரிவினைவாதிகள் என்பார்கள். ஆனால் அரசாங்கத்தை அவர்கள் அவ்வாறு கூறுவதில்லை. ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டிருக்க தான் விரும்புகிறார்கள்.

அரசாங்கத்திற்கு மாகாண சபைகளை ரத்துச் செய்ய முடியாததற்கு கம்மன்பில கூறுவதைப் போல் உள்ளூர் காரணமொன்றும் இருக்கிறது. மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் தமது கட்சிக்காரர்களின், குறிப்பாக உறவினர்களின்; எதிர்காலம் பாழாய்ப்போய்விடும் என்ற பயமே அந்தக் காரணமாகும்.

தற்போது வட மாகாணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளிலும் அதிகாரத்தில் இருப்பது ஆளும் ஐ.ம.சு. கூட்டணியே. அவற்றின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகோதரர்கள், மனைவிமார்கள், பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவினர்களே. எனவே மாகாணசபை முறையை ரத்துச் செய்ய பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரும்புவார்கள் என்று நம்ப முடியாது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் சஷிந்திர ராஜபக்ஷவே ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருக்கிறார். எனவே சபாநாயகரும் இப்போதைக்கு மாகாணசபை முறையை ரத்துச் செய்ய விரும்பாவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சமல் ராஜபக்ஷ ஜனாதிபதியின் மூத்த சகோதரர் என்பதால் ஜனாதிபதியும் ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தொடர்ந்தும் தமது குடும்பத்திடமே வைத்திருக்க விரும்ப மாட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே  அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் இப்போதைக்கு மாகாண சபைகள் இருக்க வேண்டும் என்றே அரசாங்கத்தில் பலர்; விரும்புவார்கள். ஆனால் பட்டம் பதவிகபளை தம்மிடமும் தமது உறவினர்களிடமும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மாகாணசபை முறையை விரும்பினாலும் மாகாண சபைகளுக்கு கூடுதலான அதிகாரம் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

எனவே தான் திஸ்ஸ வித்தாரண குழுவின் அறிக்கையும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் தூக்கியெறியப்பட்டன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வெறும் மாகாணசபை கட்டமைப்பு மட்டுமே. அதன் மூலம் கிடைக்கும் சம்பளம், வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகள் மட்டுமே.

அரசாங்கத்தில் உள்ள சில சிறுபான்மை கட்சிகளும் மாகாண சபைகளின் அதிகாரங்களை பாதுகாக்க முன்வந்திருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு இந்த தைரியம் எங்கிருந்து கிடைத்தது? முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட இக்கட்சிகள் அதிகாரத்தை வெகுவாக மையப்படுத்தும் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபைகளின் அதிகாரங்களை புறக்கணிப்பதாக அவர்களே கூறிய திவிநெகும சட்டத்தையும் ஆதரித்து வாக்களித்தர்கள்.

நிர்ப்பந்தமே அதற்குக் காரணமாக இருந்தது. எனவே இப்போதும் 'வாக்களி இல்லாவிட்டால் வெளியேறு' என்று ஜனாதிபதி கூறும் நிலை வந்தால் முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஈ.பி.டீ.பி, தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகள் அனேகமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறிக்கவும் ஆதரவு வழங்கக்கூடும்.

முதலாவதாக அரசாங்கம் அருகருகே உள்ள மாகாண சபைகளுக்கு இணைவதற்கு இருக்கும் அதிகாரத்தையே ரத்துச் செய்யப் போகிறது. அந்த விடயத்தில் இவற்றில் சில கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்கவும் கூடும். ஏனெனில் இணைப்பு என்பது அதிகாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதென்ற அதிகார பரவலாக்கலின் குறிக்கோள்களில் ஒன்றுக்கு எதிராக இருக்கிறது. அதேவேளை தமிழீழத்தை மனதில் வைத்தே ஆரம்ப காலத்தில் தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்று கோரினர்.

ஆனால், அதற்கு அடுத்ததாக ஒருங்கியல் பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக சில மாகாண சபைகளை புறக்கணித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கான திருத்தம் வரப் போகிறது. அதனை முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஈ.பி.டீ.பி போன்ற கட்சிகள் இப்போதைக்கு எதிர்க்கின்றன. தேசிய காங்கிரஸ் எதையும் காதில் கேட்கக்கூடிய வகையில் கூறவில்லை. எதிர்க்கும் கட்சிகளும் ஜனாதிபதி அதட்டினால் மாறலாம்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறிக்கும் சட்டம் இப்போதைக்கு வராது. சிலவேளை ஒருபோதும் வராது. அது வந்தாலும் இக்கட்சிகளின் நிலைமை இதேபோல் அதட்டினால் ஆதரவு என்பதாகத் தான் இருக்கும் என ஊகிக்கலாம். பொன்சேகாவிற்கு நடந்த கதி நினைவில் இருக்கும்வரை இவர்களில் எவரும் அரசாங்கத்தை எதிர்க்கப் போவதில்லை.

அதிகார பரவலாக்கல் தொடர்பான தற்போதைய சர்ச்சை இன்று சில அரசியல் கட்சிகளை தாழ்ந்த நிலைக்கு தள்ளியிருப்பதை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்தையும் அக்கட்சியின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமையும் தொடர்புபடுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸம்மில் கடந்த வியாழக்கிழமை கருத்து வெளியிட்டதன் மூலம் தெரிகிறது.

ஷமாகாண சபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்காக தேசிய சுதந்திர முன்னணி உட்பட சில கட்சிகள் சட்டத் திருத்தங்களை கொண்டு வரமுன் இவ்வளவு பாரதூரமான சந்தேகங்கள் தேசிய சுதந்திர முன்னணித் தலைவர்களுக்கு இருக்கவில்லை என்பதே விந்தையான விடயமாகும்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு ஹக்கீம் விரும்பியிருந்தால் அவர்களுக்கு இந்த சந்தேகம் வந்திருக்காது போலும். வந்து இருந்தாலும் அதனை கூறியிருக்க மாட்டார்கள் என்பதைத் தான் முஸம்மில் கூறுகிறார் போலும். இது தமது கருத்தை ஏற்காதவர்களை தண்டிக்க முனையும் மனப்பான்மையே தவிர வேறொன்றுமல்ல. இது கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்க முடியாத பலவீனத்தின் வெளிப்பாடே.

மாகாண சபைகளின் அதிகாரங்களை ரத்துச் செய்வதை எதிர்ப்பதன் மூலம் ஹக்கீம், பிரிவினைவாதத்தை ஆதரிப்பதாகவும் அஷ்ரப் பிரிவனைவாதத்தை எதிர்த்தவர் என்றும் முஸம்மில் கூறுகிறர். அதாவது அஷ்ரப், மாகாணங்களிடம் இருந்து அதிகாரங்களை பறிக்க விரும்பியவர் என்பதே இதன் அர்த்தமாகும்;. இது ஒன்றில் அறியாமை, அல்லது மக்கள் கடந்த காலத்தை மறந்திருபார்கள்; என்ற எண்ணமே அல்லாது வேறொன்றும் அல்ல.

2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சமஷ்டி அரசியலமைப்பு நகலொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போதும் கூட அஷ்ரப் தான் அன்று முழு நாளும் அதற்கு ஆதரவாக அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் வாதாடினார். 1986ஆம் ஆண்டு அஷ்ரப் சமர்ப்பித்த முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது அரசியல் கோரிக்கையும் முஸ்லிம் மாகாண சபையே.
 
அதேவேளை அஷ்ரபின் மறைவை அடுத்து அவரது மரணத்திற்குக் காரணமாகவிருந்த விமான விபத்தைப் பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஹக்கீமின் தலைமையில் மு.கா. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்திடம் பலமுறை கோரியும் அவ்வரசாங்கம் அதனை நிராகரித்தது. கடைசி
காலத்தில் அஷ்ரபுக்கும் ஸ்ரீ.ல.சு.கவுக்கும் இடையில் நல்ல உறவு இல்லாதிருந்தமையினால் அவர் இறந்தால் நாம் ஏன் கவலைப்பட வேண்டும் எனறு ஸ்ரீ.ல.சு.க. நினைத்ததோ தெரியாது.

(எம்.எஸ்.எம். ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com