Contact us at: sooddram@gmail.com

 

ஆங் சான் சூ கீ எங்கே?

“நீதியான சூழலில் நடுநிலை வகிப்பதென்றால் நீங்கள் அநீதியா ளர்கள் பக்கம் இருக்கிaர்கள்”. இப்படி சொன்னவர் 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற தென்னாபிரிக் காவின் சமூக உரிமை ஆர்வலரும் ஓய்வு பெற்ற அங்கிலிக்கன் பேராயரு மான டெஸ்மன் டுடு. 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மியன் மாரின் ஆங் சான் சூ கீக்குத் தான் இந்த அறிவுரையை டெஸ்மன் டுடு சொல்லியிருந்தார். சொல்லப்பட்ட இடமும் முக்கியமானது. நோர்வேயின் ஒஸ்லோ நகரில் இருக்கும் நோர்வேஜியன் நோபல் நிறுவன மண்டபத்தில், ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த கருத்தை சொன்னார். இதே மண்டபத்தில் வைத்தே டெஸ்மன் டுடு மற்றும் ஆங் சான் சூ கிக்கு நோபல் விருது கொடுக்கப்பட்டது.

மியன்மாரில் ஒடுக்கப்படும் ரொஹிங்கியா இன மக்கள் குறித்து ஒஸ்லோவில் கடந்த மே 26ஆம் திகதி ஆரம்பித்து மூன்று நாள் சர்வதேச மாநாடொன்று நடந்தது. இதிலே டெஸ்மன் டுடுவோடு அமைதிக்கான நோபல் விருது வென்ற வட அயர்லாந்தின் மைரீட் மகுய்ரே, அமெரிக்காவின் ஜோடி வில்லியம்ஸ், யெமனின் தவக்குல் கர்மான், ஈரானின் ஷிரின் இபதி, லிபியாவின் லைமாஹ் கொபாவி மற்றும் ஆர்ஜன்டீனாவின் அடல்போ பெரஸ் எஸ்குவல் ஆகியோரும் பங்கேற்றார்கள்.

பாடப் புத்தகங்களில் இருப்பது போன்ற இன அழிப்புக்கே ரொஹிங்கியாக்கள் முகம் கொடுத்து வருகிறார்கள். இந்த பழங்குடி இனத்தினர் பர்மிய அரசினால் திட்டமிட்ட முறையில் இல்லாதொழிக்கப்பட்டு வருகின்றனர் என்று இவர்கள் அனைவரும் அந்த மாநாட்டில் கூட்டாக அறிக்கை சொன் னார்கள்.

எல்லாம் சரி. மியன்மாரில் நடக்கும் இந்த ஒடுக்கு முறையை பேச அந்த நாட்டின் மனித உரிமை போராளி, ஜனநாயக உரிமை செயற்பாட்டாளர், எதிர்க்கட்சி தலைவர் என்று இன்னோ ரன்ன அடைமொழிகளை வைத்துக் கொண்டிருக்கு ஆங் சான் சூ கீ இல்லையா? என்று கேட்டால் அவர் அழைக்கப்படவில்லை என்று ஏற்பாட்டுக் குழுவினர் ஒரே மூச்சில் சொல்லிவிட்டனர்.

இப்படி ஒரு உரிமைப் போராட்ட வீராங்கனையை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டால், அந்த பெண், ரொஹிங்கியாக்கள் பற்றி ஒரு வார்த் தையும் பேசுவதில்லையே என்று ஏற்கனவே அதற்கும் பதில் தயாராக வைத்திருக்கிறார்கள்.

நெல்சன் மண்டேலாவைப் போலவே ஒடுக்கு முறைக்கு எதிராக அமைதியான போராட்டம் நடத்தி புகழ் பெற்றவர்தான் இந்த ஆங் சான் சூ கீ. இப்போது 69 வயதாகும் சூ கீ கடந்த இரு தசாப்தங்களில் பெரும்பகுதியை வீட்டுக் காவலில் கழித்தார். நாட்டின் இராணுவ ஆட்சியை முடித்து ஜனநாயகத்தை கொண்டுவர வேண்டும் என்பது அவரது போராட்டம்.

1990களில் ஆரம்ப காலத்தில் இருந்து 2010 ஆம் ஆண்டு விடுதலையாகும்வரை சூ கீயின் முகம் ஒடுக்கு முறைக்கு எதிரான குறியீடாக உலகெங்கும் பயன்படுத்தப் பட்டது. மனித உரிமை மீறலா, ஜனநாயக மீறலா கோஷம் எழுப்புபவர்கள் சூ கீயின் பெயரை மறக்காமல் சொல்லி வந்தார்கள்.

இப்போது முழுமையாக இல்லா விட்டாலும் மியன்மாரில் ஓரளவுக்கு ஜனநாயகம் வந்துவிட்டது. தான் இரண்டு தசாப்தமாக வீட்டுக் காவல் இருந்த அதே யங்கோன் வீட்டில்தான் சூ கீ இன்றும் வாழ்கிறார். அவரால் சுதந்திரமாக பேச முடியும். சுதந்திரமாக நடமாடவும் முடியும். ஆனால் இப்போது அவர் சுதந்திரமாக பேசுவதும் இல்லை ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதும் இல்லை என்று உலகமே குற்றஞ்சாட்டும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. மியன்மார் பாரா ளுமன்றத்தில் சூ கீ எதிர்க்கட்சி தலைவர். எதிர்க்கட்சிக்கே உரிய ஆளுங்கட்சியை திட்டும் பண்புகளுக்கு குறைச்சலில்லை. நாட்டின் சீர்திருத்தம் மந்தமாக இருப்ப தாகவும் சொல்கிறார். அரசியலமைப்பு மாற்றத்தை பற்றியும் வாய்கிழிய கத்துகிறார்.

ஆனால் பல தசாப்தமாக நாட்டில் ஒடுக்கப்பட்டு வாழும் ரொஹிங்கியாக்கள் பற்றி கேட்டால் ஒரு பதிலும் இல்லை. சாப்பிடும் பொருளா என்று கேட்காத அளவுக்கு திருப்தி அடைய வேண்டிய நிலையில் தான் சூ கீயின் ஜனநாயக போராட்டம் தொடர்கிறது. முன்னாள் பர்மா அதாவது இப்போதைய மியன்மாரின் பங்களாதேஷை ஒட்டிய மேற்கு எல்லையில் இருக்கும் இந்த ரொஹிங்கியா முஸ்லிம்களின் ஒடுக்குமுறை கதை இப்போது உலகில் எல்லோருக்கும் தெரியும். அதிலும் கடந்த ஒரு சில மாதங்களாக இவர்களது ஆயிரக்கணக்கான அகதிகள் கடலில் கரையொதுங்க வழியில்லாமல் தத்தளித்த போது உலகமே மியன்மாரைத்தான் கோபத்தோடு பார்த்தது.

ரொஹிங்கியா முஸ்லிம்களின் பூர்விகம் பற்றி ஆளுக்கொரு கதை சொல்கிறார்கள். அந்த கதைகள் ஒரு பக்கம் இருக்க இப்போது மேற்கு மியன்மாரில் அடிப்படை உரிமை மற்றும் வசதி இல்லாமல் சுமார் 800,000 ரொஹிங்கியாக்கள் வாழ்கிறார்கள்.

குடியிரிமை இல்லை. குழந்தை பெற கட்டுப்பாடு, பெயர் வைக்க கட்டுப்பாடு சுதந்திரமாக நடமாட கட்டுப்பாடு என்று தொட்டதற்கெல்லாம் கட்டுப்பாடு. வேறு வழியில்லாமல்தான் இவர்கள் ஆட்கடத்தல்காரர்களை நம்பி வேறு நாடுகளுக்கு தஞ்சம் கேட்டு செல்கிறார்கள்.

உண்மையில் ஆங் சான் சூ கீ ஒரு மனித உரிமை ஆர்வலரே இல்லை. நல்லதொரு அரசியல்வாதி என்று சிலர் விளக்கம் சொல்கிறார்கள். போகிற போக்கை பார்த்தால் அது கூட உண்மை போலத்தான் தெரிகிறது.

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் ரொஹிங்கியாக்களை பாதுகாக்கப்போனால் நாட்டின் பலம் மிக்க பெளத்த தேசியவாதி களை கோபித்துக்கொள்ள வேண்டிவரும். அப்படி கோபித்துக் கொண்டால் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தோல்வி நிச்சயமாகிவிடும்.

ஏற்கனவே மியன்மார் பொதுத் தேர்தலின் முடிவை எவராலும் எதிர்வுகூற முடியாமல் இருக்கிறது. இந்த நிலையில் மத மற்றும் இனம் தலைவர்களை கோபித்துக் கொண்டால் தோல்வி சர்வ நிச்சயம். இப்படியானதொரு அரசியல் காய் நகர்த்தலையே சூ கீ அமைதியாக இருந்து செய்து வருவதாக பரவலாக குற்றம் சாட்டப் படுகிறது. வேண்டும் என்றால் இதற்கு ஒருசில உதாரணங்களை கூட சொல்லலாம்.

கடந்த பெப்ரவரியில் ஐ.நா தூதுவப் பெண் யங்கீ லீ மியன்மார் சென்றிருந்தபோது, ரொஹிங்கியா முஸ்லிம்கள் நடத்தப்படும் விவகாரம் குறித்து விமர்சித்திருந்தார். இஸ்லாமிய எதிர்ப்பை தூண்டிவரும் மியன்மார் பிக்கு அஷின் விராது, யங்கீ லீயை ஒரு விபச்சாரி என்று பச்சையாக திட்டினார். உலகமே கோபப்பட்டது. இது பற்றி மியன்மார் நாட்டு தலைவர்கள் கண்டனம் வெளியிட வேண்டும் என்று ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா மனித உரிமை குழு அழாத குறையாகக் கேட்டது.

விராதுவை பகைத்துக் கொண்டு பிழைக்க முடியுமா என்று நினைத்தாரோ என்னமோ ஆங் சான் சூ கீ மூச் விடவில்லை. ஆனால் இது எமது தலைவரை பொறிக்குள் சிக்க வைக்க செய்யும் சதி வேலைகள் என்று ஆங் சான் சூ கீயின் தொண்டர்கள் வழமை போல அரசியல் கதை அளக்கிறார்கள்.

ரொஹிங்கியாக்கள் அல்லது யங்கீ லியுக்கு ஆதரவாக கருத்து வெளியிடுவதால் மனித உரிமை ஆதரவாளர்களிடம் ஏகப்பட்ட புகழும் பெயரும் கிடைக்கும், ஆனால் அது களத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதுதான் சூ கீ ஆதரவாளர்களின் கூற்று. நவம்பர் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மியன்மாரில் இராணுவ ஆட்சி முடிந்து ஜனநாயகம் வந்த பின்னர் நடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக நவம்பர் பொதுத் தேர்தல் பார்க்கப்படுகிறது. முன்னர் அனுபவித்திராத தேர்தல் என்பதால் எதிர்வுகூற முடியாமல் அனைவரும் தலைகுழம்பி நிற்கின்றனர்.

இப்போது அதிகாரத்தில் இருக்கும் இராணுவத்தின் ஆதரவு பெற்ற ஒற்றுமை மற்றும் அபிவிருத்தி கட்சி மற்றும் ஆங் சான் சூ கீயின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சிக்கு இடையிலேயே கடும் போட்டி நிலவும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த ஜனநாயக போட்டியில் ரொஹிங்கியாக்கள், மனித உரிமை எல்லாம் செல்லா காசுகள். ரொங்கி யாக்களுக்கு நாட்டில் குடியுரிமையே இல்லை. பின்னெங்கு வாக்குரிமை வரப்போகிறது. எனவே வாக்கு உரிமை இருப்பவர்களை வைத்துத் தான் மனித உரிமை எல்லாம். இதுதான் உலகின் பெரும்பான்மை நாடுகளின் ஜனநாயகம்.

எனவே இந்த விடயத்தில் ஆங் சான் சூ கீக்கும் மியன்மாருக்கும் மாத்திரம் குற்றம் சொல்லி பயனில்லை. இந்த கோட்பாட்டுக்கு அமைய ஆங் சான் சூ கீ கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் பலம் மிக்க பிக்குகள் மற்றும் இனக்குழுக்களின் தலைவர்களது ஆதரவும் தேவை. ரொஹிங்கியாக்களின் உரிமையை மறுப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பதில் தான் அங்கு அதிக வாக்கு இருப்பதாக ஒரு நம்பிக்கை.

ஆங் சான் சூ கீ கதையின் மற்றொரு பக்கமும் இருக்கிறது. அவர் நோபல் விருது வென்றது, மனித உரிமை ஆர்வலர் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். அவரும் கூட ரொஹிங்கியாக்கள் நிலைப்பாட்டில் இப்போதைய அரசின் கொள்கையை ஆமோதிப்பவராக இருந்தால் என்ன செய்வது. அமைதிக்கான ஒரு நோபல் விருது வீண் என்று சொல்லி அடுத்த வேலையை பார்க்க வேண்டி வரும்.

எஸ். பிர்தெளஸ்... -

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com