Contact us at: sooddram@gmail.com

 

மியன்மார் ஹொலகோஸ்ட் இனத்தேசியமும் நெருக்கடிகளும்!

மியன்மாரில் வாழும் சிறுபான்மை ரோஹிங்யோ முஸ்லிம்கள் பற் றிய எதிரும் புதிருமான கருத்து க்கள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தேச உருவாக் கத்தில் முக்கிய கூறாக கருதப்படும் வரலாற்றுப்பூர்வீகம் குறிப்பிட்ட இந்த இனக்குழுமத்திற்கு இல்லை என்று மறுதலிக்கப்படுகின்றது. மியன்மார் அரசாங்கம் மற்றும் அங்கு செயற் படும் பாரா ஆயுதக் குழுக்கள் உள் ளிட்டு இனத்தேசியவாதிகள் இத்த கைய ஒரு கருத்தை பரப்புரை செய்கின்றனர். விளைவாக இச் சிறு பான்மை முஸ்லிம்கள் அந்நாட்டி லிருந்து சிறிது சிறிதாக வேரோடு பிடுங்கி வீசப்படும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சமூகத்தின் பராமுகம் நெருக்கடியை மேலும் கூர்மைப்படுத்தி வருகின்றது.

மியன்மாரில் மூன்று பிரதான இன முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 6 முதல் 10 வீதம் எனத் தெரிவிக் கப்படுகின்றது. ஆனால், இது குறித்த துல்லியமான மதிப்பீடுகள் இல்லை. சுமார் 4 மில்லியன் முஸ் லிம்கள் உள்ளதாக சில இணையங் கள் கூறுகின்றன.

பிரதான மூன்று இனக் குழுமங்கள்

1. பான்தாய் (பர்மிய பூர்வீகக் குடி கள்)

2. ப'_ஷ் (சீன, தாய்லாந்து பூர் வீகத்தினர்)

3. ரோஹிங்யா (இந்திய பூர்வீகத் தினர்) தற்போதைய பங்க ளாதேஷ் மக்களுக்கு நெருக் கமானவர்கள். இவர்களே இன்று இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக் கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸிய நாடுகாண் பயணி ஒருவர் 1771இல் தயாரித்த புவியியல் வரைபடத்தில் பயன்படுத்தியுள்ள ~ரூசாங்' எனும் சொல்லிலிருந்தே ரோஹிங்யா எனும் சொல் தோன்றி யதாக அறியப் படுகின்றது. பர்மிய சாம்ராஜ் யத்தில் பேசப்படும் மொழி கள் பற்றிய ஓர் ஒப்பீட்டாய்வு எனும் பிரபல நூலில், இப்பிரான்ஸிய ஆய் வாளர் இச்சொல்லைப் பயன் படுத்துகின்றார்.

இங்கு வாழ்ந்து வந்த வங்காளி பூர்வீக மக்கள் தம்மை ~ரவாங்கிய' என அழைத்து வந்தனர். இதுவே காலப்போக்கில் ரோஹிங்யா என மருவியதாகக் கூறப்படுகின்றது. இன் னொரு ஆய்வின்படி ~ரூஹாங்' என் பது அரக்கானின் பண்டைய பெய ராகும். இதன்படி அரக்கானில் வாழ் ந்த பூர்வீகக் குடிகளான முஸ்லிம் களைக் குறிப்பதற்கு ரோஹி ங்யா எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள தாக அறிய முடிகின்றது.

இவர்கள் அறேபிய, மொரோ க்கோ, துருக்கிய, பாரசீக, மங்கோ லிய, வங்காள பூர்வீகத்தைக் கொண்டவர்கள். பெரும்பாலானவர் கள் இந்திய துணைக் கண்டத்தைச் சார்ந்தவர்கள். நிறமும் உடற் கூற்ற மைப்பும் அவர்களின் இந்திய துணைக் கண்ட மானிடவியற் பண்பு களைப் பறைசாற்றுகின்றன. இவர்க ளின் மூதாதையர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக அரக்கா னில் வந்து குடியேறியுள்ளனர். கடந்த 10 நூற்றாண்டுகள் வரலாற் றுப் பூர்வீகம் இவர்களுக்கு உள்ளது.

கி.பி. 788 முதல் 810 ஆம் ஆண்டு வரை பர்மாவை ஆட்சி செய்த மாஹ்தான் சான்தாய் எனும் மன் னனின் காலத்தில் வங்காள விரி குடாவினூடாக முஸ்லிம் வர்த்த கர்களின் கப்பல் மியன்மாரை தரி சித்துள்ளது. இக்கப்பல் அரக்கான் கரை யோரத்தில் வங்காள விரிகுடாவுக்கு சமீபத்தில் இயந்திர கோளாறுக்கு உட்பட்டதால் அதில் வந்த அறேபிய முஸ்லிம் பயணிகள் அரக்கானிலுள்ள ரஹ்மபீ எனப்படும் தீவில் தஞ்சமடை ந்தனர். அவர்கள் அங்கு தஞ்சமடை ந்திருந்தவேளை, தங்களைக் காப்பா ற்றுமாறு உதவி தேடி ரஹ்மா, ரஹ்மா என அழைத்தனர்.

அருகிலிருந்த ராமூரி தீவு மக்கள் இவர்களைக் காப்பாற்ற விரைந்தனர். எனினும், அவர்கள் பேசிய மொழியை இவர்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை. ரஹ்மா என அவர்கள் அழைத்த சொல்லே காலப்போக்கில் முஸ்லிம்களை அழைப்பதற்கு ~ரூஹாங்' என மாறியதோடு, பிற் பட்ட காலங்களில் ரோஹிங்யா என மறுவியதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு ரோஹிங்யா இன முஸ்லிம் களின் வரலாறு குறித்து பல்வேறு அபிப்பிராயங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

2012 மார்ச் மாதம் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கூட்டுப் படுகொலைகள், மிலேச்சத் தனமான வன்முறைகள் கட்டவிழ் க்கப்பட்டன. 2013 இன் இறுதியில் அரச பயங்கரவாதத்தின் கொலை மோகம் கொஞ்சம் தணிந்திருந்த போதும் மீண்டும் முஸ்லிம்கள் மீதான கொ^ரங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

இன அழிப்பு அல்லது துடைப்பு என்பது மனித இன வரலாற்றில் பல் வேறு வடிவங்களில் அரங்கேறி வந்துள்ளது வருகின்றது. ருவண்டா வில் நடந்தது போன்று நேரடி யாகவே எதிர் இனத்தைக் கொன்று குவித்தல் ஒரு வடிவம். எதிர் இனத்தின் இனத் தூய்மையை அழி த்து பெண்களைச் சூறையாடுதல் இன்னொரு வடிவம்.

1990 களில் பொஸ்னியா ஹெஸகோவினாவில் இதுதான் நடந் தது. உத்தியோகபூர்வ கொள்கை மூலம் குறிப்பிட்ட இனத்தின் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப் படுத்துவது இன்னொரு வடிவம். சீனாவின் கிழக்கு துருக்மேனிஸ் தானில் இந்தக் கொள்கை தான் அமுலில் உள்ளது.

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் களைப் பொறுத்தவரையில் இன அழிப்பின் இந்த ஒவ்வொரு வடிவத் தையும் எதிர்கொள்கின்றனர். 90 வீத முஸ்லிம்களைக் கொண்ட அரக்கான் மாநிலத்தில் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதம் ஓர் அச்சுறுத்தல் என்று இனவாதிகள் போடும் காட்டுக் கூச்ச ல்களுக்கு தலைகுனியும் இராணுவ அரசாங்கம் (2012ல் மியன்மாரின் ஆட்சி ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டதாக கூறப்பட்ட போதும் இன்று வரை ஒரு நிழல் இராணுவ அர சாங்கமே அங்கு நீடிக்கின்றது.), முஸ்லிம்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது எனும் சட்டத்தைக் கடுமையாக்கியுள ;ளது.

அச்சமின்றி, நிம்மதியாக வாழ முடியாமல் அகதிகளாய் அலைக் கழிக்கப்படும் மக்கள் உணவின்றி, மருத்துவமின்றி, தற்காலிக முகாம் களில் தஞ்சமடைந்துள்ள நிலையில், பொறுப்பு வாய்ந்த ஒரு அரசாங்கம் அவர்களுக்கு வழங்கும் நிவாரணம் இதுதான்.

ஒரு காலத்தில் சுதந்திர முஸ்லிம் சாம்ராஜ் யமான அரக்கான், பலாத் காரமாக மியன்மாருடன் இணைக் கப்பட்டு, இன்று அவர்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளனர். குடியு ரிமை அற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட, தீண்டப்படாத மக்கள் குழுமமாக அவர்கள் குறுக்கப்பட்டு ள்ளனர்.

இதுவரை சுமார் 20,000 முஸ்லிம் கள் -குழந்தைகள், பெண்கள் உள ;ளிட்டு- பதறப் பதறப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உண்மையில், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் இடம்பெயர்ந்தோர் தொகை என்பவற்றை துல்லியமாக அறிய முடியாத நிலையே தொடர்கின்றது.

சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ ஆட்சி தொடரும் மியன் மாரில், வெளிநாட்டு ஊடகங்கள் மீதான அர சாங்கத்தின் பிடி மிக இறுக்கமாக உள்ளதால் களநிலவரங்களை அறிய முடியாதுள்ளது. எனினும், இவ்வளவு கொ^ரமான இனச் சுத்திகரிப்பு ஒரு சிறுபான்மை சமூக த்திற்கு எதிராக நடைபெற்று வரு கின்ற போதும், நிய+யோர்க் டைம்ஸ், வொ'pங்டன் போஸ்ட், பி.பி.சி. அல்லது ரொய்டரில் இந்தச் செய்தி கள் எதுவும் பிரதானப்படுத்தப் படவில்லை. அறபு இஸ்லாமிய ஊடகங்களிலும் மியன்மார் முஸ்லிம் கள் பற்றிய தகவல்கள் போதியளவு வெளியாகவில்லை.

தற்போது இம்முஸ்லிம்கள் மீதான அரச பயங்கரவாதம் மீண்டும் கட்ட விழ்க்கப்பட்டுள்ளதால் உயிர் தப்புவ தற்காக மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை நோக்கி இடம்பெயர் கின்றனர். துரதிஷ்டமாக அவர்களை அகதிகளா ஏற்பதற்கு இந்நாடுகள் மறுத்து வருகின்றன. கடலில் தத்த ளித்து மூர்ச்சையடங்கி வரும் இம் முஸ்லிம்களில் பலர் ஏற்கனவே பசியினால் உயிரிழந்துள்ளனர். சிலர் சோகம் தாளாமல் தற்கொலை செய்துள்ளனர்.

மியன்மாரில் எஞ்சியுள்ள முஸ்லிம் கள் மீது இராணுவமும் இனவாதிக ளும் கடும் அடக்குமுறையைப் பிர யோகிக்கின்றனர். குழந்தைகள், பெண்கள் என்ற எந்த வேறுபாடு மின்றி சித்திரவதைக்கும் கூட்டுக் கொலைக்கும் உட்படுத்தப்படுகின் றனர். இவ்வளவும் நடந்துகொண்டி ருக்கையில் அறபு-முஸ்லிம் நாடு கள் மௌனமாக இருந்து இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கின்றன. இதுவரை இவர்கள் குறித்த சர்வதேசக் கவனம் திரட்சியடைய வில்லை என்பது இந்நூற்றாண்டு க்கும் மனித குலத்திற்கும் ஏற்பட்ட மாபெரும் அவமானம் என் கருத வேண்டியு ள்ளது.

(ரவூப் ஸெய்ன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com